Jump to content

மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவபீட மாணவனின் மரணத்தில் சந்தேகம்

November 18, 2020

medical-student.jpg

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

  கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மூன்றாம் வருடத்தில் கற்று வந்த வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியை சேர்ந்த சிதம்பரநாதன்  இளங்குன்றன் (வயது 23) எனும் மருத்துவ பீட மாணவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தமையால் , மாணவனின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.  #மருத்துவபீட #இளங்குன்றன் #சந்தேகம் #இரத்தமாதிரிகள்

 

https://globaltamilnews.net/2020/153168/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் காலத்துக்கு காலம் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 

பல்கலைக்கழக நிர்வாகம்.. மாணவ உளச்சார்பு.. உளநல மையம் ஒன்றை அமைத்து மாணவர்கள் தமது பிரச்சனைகளை.. வெளிச் சொல்லவும்...உதவிகளை.. உளநலன் சார் உதவிகளை வெளிப்படையா கூறிப் பெற்றுக் கொள்ள வசதி செய்வதோடு.. ரகசிக்காப்பும் உறுதி செய்யப்படுவது அவசியமாகும்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான மையங்கள்.. பல்கலைக்கழகங்களில் இயங்குவதை முன்னுதாரணமாகக் கொள்வது அவசியமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பான முகப்புத்தகப் பதிவு..

 

//நேற்று யாழ் மருத்துவ பீட தற்கொலைகள் பற்றி பதிவிட்டிருந்தேன். பல மாணவிகள் தங்கள் கருத்துக்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மாணவனும் கருத்தை அனுப்பவில்லை. நடைபெற்ற தற்கொலைகள் ஆண்களிடையேதான் அதிகம்.இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன். பிரச்சினைகளை பெண்கள் ஏதோ ஒரு சமயத்தில் பேச தயாராக இருக்கிறார்கள். ஆண்களுக்கு பேசினால், " இது எல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா? இதை தாங்கிக்கொள்ள முடியாத நீயெல்லாம் ஒரு ஆணா? " என்று கேலிசெய்யப்படுவோமா என்ற பயமாக இருக்கலாம். இது ஒரு அனுமானம்தான்.ஒரு சகோதரி ஒரு நீண்ட கருத்தை அனுப்பி இருந்தார். கொஞ்சம் தயக்கத்துடனேயே அதை பதிகிறேன். கொஞ்சம் பிசகினாலும் பிரதேசவாதமாகக் கூடிய பதிவு. அவர் பிரதானமாக வடக்கைப் பற்றி எழுதினாலும் பல விடயங்கள் தமிழ் பகுதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். தயவு செய்து இதை ஒரு பிரதேசவாத பிரச்சினை ஆக்காமல் இது பற்றிய கருத்துக்களைப் பதியுங்கள்.//

வணக்கம் அண்ணா... யாழ் மருத்துபீட மாணவர்களின் தொடர் இழப்பு பற்றி பதிவிட்டிருந்தீர்கள்... எனது கருத்தைப் பகிரலாம் என தோன்றியது. 

நான் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நான்காம் வருட மாணவி. எனது பெற்றோர் இருவரின் குடும்பங்களுமே யாழ்பாண பூர்விகம் என்பதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் எனக்கிருப்பதாலும் சில விடயங்களை அறிவேன். 

பொதுவாகவே இலங்கையின் எந்தப் பகுதியைக் காட்டிலும் வடக்கில் கல்வி தொடர்பான அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கிறது. நான் நுவரெலியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசித்திருந்ததால் இதனை சற்றே ஒப்பிட்டு நோக்க முடிந்தது. நாட்டுப் பிரச்சனைகளின் காரணமாக வடக்கு இளைஞர்களுக்கு கல்வி ஒன்றே மேலுழுவதற்கான ஒரே வழியாய்ப் போனதும் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற அவர்தம் மனப்பாங்கும் எமக்கு தெரிந்த ஒன்றே... இருப்பினும் இம்மனப்பாங்கே சில (பல) நேரங்களில் அதீத அழுத்தமொன்றாய் மாறி விடுகிறது. 

சாதாரணமான ஒரு உதாரணம். நான் நுவரெலியா மாவட்டத்தில் கல்வி கற்கையில் பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்தனர். எனினும் எந்தப்பாட வேளையிலும் இல்லாது யாழ்ப்பாண ஆசிரியர்கள் (சிலரின்) பாடவேளைகளில் மட்டும் நாம் மேலதிக அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் பயத்துடனும் தான் இருந்தோம். கல்வி ஒன்றே, அது மட்டுமே முக்கியம் என்ற திணிப்பும் சற்று பின் தங்கிய மாணவர்களுக்கான மட்டம் தட்டலும் அங்கு வெகுவாய் இருந்தது. இது பலரின் தன்னம்பிக்கையைக்கூட குறைத்தது. அதைவிட பார தூரமான ஒன்று மாணவர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதும் அதைக்கொண்டவர்களை மதிப்பிடுவதும். (Judgemental mindset) 

"உனக்கு பெண் தோழி இருக்கிறாளா, நீ உருப்பட மாட்டாய்... இரவில் நண்பருடன் வெளியே செல்கிறாயா, நீ உருப்பட மாட்டாய்... பெண்பிள்ளைகள் காற்சட்டை அணிகிறீகளா, கட்டாயம் உருப்பட மாட்டாய்" இவையெல்லாம் தினமும் காதில் விழும் வசனங்கள். இது எந்த வகையில் ஒருவனின் தன்னம்பிக்கைக்கு துணை நிற்கும்? 

Being judgmental என்பதே இயல்பாகி விட்டது. மேலும் படிப்பில்லை என்றால் அவன் வாழ்வே முடிந்து விட்டதாய் உணர வைக்கிறார்கள். இப்போதும் யாழ் பல்கலையில் இவை யாவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

கலாச்சாரமும், ஒழுக்கமும், பண்பாடும் கல்வியும் ஒருவன் வாழ்வை சீர் படுத்தும் அளவிற்கே இருக்க வேண்டும்; சீரழிப்பதாய் மாறிவிடக்கூடாது. 

எனது வடக்கு நண்பர்கள் கூட என்னேரமும் மன அழுத்தம் மற்றும் பயத்திலிருப்பதே அதிகம். "நம்ம வாழ்க்க இது, இப்ப என்ன குறைஞ்சு போச்சு, இது இல்லன்னா அது" என்ற மனப்பாங்கு அவர்களிடம் அரிதிலும் அரிது. "அய்யோ சாதிக்க வேண்டுமே, குடும்ப பெயரை காக்க வேண்டுமே, அதுவே இதுவே" என்ற பதற்றம் தான் மேலோங்கி நின்கிறது. 

இந்த சமூக அமைப்பு கட்டாயம் மாற வேண்டும். வாழ்வில் கல்வியைத்தாண்டியும் நிறைய உள்ளன. சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இந்த வயதில் தான் அனுபவிக்க வேண்டும், அதை செய்வதற்காகவே தம்மைக் குற்றவாளியாய் மாணவருணரும் நிலை மாற வேண்டும். அதற்கு சமூக அழுத்தம் குறைய வேண்டும். இது மட்டுமே பாதை என்பதை விடுத்து அவன் வாழ்வை அவன் கையில் கொடுக்க வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக கலாசாரத்திற்கும் கல்விக்கும் நல்ல பெயருக்கும் அந்தஸ்துக்கும் கொடுக்கப்ழடும் முக்கியத்யுவதில் பாதியேனும் உள ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். அது குடும்பங்களில் இருந்து தொடங்க வேண்டும். பெயர் கெட்டுவிட கூடாதென்ற மனைவின் பதற்றமும், சம்பாதிக்க வேண்டுமே சொத்து சேர்க்க வேண்டுமே என்ற கணவனின் அழுத்தமும் அய்யோ சாதிக்க வேண்டுமே என்ற பிள்ளைகளின் நடுக்கமும் குறைய வேண்டும். ஓடாய்த் தேய்ந்து உளைப்பதைக் காட்டிலும் பிள்ளைக்கு நடை பழக்கும் தருணங்கள் பெறுமதி வாய்ந்தவை என உணர்தல் வேண்டும். 

சுருங்கச் சொன்னால் life is a race run run எனுற virus இன் மனநிலையில் இருநது all is well என்ற பாரியின் மனநிலைக்கு சமூகம் மாறினாலே, இப்பிரச்சனைகளைம் அழுத்தங்களும் பாதியாய்க் குறையும்.

 

https://www.facebook.com/1286697015/posts/10224480228935039/?d=n

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமான இழப்பு. யாழ் பல்கலையில் ஏனைய இலங்கைப் பல்கலைகள் போலவே ஒரு மருத்துவ நிலையம் இயங்கி வருகிறது. டாக்டர் சீர்மாறன் மருத்துவ அதிகாரியாக இருந்த 90 களிலேயே  அந்த நிலையம் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இப்போது அந்த சேவைகள் குறைந்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை!

குதிரையை தண்ணித் தொட்டிக்குக் கூட்டிச் செல்லலாம், ஆனால் தண்ணீரை குதிரை தான் குடிக்க வேண்டும்! மனநலமும் உடல் நலம் போல மருத்துவரிடம் காட்ட வேண்டிய ஒரு பிரச்சினை தான் என்று எங்கள் சமூகத்தில் இன்னும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அநியாயமான இழப்பு. யாழ் பல்கலையில் ஏனைய இலங்கைப் பல்கலைகள் போலவே ஒரு மருத்துவ நிலையம் இயங்கி வருகிறது. டாக்டர் சீர்மாறன் மருத்துவ அதிகாரியாக இருந்த 90 களிலேயே  அந்த நிலையம் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றால் இப்போது அந்த சேவைகள் குறைந்திருக்கும் என்பது நம்பக் கூடியதாக இல்லை!

குதிரையை தண்ணித் தொட்டிக்குக் கூட்டிச் செல்லலாம், ஆனால் தண்ணீரை குதிரை தான் குடிக்க வேண்டும்! மனநலமும் உடல் நலம் போல மருத்துவரிடம் காட்ட வேண்டிய ஒரு பிரச்சினை தான் என்று எங்கள் சமூகத்தில் இன்னும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. 

எனக்குத் தெரிந்த சிறுவன்/நண்பன் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். யாழ் கச்சேரிக்கு அருகிலிருந்த உளவளத் துணை நிலையத்திற்கு நானும் எனது நண்பனும் கூட்டிச் சென்று சிகிச்சையளித்திருந்தோம். பின்னர் தாயாரிடம் விடயத்தைக் கூறி வழங்கப்பட்ட மாத்திரைகளை தவறாது எடுக்கும்படி எச்சரித்திருந்தோம்.(தாயார் ஒரு ஆசிரியை) ஆனால் போதிய கவனிப்பின்றி 1996ல் இடம் பெயர்வின்போது வன்னியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அறிந்தேன். 😢

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது. 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

எனக்குத் தெரிந்த சிறுவன்/நண்பன் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். யாழ் கச்சேரிக்கு அருகிலிருந்த உளவளத் துணை நிலையத்திற்கு நானும் எனது நண்பனும் கூட்டிச் சென்று சிகிச்சையளித்திருந்தோம். பின்னர் தாயாரிடம் விடயத்தைக் கூறி வழங்கப்பட்ட மாத்திரைகளை தவறாது எடுக்கும்படி எச்சரித்திருந்தோம்.(தாயார் ஒரு ஆசிரியை) ஆனால் போதிய கவனிப்பின்றி 1996ல் இடம் பெயர்வின்போது வன்னியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அறிந்தேன். 😢

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது. 😡

 

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

இத்தனை தியாகங்கள் இழப்புக்கள் அழிவுகளின் பின்பும் எமது சமூகம் தங்களை சுய விமரிசனம் செய்துகொள்ளவில்லை என்றால் நாங்கள் மிகவும் மோசமான Corrupted  society என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 22:51, Justin said:

ஆம் கப்ரன்! 90 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த உளவள நிலையங்கள் வளங்கள் குறைந்த அந்தக் காலத்திலேயே அளப்பரிய சேவையாற்றின. கச்சேரிக்கு அருகில் இருந்த சாந்தியகம் வணபிதா டேமியன், எழுத்தாளர் ஜோசப் பாலா ஆகியோரால் நடத்தப் பட்டது என நினைக்கிறேன். 

அப்போது யாழில் இருந்து "நான்" என்ற உளவளத்துணை சார்ந்த ஒரு சஞ்சிகையும் வந்து கொண்டிருந்தது, இப்போதும் வெளிவருகிறது என நினைக்கிறேன். 

இந்த உளநலம் பேணல் தொடர்பான அறிவூட்டலை  உயர்தர மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பணியை ஐங்கரன் வாத்தியாரின் "நங்கூரம்" சஞ்சிகை 1995 வரை செய்தது. 2012 இல் ஐங்கரன் வாத்தியார் நங்கூரம் சஞ்சிகையை மீள ஆரம்பித்த போது அதில் எழுதவும் ஆட்கள் இருக்கவில்லையாம். யாழ் பாடசாலைகளில் ஒரு நூறு இதழ்கள் கூட விற்க முடியாத அளவுக்கு மாணவர்களின் வாசிப்புப் பழக்கமும் அருகி விட்டதாகச் சொன்னார். 

இவையெல்லாம் எங்கள் சமூகத்தில் காலப் போக்கில் பலவழிகளில் வெளிப்படுகிறது என்றே கருதுகிறேன்.

சாதாரண 5ம் ஆண்டு புலை பரீட்சை அவ்வளவு பெஇதாக பெற்றோர்களால் ஊட்கி பெருக்கி பிள்ளைகளை பாழாக்கி விட்டிருக்கிறது தெரியுமா பிள்ளைகளை கால ஓட்டத்தில் எப்படி கரை சேர வேண்டும் என்று சொல்லி கொடுக்காமல் மார்க்ஸ் என்ற  ஒற்றை சொல்லிலும் அடுத்த பிள்ளையை ஒப்பீட்டு மதிப்பீட்டிலும்  பிள்ளைகளை வளர்க்கிறார்கள்  அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் பெற்றோகள் தங்களது பிள்ளைகளை குதிர பந்தயத்தில் ஓட வைப்பது போல கல்விப்பயணத்தில் ஓட வைக்கிறார்கள் இதில் மற்ற பிள்ளைகளை தாங்கள் முந்த வேண்டுமென நினைத்து அடுத்த பிள்ளைகளை கேலி கிண்டல் செய்ட்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொல்கிறார்கள் என்று சொல்லலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சாதாரண 5ம் ஆண்டு புலை பரீட்சை அவ்வளவு பெஇதாக பெற்றோர்களால் ஊட்கி பெருக்கி பிள்ளைகளை பாழாக்கி விட்டிருக்கிறது தெரியுமா பிள்ளைகளை கால ஓட்டத்தில் எப்படி கரை சேர வேண்டும் என்று சொல்லி கொடுக்காமல் மார்க்ஸ் என்ற  ஒற்றை சொல்லிலும் அடுத்த பிள்ளையை ஒப்பீட்டு மதிப்பீட்டிலும்  பிள்ளைகளை வளர்க்கிறார்கள்  அடுத்தவர்களுக்கு புத்தி சொல்லும் பெற்றோகள் தங்களது பிள்ளைகளை குதிர பந்தயத்தில் ஓட வைப்பது போல கல்விப்பயணத்தில் ஓட வைக்கிறார்கள் இதில் மற்ற பிள்ளைகளை தாங்கள் முந்த வேண்டுமென நினைத்து அடுத்த பிள்ளைகளை கேலி கிண்டல் செய்ட்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி கொல்கிறார்கள் என்று சொல்லலாம்

புலமைப் பரிசில் என்பது ஒரு புற்ருநோயாக இலங்கையில் வளர்ந்து வருகிறது. பிளளைகளை ஆங்கிலக் கல்வி(மொழி அல்ல பிரச்சனை) International School,  புலமைப் பரிசில் பரீட்சை, National  School என்கின்ற நச்சு விதைகள் இலங்கை முழுவதும் பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையோடு ஆரம்பமாகும். ஒரு வித போட்டி மனப் பாண்மை உயர் கல்வி முடித்து தொழில் வாய்ப்பு பெறும் வரைக்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது போலும்.சிறு வயதிலேயே அவர்களின் வயதுக்கு மேற்பட்ட எண்ணங்களை திணிப்பதனாயே ஒரு வித கர்வம் பிள்ளைகள் மத்தியில் வளர்ந்த வண்ணம் உள்ளது என்றும் சொல்லலாம்.ஆகவே இதற்கு முதல் காரணம் பெற்றோர் மற்றும் அவர்களை சுற்றி உள்ள வயது வந்தோர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புலமை பரிசு பரீட்சை தனிய வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதன் மூலம் நிறைய கஸ்டப்படட மாணவர்கள் பலன் பெறுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் 5 ம் ஆன்டு புலமைப்பசிசில் பரீச்சைக்கு எதிராக கருத்திட்ட அனைவருக்கும் எனது விருப்பு வாக்குகள் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

புலமைப் பரிசில் என்பது ஒரு புற்ருநோயாக இலங்கையில் வளர்ந்து வருகிறது. பிளளைகளை ஆங்கிலக் கல்வி(மொழி அல்ல பிரச்சனை) International School,  புலமைப் பரிசில் பரீட்சை, National  School என்கின்ற நச்சு விதைகள் இலங்கை முழுவதும் பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. 

☹️

பெற்றோர்களை விட ஆசிரியர்களும் பாரிய உடந்தை காசுக்காக இப்ப சூம் கிளாஸ் என்று சொல்லி காசு பார்க்கிறார்கள் கபிதன் தங்களை முகநூல்  மூலம் விளம்பரப்படுத்தி காசு பார்க்கிறார்கள் கல்விக்கு காசுக்கு தான் முதலிடம் கல்வி சார்ந்த துறையில் வேலைபார்ப்பதால் சொல்கிறேன் அதிக அனுபவம் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

இந்த புலமை பரிசு பரீட்சை தனிய வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் ...அதன் மூலம் நிறைய கஸ்டப்படட மாணவர்கள் பலன் பெறுவார்கள் 

அரசாங்கம் விரும்பியவ்ர்கள் எழுதலாம் என சொன்னாலும் அனைவரும் எழுதினார்கள் பெற்றோரின் வரட்டு கெளரவத்திற்க்காக பிள்ளைகளை வாட்டி எடுத்தார்கள் ஒன்லைன் கிளாஸ் என ( எனது நண்பர் ஆசிரியர் தரம் 5 பிள்ளைகள விட பெற்றோர்கள் தொல்லை தாங்க முடியல என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

அப்பிடி எழுதினால் தூக்கிறத்திற்கு என்ன அண்ணா இருக்கு ?...காதல், சாதி பிரச்சனையா ?...எழுதுங்கள் . உண்மை வெளி வர வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

அப்பிடி எழுதினால் தூக்கிறத்திற்கு என்ன அண்ணா இருக்கு ?...காதல், சாதி பிரச்சனையா ?...எழுதுங்கள் . உண்மை வெளி வர வேண்டும் 
 

அதேதான் எனது கேள்வியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 17:00, குமாரசாமி said:

நான் ஊரிலை இருந்து அறிஞ்ச வரைக்கும் பிரச்சனை வேறை......மரணவடைஞ்சவர் பிறந்த இடம் குடத்தனை. பெற்றோர் வாடகை வீடு துன்னாலை.

இதுக்கு மேலை எழுதினால் நிர்வாகம் தூக்கும்.....அதியில் பார்க்க...

சரி தூக்காத மாதிரி  எழுதுங்கள் . ஊரில் என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்..😀

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை மாணவன் இளங்குன்றன் மரண வழக்கின் நீதிமன்ற உத்தரவு

மர்மமான முறையில் உயிரிழந்த வட தமிழீழம் ,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூன்றாம் வருட மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காகப் காவற்துறையிரால் சமர்ப்பிக்கப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் பதிவு குறித்து சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் சந்தேகம் எழுப்பிய நிலையில் மேலதிக பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ். கோண்டாவில், வன்னியசிங்கம் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் வசித்து வந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் தூக்கில் தொங்கிய நிலையில் கால்கள் இரண்டும் நிலத்தில் முழந்தாளிட்ட வண்ணம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், சந்தேகத்துக்கிடமான இம்மரணம் தொடர்பான விசாரணையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்துமாறு அவருடைய சகோதரன்  சிங்கள அரசுக்கு  கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 26ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது மரணமடைந்த பல்கலைக்கழக மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராக்களைப் பார்வையிடுவதற்கும், அவர் பயன்படுத்திய தொலைபேசியைப் பரிசீலனை செய்வதற்கும் மன்று உத்தரவு வழங்கவேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதை ஆராய்ந்த நீதிவான் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. கமராவின் பதிவுகளையும்,  குறித்த மாணவன் பயன்படுத்திய தொலைபேசிப் பதிவுகளையும் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கோப்பாய் காவற்துறையினரால் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சி.சி.ரி.வி. கமராவின் காட்சிகள் நீதிமன்றத்துக்குச் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது குறித்த பதிவில் சடலம் மீட்கப்பட்ட கடந்த மாதம் 17ஆம் திகதி நண்பகல் பெறப்பட்ட பதிவு மாத்திரமே இருக்கின்றது என மரணமடைந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ்  நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராவின் முழுமையான பதிவுகளையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போல் கோப்பாய் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்
 

https://www.thaarakam.com/news/267f962d-ade2-498d-89c2-7afc76232ead

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 03:28, Kapithan said:

தாயின் போதிய பராமரிப்பிலிருந்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மகன் உளவளத்துணை பெறுவது தாயாருக்கு கெளரவக் குறைச்சல். 

எங்கள் சமூகம் போலித்தனத்தின் உச்சத்திலிருக்கிறது

நான் அறிந்தவரையில் இந்தப்போலித்தனம் ஊரில் உள்ளவர்களுக்கு சற்றும் குறையாமல் இங்கேயும் உச்சத்தில்தான் இருக்கிறது..

பிள்ளைகளை பெறுவதும் சமூகத்திற்கு நாங்கள் குறையுள்ளவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க, பிள்ளை எந்ததுறையில் படிக்க வேண்டும் என்பதையும் சமூகத்தில் அந்தஸ்த்தை நிரூபிப்பதற்காக.. திருமணம் சரிவரவில்லையா அதையும் கொண்டு இழுக்கவேண்டும், சமூகத்திற்காக.. இப்படி எல்லாவற்றையும் மற்றவர்கள்/சமூகம் என்ன நினைப்பார்கள் என்று போலியாகவே வாழ்பவர்களாக மாறிவருகிறோம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.