Jump to content

வலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்

125238602_398921587960985_29678383330097

1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப் பொழிந்தது; இதில் 136 ஜெர்மானியர் கொல்லப்பட்டனர். பிரிட்டனின் இந்த விமானத் தாக்குதலின் நோக்கம் ஜெர்மானிய குடிமக்களிடம் அச்சத்தை தோற்றுவித்து ஹிட்லரை பலவீனப்படுத்தி, அவருடைய மக்கள் ஆதரவை நிலைகுலையச் செய்வது; அதுவரையில் வலுவான உருக்கு மனிதராகத் தோன்றியவரை கையாலாகாதவராகக் காட்டினால் ஜெர்மானிய குடிமக்கள் அவரை வெறுக்கத் தொடங்குவார்கள் என பிரிட்டன் கணக்குப் போட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இந்த குண்டு பொழிவு மக்களிடம் பீதியை, பதற்றத்தை உருவாக்கி அது தேசபக்தியின் எழுச்சியாக தடம் மாறி விரைவில் இதே மக்கள் பெரும் திரளாக ஹிட்லர் பின்பு அணிவகுத்தனர். மக்கள் ஆதரவு ஹிட்லருக்கு இன்னும் அதிகமானது. அதாவது இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜிப்படையினர் முழுமையாக அழியும் வரையில் ஜெர்மனியர் முழுமையாக ஹிட்லரை இப்படி நம்பியபடித் தான் இருந்தனர். இப்போது அப்படியே “சந்திரமுகி” படத்துக்கு வருவோம்:

 

spacer.png

செந்தில் மற்றும் கங்கா வேட்டையபுரம் அரண்மனையில் வந்து தங்குகிறார்கள். அங்கு பேய் இருப்பதாக ஊர்மக்கள் நம்புகிறார்கள். குறிப்பாக சந்திர்முகியின் நகைகள் வைக்கப்பட்டுள்ள அறையை எல்லாரும் அஞ்சுகிறார்கள். ஆனால் சந்திரமுகியின் கதையைக் கேட்கும் கங்காவின் எதிர்வினை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது – அவள் பரவசமாகிறாள், அறையைத் திறந்து அந்த நகைகளை எடுத்தணிகிறாள். தன்னை சந்திர்முகியாக உணர்கிறாள். (மிச்ச கதைக்கு பின்னர் வருகிறேன்.) ஏன் ஒரு பேயைக் கண்டு ஊரே நடுங்க கங்கா மட்டும் பயப்படவில்லை? இதற்கான பதில் கதையின் பிற்பகுதியில் வருகிறது – கங்கா இளம் வயதில் இருந்தே மனப்பிரச்சனைகளால் உடைந்து போனவள். அவளது மனநோயே அவளை தன்னை வெறுக்க, உலகைக் கண்டு அஞ்சிட வைக்கிறது. அந்த அச்சத்தை உள்ளே அடக்கி வெளியே இயல்பாக தன்னைக் காட்டிக் கொள்கிறாள். இதுவே பின்னர் அவள் ‘சந்திரமுகியாக’ காரணமாகிறது. ஒடுக்கப்பட்டவளாய் தன்னை கருதும் அவள் ஆண்களைப் பழிவாங்கும் பேய்வடிவாய் தன்னை பின்னர் உருவகிக்கிறாள். அச்சமும் வன்மமும் கைகோர்க்கிறது. வலதுசாரி மனநிலை என்பது இப்படியான ஒரு சந்திரமுகி பேய். அது பெரும்பான்மை மக்கள் தொகையிடம் பொருளாதார ஸ்திரமின்மை குறித்த பாதுகாப்பின்மை, அச்சம், எதிர்காலம் குறித்த அச்சம் பூதாகரமாகும் போது பூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வரும்.

ஜெர்மனியில் முப்பதுகள், நாற்பதுகளில் பெரும் பொருளாதார சரிவு ஏற்படுகிறது. அங்கு ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மறைமுகமாய் உலவி வந்த யூதவெறுப்பு இனவாத பேய் இப்போது நகைகளை எடுத்தணிந்து சந்திரமுகியாக முச்சந்திக்கு வருகிறது. ஹிட்லரின் நாஜிக் கட்சியினரின் வெறுப்பு பிரச்சாரம் இந்த சமூக அச்சம், பதற்றத்துக்கு வடிகாலாகிறது. பொருளாதாரத்தைப் பற்றின பயம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் தன்னிருப்பு குறித்த அச்சமாக, வெறுப்பாக உருக்கொள்கிறது. இந்த காலகட்டத்தில் ஹிட்லர் தொடர்ந்து உலக அரங்கில் ஜெர்மானிய மக்களை அழிப்பதற்காக யூதர்கள் அயல்நாட்டு சக்திகளுடன் கைகோர்த்து சதித்திட்டம் தீட்டுவதாய் பேசுகிறார்; அவரது ஆதரவாளர்கள் இது குறித்து மிகப்பெரிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். யூதர்களுக்குத் தெரியும் தாம் அந்தளவுக்கு எல்லாம் வொர்த்தில்லை என. ஆனால் பெரும்பான்மையான, வலுவான ஆரிய சமூகமோ இந்த பொய்ப்பிரச்சாரத்தை நம்பத் தலைpபடுகிறார்கள். யூதர்கள் ஒன்று திரண்டு உலக நாடுகளின் துணையுடன் தம்மை அழிக்கத் தலைப்படுவதாய் சுலபத்தில் நம்புகிறார்கள். இது ஒரு பெரும் தேசியவாத அலை உருவாகக் காரணமாகிறது. அதில் நீந்தி வெற்றிக்கொடியை ஏந்தி அசைத்தவாறு மேலெழுந்து வந்தது ஹிட்லரின் நாஜிக் கட்சி. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட இங்கிலாந்தின் விமானப்படை தாக்குதல் நிகழ்ந்த போது, குண்டுகள் வெடித்து வாழிடங்கள் அழிந்த போது ஜெர்மானியர்களில் மிதவாதிகள் கூட ஹிட்லர் சொன்னது நிச்சயமாய் உண்மைதான் என நம்பத் தொடங்கினார்கள். அவர்கள் மொத்தமாய் ஹிட்லரின் காலடியில் தலைவணங்கித் தம்மை ஒப்படைத்தார்கள். ஜெர்மனி முழுக்க யூதர்கள் கொத்துக் கொத்தாய் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்ட போது அந்த கொடுஞ்செயல்திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களும் முன்வந்தார்கள். அவர்கள் ஹிட்லரின் மக்கள் படை ஆனார்கள் (ஆர்.எஸ்.எஸ்ஸின் குண்டர் படையைப் போல). இதை நான் ஒரு சந்திரமுகி அலை என்பேன்.

spacer.png

இந்த அலையில் யாரெல்லாம் நிலையற்று உணர்கிறார்களோ அவர்களெல்லாம் அடித்து செல்லப்படுவார்கள். கடந்த பத்தாண்டுகளில் வலதுசாரி தலைமைகள் உலகமெங்கும் பெற்றுள்ள பெரும் எழுச்சி இப்படியான சந்திரமுகி அலையினால் தோன்றியதே. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் ஒரு அதிகாரமிக்க மக்கள் தொகுப்பு தம்மை ஒடுக்கப்பட்டவர்களாக, ஆபத்தின் விளிம்பில் இருப்பவர்களாக கற்பனை பண்ணிக் கொள்வது தான்.

அமெரிக்காவில் நிறைய வெள்ளையர்கள் இப்படி இந்தியர்கள், கறுப்பர்கள், லத்தீன் அமெரிக்கர்கள், குடியேறிகள், ‘அந்நியர்களால்’ தாம் முற்றுகை இடப்பட்டுள்ளதாய், தம் வாழ்வாதாரத்தை, அதிகாரத்தை, மரியாதையை இவர்களிடத்து இழக்க நேர்வதாய், ஒருநாள் சொந்த நாட்டிலேயே தாம் ஒழிக்கப்படுவோம் என நம்புகிறார்கள். கிறுத்துவர்களில் பலர் தமது சம்பிரதாயங்கள் சீரழிக்கப்படுவதாய் அஞ்சுகிறார்கள். அதனாலே தமிழக பாஸ்டர்கள் சிலரே டிரம்புக்கு ஆதரவு தெரிவித்ததைப் பார்த்தோம். இவர்கள் ஒட்டுமொத்தமாய் ‘வேட்டைய ராஜாவைக்’ கொன்றால் தம் பிரச்சனை சரியாகி விடும் என நினைக்கிறார்கள். இம்முறை தேர்தலில் பைடன் வெற்றிபெற்றாலும் அவருக்கு எதிராக ஒரு பெரும் தரப்பு வெள்ளையின மேலாதிக்கத்துக்காக டிரம்புக்கும் கணிசமான வாக்குகளை அளித்துள்ளது. இவர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் தான் டிரம்ப் இப்போதும் தானே வென்றதாய் கோருகிறார். வெள்ளை மாளிகைக்குள் சந்திரமுகியாய் உலவுகிறார். உண்மையான பிரச்சனை அமெரிக்க ஏகாதிபத்யத்தின் நவமுதலாளித்துவ கட்டமைப்பின் சரிவில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பண வீக்கம் அதிகமாகி உள்ளதில் ஒரு பக்கம் பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிட, மத்திய வர்க்கம் கடும் அழுத்தத்தில் கடன் சுமை மிக்கவர்களாக ஆகி உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் அமெரிக்காவில் அடிப்படை சிகிச்சைக்கே வழிவகை இல்லாமல் மக்கள் தவித்தனர். இந்த பொருளாதார அழுத்தத்தின் தாக்கத்தை நேரடியாக அல்ல, கலாச்சார, சமூக உளவியல் ரீதியாகவே மக்கள் பொதுவாக உணர்கிறார்கள் என்பது வினோதம். அதாவது மக்கள் பொருளாதார கட்டமைப்புகள் குறித்து விவாதிக்குமளவுக்கு முதிர்ச்சி பெற்றவர்கள் அல்ல. அவர்கள் தமது கடும் அழுத்தத்துக்கான காரணமாக ஒரு மற்றமையை மனதளவில் கட்டமைக்கிறார்கள்; இதை வலதுசாரி தலைமை ஊதி வளர்க்கிறது. ஒரு லத்தீன் அமெரிக்கர், கறுப்பரைக் காட்டி இவர்களால் தான் உங்கள் வாழ்க்கை அலங்கோலமாகி விட்டது எனச் சொன்னால் அவர்களின் பழங்குடி மனது அதை உடனடியாய் ஏற்றுக் கொள்கிறது. இப்படித் தான் ஒருவிதத்தில் வலதுசாரி தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் எழுச்சி பெற்று தலைமைப் பொறுப்பை அடைகிறார்கள்.

பத்தொன்பதாவது நூற்றாண்டில் காலனிய மனோபாவம் இங்கிலாந்தில் உச்சத்தில் இருந்தபோது தான் அங்கு ஏற்றத்தாழ்வுகளும் மிகக்கொடுமையாக இருந்தன. எந்த அளவுக்கு என்றால் கடனைத் திரும்ப செலுத்த முடியாத பலரும் சிறைக்கு செல்வார்கள். அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்குப் போக முடியாமல், சோற்றுக்காக புகைபோக்கிகளுக்குள் நுழைந்து சுத்தம் செய்யும் பணிகளை செய்தனர். (சார்லஸ் டிக்கன்ஸ் தனது பல நாவல்களில் இந்த சூழலை வர்ணிக்கிறார்.) இதே கட்டத்தில் தான் காலனிகளில் அடிமைகளாக உள்ள மக்களைக் காட்டி இனவாத ஆதிக்க அதிகாரத் தரப்பினர் இம்மக்களிடம் தற்பெருமையை, தாம் மேலானவர் என ஒரு உயர்வு மதிப்பான்மையை உண்டு பண்ணினர். சொந்த சமூகத்தில் உள்ள கடும் ஏற்றத்தாழ்வை காணாமல் இருக்க காலனி ஆதிக்கப் பெருமை அந்த கால ஆங்கிலேயர்களுக்கு உதவியது. இது இனப்பெருமையின் அடிப்படையிலான மற்றொரு சந்திரமுகி அலை. இம்மக்களுக்கு வேட்டைய ராஜா நம்மைப் போன்ற காலனியின் பிரஜைகள் தாம். இன்று இதே இனவெறுப்பு தான் மற்றொரு வடிவை மேற்கில் எடுக்கிறது.

இனி இந்தியாவுக்கு வருவோம்:

 

spacer.png

இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு கதையாடலை உற்பத்தி பண்ணி பிரச்சாரம் செய்ததில் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் உள்ளிட்ட இந்தியவியல் (Indolology) வரலாற்றாசிரியர்கள், கோட்பாட்டாளர்களுக்கு முக்கிய பங்குண்டு. காலனிய ஆதிக்கவாதிகளை காலனி மக்களின் மீட்பர்களாக கட்டமைக்க இது உதவியது. வெள்ளையர்கள் இந்தியாவில் தொடர்ந்து இந்து-முஸ்லீம் பிரிவினை நீறுபூத்திருக்கும்படி பல ஆட்சி முடிவுகளை எடுத்தார்கள். இஸ்லாமியர் இந்தியாவில் படையெடுத்து வந்து பல அழிவுகளை ஏற்படுத்தி, இந்துக்களை கொடுமைப்படுத்தி கோயில்களை இடித்தார்கள், பின்னர் வந்த வெள்ளையர்களோ முகலாய ஆதிக்கத்தில் இருந்து இந்தியர்களை மீட்டனர் என இன்று இந்துத்துவர் பேசும் கதையாடலை உருவாக்கி உலவ விட்டது இந்த காலனியாதிக்க இந்தியவியல் வரலாற்றாசிரியர்களே. உருது இஸ்லாமியரின் மொழி, இந்தி இந்துக்களின் மொழி என ஒரு கதையாடலை சுதந்திரத்துக்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வெள்ளை ஆட்சியாளர்கள் உண்டு பண்ணினார்கள். இதே வெள்ளையர்கள் தம் காலத்தில் பாபர் மசூதி பிரச்சனையை இரு தரப்புக்கும் சாதகமில்லாத வகையில் இரு நூற்றாண்டுகளாக தக்க வைத்தார்கள். இறுதியாக இந்தியா-பாக் பிரிவினையை தோற்றுவித்தார்கள். அரசியலில் இருந்து விலகி இங்கிலாந்துக்கு சென்றிருந்த ஜின்னாவை திரும்ப அழைத்து வந்து முஸ்லீம் லீக்கை வலுப்படுத்தி காங்கிரஸுக்கு மாற்று அலை ஒன்றை இஸ்லாமியர்கள் இடத்து உருவாக்க முயன்றார்கள். இதுவே இந்து மகாசபையினருக்கு சாதகமாய் ஒரு சூழலை இங்கு உருவாக்கியது. நீங்கள் இரண்டு விசயங்களை இங்கு கவனிக்கலாம்:

1) சுதந்திரத்துக்கு முன்பான சில பத்தாண்டுகளில் மிகப்பெரிய சமூக நிலை மாற்றங்கள் (அதிகார கட்டமைப்பில், படிநிலையில், பொருளாதாரத்தில், கலாச்சாரத்தில்) இந்தியாவில் நிகழ்ந்தன. உலகப் போர், ஆட்சி மாற்றம் குறித்த பதற்றம் ஒரு சுனாமி அலையாய் இங்கு அடித்தது. இதன் உச்சமே பிரிவினையின் போதான கடும் வன்முறை, மக்களின் கூட்டுக்கொலைகள், பெண்கள் மீதான பலாத்காரங்கள், நிலங்களை இழந்து மக்கள் இடம்பெயர்ந்து பிச்சைக்காரர்களாக முகாம்களில் இருக்கும் நிலை. இஸ்லாமியருக்கான ஒரு தேசம் தோன்றியதாய் உணர்ந்த பெரும்பான்மை இந்துக்கள் தாம் ஒரு பேரழிவின் விளிம்பில் இருப்பதாய் உணர்ந்தனர். இஸ்லாமிய வெறுப்பலை இங்கு தீவிரமாய் எழுந்த காலமானது இங்கு தடுமாற்றங்கள், அச்சம், குழப்பம் அதிகமாய் விளைந்த ஒரு காலம் என்பதை கவனிக்க வேண்டும். இந்த கொந்தளிப்புகள் ஒரு கூட்டு மனநோயாகின்றன. அந்த மனநோயின் அறிகுறியே வலதுசாரி எழுச்சி.

இந்தியாவில் முதல் வலதுசாரி பேரலை தோன்றிய போது இரு தேசியங்கள் (இந்தியா-பாகிஸ்தான்) உருக்கொண்டன; இதில் ஒரு தேசியத்திற்கு இரு தலைவர்கள் – ஒருவர் பல கோடி பேரால் அங்கீகரிக்கப்பட்ட காந்தியார். மற்றொர் தன் காலத்தில் பல கோடி பேரால் புறக்கணிக்கப்பட்ட சாவர்க்கர் என ஆஷிஸ் நந்தி சொல்கிறார். இந்த கட்டத்தில், பிரிவினையின் போது முதலில் மக்கள் பரஸ்பரம் கொன்று தணிந்தனர். இறுதியாக காந்தியின் படுகொலை நடந்தது. காங்கிரசுக்குள் வல்லபாய் பட்டேல் வலதுசாரிகளுக்கு ஆதரவான, ஆறுதலான ஒரு செயல்பாட்டாளராக திகழ்ந்தார். ஆர்.எஸ்.எஸ் தற்காலிகமாய் தடை செய்யப்பட்டது. காந்தியின் படுகொலையை உண்மையாக விசாரித்து அசலான குற்றவாளிகளை அடையாளம் காண்பதை காங்கிரஸ் தலைமை தவிர்த்தது. ஏனென்றால் அவர்கள் மத்தியிலும் காந்தியின் அழிவை விரும்பியவர்கள் இருந்தனர். அவரது ரத்த பலி என்பது அந்த காலகட்டத்தின் வேட்டைய ராஜாவை குருதிக்கொடை கொடுக்க அவசியப்பட்டது. அடுத்து ஒரு நீண்ட கால அமைதி நிலவியது. ஆனால் நவபொருளாதார சந்தை இங்கு தோன்றி அதனால் பொருளாதார எழுச்சி ஏற்பட்டது ஒரு வலதுசாரி-சாதக சூழல் இந்தியாவில் தோன்ற காரணமாகியது என்கிறார் ஆஷிஸ் நந்தி தனது A Disowned Father of the Nation: Vinayak Damodar Savarkar and the Demonic and the Seductive in Indian Nationalism எனும் நீள்கட்டுரையில். தொண்ணூறுகளில் காங்கிரஸ் கொண்டு வந்த நவதாராளவாத பொருளாதார அலை ஒரு பக்கம், மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது மற்றொரு பக்கம் என இந்திய சமூகத் தட்டுகளில் பெரும் படிநிலை மாற்றங்கள் ஏற்பட்டன, பொருளாதார எழுச்சியுடன் அடுத்தடுத்து தோன்றிய வீழ்ச்சி, நிலையற்ற தன்மை, கூட்டுப்பதற்றம், கூட்டுப் பொறாமை, ஸ்திரமின்மை இங்கு சாதிக் கட்சிகள் வலுப்பெற்று ஆட்சி அதிகாரம் பெற, மதவாத அரசியல் எழுச்சி பெற உதவின. தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சி அரசியல் களத்தில் தோன்றிட ராமதாஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பெரும்பான்மை சாதிகள் ‘ஒடுக்கப்பட்டோரால்’ ஒடுக்கப்படுவதாய் ஒரு கதையாடலை முன்னெடுத்தார்கள். இதன் ஒரு நீட்சியாக தமிழ் சினிமாவில் “சின்ன கவுண்டர்”, “எஜமான்”, “தேவர் மகன்” போன்ற படங்கள் ஒடுக்கப்படும், அழிக்கப்படும் பெரும்பான்மை சாதிகளின் ஆதரவாக, தன்னிரக்க உணர்வை தோற்றுவித்தது நினைவிருக்கும்; மற்றொரு பக்கம் அத்வானியின் ரத யாத்திரை, காங்கிரஸின் புதிய வல்லபாய் பட்டேலான நரசிம்ம ராவின் உதவியுடன் நடந்த பாபர் மசூதி இடிப்பு, அதை ஒட்டிய கலவரங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் என அடுத்த வலதுசாரி அலை தோன்றியது. மீண்டும் கங்கா சந்திரமுகியின் சலங்கையை எடுத்தணிந்தாள்.

இந்த அலையானது, அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஒரு பக்கம் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் அம்பலமாகியது, மற்றொரு பக்கம் உலக அரங்கில் தோன்றிய பொருளாதார வீக்கம் இந்திய பொருளாதாரத்தை சரிவை நோக்கித் தள்ளியது, இதன் விளைவாக கொதிப்பு நிலை இங்கு ஒரு உச்சத்துக்கு சென்றது. நம் பிரச்சனைகளுக்கு ஒட்டுமொத்த காரணம் சிறுபான்மையினருக்கு வருடிக் கொடுக்கும் முற்போக்கு அரசியல் என்றும், சிறுபான்மையினர் எதிரி தேசங்களுக்கு துணை போய் இந்திய தேசத்தை அழிக்க, இந்துக்களை ஒழிக்க முனைகிறார்கள் என்றும் ஒரு கதையாடல் பிரச்சாரம் செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மோடி ஜி தன் நாஜிப்படையினருடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டில் இறுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டில் முதல் சில பத்தாண்டுகள் வரை ஆங்கிலேய காலனிய அரசு உருவாக்கி பரப்பிய அதே இஸ்லாமியர்-படையெடுப்பாளர்கள்-இந்து விரோதிகள் கதையாடல் இப்போது இந்துத்துவர்களால் பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு புதிய மோஸ்தரில் மக்கள் அரங்கில் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

அந்த சந்தர்பத்தில் இந்திய கூட்டு மனத்துக்கு ஏற்பட்ட கடும் மன அழுத்தம், மனப்பிளவுக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. ஒரு வேட்டைய ராஜா தேவைப்பட்டார். அவர் அரை நூற்றாண்டுக்கு முன்பு இங்கு ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்தவரே. ஆனால் ரெண்டாயிரத்துடன் அப்பெட்டி திறக்கப்பட்டு சந்திரமுகியின் பேய் வெளிப்பட்டு அது வேட்டைய ராஜாவைக் காட்டி ஆடிப்பாடத் தொடங்கியது. முதலில் அத்வானி, அடுத்து மோடி-ஷா கூட்டணி என ஒவ்வொருவராக சந்திரமுகியின் அறையைத் திறந்து பேயை விடுவித்தனர். அப்படித் தான் இந்திய வலதுசாரி அரசியலின் இரண்டாம் அலை, இரண்டாவது “ரா ரா சரசுக்க ராரா” ஆட்டம் நிகழ்ந்தது.

 

spacer.png

2) இந்த கட்டத்தில் முற்போக்கு அரசியல் சிந்தனையாளர்களும் அரசியல்கட்சிகளும் செய்த தவறு இதை ஒரு நோய்மை எனப் புரிந்து கொள்ளாமல், அதை குணமாக்க முயலாமல், ஆறுதல்படுத்த எத்தனிக்காமல், பிரபுவைப் போல “என்ன கொடுமை சார்” என புலம்ப ஆரம்பித்ததே. தாம் வேட்டைய ராஜாவுக்கு ஆதரவாக இருப்பதாய் ஒரு சித்தரத்தை வலதுசாரிகள், இந்துத்துவாதிகள் ஏற்படுத்தி பலனடைந்தார்கள். 2014, 2019 இல் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த போது நாம் கண்ட ஒரு உண்மை மோடி எதிர்ப்பு எப்படி அவருக்கு சாதகமாக முடிந்தது என்பது. ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு, எல்லைப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து மோடியை விமர்சிக்கும் போதெல்லாம் அது மோடி அரசுக்கு சாதகமாய் மாறியதைப் பார்த்தோம். ராகுல் தலைமையிலான காங்கிரஸ் அரசு இது ஒரு நோய்மை எனப் புரிந்து கொள்ளாததன் விளைவு இது. பெரும்பான்மை மக்கள் அமைதியற்று தவிக்கும் போது அவர்களுக்கு நேர்மறையாகப் பேசி ஆறுதல் அளிக்க வேண்டும். வேறெப்படியெல்லாம் பொருளாதாரத்தை வகுத்து வழிநடத்தி மக்களை தம்மால் காப்பாற்ற முடியும் எனப் பேச வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்வதே தம் அரசியல் எனக் காட்ட வேண்டும். வலதுசாரி-இடதுசாரி எனும் இருமையைக் கடந்து செல்ல வேண்டும். மோடியுடையது ஒரு வெகுஜன சிறுபான்மை வெறுப்பரசியல் மட்டுமல்ல, அதைக் கொண்டு பெரும்பான்மை இந்துக்களுக்கு தற்காலிக ஆறுதல்களை அளிக்கும் ஒரு அரசியலும் தான். ஆகையால் இந்த “ரா ரா” புனைவரசியலுக்குள் செல்லாமலே அதற்கு மாற்றாக தம்மை காங்கிரஸார் முன்வைக்க வேண்டும்.

மாறாக நீங்கள் சிறுபான்மை ஆதரவு அரசியலை எடுத்தால் நீங்கள் வேட்டைய ராஜாவுக்கு ஆதரவாக இருப்பதாய் காட்டி சந்திரமுகியை கோபமடைய வைக்க இந்திய வலதுசாரிகளால் முடியும். சீன ராணுவம் எல்லைக் கடந்து வந்து இந்தியாவை ஆக்கிரமிக்கிறது, இந்திய அரசு கையாலாகாதது எனப் பேசினால் நீங்கள் சீனாவுக்கு (வேட்டைய ராஜாவுக்கு) ஆதரவாகப் பேசுவதாய் மக்களுக்குத் தோன்றும். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சிப்பது, அவரை திருடர் என அழைப்பது, அவர் கொரோனா டாக் டவுனின் போது மக்களை வதைத்து கொன்றார் எனக் கூறினால் மக்களுக்கோ மோடியை அல்ல நீங்கள் இந்திய தேசியத்தை அவமதிப்பதாகவே தோன்றும். அதற்குப் பதிலாக நேர்மறையான மாற்றம், வளர்ச்சி, ஒற்றுமையை முன்னெடுக்கும் பிரச்சாரங்களை மேற்கொள்வது, மக்களை தொடர்ந்து ஆறுதல்படுத்துவது, ஒரு மாற்று அரசியலைக் காண்பிப்பதே எதிர்க்கட்சியினர் இப்போது செய்ய வேண்டியது. இன்னொன்று, அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் நீங்கள் அவரை விமர்சிப்பதில், கண்டிப்பதில், நோயைப் பழிப்பதனால் பலனில்லை (அந்த வேலையை விமர்சகர்களிடம் விட்டு விடுங்கள்). மருந்தை கொடுப்பது, அமைதிப்படுத்துவது, கூட இருந்து மென்மையாக கவனித்துக் கொள்வது, மருந்து வேலை செய்து நோய் நீங்கும் வரை காத்திருப்பது தான் பலனளிக்கும். அதே போல சந்திரமுகியை பின்பற்றி மற்றொரு “ரா ரா” நடனத்தை ஆடவும் நீங்கள் முயலக் கூடாது. அதாவது மோடியைப் போலச் செய்யவும் கூடாது.

இப்போது காங்கிரஸுக்குத் தேவை ஒரு மாற்று அரசியல், வலதுசாரி, இந்துத்துவ எதிர்ப்பரசியல் அல்ல.

இந்த உத்தியை இம்முறை அமெரிக்க தேர்தலின் போது பைடனின் ஜனநாயகக் கட்சி சிறப்பாக செயல்படுத்தியது – அவர்கள் அமெரிக்க தேசியவாதத்துக்கு ஆதரவாளர்களாக, அதே சமயம் பெரும்பான்மை இனத்தவர் vs சிறுபான்மை இனத்தவர் எனும் கதையாடலுக்குள் பங்கெடுக்காதவர்களாக, அதைக் கடந்த மாற்றம், நம்பிக்கை, சமத்துவம், முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டனர். அதனாலே பைடனால் டிரம்பை முறியடித்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடிந்தது. ஆனால் இது ஒரு சமூகக் கூட்டு நோய்மை என்பதால் அதை மெல்ல மெல்லவே அவரால் குணப்படுத்த முடியும். டிரம்பின் ஆதரவாளர்கள் அதிகமாகி உள்ளதும், மிக மோசமான நிர்வாகத்தை வழங்கிய பின்னரும் டிரம்புக்கு வெள்ளையின பெரும்பான்மையினரிடம் பெரும் ஆதரவு இப்போதும் உள்ளதும், தேர்தலில் பைடன் 76,343, 332 வாக்குகளைப் பெற்றிருந்தால், டிரம்போ 71,444, 567 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பதும் வலதுசாரி அரசியல் அமெரிக்காவில் இப்போதைக்கு மிகச் சற்று மட்டுமே பின்வாங்கி உள்ளது என்பதைக் காட்டுகிறது. கூட்டு மனநோய் குணமாக இன்னும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். (தற்காலிகமாகத் தான். மற்றொரு வரலாற்றுச் சூழலில் மீண்டும் அது தலையெடுக்கலாம்.)

spacer.png

இந்தியாவில் ஜியின் மிக மோசமான நிர்வாக முடிவுகள், கருணையற்ற நிர்வாகம் எப்படி கொரோனா காலத்தில் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது, சிறுதொழிகளை, ஏழைகளின் வாழ்வுரிமைகளை முழுக்க அழித்தது என்பதைப் பார்த்தோம். ஆனால் இப்போதும் இங்கு மோடி அலை ஓயவில்லை. தற்போது நடந்துள்ள பீகார் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களை வென்றுள்ளது. இத்தனைக்கும் பீகாரி புலம்பெயர் தொழிலாளர்களே பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து உணவின்றி, போக்குவரத்து வசதி இன்றி அதிகமாய் துன்புற்றார்கள். ஆனால் இப்படியான பெரும் துன்பம் ஒரு மக்கள் பரப்பை நிலைகுலைய வைக்கும் போதே வலதுசாரிகளுக்கான ஆதரவும் வினோதமாய் பெருகுவதைப் பார்க்கிறோம். ஏனென்றால் உலகம் முழுக்க எப்போதுமே வலதுசாரிகள் சமூக வீழ்ச்சியின் மீது வளரும் காளான்களே. அது தமது ஆட்சியினால் ஏற்படும் சீர்குலைவாக இருந்தாலும், அதற்குக் காரணம் தமது தேசியத்துக்கு எதிரான பாகிஸ்தான், சீனப் படையெடுப்புகளும், சிறுபான்மை சாதியினரின் மதங்களும் ஒன்று சேர்ந்து உள்ளுக்குள் தொடுக்கும் படையெடுப்புமே என ஒரு வேட்டைய ராஜாவை கட்டமைத்து அவர்கள் அரசியல் லாபத்தை கொய்வார்கள். பீகார் மட்டுமல்ல, உத்தரபிரதேசம், வடகிழக்கு போன்று பொருளாதாரம் வலுவாக இல்லாத எல்லா இடங்களிலும் இந்த “ரா ரா” பாடல் பெரும் வெற்றி பெறும். மோடியை வீழ்த்த்த எதிர்க்கட்சியினர் செய்ய வேண்டியது சந்திரமுகியை கிண்டலடிக்காமல், கண்டிக்காமல், விமர்சிக்காமல் அவளுக்கான தீர்வு தம்மிடம் உள்ளது, அது இந்துத்துவர்களின் வன்முறையான, பிற்போக்கான தீர்வை விட மேலான நியாயமான ஒன்று எனப் புரிய வைப்பதே; அப்படி பேசும் போது கங்காவிடம் அவளது அச்சங்கள் மிகையானவை, அவளுடைய பிரச்சனைக்கு நேர்மறையான தீர்வுகள் உண்டு எனக் கூறி, தான் சந்திரமுகி அல்ல கங்கா என மெல்ல மெல்ல நினைவுபடுத்துவதே. அமெரிக்காவில் பைடனைப் போன்றே  பீகார் தேர்தலில் ஆர்.ஜெ.டியின் தேஜஸ்வி யாதவ் கூட “ரா ரா” பாடலுக்குள் புகுந்து கூட ஆடாமல், வளர்ச்சி, மாற்றம் குறித்த ஒரு நேர்மறையான பிரச்சாரத்தை மேற்கொண்டார், அதன் விளைவாக அவரது கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றதை, அவரது மகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களைப் பெற்றதைப் பார்த்தோம். தோல்விதான் என்றாலும் ஒரு நம்பிக்கையூட்டும் தோல்வியாக இது இருக்கிறது. (தபால் ஓட்டுகளை எண்ணுவதில், சில மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்காதிருந்தால் பாஜக கூட்டணிக்கு இன்னும் நெருக்கமாய் கூடுதல் இடங்களை மகாகத்பந்தன் பெற்றிருக்கும் என்றும் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்.)

தமிழகம் போன்ற பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட, பதற்றமில்லாத ஒரு மாநிலத்தில் சந்திரமுகியை பாஜகவால் தட்டியெழுப்புவது மிகவும் சிரமம், ஆனால் சாத்தியமில்லாதது அல்ல. எந்த மாநிலமும் ஒருநாள் நோய் வாய்ப்படும், அப்போது பேய்பிடிக்கும். ஆனால் எது மருந்து என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை, நோய்மையை ஒரேயடியாய் குணப்படுத்த முடியாது என்பதை இந்த இரு தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.

பொறுமை, கனிவு, நம்பிக்கையின் பாற்பட்டதாய் இனி வலதுசாரி எதிர்ப்பரசியல் அமையட்டும்!

 

https://uyirmmai.com/news/politics/rise-and-fall-of-rightism-in-modern-world/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.