Jump to content

கொரோனா காலமும் வருமானத்துக்கு மீறிய செலவீனங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா காலமும் வருமானத்துக்கு மீறிய செலவீனங்களும்

அனுதினன் சுதந்திரநாதன்

என்னதான், செலவுகளைக் குறைத்து, வருமானங்களைச் சேமித்தாலும், கையில் பணப்பற்றாக்குறையே உள்ளது என்பதை, யாரேனும் ஒருவர் கூறுவதையே நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு வகையில் செலவு அதிகரிக்க, வரவுகளை எதிர்பார்த்து விழிபிதுங்கி நிற்கும் சாமானி நிலையையே, பெரும்பாலான குடும்பங்கள அனுபவித்து வருகின்றன.

அதிலும் இந்தக் கொரோனா நெருக்கடி, அதிகளவான அழுத்தத்தைத் கொடுத்து வருகின்றது. வருமானம் அப்படியே இருக்க அல்லது குறைந்துச் செல்ல, செலவீனங்க மாத்திரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்றே கூறலாம்.

அப்படியாயின், நாம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமலேயே கடந்துபோய் கொண்டு இருக்கிறோமா அல்லது இவற்றை எல்லாம் நிவர்த்திக்க எந்த வழியும் இல்லை என்று கடந்து செல்கின்றோமா என்ற என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?

உண்மையில், நாமது அன்றாடம் செலவீனங்கள் கைமீறிப் போகாதவண்ணம், சேமிப்புகளையும்  வரவுகளையும் ஒருங்கிணைத்துச் செல்லவே முயல்கின்றோம். ஆனால், அதை இன்னும் சற்றே வினைத்திறனாகத் திட்டமிட்டுச் செய்வதில்தான், கோட்டை விட்டுவிடுகின்றோம். உண்மையான நிதியியல் வெற்றி என்பது, எளிமையான ஒன்றாகும். அது, உழைப்பதில் ஒரு பங்கு சேமித்து, செலவுகளைக் குறைப்பதாகும். இதன்போது செய்கின்ற ஒவ்வொரு செலவுக்குமே கண்காணிக்கக் கூடியவகையில் ஒரு முறைமையைப் பயன்படுத்தினாலேயே, இந்த நிதிவெற்றியை அடைவது எளிதாக்கிவிடுகிறது.

இதற்கு இலகுவாகக் கையாளக்கூடிய முறைமைகளில் ஒன்றுதான், பாதீடு ஆகும். அதாவது, ஒவ்வொரு வரவையும் செலவையும் முறையாகக் கண்காணிக்கும் வரவு-செலவுப் பட்டியலை மாதம்தோறும் தயார்செய்து, அதன் பிரகாரம், நமது செலவீனங்களைக் கண்காணிப்பதாகும்.

வரவு-செலவு பற்றிக் கணக்கு வைத்தும் அதை சரியாகப் பராமரிக்க முடியாமல் உள்ளதா, அனைத்தையும் கண்காணிக்கின்றபோதிலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதா? எல்லாவற்றுக்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அது, எல்லாவற்றையும் மீண்டும் புதிதாக முதலிலிருந்து தொடங்குதல் ஆகும். அதற்காக, எதையும் பெரிதாகத் திட்டமிட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்து செயற்படுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, எல்லாவற்றையும் எளிமைப்படுத்தினாலே போதுமாகும்.

உதாரணத்துக்கு, செலவு என்றவகையில், உங்கள் கையால் செலவு செய்கின்ற எல்லா பணத்தையும் ஒருசேர கணக்கு வைத்துக்கொள்வதை விட, ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாகப் பிரித்துகொண்டு, மின்சாரச் செலவு, நீர்க் கட்டணம், பொழுதுபோக்குச் செலவு எனக் கணக்கு வைத்துகொள்ளும்போது, எந்தச் செலவு அதிகமாக உள்ளதென அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

நீங்கள் உழைக்கும் ஒவ்வொரு ரூபாயும் உங்கள் உழைப்பால் உருவானது என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள். காரணம், சில ரூபாய்களை செலவு செய்யும்போது, இது சிறுதொகைதானே எனும்ன்கிற போக்கில் செலவையும் செய்துவிட்டு, அதை கணக்கில் உள்வாங்காமல் போனால், பிற்காலத்தில் அப்படியான செலவுகள் சிறுகச் சிறுக அதிகரித்து உங்களை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதில் ஜயமில்லை.

எனவே, வருமானத்தில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதை அறிந்துகொள்ள, அதைக் கணக்கு வைத்துகொள்ளப் பழகுங்கள். பின்பு ஒரு நேரத்தில் வருமானத்தை எப்படி எல்லாம் செலவு செய்யக்கூடாது என்பதை நீங்களே தானாகவே உணர்ந்து கொள்ளுவீர்கள்.

வருமானம் கைக்கு வந்ததுமே, அதை எப்படி செலவு செய்யலாமென திட்டமிடுபவர்கள் சிலர் என்றால், எப்படி செலவு செய்யாமல் சேமிக்கலாம் என யோசிப்பவர்கள பலர் உள்ளனர்.

உண்மையில், எதற்கு எவ்வாறு / ஏன் செலவு செய்ய வேண்டும் எனத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல், செலவுகள் கைமீறிப் போவதுடன், தேவையான செலவுகளைச் செய்யக்கூட, கையில் பணமில்லாத நிலையே ஏற்படும். எனவே, எந்தவகை செலவுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருத்தல் அல்லது அதற்கு முன்னுரிமை கொடுத்தல் அவசியமாகிறது. ஆடம்பர செலவுகளா அத்தியாவசிய செலவுகளா முக்கியமானது என்பது மூலம் எதிர்காலம் நோக்கி திட்டமிட முடியுமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆடம்பர வாழ்க்கையை விட, கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியானது என பெரியோர்கள் சொல்லக்கேட்டு இருப்போம். அதுவே, உண்மையும் கூட. எத்தனைதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும், கடன்காரன் என்கிற பழிச்சொல் ஒருவரை தூற்றுதலுக்கு உள்ளாக்கிவிடும். எனவே, முடிந்தவரை கடனை தவிர்ப்பது அவசியமாகிறது.

வருமானத்தை மீறி செலவுகள் செல்லும்போது, கடன் வாங்குவதுஎன்பது, தவிர்க்க முடியாத விடயமாகும். ஆனாலும், அப்படியானக் கடன்களை முதலில் செலுத்தி முடிப்பதற்கு முயற்சிப்பதே எதிர்காலத்தில் கடனின் அளவு குறைவடைவதையும் சேமிப்புக்கு வழி ஏற்படுவதையும் உறுதிச்செய்வதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இல்லையேல், கடன் மாதம்தோறும் வருமானத்தின் மிகப்பெரியப் பகுதியை முழுங்கிக்கொண்டு விடும். இது, நாளாந்தச் செலவுகளைச் செய்வதில்கூட சிக்கல்களை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே, சிறந்த வரவு-செலவு திட்டம் உள்ளபோது, எவ்வாறு உள்ள கடனை அடைத்துக்கொள்ள முடியுமென அறிந்துகொள்ள முடியுமோ, அதுபோல எதிர்காலத்தில் கடனை வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுமா இல்லையா என்பதை அறிந்தும்  செயல்பட முடியும்.

ஒவ்வொரு புத்தாண்டு உறுதியாக இம்முறை வரவையும் செலவையும் ஒழுங்குபடுத்தி கொள்ளுவேன் என்று கூறிக்கொண்டு உறுதி பூண்டுவிட்டு, பின்னர் அதைக் காற்றில் பறக்கவிடும் நிலைமையே அதிகம் பேரில் காணப்படுகிறது. குறிப்பாக, பலருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களை செலவுசெய்து, வரவு-செலவை ஒழுங்குபடுத்திக் கொள்ளுவதில் ஒருவித தேக்கநிலையே காணப்படுகிறது. இதனாலேயே, பாதீட்டு ஒழுங்குகள் பாதிவழியிலேயே நின்றுபோய் விடுகிறது.

எனவே, வரவு-செலவு கணக்குகளை ஒழுங்குபடுத்தும்போது, அதற்கு பொறுமையும் அவசியமாகிறது. எப்படி நிறைக் குறைப்பானது நீண்டகால பயிற்சியில் சாத்தியமாகிறதோ அதுபோல, செலவீனங்களை கட்டுப்படுத்துவது என்பதும்நீண்டகால முயற்சியில் மாத்திரமே சாத்தியப்படும். அதுவரை, பொறுமை அவசியமாகிறது.

இன்று கைக்குள் அடங்கும் உலகமாக எல்லோரிடத்திலும் அலைபேசிகள் உள்ளன. அதில், மிக இலகுவாக வரவு-செலவுகளை கண்காணித்துக் கொள்ளவென பலவிதமான மென்பொருள்கள் உள்ளன. எனவே, அவற்றில் உகந்தவொன்றை பயன்படுத்தி கொள்ளுவதில் தவறில்லை. இன்னமும் எத்தனை காலம்தான், அப்பியாச கொப்பியில் கணக்கு வழக்கை குறித்துக்கொண்டிருப்பதென நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருள்கள் வழியிலும் உங்கள் கணக்குகளை பராமரிக்க முடியுமென்பது ஒருவகை கால்கட்டே.

மேலதிகமாக, வெவ்வேறு மூலங்களிலிருந்து பணம் வருவதையும், அவை செலவாகும் விதத்தினையும் அப்பியாசக் கொப்பியின் ஒவ்வொரு பக்கத்தில் குறித்துக்கொண்டிருப்பதை விட, மென்பொருள்களை பயன்படுத்தி இலகுவாக வேறுபடுத்திக்கொள்ள முடியும். இதுவும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னேறிச்செல்ல ஏதுவான காரணியாக இருக்கிறது. .

வரவு-செலவுகளை பராமரிக்கத் தொடங்கியதுமே, நீங்கள் உங்கள் செலவு தொடர்பிலான பலவீனங்களை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக, உணவுக்கோ அல்லது ஆடம்பரப் பொருள்களுக்கோ, தேவைக்கு அதிகமாக நீங்கள் செலவு செய்வதை அறிந்தால், அதை எப்படி குறைத்துக்கொள்ள முடியும் எனும் வழியை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது பல சமயங்களில் உங்கள் நடத்தைக் கோலத்திலும் நன்மைகளை கொண்டுவருவதாக அமையும்.

ஒவ்வொருவருக்குமே நிச்சயமாக செலவீனங்கள் தொடர்பில் மேற்கூறியதுபோல, பலவீனங்கள் இருக்கவே செய்யும். எனவே, அதுதொடர்பில் ஆரம்பத்திலேயே அக்கறை எடுத்துகொள்ளுவது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதிப்பிரச்சனைகளுக்கு ஏதுவாக அமையும்.

ஒவ்வொரு மாதமும் நமது வருமானம் பெரும்பான்மையாக மாற்றமடைவதில்லை எனும் போதிலும், வெவ்வேறு காலங்களில் நமது செலவுகள் வெவ்வேறு விதமாக மாற்றமடையக் கூடியதாகவிருக்கும். உதாரணத்துக்கு, ஆடி மாதத்தில் தமிழர்கள் மத்தியில் சுபகாரியங்கள் இடம்பெறாமை காரணமாக, அது தொடர்பிலான செலவீனங்கள் குறைவாக இருக்ககூடும். ஆனால், அடுத்துவரும் மாதத்திலேயே சுபகாரியங்கள், ஒன்றன்பின் ஒன்றாக வந்து செலவுகள் அதிகரிக்கும் நிலை காணப்படும். இதற்காக, பாதீட்டை கடுமையாகக் கடைப்பிடிப்பதாகக் கருதி, குறித்த சுபகாரியங்களை தவறவிடுவதென்பது முட்டாள்தனமான செயல்பாடாகும்.

பாதீட்டைத் தொடர்ச்சியாக பேணுவதும், அதைப் பராமரிப்பதும் கூட எளிமையான விடயமல்ல. அவற்றைக் கூட கடந்துவிட்டாலும், வரவு-செலவு கணக்கு ஏற்றவகையில், உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளுவது என்பது எல்லாவற்றையும் விட கடினமான செயலாகும். ஆரம்பத்தில், உங்களுக்குப் பிடித்த பல விடயங்களை கட்டுபடுத்த வேண்டிய தேவையிருக்கும். அவற்றை, கடுமையாக அவசியம் கடைபிடியுங்கள், சில காலத்தில் அதற்கு நீங்களே பழகிக்கொள்ளுவீர்கள். காரணம், அது ஒரு முறைமை போல உங்களுடனேயே ஒட்டிக்கொள்ளும். பின்பு, அதனை மேம்படுத்துவதும், புதிய முறைகளை கையாள்வதும் உங்களுக்கே இலகுவாக இருக்கும். இதற்க்கு மேலாக, நீங்களே மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்ககூடிய அளவுக்கு திறன் கொண்டவர்களாக மாறிப் போனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

 

http://www.tamilmirror.lk/வணிகம்/கொரோனா-காலமும்-வருமானத்துக்கு-மீறிய-செலவீனங்களும்/47-258428

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.