Jump to content

யூடியூப் தளத்தில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்!


Recommended Posts

யூடியூப் தளத்தில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்!

 

 

நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ரௌடி பேபி பாடல்  யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகளை பெற்ற குறித்த பாடல் தற்போது  100 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. தென்னிந்திய மொழிகளில் வேறு எந்தப் பாடலும் யூடியூப் தளத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்டதில்லை.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தெரிவிக்கையில்,  “கொலைவெறி பாடல் வெளியான 9-வது வருடத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது ரௌடி பேபி பாடல். 100 கோடி பார்வைகளைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்பதில் பெருமை கொள்கிறோம். அனைவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

   by : Krushnamoorthy Dushanthini

http://athavannews.com/யூடியூப்-தளத்தில்-100-மில்ல/

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்!

 

100 மில்லியன் = 10 கோடி

 1 பில்லியன் = 100 கோடி

Link to comment
Share on other sites

  • nunavilan changed the title to யூடியூப் தளத்தில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்!
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

 

 

100 மில்லியன் = 10 கோடி

 1 பில்லியன் = 100 கோடி

 

ஏன் இரண்டு மட்டுறுத்தினர்களுமிடையில் இதற்குள் அக்கபோர் (பத்த வைக்க ஒரு சந்தர்ப்பம்😂).

நுணா இணையவன் எப்படி உங்களுக்கு வகுப்பெடுக்கலாம்... 1 பில்லியன் சரியான தகவல்

1,001,264,037 views

Link to comment
Share on other sites

9 hours ago, உடையார் said:

 

ஏன் இரண்டு மட்டுறுத்தினர்களுமிடையில் இதற்குள் அக்கபோர் (பத்த வைக்க ஒரு சந்தர்ப்பம்😂).

நுணா இணையவன் எப்படி உங்களுக்கு வகுப்பெடுக்கலாம்... 1 பில்லியன் சரியான தகவல்

1,001,264,037 views

நுணாவின் தவறு இல்லை. செய்தி எழுதுபவர்களது தவறு. அவர்களது இணையத்தளத்தில் இது அப்படியே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இணையவன் said:

நுணாவின் தவறு இல்லை. செய்தி எழுதுபவர்களது தவறு. அவர்களது இணையத்தளத்தில் இது அப்படியே உள்ளது.

தெரியும் இணையவன் சும்மா கொலுவி விடும் என்று பார்த்தால் ,சரிவரவில்லை😁,

அடுத்த முறை பார்ப்பம் எப்படி கொழுவிடுவதென்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, உடையார் said:

தெரியும் இணையவன் சும்மா கொலுவி விடும் என்று பார்த்தால் ,சரிவரவில்லை😁,

அடுத்த முறை பார்ப்பம் எப்படி கொழுவிடுவதென்று

உடையார் நீங்கள் இணையவனை இன்னும் சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன்.....நான் சந்தித்து இருக்கின்றேன்.அவரிடம் கொக்கத்தடியும் கொழுவாது.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

உடையார் நீங்கள் இணையவனை இன்னும் சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன்.....நான் சந்தித்து இருக்கின்றேன்.அவரிடம் கொக்கத்தடியும் கொழுவாது.......!   😂

ஓ அப்படியா😁, பிரான்ஸ்க்கு வரும்போது சந்திக்க வேண்டிய ஒருவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தெரியும் இணையவன் சும்மா கொலுவி விடும் என்று பார்த்தால் ,சரிவரவில்லை😁,

அடுத்த முறை பார்ப்பம் எப்படி கொழுவிடுவதென்று

உடையார்! நீங்கள் நினைக்கிறது நடக்கவே நடக்காது. அந்த 3 மட்டுறுத்தினர்மாரும் சிங்களவர் மாதிரி வலு ஒற்றுமையான ஆக்கள். ஒரு வேரைக்கூட அசைக்கேலாது. வேறை நடக்கிற விசயத்தை பாருங்கோ...🤣

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாட்டில் வரும் ஒல்லி பல்லி  இன்னும் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கூவவில்லயாக்கும் .

யூடியூப் முகநூல்  தளம்களில்  பார்வையாளர் எண்ணிக்கை  விரும்புகிறவர் எண்ணிக்கை கொமெண்ட்ஸ் எனும்முறையில் வாழ்த்து சொல்லும் முறை இவ்வளவும் பணம் வாங்கி கொண்டு ரேட்டை  எகிற வைக்கும் அதாவது கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்கள் உண்டு முகநூல் போன்றவைக்கு அப்ஸ் கூட உண்டு உங்கள் நட்ப்பு  வட்டம் உங்களை திட்டி பதிவு போட்டாலும் அதையும் லைக் பண்ணும் ரொபேர்ட் முறையிலான தானியங்கி லைக் மிசின் உள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.