Jump to content

போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி! | Athavan  News

போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி!

போயிங் 737 மக்ஸ் நிறுவனத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு அபாயகரமான பேரழிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 20 மாத தடைக்கு பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளது.

இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மக்ஸ் விமான விபத்துக்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து மாதங்களுக்குள் 346 பேரைக் கொன்ற நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் ஒப்புதலை எதிர்பார்த்து, அமெரிக்கன் எயார்லைன்ஸ் டிசம்பர் 29 ஆம் திகதி வணிக நடவடிக்கைகளுக்காக மக்ஸ் விமானத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விமானத் தடையை நீக்கும் உத்தரவில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தேவையான மாற்றங்களை விவரிக்கும் ஒரு வானூர்தி செல்லத்தக்க நிலை குறித்த உத்தரவை நிறுவனம் வெளியிட உள்ளது.

http://athavannews.com/போயிங்-737-மக்ஸ்-விமானத்தை-ம/

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி!
  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி முதல் போயிங் 737 மக்ஸ் பயணிகள் ஜெட் விமானம் ஐரோப்பாவிலும் சேவையில் ஈடுபடும்!

போயிங் 737 மக்ஸ் பயணிகள் ஜெட் விமானம் மீதான விமானத் தடையை ஜனவரி மாதம் நீக்க ஐரோப்பா தயாராக உள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு அபாயகரமான விபத்துகளால் விதிக்கப்பட்ட 20 மாத தடையை தொடர்ந்து போயிங் 737 மக்ஸ் ரக விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரண்டு முறை விபத்துக்குள்ளான குறித்த ஜெட் விமானத்தின் வடிவமைப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு விமானம் பறக்க பாதுகாப்பாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் நேற்று சனிக்கிழமை அறிவித்தார்.

அதன்படி ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு அமைப்பு உத்தரவு அடுத்த வாரம் ஜெட் விமானம் மீதான விமானத் தடையை நீக்கி அறிவிப்பு ஒன்றினை வெளியிடும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

http://athavannews.com/ஜனவரி-முதல்-போயிங்-737-மக்ஸ்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.