Jump to content

மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்

November 18, 2020

medical-student.jpg

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

  கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன்  இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.  #மருத்துவபீட #இளங்குன்றன் #சந்தேகம் #இரத்தமாதிரிகள்

 

https://globaltamilnews.net/2020/153168/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் காலத்துக்கு காலம் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 

பல்கலைக்கழக நிர்வாகம்.. மாணவ உளச்சார்பு.. உளநல மையம் ஒன்றை அமைத்து மாணவர்கள் தமது பிரச்சனைகளை.. வெளிச் சொல்லவும்...உதவிகளை.. உளநலன் சார் உதவிகளை வெளிப்படையா கூறிப் பெற்றுக் கொள்ள வசதி செய்வதோடு.. ரகசிக்காப்பும் உறுதி செய்யப்படுவது அவசியமாகும்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான மையங்கள்.. பல்கலைக்கழகங்களில் இயங்குவதை முன்னுதாரணமாகக் கொள்வது அவசியமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பான முகப்புத்தகப் பதிவு..

 

//நேற்று யாழ் மருத்துவ பீட தற்கொலைகள் பற்றி பதிவிட்டிருந்தேன். பல மாணவிகள் தங்கள் கருத்துக்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மாணவனும் கருத்தை அனுப்பவில்லை. நடைபெற்ற தற்கொலைகள் ஆண்களிடையேதான் அதிகம்.இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன். பிரச்சினைகளை பெண்கள் ஏதோ ஒரு சமயத்தில் பேச தயாராக இருக்கிறார்கள். ஆண்களுக்கு பேசினால், " இது எல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா? இதை தாங்கிக்கொள்ள முடியாத நீயெல்லாம் ஒரு ஆணா? " என்று கேலிசெய்யப்படுவோமா என்ற பயமாக இருக்கலாம். இது ஒரு அனுமானம்தான்.ஒரு சகோதரி ஒரு நீண்ட கருத்தை அனுப்பி இருந்தார். கொஞ்சம் தயக்கத்துடனேயே அதை பதிகிறேன். கொஞ்சம் பிசகினாலும் பிரதேசவாதமாகக் கூடிய பதிவு. அவர் பிரதானமாக வடக்கைப் பற்றி எழுதினாலும் பல விடயங்கள் தமிழ் பகுதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். தயவு செய்து இதை ஒரு பிரதேசவாத பிரச்சினை ஆக்காமல் இது பற்றிய கருத்துக்களைப் பதியுங்கள்.//

வணக்கம் அண்ணா... யாழ் மருத்துபீட மாணவர்களின் தொடர் இழப்பு பற்றி பதிவிட்டிருந்தீர்கள்... எனது கருத்தைப் பகிரலாம் என தோன்றியது. 

நான் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நான்காம் வருட மாணவி. எனது பெற்றோர் இருவரின் குடும்பங்களுமே யாழ்பாண பூர்விகம் என்பதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் எனக்கிருப்பதாலும் சில விடயங்களை அறிவேன். 

பொதுவாகவே இலங்கையின் எந்தப் பகுதியைக் காட்டிலும் வடக்கில் கல்வி தொடர்பான அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கிறது. நான் நுவரெலியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசித்திருந்ததால் இதனை சற்றே ஒப்பிட்டு நோக்க முடிந்தது. நாட்டுப் பிரச்சனைகளின் காரணமாக வடக்கு இளைஞர்களுக்கு கல்வி ஒன்றே மேலுழுவதற்கான ஒரே வழியாய்ப் போனதும் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற அவர்தம் மனப்பாங்கும் எமக்கு தெரிந்த ஒன்றே... இருப்பினும் இம்மனப்பாங்கே சில (பல) நேரங்களில் அதீத அழுத்தமொன்றாய் மாறி விடுகிறது. 

சாதாரணமான ஒரு உதாரணம். நான் நுவரெலியா மாவட்டத்தில் கல்வி கற்கையில் பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்தனர். எனினும் எந்தப்பாட வேளையிலும் இல்லாது யாழ்ப்பாண ஆசிரியர்கள் (சிலரின்) பாடவேளைகளில் மட்டும் நாம் மேலதிக அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் பயத்துடனும் தான் இருந்தோம். கல்வி ஒன்றே, அது மட்டுமே முக்கியம் என்ற திணிப்பும் சற்று பின் தங்கிய மாணவர்களுக்கான மட்டம் தட்டலும் அங்கு வெகுவாய் இருந்தது. இது பலரின் தன்னம்பிக்கையைக்கூட குறைத்தது. அதைவிட பார தூரமான ஒன்று மாணவர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதும் அதைக்கொண்டவர்களை மதிப்பிடுவதும். (Judgemental mindset) 

"உனக்கு பெண் தோழி இருக்கிறாளா, நீ உருப்பட மாட்டாய்... இரவில் நண்பருடன் வெளியே செல்கிறாயா, நீ உருப்பட மாட்டாய்... பெண்பிள்ளைகள் காற்சட்டை அணிகிறீகளா, கட்டாயம் உருப்பட மாட்டாய்" இவையெல்லாம் தினமும் காதில் விழும் வசனங்கள். இது எந்த வகையில் ஒருவனின் தன்னம்பிக்கைக்கு துணை நிற்கும்? 

Being judgmental என்பதே இயல்பாகி விட்டது. மேலும் படிப்பில்லை என்றால் அவன் வாழ்வே முடிந்து விட்டதாய் உணர வைக்கிறார்கள். இப்போதும் யாழ் பல்கலையில் இவை யாவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

கலாச்சாரமும், ஒழுக்கமும், பண்பாடும் கல்வியும் ஒருவன் வாழ்வை சீர் படுத்தும் அளவிற்கே இருக்க வேண்டும்; சீரழிப்பதாய் மாறிவிடக்கூடாது. 

எனது வடக்கு நண்பர்கள் கூட என்னேரமும் மன அழுத்தம் மற்றும் பயத்திலிருப்பதே அதிகம். "நம்ம வாழ்க்க இது, இப்ப என்ன குறைஞ்சு போச்சு, இது இல்லன்னா அது" என்ற மனப்பாங்கு அவர்களிடம் அரிதிலும் அரிது. "அய்யோ சாதிக்க வேண்டுமே, குடும்ப பெயரை காக்க வேண்டுமே, அதுவே இதுவே" என்ற பதற்றம் தான் மேலோங்கி நின்கிறது. 

இந்த சமூக அமைப்பு கட்டாயம் மாற வேண்டும். வாழ்வில் கல்வியைத்தாண்டியும் நிறைய உள்ளன. சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இந்த வயதில் தான் அனுபவிக்க வேண்டும், அதை செய்வதற்காகவே தம்மைக் குற்றவாளியாய் மாணவருணரும் நிலை மாற வேண்டும். அதற்கு சமூக அழுத்தம் குறைய வேண்டும். இது மட்டுமே பாதை என்பதை விடுத்து அவன் வாழ்வை அவன் கையில் கொடுக்க வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக கலாசாரத்திற்கும் கல்விக்கும் நல்ல பெயருக்கும் அந்தஸ்துக்கும் கொடுக்கப்ழடும் முக்கியத்யுவதில் பாதியேனும் உள ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். அது குடும்பங்களில் இருந்து தொடங்க வேண்டும். பெயர் கெட்டுவிட கூடாதென்ற மனைவின் பதற்றமும், சம்பாதிக்க வேண்டுமே சொத்து சேர்க்க வேண்டுமே என்ற கணவனின் அழுத்தமும் அய்யோ சாதிக்க வேண்டுமே என்ற பிள்ளைகளின் நடுக்கமும் குறைய வேண்டும். ஓடாய்த் தேய்ந்து உளைப்பதைக் காட்டிலும் பிள்ளைக்கு நடை பழக்கும் தருணங்கள் பெறுமதி வாய்ந்தவை என உணர்தல் வேண்டும். 

சுருங்கச் சொன்னால் life is a race run run எனுற virus இன் மனநிலையில் இருநது all is well என்ற பாரியின் மனநிலைக்கு சமூகம் மாறினாலே, இப்பிரச்சனைகளைம் அழுத்தங்களும் பாதியாய்க் குறையும்.

 

https://www.facebook.com/1286697015/posts/10224480228935039/?d=n

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமான இழப்பு. யாழ் பல்கலையில் ஏனைய இலங்கைப் பல்கலைகள் போலவே ஒரு மருத்துவ நிலையம் இயங்கி வருகிறது. டாக்டர் சீர்மாறன் மருத்துவ அதிகாரியாக இருந்த 90 களிலேயே  அந்த நிலையம் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இப்போது அந்த சேவைகள் குறைந்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை!

குதிரையை தண்ணித் தொட்டிக்குக் கூட்டிச் செல்லலாம், ஆனால் தண்ணீரை குதிரை தான் குடிக்க வேண்டும்! மனநலமும் உடல் நலம் போல மருத்துவரிடம் காட்ட வேண்டிய ஒரு பிரச்சினை தான் என்று எங்கள் சமூகத்தில் இன்னும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அநியாயமான இழப்பு. யாழ் பல்கலையில் ஏனைய இலங்கைப் பல்கலைகள் போலவே ஒரு மருத்துவ நிலையம் இயங்கி வருகிறது. டாக்டர் சீர்மாறன் மருத்துவ அதிகாரியாக இருந்த 90 களிலேயே  அந்த நிலையம் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இப்போது அந்த சேவைகள் குறைந்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை!

குதிரையை தண்ணித் தொட்டிக்குக் கூட்டிச் செல்லலாம், ஆனால் தண்ணீரை குதிரை தான் குடிக்க வேண்டும்! மனநலமும் உடல் நலம் போல மருத்துவரிடம் காட்ட வேண்டிய ஒரு பிரச்சினை தான் என்று எங்கள் சமூகத்தில் இன்னும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. 

எனக்குத் தெரிந்த சிறுவன்/நண்பன் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். யாழ் கச்சேரிக்கு அருகிலிருந்த உளவளத் துணை நிலையத்திற்கு நானும் எனது நண்பனும் கூட்டிச் சென்று சிகிச்சையளித்திருந்தோம். பின்னர் தாயாரிடம் விடயத்தைக் கூறி வழங்கப்பட்ட மாத்திரைகளை தவறாது எடுக்கும்படி எச்சரித்திருந்தோம்.(தாயார் ஒரு ஆசிரியை) ஆனால் போதிய கவனிப்பின்றி 1996ல் இடம் பெயர்வின்போது வன்னியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அறிந்தேன். 😢

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது. 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

எனக்குத் தெரிந்த சிறுவன்/நண்பன் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். யாழ் கச்சேரிக்கு அருகிலிருந்த உளவளத் துணை நிலையத்திற்கு நானும் எனது நண்பனும் கூட்டிச் சென்று சிகிச்சையளித்திருந்தோம். பின்னர் தாயாரிடம் விடயத்தைக் கூறி வழங்கப்பட்ட மாத்திரைகளை தவறாது எடுக்கும்படி எச்சரித்திருந்தோம்.(தாயார் ஒரு ஆசிரியை) ஆனால் போதிய கவனிப்பின்றி 1996ல் இடம் பெயர்வின்போது வன்னியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அறிந்தேன். 😢

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது. 😡

 

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

இத்தனை தியாகங்கள் இழப்புக்கள் அழிவுகளின் பின்பும் எமது சமூகம் தங்களை சுய விமரிசனம் செய்துகொள்ளவில்லை என்றால் நாங்கள் மிகவும் மோசமான Corrupted  society என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 22:51, Justin said:

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

சாதாரண 5ம் ஆண்டு புலை பரீட்சை அவ்வளவு பெஇதாக பெற்றோர்களால் ஊட்கி பெருக்கி பிள்ளைகளை பாழாக்கி விட்டிருக்கிறது தெரியுமா பிள்ளைகளை கால ஓட்டத்தில் எப்படி கரை சேர வேண்டும் என்று சொல்லி கொடுக்காமல் மார்க்ஸ் என்ற  ஒற்றை சொல்லிலும் அடுத்த பிள்ளையை ஒப்பீட்டு மதிப்பீட்டிலும்  பிள்ளைகளை வளர்க்கிறார்கள்  அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் பெற்றோகள் தங்களது பிள்ளைகளை குதிர பந்தயத்தில் ஓட வைப்பது போல கல்விப்பயணத்தில் ஓட வைக்கிறார்கள் இதில் மற்ற பிள்ளைகளை தாங்கள் முந்த வேண்டுமென நினைத்து அடுத்த பிள்ளைகளை கேலி கிண்டல் செய்ட்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொல்கிறார்கள் என்று சொல்லலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சாதாரண 5ம் ஆண்டு புலை பரீட்சை அவ்வளவு பெஇதாக பெற்றோர்களால் ஊட்கி பெருக்கி பிள்ளைகளை பாழாக்கி விட்டிருக்கிறது தெரியுமா பிள்ளைகளை கால ஓட்டத்தில் எப்படி கரை சேர வேண்டும் என்று சொல்லி கொடுக்காமல் மார்க்ஸ் என்ற  ஒற்றை சொல்லிலும் அடுத்த பிள்ளையை ஒப்பீட்டு மதிப்பீட்டிலும்  பிள்ளைகளை வளர்க்கிறார்கள்  அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் பெற்றோகள் தங்களது பிள்ளைகளை குதிர பந்தயத்தில் ஓட வைப்பது போல கல்விப்பயணத்தில் ஓட வைக்கிறார்கள் இதில் மற்ற பிள்ளைகளை தாங்கள் முந்த வேண்டுமென நினைத்து அடுத்த பிள்ளைகளை கேலி கிண்டல் செய்ட்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொல்கிறார்கள் என்று சொல்லலாம்

புலமைப் பரிசில் என்பது ஒரு புற்ருநோயாக இலங்கையில் வளர்ந்து வருகிறது. பிளளைகளை ஆங்கிலக் கல்வி(மொழி அல்ல பிரச்சனை) International School,  புலமைப் பரிசில் பரீட்சை, National  School என்கின்ற நச்சு விதைகள் இலங்கை முழுவதும் பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையோடு ஆரம்பமாகும். ஒரு வித போட்டி மனப் பாண்மை உயர் கல்வி முடித்து தொழில் வாய்ப்பு பெறும் வரைக்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது போலும்.சிறு வயதிலேயே அவர்களின் வயதுக்கு மேற்பட்ட எண்ணங்களை திணிப்பதனாயே ஒரு வித கர்வம் பிள்ளைகள் மத்தியில் வளர்ந்த வண்ணம் உள்ளது என்றும் சொல்லலாம்.ஆகவே இதற்கு முதல் காரணம் பெற்றோர் மற்றும் அவர்களை சுற்றி உள்ள வயது வந்தோர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புலமை பரிசு பரீட்சை தனிய வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதன் மூலம் நிறைய கஸ்டப்படட மாணவர்கள் பலன் பெறுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் 5 ம் ஆன்டு புலமைப்பசிசில் பரீச்சைக்கு எதிராக கருத்திட்ட அனைவருக்கும் எனது விருப்பு வாக்குகள் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

புலமைப் பரிசில் என்பது ஒரு புற்ருநோயாக இலங்கையில் வளர்ந்து வருகிறது. பிளளைகளை ஆங்கிலக் கல்வி(மொழி அல்ல பிரச்சனை) International School,  புலமைப் பரிசில் பரீட்சை, National  School என்கின்ற நச்சு விதைகள் இலங்கை முழுவதும் பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. 

☹️

பெற்றோர்களை விட ஆசிரியர்களும் பாரிய உடந்தை காசுக்காக இப்ப சூம் கிளாஸ் என்று சொல்லி காசு பார்க்கிறார்கள் கபிதன் தங்களை முகநூல்  மூலம் விளம்பரப்படுத்தி காசு பார்க்கிறார்கள் கல்விக்கு காசுக்கு தான் முதலிடம் கல்வி சார்ந்த துறையில் வேலைபார்ப்பதால் சொல்கிறேன் அதிக அனுபவம் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

இந்த புலமை பரிசு பரீட்சை தனிய வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதன் மூலம் நிறைய கஸ்டப்படட மாணவர்கள் பலன் பெறுவார்கள் 

அரசாங்கம் விரும்பியவ்ர்கள் எழுதலாம் என சொன்னாலும் அனைவரும் எழுதினார்கள் பெற்றோரின் வரட்டு கெளரவத்திற்க்காக பிள்ளைகளை வாட்டி எடுத்தார்கள் ஒன்லைன் கிளாஸ் என ( எனது நண்பர் ஆசிரியர் தரம் 5 பிள்ளைகள விட பெற்றோர்கள் தொல்லை தாங்க முடியல என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

அப்பிடி எழுதினால் தூக்கிறத்திற்கு என்ன அண்ணா இருக்கு ?...காதல், சாதி பிரச்சனையா ?...எழுதுங்கள் . உண்மை வெளி வர வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

அப்பிடி எழுதினால் தூக்கிறத்திற்கு என்ன அண்ணா இருக்கு ?...காதல், சாதி பிரச்சனையா ?...எழுதுங்கள் . உண்மை வெளி வர வேண்டும் 
 

அதேதான் எனது கேள்வியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 17:00, குமாரசாமி said:

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

சரி தூக்காத மாதிரி  எழுதுங்கள் . ஊரில் என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்..😀

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை மாணவன் இளங்குன்றன் மரண வழக்கின் நீதிமன்ற உத்தரவு

மர்மமான முறையில் உயிரிழந்த வட தமிழீழம் ,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூன்றாம் வருட மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காகப் காவற்துறையிரால் சமர்ப்பிக்கப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் பதிவு குறித்து சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் சந்தேகம் எழுப்பிய நிலையில் மேலதிக பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ். கோண்டாவில், வன்னியசிங்கம் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் வசித்து வந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் தூக்கில் தொங்கிய நிலையில் கால்கள் இரண்டும் நிலத்தில் முழந்தாளிட்ட வண்ணம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், சந்தேகத்துக்கிடமான இம்மரணம் தொடர்பான விசாரணையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்துமாறு அவருடைய சகோதரன்  சிங்கள அரசுக்கு  கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மரணமடைந்த பல்கலைக்கழக மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராக்களைப் பார்வையிடுவதற்கும், அவர் பயன்படுத்திய தொலைபேசியைப் பரிசீலனை செய்வதற்கும் மன்று உத்தரவு வழங்கவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதை ஆராய்ந்த நீதிவான் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராவின் பதிவுகளையும்,  குறித்த மாணவன் பயன்படுத்திய தொலைபேசிப் பதிவுகளையும் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கோப்பாய் காவற்துறையினரால் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சி.சி.ரி.வி. கமராவின் காட்சிகள் நீதிமன்றத்துக்குச் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது குறித்த பதிவில் சடலம் மீட்கப்பட்ட கடந்த மாதம் 17ஆம் திகதி நண்பகல் பெறப்பட்ட பதிவு மாத்திரமே இருக்கின்றது என மரணமடைந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ்  நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் முழுமையான பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்
 

https://www.thaarakam.com/news/267f962d-ade2-498d-89c2-7afc76232ead

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 03:28, Kapithan said:

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது

நான் அறிந்தவரையில் இந்தப்போலித்தனம் ஊரில் உள்ளவர்களுக்கு சற்றும் குறையாமல் இங்கேயும் உச்சத்தில்தான் இருக்கிறது..

பிள்ளைகளை பெறுவதும் சமூகத்திற்கு நாங்கள் குறையுள்ளவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க, பிள்ளை எந்ததுறையில் படிக்க வேண்டும் என்பதையும் சமூகத்தில் அந்தஸ்த்தை நிரூபிப்பதற்காக.. திருமணம் சரிவரவில்லையா அதையும் கொண்டு இழுக்கவேண்டும், சமூகத்திற்காக.. இப்படி எல்லாவற்றையும் மற்றவர்கள்/சமூகம் என்ன நினைப்பார்கள் என்று போலியாகவே வாழ்பவர்களாக மாறிவருகிறோம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.