Jump to content

கவிதை


Recommended Posts

கட்டுப்பாடுகள் விட்டுப் போகையில் மனம் கெட்டுப் போய்விடும்

எம்மில் முட்டி மோதியே எழும் சிந்தைகளை அது கட்டிப் போட்டு விடும்

அதை வெட்டி வீழ்த்தியே வெற்றி வாகை சூடினால் வானம் நம் வசப்படும்

எதுவுமே தெரியாதென்று ஒதுங்கினால் வாழ்வு பெட்டிப் பாம்பாய் அடங்கி விடும்

எல்லாம் தெரிந்து கெட்டித்தனமாய் இருந்தால் வாழ்வு சிறந்து விடும்

எதையும் பட்டுத் தெளிவோம் என்று விட்டு விட்டால் பின்பு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என ஆகி விடும்

திட்டுத் திட்டாய் மனதில் தோன்றும் பல வன்மங்கள் அவை சொட்டு சொட்டாய் நம்மை அழித்து விடும்

மட்டு மட்டாய் நாம் வழங்கும் அன்பு கூட இறுதியில் பட்டுப் பட்டாய் கரைந்து போய் விடும்

கொட்டும் மழை போல் அன்பை வாரி வழங்கினால் விட்டுப் போகும் உறவு கூட கட்டுப் போட்டு பிரியாமல் நின்று விடும்

அதிகார மிதமான போதைகள் அடுக்காய் வந்துமே எம்மை ஆட்டிப் படைத்து விடும்

எட்டி உதைத்து அது கை தட்டி சிரித்து எம்மை ஏளனம் செய்து விடும்

பின்பு அது ஒரு வட்டத்தினுள் எம்மை நிற்க வைத்து விடும்

கொட்டமடித்து கோரமாய் சிரித்து படுகுழியினுள் தள்ளி விடும்

மட்டமான சிந்தைகளை வெட்டியெறிந்து தட்டி விடுவோம்

எம் மனதை அது சுட்டு விடட்டும் தீய இச்சைகளை பெற்று விடுவோம்

பல வெற்றி வாய்ப்புகளை இதனால் நாம் தொட்டு விடுவோம் வாழ்வின் உயர்வு நிலையை!!!!!

-ஒருத்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை👍. நன்றி பகிர்வுக்கு, தொடர்ந்து இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமானதொரு கவிதை. தொடர்ந்து பதிவிடுங்கள் தமிழ்நிலா.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை ..👌பகிர்விற்குநன்றிகள் ..👍

Link to comment
Share on other sites

On 11/19/2020 at 08:14, suvy said:

ஆக்கபூர்வமானதொரு கவிதை. தொடர்ந்து பதிவிடுங்கள் தமிழ்நிலா.....!  👍

மிக்க நன்றிகள்🙏

On 11/19/2020 at 09:23, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதோர் கவிதை ..👌பகிர்விற்குநன்றிகள் ..👍

மிக்க நன்றிகள்🙏

On 11/19/2020 at 01:50, உடையார் said:

உண்மை👍. நன்றி பகிர்வுக்கு, தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க நன்றிகள்🙏

On 11/19/2020 at 09:23, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதோர் கவிதை ..👌பகிர்விற்குநன்றிகள் ..👍

மிக்க நன்றிகள்🙏

On 11/19/2020 at 09:23, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதோர் கவிதை ..👌பகிர்விற்குநன்றிகள் ..👍

மிக்க நன்றிகள்🙏

On 11/19/2020 at 09:23, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதோர் கவிதை ..👌பகிர்விற்குநன்றிகள் ..👍

மிக்க நன்றிகள்🙏

On 11/19/2020 at 09:23, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதோர் கவிதை ..👌பகிர்விற்குநன்றிகள் ..👍

மிக்க நன்றிகள்🙏

On 11/19/2020 at 09:23, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதோர் கவிதை ..👌பகிர்விற்குநன்றிகள் ..👍

மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 06:20, உடையார் said:

உண்மை👍. நன்றி பகிர்வுக்கு, தொடர்ந்து இணைந்திருங்கள்

 

On 19/11/2020 at 12:44, suvy said:

ஆக்கபூர்வமானதொரு கவிதை. தொடர்ந்து பதிவிடுங்கள் தமிழ்நிலா.....!  👍

 

On 19/11/2020 at 13:53, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதோர் கவிதை ..👌பகிர்விற்குநன்றிகள் ..👍

நாம் ஓர் கவிதை எழுதினால் எட்டியும் பார்க்காது சனம் 🤔😉

வாழ்த்துக்கள் பிள்ளை தமிழ் மூண்( நிலா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

நாம் ஓர் கவிதை எழுதினால் எட்டியும் பார்க்காது சனம் 🤔😉

வாழ்த்துக்கள் பிள்ளை தமிழ் மூண்( நிலா)

முதல்ல எழுதுங்கோ, அப்புறம் பார்க்கலாம் அது கவிதையா என்று.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

முதல்ல எழுதுங்கோ, அப்புறம் பார்க்கலாம் அது கவிதையா என்று.....!  😂

கல்யாணமான பிறகு கவிதை வரவில்லை உளறல் வருகிறது சுவியர்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கல்யாணமான பிறகு கவிதை வரவில்லை உளறல் வருகிறது சுவியர்🤣

நிறைய பிள்ளையை நேசிக்கிறீங்கள் போல அதுதான் உந்த உளறல் பிரச்சினை.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

நிறைய பிள்ளையை நேசிக்கிறீங்கள் போல அதுதான் உந்த உளறல் பிரச்சினை.......!  😁

என மகள் நடக்க ஆரம்பிக்கிறாள் அவள் கால் கொலிசின் சிணுங்கலில் சிதறி விட்டேன் சுவியர் 
 
குமரியின் கொலுசு கூப்பிடும் 
குழந்தையில் கொலுசு கூப்பிட்டு கொல்லும் 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என மகள் நடக்க ஆரம்பிக்கிறாள் அவள் கால் கொலிசின் சிணுங்கலில் சிதறி விட்டேன் சுவியர் 
 
குமரியின் கொலுசு கூப்பிடும் 
குழந்தையில் கொலுசு கூப்பிட்டு கொல்லும்
 😍

ஆஹா....கவிதை இது கவிதை....,  நீங்கள் கவிஞர் ஆகிவிட்டீர்கள் தனி.....!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.