Jump to content

மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்

November 18, 2020

medical-student.jpg

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

  கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன்  இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.  #மருத்துவபீட #இளங்குன்றன் #சந்தேகம் #இரத்தமாதிரிகள்

 

https://globaltamilnews.net/2020/153168/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் காலத்துக்கு காலம் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 

பல்கலைக்கழக நிர்வாகம்.. மாணவ உளச்சார்பு.. உளநல மையம் ஒன்றை அமைத்து மாணவர்கள் தமது பிரச்சனைகளை.. வெளிச் சொல்லவும்...உதவிகளை.. உளநலன் சார் உதவிகளை வெளிப்படையா கூறிப் பெற்றுக் கொள்ள வசதி செய்வதோடு.. ரகசிக்காப்பும் உறுதி செய்யப்படுவது அவசியமாகும்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான மையங்கள்.. பல்கலைக்கழகங்களில் இயங்குவதை முன்னுதாரணமாகக் கொள்வது அவசியமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பான முகப்புத்தகப் பதிவு..

 

//நேற்று யாழ் மருத்துவ பீட தற்கொலைகள் பற்றி பதிவிட்டிருந்தேன். பல மாணவிகள் தங்கள் கருத்துக்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மாணவனும் கருத்தை அனுப்பவில்லை. நடைபெற்ற தற்கொலைகள் ஆண்களிடையேதான் அதிகம்.இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன். பிரச்சினைகளை பெண்கள் ஏதோ ஒரு சமயத்தில் பேச தயாராக இருக்கிறார்கள். ஆண்களுக்கு பேசினால், " இது எல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா? இதை தாங்கிக்கொள்ள முடியாத நீயெல்லாம் ஒரு ஆணா? " என்று கேலிசெய்யப்படுவோமா என்ற பயமாக இருக்கலாம். இது ஒரு அனுமானம்தான்.ஒரு சகோதரி ஒரு நீண்ட கருத்தை அனுப்பி இருந்தார். கொஞ்சம் தயக்கத்துடனேயே அதை பதிகிறேன். கொஞ்சம் பிசகினாலும் பிரதேசவாதமாகக் கூடிய பதிவு. அவர் பிரதானமாக வடக்கைப் பற்றி எழுதினாலும் பல விடயங்கள் தமிழ் பகுதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். தயவு செய்து இதை ஒரு பிரதேசவாத பிரச்சினை ஆக்காமல் இது பற்றிய கருத்துக்களைப் பதியுங்கள்.//

வணக்கம் அண்ணா... யாழ் மருத்துபீட மாணவர்களின் தொடர் இழப்பு பற்றி பதிவிட்டிருந்தீர்கள்... எனது கருத்தைப் பகிரலாம் என தோன்றியது. 

நான் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நான்காம் வருட மாணவி. எனது பெற்றோர் இருவரின் குடும்பங்களுமே யாழ்பாண பூர்விகம் என்பதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் எனக்கிருப்பதாலும் சில விடயங்களை அறிவேன். 

பொதுவாகவே இலங்கையின் எந்தப் பகுதியைக் காட்டிலும் வடக்கில் கல்வி தொடர்பான அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கிறது. நான் நுவரெலியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசித்திருந்ததால் இதனை சற்றே ஒப்பிட்டு நோக்க முடிந்தது. நாட்டுப் பிரச்சனைகளின் காரணமாக வடக்கு இளைஞர்களுக்கு கல்வி ஒன்றே மேலுழுவதற்கான ஒரே வழியாய்ப் போனதும் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற அவர்தம் மனப்பாங்கும் எமக்கு தெரிந்த ஒன்றே... இருப்பினும் இம்மனப்பாங்கே சில (பல) நேரங்களில் அதீத அழுத்தமொன்றாய் மாறி விடுகிறது. 

சாதாரணமான ஒரு உதாரணம். நான் நுவரெலியா மாவட்டத்தில் கல்வி கற்கையில் பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்தனர். எனினும் எந்தப்பாட வேளையிலும் இல்லாது யாழ்ப்பாண ஆசிரியர்கள் (சிலரின்) பாடவேளைகளில் மட்டும் நாம் மேலதிக அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் பயத்துடனும் தான் இருந்தோம். கல்வி ஒன்றே, அது மட்டுமே முக்கியம் என்ற திணிப்பும் சற்று பின் தங்கிய மாணவர்களுக்கான மட்டம் தட்டலும் அங்கு வெகுவாய் இருந்தது. இது பலரின் தன்னம்பிக்கையைக்கூட குறைத்தது. அதைவிட பார தூரமான ஒன்று மாணவர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதும் அதைக்கொண்டவர்களை மதிப்பிடுவதும். (Judgemental mindset) 

"உனக்கு பெண் தோழி இருக்கிறாளா, நீ உருப்பட மாட்டாய்... இரவில் நண்பருடன் வெளியே செல்கிறாயா, நீ உருப்பட மாட்டாய்... பெண்பிள்ளைகள் காற்சட்டை அணிகிறீகளா, கட்டாயம் உருப்பட மாட்டாய்" இவையெல்லாம் தினமும் காதில் விழும் வசனங்கள். இது எந்த வகையில் ஒருவனின் தன்னம்பிக்கைக்கு துணை நிற்கும்? 

Being judgmental என்பதே இயல்பாகி விட்டது. மேலும் படிப்பில்லை என்றால் அவன் வாழ்வே முடிந்து விட்டதாய் உணர வைக்கிறார்கள். இப்போதும் யாழ் பல்கலையில் இவை யாவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

கலாச்சாரமும், ஒழுக்கமும், பண்பாடும் கல்வியும் ஒருவன் வாழ்வை சீர் படுத்தும் அளவிற்கே இருக்க வேண்டும்; சீரழிப்பதாய் மாறிவிடக்கூடாது. 

எனது வடக்கு நண்பர்கள் கூட என்னேரமும் மன அழுத்தம் மற்றும் பயத்திலிருப்பதே அதிகம். "நம்ம வாழ்க்க இது, இப்ப என்ன குறைஞ்சு போச்சு, இது இல்லன்னா அது" என்ற மனப்பாங்கு அவர்களிடம் அரிதிலும் அரிது. "அய்யோ சாதிக்க வேண்டுமே, குடும்ப பெயரை காக்க வேண்டுமே, அதுவே இதுவே" என்ற பதற்றம் தான் மேலோங்கி நின்கிறது. 

இந்த சமூக அமைப்பு கட்டாயம் மாற வேண்டும். வாழ்வில் கல்வியைத்தாண்டியும் நிறைய உள்ளன. சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இந்த வயதில் தான் அனுபவிக்க வேண்டும், அதை செய்வதற்காகவே தம்மைக் குற்றவாளியாய் மாணவருணரும் நிலை மாற வேண்டும். அதற்கு சமூக அழுத்தம் குறைய வேண்டும். இது மட்டுமே பாதை என்பதை விடுத்து அவன் வாழ்வை அவன் கையில் கொடுக்க வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக கலாசாரத்திற்கும் கல்விக்கும் நல்ல பெயருக்கும் அந்தஸ்துக்கும் கொடுக்கப்ழடும் முக்கியத்யுவதில் பாதியேனும் உள ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். அது குடும்பங்களில் இருந்து தொடங்க வேண்டும். பெயர் கெட்டுவிட கூடாதென்ற மனைவின் பதற்றமும், சம்பாதிக்க வேண்டுமே சொத்து சேர்க்க வேண்டுமே என்ற கணவனின் அழுத்தமும் அய்யோ சாதிக்க வேண்டுமே என்ற பிள்ளைகளின் நடுக்கமும் குறைய வேண்டும். ஓடாய்த் தேய்ந்து உளைப்பதைக் காட்டிலும் பிள்ளைக்கு நடை பழக்கும் தருணங்கள் பெறுமதி வாய்ந்தவை என உணர்தல் வேண்டும். 

சுருங்கச் சொன்னால் life is a race run run எனுற virus இன் மனநிலையில் இருநது all is well என்ற பாரியின் மனநிலைக்கு சமூகம் மாறினாலே, இப்பிரச்சனைகளைம் அழுத்தங்களும் பாதியாய்க் குறையும்.

 

https://www.facebook.com/1286697015/posts/10224480228935039/?d=n

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமான இழப்பு. யாழ் பல்கலையில் ஏனைய இலங்கைப் பல்கலைகள் போலவே ஒரு மருத்துவ நிலையம் இயங்கி வருகிறது. டாக்டர் சீர்மாறன் மருத்துவ அதிகாரியாக இருந்த 90 களிலேயே  அந்த நிலையம் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இப்போது அந்த சேவைகள் குறைந்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை!

குதிரையை தண்ணித் தொட்டிக்குக் கூட்டிச் செல்லலாம், ஆனால் தண்ணீரை குதிரை தான் குடிக்க வேண்டும்! மனநலமும் உடல் நலம் போல மருத்துவரிடம் காட்ட வேண்டிய ஒரு பிரச்சினை தான் என்று எங்கள் சமூகத்தில் இன்னும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அநியாயமான இழப்பு. யாழ் பல்கலையில் ஏனைய இலங்கைப் பல்கலைகள் போலவே ஒரு மருத்துவ நிலையம் இயங்கி வருகிறது. டாக்டர் சீர்மாறன் மருத்துவ அதிகாரியாக இருந்த 90 களிலேயே  அந்த நிலையம் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இப்போது அந்த சேவைகள் குறைந்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை!

குதிரையை தண்ணித் தொட்டிக்குக் கூட்டிச் செல்லலாம், ஆனால் தண்ணீரை குதிரை தான் குடிக்க வேண்டும்! மனநலமும் உடல் நலம் போல மருத்துவரிடம் காட்ட வேண்டிய ஒரு பிரச்சினை தான் என்று எங்கள் சமூகத்தில் இன்னும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. 

எனக்குத் தெரிந்த சிறுவன்/நண்பன் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். யாழ் கச்சேரிக்கு அருகிலிருந்த உளவளத் துணை நிலையத்திற்கு நானும் எனது நண்பனும் கூட்டிச் சென்று சிகிச்சையளித்திருந்தோம். பின்னர் தாயாரிடம் விடயத்தைக் கூறி வழங்கப்பட்ட மாத்திரைகளை தவறாது எடுக்கும்படி எச்சரித்திருந்தோம்.(தாயார் ஒரு ஆசிரியை) ஆனால் போதிய கவனிப்பின்றி 1996ல் இடம் பெயர்வின்போது வன்னியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அறிந்தேன். 😢

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது. 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

எனக்குத் தெரிந்த சிறுவன்/நண்பன் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். யாழ் கச்சேரிக்கு அருகிலிருந்த உளவளத் துணை நிலையத்திற்கு நானும் எனது நண்பனும் கூட்டிச் சென்று சிகிச்சையளித்திருந்தோம். பின்னர் தாயாரிடம் விடயத்தைக் கூறி வழங்கப்பட்ட மாத்திரைகளை தவறாது எடுக்கும்படி எச்சரித்திருந்தோம்.(தாயார் ஒரு ஆசிரியை) ஆனால் போதிய கவனிப்பின்றி 1996ல் இடம் பெயர்வின்போது வன்னியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அறிந்தேன். 😢

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது. 😡

 

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

இத்தனை தியாகங்கள் இழப்புக்கள் அழிவுகளின் பின்பும் எமது சமூகம் தங்களை சுய விமரிசனம் செய்துகொள்ளவில்லை என்றால் நாங்கள் மிகவும் மோசமான Corrupted  society என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 22:51, Justin said:

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

சாதாரண 5ம் ஆண்டு புலை பரீட்சை அவ்வளவு பெஇதாக பெற்றோர்களால் ஊட்கி பெருக்கி பிள்ளைகளை பாழாக்கி விட்டிருக்கிறது தெரியுமா பிள்ளைகளை கால ஓட்டத்தில் எப்படி கரை சேர வேண்டும் என்று சொல்லி கொடுக்காமல் மார்க்ஸ் என்ற  ஒற்றை சொல்லிலும் அடுத்த பிள்ளையை ஒப்பீட்டு மதிப்பீட்டிலும்  பிள்ளைகளை வளர்க்கிறார்கள்  அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் பெற்றோகள் தங்களது பிள்ளைகளை குதிர பந்தயத்தில் ஓட வைப்பது போல கல்விப்பயணத்தில் ஓட வைக்கிறார்கள் இதில் மற்ற பிள்ளைகளை தாங்கள் முந்த வேண்டுமென நினைத்து அடுத்த பிள்ளைகளை கேலி கிண்டல் செய்ட்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொல்கிறார்கள் என்று சொல்லலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சாதாரண 5ம் ஆண்டு புலை பரீட்சை அவ்வளவு பெஇதாக பெற்றோர்களால் ஊட்கி பெருக்கி பிள்ளைகளை பாழாக்கி விட்டிருக்கிறது தெரியுமா பிள்ளைகளை கால ஓட்டத்தில் எப்படி கரை சேர வேண்டும் என்று சொல்லி கொடுக்காமல் மார்க்ஸ் என்ற  ஒற்றை சொல்லிலும் அடுத்த பிள்ளையை ஒப்பீட்டு மதிப்பீட்டிலும்  பிள்ளைகளை வளர்க்கிறார்கள்  அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் பெற்றோகள் தங்களது பிள்ளைகளை குதிர பந்தயத்தில் ஓட வைப்பது போல கல்விப்பயணத்தில் ஓட வைக்கிறார்கள் இதில் மற்ற பிள்ளைகளை தாங்கள் முந்த வேண்டுமென நினைத்து அடுத்த பிள்ளைகளை கேலி கிண்டல் செய்ட்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொல்கிறார்கள் என்று சொல்லலாம்

புலமைப் பரிசில் என்பது ஒரு புற்ருநோயாக இலங்கையில் வளர்ந்து வருகிறது. பிளளைகளை ஆங்கிலக் கல்வி(மொழி அல்ல பிரச்சனை) International School,  புலமைப் பரிசில் பரீட்சை, National  School என்கின்ற நச்சு விதைகள் இலங்கை முழுவதும் பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையோடு ஆரம்பமாகும். ஒரு வித போட்டி மனப் பாண்மை உயர் கல்வி முடித்து தொழில் வாய்ப்பு பெறும் வரைக்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது போலும்.சிறு வயதிலேயே அவர்களின் வயதுக்கு மேற்பட்ட எண்ணங்களை திணிப்பதனாயே ஒரு வித கர்வம் பிள்ளைகள் மத்தியில் வளர்ந்த வண்ணம் உள்ளது என்றும் சொல்லலாம்.ஆகவே இதற்கு முதல் காரணம் பெற்றோர் மற்றும் அவர்களை சுற்றி உள்ள வயது வந்தோர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புலமை பரிசு பரீட்சை தனிய வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதன் மூலம் நிறைய கஸ்டப்படட மாணவர்கள் பலன் பெறுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் 5 ம் ஆன்டு புலமைப்பசிசில் பரீச்சைக்கு எதிராக கருத்திட்ட அனைவருக்கும் எனது விருப்பு வாக்குகள் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

புலமைப் பரிசில் என்பது ஒரு புற்ருநோயாக இலங்கையில் வளர்ந்து வருகிறது. பிளளைகளை ஆங்கிலக் கல்வி(மொழி அல்ல பிரச்சனை) International School,  புலமைப் பரிசில் பரீட்சை, National  School என்கின்ற நச்சு விதைகள் இலங்கை முழுவதும் பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. 

☹️

பெற்றோர்களை விட ஆசிரியர்களும் பாரிய உடந்தை காசுக்காக இப்ப சூம் கிளாஸ் என்று சொல்லி காசு பார்க்கிறார்கள் கபிதன் தங்களை முகநூல்  மூலம் விளம்பரப்படுத்தி காசு பார்க்கிறார்கள் கல்விக்கு காசுக்கு தான் முதலிடம் கல்வி சார்ந்த துறையில் வேலைபார்ப்பதால் சொல்கிறேன் அதிக அனுபவம் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

இந்த புலமை பரிசு பரீட்சை தனிய வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதன் மூலம் நிறைய கஸ்டப்படட மாணவர்கள் பலன் பெறுவார்கள் 

அரசாங்கம் விரும்பியவ்ர்கள் எழுதலாம் என சொன்னாலும் அனைவரும் எழுதினார்கள் பெற்றோரின் வரட்டு கெளரவத்திற்க்காக பிள்ளைகளை வாட்டி எடுத்தார்கள் ஒன்லைன் கிளாஸ் என ( எனது நண்பர் ஆசிரியர் தரம் 5 பிள்ளைகள விட பெற்றோர்கள் தொல்லை தாங்க முடியல என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

அப்பிடி எழுதினால் தூக்கிறத்திற்கு என்ன அண்ணா இருக்கு ?...காதல், சாதி பிரச்சனையா ?...எழுதுங்கள் . உண்மை வெளி வர வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

அப்பிடி எழுதினால் தூக்கிறத்திற்கு என்ன அண்ணா இருக்கு ?...காதல், சாதி பிரச்சனையா ?...எழுதுங்கள் . உண்மை வெளி வர வேண்டும் 
 

அதேதான் எனது கேள்வியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 17:00, குமாரசாமி said:

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

சரி தூக்காத மாதிரி  எழுதுங்கள் . ஊரில் என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்..😀

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை மாணவன் இளங்குன்றன் மரண வழக்கின் நீதிமன்ற உத்தரவு

மர்மமான முறையில் உயிரிழந்த வட தமிழீழம் ,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூன்றாம் வருட மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காகப் காவற்துறையிரால் சமர்ப்பிக்கப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் பதிவு குறித்து சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் சந்தேகம் எழுப்பிய நிலையில் மேலதிக பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ். கோண்டாவில், வன்னியசிங்கம் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் வசித்து வந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் தூக்கில் தொங்கிய நிலையில் கால்கள் இரண்டும் நிலத்தில் முழந்தாளிட்ட வண்ணம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், சந்தேகத்துக்கிடமான இம்மரணம் தொடர்பான விசாரணையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்துமாறு அவருடைய சகோதரன்  சிங்கள அரசுக்கு  கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மரணமடைந்த பல்கலைக்கழக மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராக்களைப் பார்வையிடுவதற்கும், அவர் பயன்படுத்திய தொலைபேசியைப் பரிசீலனை செய்வதற்கும் மன்று உத்தரவு வழங்கவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதை ஆராய்ந்த நீதிவான் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராவின் பதிவுகளையும்,  குறித்த மாணவன் பயன்படுத்திய தொலைபேசிப் பதிவுகளையும் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கோப்பாய் காவற்துறையினரால் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சி.சி.ரி.வி. கமராவின் காட்சிகள் நீதிமன்றத்துக்குச் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது குறித்த பதிவில் சடலம் மீட்கப்பட்ட கடந்த மாதம் 17ஆம் திகதி நண்பகல் பெறப்பட்ட பதிவு மாத்திரமே இருக்கின்றது என மரணமடைந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ்  நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் முழுமையான பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்
 

https://www.thaarakam.com/news/267f962d-ade2-498d-89c2-7afc76232ead

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 03:28, Kapithan said:

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது

நான் அறிந்தவரையில் இந்தப்போலித்தனம் ஊரில் உள்ளவர்களுக்கு சற்றும் குறையாமல் இங்கேயும் உச்சத்தில்தான் இருக்கிறது..

பிள்ளைகளை பெறுவதும் சமூகத்திற்கு நாங்கள் குறையுள்ளவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க, பிள்ளை எந்ததுறையில் படிக்க வேண்டும் என்பதையும் சமூகத்தில் அந்தஸ்த்தை நிரூபிப்பதற்காக.. திருமணம் சரிவரவில்லையா அதையும் கொண்டு இழுக்கவேண்டும், சமூகத்திற்காக.. இப்படி எல்லாவற்றையும் மற்றவர்கள்/சமூகம் என்ன நினைப்பார்கள் என்று போலியாகவே வாழ்பவர்களாக மாறிவருகிறோம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.