Jump to content

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் ;மஹிந்த தேஷப்பிரிய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் ;மஹிந்த தேஷப்பிரிய

  • Mathi
  • November 18, 202012:57 am

 

ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதேபோன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவிணைவாதத்திற்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது எந்த வகையிலும் நியாயமானதல்ல எனவும்,இதனை தகர்த்து எறிய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் டொக்டர் அப்துல் காலாம் கூறுவது போன்று “நான் முதலில் இந்தியன் தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தை வழிபாடு செய்கின்றவன்” என்று கூறுவதில் தவறில்லை.

எந்தவொரு தமிழ் புத்திஜீவியிடமும் இது குறித்து கேட்கலாம் ஈழம் என்பது இலங்கைக்கான மறுபெயரே தவிர அது பிரிவிணைவாத சொல் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

ஈழம் என்ற சொல்லுக்கு இலங்கையில் தடையில்லை அதனை எவ்வாறு சட்டவிரோதமான சொல்லாக கருத முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எமது தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு காணப்படுகின்றதல்லவா? அதில் ஈழம் என்ற சொல் உள்ளது அல்லவா? ஈழ சிரோமணி என்ற சொல் தேசிய கீதத்தில் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை, ரத்தினதீபம் என்பது போன்றே இலங்கைக்கு ஈழம் என பெயருள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழம் என்ற சொல் அடிப்படைவாதமாக கருதப்படவே முடியாது எனவும், அவ்வாறு கருதினால் அது பாரதூரமான தவறு எனவும், நாட்டை பிளவடையச் செய்வதற்கு தாம் ஆதரவளிக்கும் நபர் கிடையாது என்ற போதிலும் ஈழம் என்ற சொல்லை பிரிவிணையாக கருதுவது இன்னும் மக்களை பிளவுபடுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள மக்கள் தமிழர்களை எதிர்க்கின்றார்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களை எதிர்க்கின்றார்கள் என்ற மாயை காணப்படுகின்றது இவ்வாறான மாயைகள் தகர்க்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

 

https://www.meenagam.com/தமிழீழ-விடுதலைப்-புலிகளி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்பது பிரிவினைவாதமல்ல – மாயைகள் தகர்க்கப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

 
desapriya-696x348.png
 40 Views

ஈழம் என்ற சொல் தமிழ்ப் பிரிவினைவாதத்துக்காக பயன்படுத்தப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனை உடைத் தெறியவேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் எழுப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

“ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் இல்லை. ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதே போன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு.

ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவினைவாதத்துக்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயமானதல்ல. இதனை தகர்த்து எறியவேண்டும்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுவது போன்று “நான் முதலில் இந்தியன். தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தை வழிபாடு செய்கின்றவன்” என்று கூறுவதில் தவறில்லை. எந்தவொரு தமிழ்ப் புத்திஜீவியிடமும் இது குறித்து கேட்கலாம். ஈழம் என்பது இலங்கைக்கான மறுபெயரே தவிர அது பிரிவினைவாத சொல் அல்ல. ஈழம் என்ற சொல்லுக்கு இலங்கையில் தடையில்லை. அதனை எவ்வாறு சட்டவிரோதமான சொல்லாகக்கருத முடியும்?

தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில், ஈழம் என்ற சொல் உள்ளது. ஈழ சிரோமணி என்ற சொல் தேசிய கீதத்தில் காணப்படுகின்றது. இலங்கை, ரத்தினதீபம் என்பது போன்றே இலங்கைக்கு ஈழம் என பெயருள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்திற்காக போராடவில்லை. அவர் தமிழீழத்திற்காக போராடினார். ஈழம் என்ற சொல் அடிப்படைவாதமாக கருதப்படவே முடியாது. அவ்வாறு கருதினால் அது பாரதூரமான தவறாகும். நாட்டை பிளவடையச் செய்வதற்கு தாம் ஆதரவளிக்கும் நபர் கிடையாது என்ற போதிலும் ஈழம் என்ற சொல்லைப் பிரிவினையாக கருதுவது இன்னும் மக்களை பிளவுபடுத்தவே செய்வதாகும்.

சிங்கள மக்கள் தமிழர்களை எதிர்க்கின்றார்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களை எதிர்க்கின்றார்கள் என்ற மாயை காணப்படுகின்றது. இவ்வாறான மாயைகள் தகர்க்கப்பட வேண்டும்” என்றார்.

 

https://www.ilakku.org/ஈழம்-என்பது-பிரிவினைவாதம/

Link to comment
Share on other sites

மகிந்த தேசப்பிரியவின்  கருத்து சரியானதே. ஈழம் என்ற சொல் வரலாற்று ரீதியில்  முழு இலங்கை தீவையும் குறிப்பதாகவே இருந்தது.  

1976 ல் தமிழீழம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானம் உருவான பின்னர்  சிங்கள மக்களிடம் ஈழம் என்றால் பிரிவினைவாதம் என்ற கருத்து இனவெறியர்களால் விதைக்கப்பட்டது. 

1972 ல் வெளிவந்த ஈழத்து திரைப்படமான “குத்து விளக்கு” திரைப்படத்தில் கலைஞர் குலசீலநாதனின் பாடர் வரிகள். 

 ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா

கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு
மங்கை நீ ஊட்டிவரும் அழுதமம்மா
சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம்
சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா

ஈழத்து கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த
கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது
உன்மடியிலமம்மா-யாழுக்கு நூல்வடித்து
பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா

பாட்டிற்கு பொருள்சொன்ன நாவலர் பிறந்தது
யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா
உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக
வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா

புத்தகமும் சைவமும் புனித இஸ்லாமும்
கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா
இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று
இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொறீலங்கா சிங்களவர்களுக்கே.. என்ற.. சிங்கள பெளத்த பேரினவாத சித்தாந்தவாதிகள்... சிங்களவர்களை மட்டும் குழப்பவில்லை.. அண்டையில் ஜெயலலிதா அம்மையாரும்.. தனது பங்கிற்கு.. தமிழருக்கு எதிரான விசத்தை கக்க.. ஈழத்தமிழரல்ல.. இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கனும் என்று சொல்லிட்டு.. மேல போய் சேர்ந்திட்டார்.

இதில்.. சிங்களப் பேரினவாதிகளும்.. திராவிட தமிழின விரோதிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் ஒரு கட்டத்தில் இருந்துள்ளனர்.

இலங்கை என்பதே.. ஈழநாடு தான். அது புவியியல் ரீதியிலும் தமிழ்நாட்டோடு ஒட்டிய தேசம் தான். அது ஒருபோதும் தூய.. சிங்கள பெளத்த தேசமாக இருக்க முடியாது. 

 

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

இதில் சொறீலங்கா சிங்களவர்களுக்கே.. என்ற.. சிங்கள பெளத்த பேரினவாத சித்தாந்தவாதிகள்... சிங்களவர்களை மட்டும் குழப்பவில்லை.. அண்டையில் ஜெயலலிதா அம்மையாரும்.. தனது பங்கிற்கு.. தமிழருக்கு எதிரான விசத்தை கக்க.. ஈழத்தமிழரல்ல.. இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கனும் என்று சொல்லிட்டு.. மேல போய் சேர்ந்திட்டார்.

இதில்.. சிங்களப் பேரினவாதிகளும்.. திராவிட தமிழின விரோதிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் ஒரு கட்டத்தில் இருந்துள்ளனர்.

இலங்கை என்பதே.. ஈழநாடு தான். அது புவியியல் ரீதியிலும் தமிழ்நாட்டோடு ஒட்டிய தேசம் தான். அது ஒருபோதும் தூய.. சிங்கள பெளத்த தேசமாக இருக்க முடியாது. 

 

நெடுக்கர், ஜதார்ததத்தில் சிங்களவர்களே 80 வீதத்திற்கு மேல் வாழ்கின்றனர். இருந்தாலும் தூய சிங்கள நாடாகவும் இருக்க முடியாது. தூய தமிழ் நாடாகவும் இருக்க முடியாது. இந்த தூய  என்பதே உலகில்  சாத்தியமற்ற ஒரு விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

நெடுக்கர், ஜதார்ததத்தில் சிங்களவர்களே 80 வீதத்திற்கு மேல் வாழ்கின்றனர். இருந்தாலும் தூய சிங்கள நாடாகவும் இருக்க முடியாது. தூய தமிழ் நாடாகவும் இருக்க முடியாது. இந்த தூய  என்பதே உலகில்  சாத்தியமற்ற ஒரு விடயம். 

ஒரு மீன் தொட்டியில் இரண்டு கப்பீசையும் நான்கு கோல்ட்பிஸ்ஸையும் விட்டு.. கப்பீச் பெருகித்தள்ளி.. 2 ஆனது 8 ஆனதற்காக.. அந்தத் தொட்டி கப்பீஸூக்கே சொந்தமானது என்று எப்படிச் சொல்ல முடியாதோ.. அதேதான்.. ஈழம் என்பது புவியியல் ரீதியில்.. தமிழகத்தின் ஒரு பகுதி என்பது அந்த மீன் தொட்டிக்கு ஒப்பானது. கப்பீஸ் போன்றது சிங்களச் சனத்தொகை என்பது. கோல்பிஸ் என்பது தமிழர்களின் குடித்தொகைக்கு ஒப்பதாகும்.

தூய தேசங்கள் இருக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டாலும்.. தேசிய இனங்களுக்கான தேசங்கள் இருக்க முடியும். அதேபோல்.. தமிழர்களுக்கான பூர்வீக தேசம் தமிழர்களுக்கே தான் சொந்தம். அவர்கள் அதனை சிங்களவர்களிடம் தட்டிப்பறிக்கவில்லையே. இலங்கைத் தீவில் சிங்களவர்களுக்கு என்று ஒரு தேசம் இருப்பதை தமிழர்கள் நிராகரிக்கவில்லையே. சிங்களவர்களைப் போல் தமிழர்களுக்கும் ஒரு தேசம் உண்டு என்பது தான் நிலைப்பாடு. மேற்குலக ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்படு சிங்களவர்களிடம் இனாமாக கையளிக்கப்பட்ட தமிழர் தேசத்தை.. அதை அடைவதற்கு தான் இத்தனை முயற்சிகளும்.

Link to comment
Share on other sites

43 minutes ago, nedukkalapoovan said:

ஒரு மீன் தொட்டியில் இரண்டு கப்பீசையும் நான்கு கோல்ட்பிஸ்ஸையும் விட்டு.. கப்பீச் பெருகித்தள்ளி.. 2 ஆனது 8 ஆனதற்காக.. அந்தத் தொட்டி கப்பீஸூக்கே சொந்தமானது என்று எப்படிச் சொல்ல முடியாதோ.. அதேதான்.. ஈழம் என்பது புவியியல் ரீதியில்.. தமிழகத்தின் ஒரு பகுதி என்பது அந்த மீன் தொட்டிக்கு ஒப்பானது. கப்பீஸ் போன்றது சிங்களச் சனத்தொகை என்பது. கோல்பிஸ் என்பது தமிழர்களின் குடித்தொகைக்கு ஒப்பதாகும்.

தூய தேசங்கள் இருக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டாலும்.. தேசிய இனங்களுக்கான தேசங்கள் இருக்க முடியும். அதேபோல்.. தமிழர்களுக்கான பூர்வீக தேசம் தமிழர்களுக்கே தான் சொந்தம். அவர்கள் அதனை சிங்களவர்களிடம் தட்டிப்பறிக்கவில்லையே. இலங்கைத் தீவில் சிங்களவர்களுக்கு என்று ஒரு தேசம் இருப்பதை தமிழர்கள் நிராகரிக்கவில்லையே. சிங்களவர்களைப் போல் தமிழர்களுக்கும் ஒரு தேசம் உண்டு என்பது தான் நிலைப்பாடு. மேற்குலக ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்படு சிங்களவர்களிடம் இனாமாக கையளிக்கப்பட்ட தமிழர் தேசத்தை.. அதை அடைவதற்கு தான் இத்தனை முயற்சிகளும்.

உங்களது கோல்ட்பிஷ், கப்பீச் உதாரணத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஏற்றுகொள்கிறேன். என்ன செய்வது இந்த தலைமுறை தனது முட்டாள்தனத்தால் அதைக் கோட்டை விட்டுவிட்டது. எதிர்கால சந்த‍தியாவது தனது சுய சிந்தனையுடன் போராடி அதை அடையட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நெடுக்கர், ஜதார்ததத்தில் சிங்களவர்களே 80 வீதத்திற்கு மேல் வாழ்கின்றனர். இருந்தாலும் தூய சிங்கள நாடாகவும் இருக்க முடியாது. தூய தமிழ் நாடாகவும் இருக்க முடியாது. இந்த தூய  என்பதே உலகில்  சாத்தியமற்ற ஒரு விடயம். 

தூய என்பது சாத்தியமற்ற விடயம் என்பது எல்லோருக்குமே, ஏற்கனவே தெரிந்ததுதான். இதில் புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை.

ஆனால் சொல்லப்படும் விடயங்களைக் கணக்கில் கொள்ளாது ஏன் புறக்கணிக்கத்தக்க விடயங்களை தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்பது புரியவில்லை. 

🤥

1 hour ago, tulpen said:

உங்களது கோல்ட்பிஷ், கப்பீச் உதாரணத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஏற்றுகொள்கிறேன். என்ன செய்வது இந்த தலைமுறை தனது முட்டாள்தனத்தால் அதைக் கோட்டை விட்டுவிட்டது. எதிர்கால சந்த‍தியாவது தனது சுய சிந்தனையுடன் போராடி அதை அடையட்டும். 

உண்மை 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்பது தமிழர்கள் வாழும் பகுதிகள் என்ற தோற்றத்தை உருவாக்கியது தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் என்று சொல்கிறார்கள்.
கலைஞர் குலசீலநாதனின் பாடல் வரிகளில் சைவமும் என்று வருகிறது குமாரசாமி மகிழ்ச்சி அடைவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

மகிந்த தேசப்பிரியவின்  கருத்து சரியானதே. ஈழம் என்ற சொல் வரலாற்று ரீதியில்  முழு இலங்கை தீவையும் குறிப்பதாகவே இருந்தது.  

1976 ல் தமிழீழம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானம் உருவான பின்னர்  சிங்கள மக்களிடம் ஈழம் என்றால் பிரிவினைவாதம் என்ற கருத்து இனவெறியர்களால் விதைக்கப்பட்டது. 

1972 ல் வெளிவந்த ஈழத்து திரைப்படமான “குத்து விளக்கு” திரைப்படத்தில் கலைஞர் குலசீலநாதனின் பாடர் வரிகள். 

 ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா
 

ஈழத்துணவும் காளகத்தாக்கமும் - பட்டினப்பாலை, ஈழமணித்திருநாடெங்கள் நாடே இனியவுணர்ச்சி பெற்றால் இன்ப வீடே -புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, இஞ்வேலியின் மஞசளில் வீழ்ந்திடும் ஈழமண்டல நாடெங்கள் நாடே-சின்னத்தம்பிப் புலவர்.  இப்படி எண்ணற்ற புலவர்கள்  ஈழம் என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்க ஒரு கவிஞரியற்றிய ஈழம் பற்றிய பாடலை மட்டும் குறிப்பிடுவது நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, karu said:

இப்படி எண்ணற்ற புலவர்கள்  ஈழம் என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்க ஒரு கவிஞரியற்றிய ஈழம் பற்றிய பாடலை மட்டும் குறிப்பிடுவது நியாயமா?

Tulpen குலசீலநாதனின் பாடலை இங்கே போட்டபடியால் தான் இப்படி பாடல்  இருப்பது எனக்கு தெரிய வந்தது. நீங்களும் மற்ற பாடல்களை போட்டால் நாங்கள் படித்து மகிழுவோமே

Link to comment
Share on other sites

23 hours ago, karu said:

ஈழத்துணவும் காளகத்தாக்கமும் - பட்டினப்பாலை, ஈழமணித்திருநாடெங்கள் நாடே இனியவுணர்ச்சி பெற்றால் இன்ப வீடே -புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, இஞ்வேலியின் மஞசளில் வீழ்ந்திடும் ஈழமண்டல நாடெங்கள் நாடே-சின்னத்தம்பிப் புலவர்.  இப்படி எண்ணற்ற புலவர்கள்  ஈழம் என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்க ஒரு கவிஞரியற்றிய ஈழம் பற்றிய பாடலை மட்டும் குறிப்பிடுவது நியாயமா?

ஈழம் என்ற சொற்றொடர் நீண்டகாலமாக வரலாற்றில்  இருக்கிறது. பல புலவர்களின் பாடல்களில் இருக்கலாம். என்றாலும்  வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு  சில வருடங்களுக்கு  முன்பு இயற்றப்பட்ட பாடலில் கூட ஈழம் என்பது முழு இலங்கை தீவையும் அழைக்க பயன்படுத்தப்பட்டும் அதன் பின்னர்  மிக விரைவாக இனவெறி கருத்துக்கள் அந்த சொல்லையே பிரிவினைவாதமாக விளங்கிக்கொள்ளும்படி சிங்கள மக்களை மாற்றி உள்ளது. இனவெறி என்பது அவ்வளவு கொடூரமானது என்பதை சுட்டிக்காட்டவே அந்த பாடலைக் குறிப்பிட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்  என்பது... தமிழருக்கு சொந்தமானது.
அதில்... சிங்களவன், கொண்டாட எந்த உரிமையும் இல்லை.

மகா வம்சத்திலேயே.... விஜயன், ஈழத்திற்கு... 
வெள்ளரச மரத்துடன், வந்துள்ளான் என தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
அதற்கிடையில்... ஏன், இந்த பித்தலாட்டம் என்பது விளங்கவேயில்லை.

தமிழர்... இளகிய, மனது படைத்தவர்கள் என்பதால்...
கங்கையிலிருந்து... கடாரம் வரை, ஆண்ட தமிழன்..
இன்று... கேவலமாக, இருக்கின்றான்.

ஒரு, ஆறுதலுக்காக... பாஞ்ச்  அண்ணை இணைத்த பாடலையும்,
⬇️ கீழே... உள்ள இணைப்பில் , கேட்டுப்  பாருங்கள்.  ⬇️ :)

 

 

Link to comment
Share on other sites

On 19/11/2020 at 18:57, tulpen said:

உங்களது கோல்ட்பிஷ், கப்பீச் உதாரணத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஏற்றுகொள்கிறேன். என்ன செய்வது இந்த தலைமுறை தனது முட்டாள்தனத்தால் அதைக் கோட்டை விட்டுவிட்டது. எதிர்கால சந்த‍தியாவது தனது சுய சிந்தனையுடன் போராடி அதை அடையட்டும். 

தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்கு நாடுகள் உள்ளன.  

இந்தியாவில் அது கிந்தியர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது.

இலங்கையில் அது சிங்களவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது.

அன்று மேலை நாட்டவரின் அடிமைத் தளைக்குள் சிக்கியிருந்த தமிழர்களின் நாடுகள் விடுபட்டு, இன்று தமிழர் தங்கள் சொந்த மண்ணிலேயே, சனநாயகம் என்ற போர்வையால் தங்களை மூடியுள்ள வேற்று இனங்களின் அதிகாரங்களுக்குள் சிக்கியுள்ளமைதான் உண்மை. இந்த நிலையும் கடந்து போகும். 

ஆளப்போறான் தமிழன் கவியின் பாட்டுத் தீர்க்க தரிசனமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 23:58, விளங்க நினைப்பவன் said:

ஈழம் என்பது தமிழர்கள் வாழும் பகுதிகள் என்ற தோற்றத்தை உருவாக்கியது தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் என்று சொல்கிறார்கள்.
கலைஞர் குலசீலநாதனின் பாடல் வரிகளில் சைவமும் என்று வருகிறது குமாரசாமி மகிழ்ச்சி அடைவார்

அட ஏன் சார் நீங்க வேறை..?

1983 கொழும்பு கலவரம் வரை "ஈழம்"னு ஒரு வார்த்தை இருக்குறதே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு தெரியாது.

இலங்கையில், இயக்கங்களின் பெயர்களின் நீட்சியில் ஒட்டியிருந்த "ஈழம்" என்ற சொல்லுக்கு அப்போதைய காலங்களில், இலங்கையின் வரைபடத்தில் இயக்கங்கள் கோரும் தமிழீழ எல்லைகளை கோட்டிட்டு விளக்கமாக காட்டியிருந்தார்கள். அதில் பொத்துவில் முதல் புத்தளம், சிலாபம் வரை அடங்கிருந்தன. அதுவே பின்னர் நிலையாயிற்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

1983 கொழும்பு கலவரம் வரை "ஈழம்"னு ஒரு வார்த்தை இருக்குறதே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு தெரியாது.

இலங்கையில், இயக்கங்களின் பெயர்களின் நீட்சியில் ஒட்டியிருந்த "ஈழம்" என்ற சொல்லுக்கு அப்போதைய காலங்களில், இலங்கையின் வரைபடத்தில் இயக்கங்கள் கோரும் தமிழீழ எல்லைகளை கோட்டிட்டு விளக்கமாக காட்டியிருந்தார்கள். அதில் பொத்துவில் முதல் புத்தளம், சிலாபம் வரை அடங்கிருந்தன. அதுவே பின்னர் நிலையாயிற்று

நீங்கள் சொன்னது சரியே. இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம். புலிகள் தமிழர்கள் பகுதிகளை தமிழீழம் என்றே சொன்னார்கள். eprlf- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி epdp, ஈரோஸ் என்று இயக்கங்கள் பெயரை குழப்பியடித்து தமிழ்நாட்டு பத்திரிக்கைகளுக்கு தவறாக தகவல் தெரிவித்து இப்போது இலங்கையர் ஒருவரையே ஈழம் என்பது தமிழருக்கு சொந்தமானது என்று சொல்ல வைத்துள்ளது.

Link to comment
Share on other sites

On 20/11/2020 at 13:57, தமிழ் சிறி said:

ஈழம்  என்பது... தமிழருக்கு சொந்தமானது.
அதில்... சிங்களவன், கொண்டாட எந்த உரிமையும் இல்லை.

 

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம்.

ஈழம் என்ற சொல்லை, பாளி, சமஸ்கிரதம், சிங்களம், ஹெல பாஷை (ஈழ மொழி) ஆகியவற்றில் ஹெல என்பார்கள். சிங்கபாகுவின் மகனான சிங்க வம்சத்தை சேர்ந்த விஜயனுடன் வந்த மக்கள் பேசிய மொழி, ஈழ மக்கள் பேசிய மொழியுடன் கலந்து சிங்க ஹெல = சிங்கள மொழி உருவானது. 

 

இலங்கை என்ற சொல்லை, பாளி, சமஸ்கிரதம், சிங்களம், ஹெல பாஷை (ஈழ மொழி) ஆகியவற்றில் லங்கா என்பார்கள். ஶ்ரீமாவோ அதனை ஶ்ரீலங்கா ஆக்கிவிட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.