Jump to content

வரிக்குதிரையான புத்தகம்  - ஜே.ஜே சில  குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரிக்குதிரையான புத்தகம்  - ஜே.ஜே சில  குறிப்புகள்

நடேசன்

http://puthu.thinnai.com/wp-content/uploads/2020/11/IMG_20201105_114558_HDR-1-768x1024.jpg

 ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி  சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற  நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக்  கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு,  வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து வாசித்தபோது, பல வசனங்களை அவர் வழக்கமாக எல்லோரும் எழுதும் இலக்கண ஒழுங்கமைப்புக்கு மாறாக எழுதியிருப்பது தெரிந்தது.

‘உட்கார இடம் பிடிக்கும் முயற்சிகளில், பஸ்களில், தியேட்டர்களில் விருந்துகளில் பெரிய மனிதர்கள் சீரழிந்து சிறுத்துப் போவதைப் பார்க்கிறேன். ‘

இதைச் சாதாரணமானவர்கள் எழுதும்போது கீழே உள்ளவாறு  எழுதியிருப்பார்கள்.

பெரிய மனிதர்கள் , பஸ்களில், தியேட்டர்களில் விருந்துகளில் உட்கார இடம் பிடிக்கும் முயற்சிகளில் சீரழிந்து சிறுத்துப் போவதைப் பார்க்கிறேன்.

ஆனால்,  சுந்தர  ராமசாமி  எழுதியிருப்பது கவிதைக்கான மொழி.   வாசிக்கும்போது கவர்ச்சி  தெரிகிறது . ஆனால் அவசரமாக வாசிப்பவர்களுக்கு அர்த்தம், அவசரத்தில் கையில் அள்ளிய நீராகி விடும்.

இந்த நாவல் ஒரு புளட் இல்லாத கதையான போதிலும்,  இங்கு நமக்கு  ஜே ஜே என்ற ஒரு எழுத்தாளரது பாத்திரம் மனதில் கருங்கல்லில்  செதுக்கிய சிற்பமாகப் பதிகிறது. அவரது மற்றைய இரு நாவல்களான  “ஒரு புளியமரத்தின் கதை”                       “ குழந்தைகள் பெண்கள் ஆண்கள் “ யதார்த்தமானவை. அவற்றிலிருந்து  ஜே.ஜே குறிப்புகள் மாறுபடுகிறது.

இப்படியான நாவலின் அவசியமென்ன ?

யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது ?

இந்த இரண்டு கேள்விகளுமே இதைப் படித்து முடித்ததும் எனது மனதில் எழுந்தது.

சுந்தர ராமசாமி தமிழ்ச் சமூகத்தினதும் மேலும்  முக்கியமாக எழுத்தாளர்களின் போதாமையையும் நையாண்டி செய்வதற்காக எழுதியிருக்கலாம் .

அப்படியென்றால் ஏன் ஒரு தமிழ் எழுத்தாளனை உருவகப்படுத்தமுடியாது?

அவரது ஜோசஃப் ஜேம்ஸ் என்ற ஜேஜே க்கு பொருந்தக்கூடியவர்  தமிழ் எழுத்துலகில் எவருமில்லையோ!  இதனாலே மலையாள எழுத்துலகிலிருந்து ஒருவரைக் கற்பனை பண்ணியிருக்கிறாரோ?.

அதற்கு அவரே இந்தியப் பிறமொழி எழுத்தாளரை அறிமுகப்படுத்த எழுதுவதாக சொல்லி விட்டார் .

ஆனால்  ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டாளா?’  என்ற ஒரே வார்த்தையை ஜேஜே விட்டுச் செல்வதன் மூலம் தமிழ் நாவலுலகப் பலூனில்  ஊசியால் குத்திவிட்டார்.

 ‘கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குட்டியை அவளைத் துரத்திய அரசர்களிடமிருந்து, முடிவில்  அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும்   விடுவித்து,  திருச்சூர் கோபாலன்  நாயருக்கே மணம் முடித்து  வைக்க என்னால் முடியுமென்றால், சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையிலிருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும். ஆனால் , கடவுளே எனக்கு அந்த சக்தி இல்லையே?  ‘  . என்ற வசனத்தோடு ஆரம்பத்திலே நாவல் தொடங்குகிறது .

தமிழ்ச் சமூகம், தமிழ் எழுத்துலகத்திற்கு அப்பால் இடதுசாரிகள் மீதும் கைக்குண்டுகளை தூக்கிவீசுகிறார்.

 ‘நாட்டு வெடிகளை அவ்வப்போது வெடித்து புகையையும் சத்தத்தையும் கிளப்பி சமூக அமைப்பை மாற்றமுடியாது என்றாராம்  அய்யப்பன். ‘ ‘மேலும் திருவிழாக்களில் வாணவேடிக்கைக்காரனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும். ‘

 ‘மூலதனமில்லாமல் முதலாளியாக இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் என்றும் மற்றது பாஷை என்றும் ஜேஜே சொல்கிறான். ‘

இவற்றைவிடப் பலமான விமர்சனத்தை எனக்குத் தெரிந்தவரையில் எமது சமூகத்தில் உள்ள எழுத்தாளர்கள் மீது எவரும் வைக்கவில்லை. வைக்கமுடியுமா?

நாவலை வாசிக்கும்போது நமது ஈழ வியாபாரத்திற்குப் பொருத்தமான இடங்களில் தடுக்கி விழுந்தேன்.

தன் கழுத்திலே பிணைக்கப்பட்ட கழியின் எதிர்முனையில் தொங்கும் உணவை எட்ட நிரந்தரம் ஓடிக்கொண்டிருக்கும் ‘குதிரையின் வியர்த்தம் ‘

 ‘நாம் பின் திரும்பிப் பார்க்கும்போது இன்றைய தலைவர்களும், பிரபலங்களும்,  பூச்சி போல கொசுக்கள்போல, மூட்டைகள் போல நமக்குத் தெரிவார்கள் . அவர் அவர்களுக்கு உரிய நியாயமான உருவத்தை அன்று அவர்கள் அடைவார்கள் ‘ என்ற வார்த்தைகளை  கண்ணில் அருத்தும்போது எமது அரசியலை, ஏன் தமிழ் அரசியலையே கடந்து போகமுடியாது .

யாருக்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது..?  என்ற எனது அடுத்த கேள்விக்கான பதிலென்ன?

தமிழில் இதுவரை வாசகருக்காகவே எழுதிய புத்தகங்களே அனைத்தும். அதிலும் கல்கி போன்றவர்களது  அதிகற்பனை பதிவுகளை ஒருவிதமான கேளிக்கை உணர்வுக்கும் அதேவேளையில்,  பழம் பெருமைகளைப் பேசும் சமூகத்தை நோக்கி எறிந்த கருவாட்டுத் துண்டுகளாக எழுதியபோது மற்றையவர்கள் நீதி  – காந்தியசிந்தனை  என்று உபதேசமாக நாவல்களை  எழுதினார்கள் . இடதுசாரிகள்,  எழுத்துகள் மூலம் வர்க்கப் புரட்சிக்குத் தயாராகினார்கள்.  அக்காலத்தில் யதார்த்தத்தை எழுதிய புதுமைப்பித்தனை முன்னெடுக்கச் சுந்தர ராமசாமி  விரும்புவது ஆரம்ப பக்கங்களிலே தெரிகிறது.

இந்த நாவலில் பல வசனங்கள் பைபிளில் வருவதுபோல் நினைவில் நிலைத்திருக்கும்.

 ‘மனைவிமார்களின் பெரிய எதிரி கணவனின் இலக்கிய நண்பனே. கணவர்களை தங்கள் கையிலிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு போய்விடுகிறார்களோ எனப் பயப்படுகிறார்கள். ‘

‘ வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் திறமை கொண்டவன் என்று உள்ளூர நினைப்பு.  நம்மவர்கள் மீது அவநம்பிக்கை . பெண்களிடம் இது அதிகம்.  அவர்களுக்கு தங்கள்புருஷர்களைத் தெரியும். குடும்பத்தையே நிர்வாகம் பண்ணத்தெரியாதவன்.  தேசத்தை எவ்வாறு நிர்வாகம் பண்ணப்போகிறான் என்ற எண்ணம்  ‘

இப்படியான பல இடங்களைக் கோடு போட்டு புத்தகம் முழுவதும் வரிக்குதிரையாகிவிட்டது.

இலக்கியம், இலக்கணம்,  சமூகம் , அரசியல் என பல்வேறு துறைகளை அறிந்து கொள்ள, கல்லூரிகளில் தமிழ்ப்பாடமாக  வைக்கப்படவேண்டிய புத்தகம் ஜே.ஜே சில  குறிப்புகள்.

—0—
 

http://puthu.thinnai.com/?p=41206

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.