Jump to content

தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம் – மட்டு.நகரான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்’ – மட்டு.நகரான்.

 
3ZZD5pyMU6s9KnLw_worship-2-696x522.jpeg
 61 Views

கிழக்கு மாகாணத்தின் நிலைமை, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், கிழக்கு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிகள் எவ்வாறான வகையில் ஏற்படுத்தப்படுகின்றன போன்ற விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம்.

இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நிழல் யுத்தம் ஒன்றை தமிழினம் எதிர்கொண்டுள்ளதாகவே பார்க்கப்பட வேண்டியதாகவுள்ளது.

குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர்கள் எந்த விடயங்களை பாதுகாத்தார்களோ, அந்த விடயங்களை அவர்களிடம் இல்லாமல் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மிகவும் திட்டமிட்ட வகையில் பேரினவாத அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

batti-monk-161116-seithy-3.jpg
தமிழர்களும் இந்த நாட்டின் மக்கள். அவர்களும் தனித்துவமான அடையாளங்கள், மொழி, கலை, கலாசாரங்களைக் கொண்ட மக்கள். அந்த மக்களுக்கான உரிமையினை வழங்க வேண்டும் என்று இந்த நாட்டில் ஆட்சியமைக்கும் எந்தப் பெரும்பான்மை அரச தலைவரும் கருதாத வரைக்கும் இந்த நாட்டில் தமிழர்கள் தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை இன்று நடைபெறும் நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இன்று கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்தும் நாங்கள் சுட்டிக்காட்டி வருகின்றோம். அவையெல்லாவற்றினையும் தாண்டிய வகையில் இன்று நெருக்கடிகள் அதிகரித்து வருகின்ற நிலைமையானது தமிழ் மக்களுக்கான அபாய சங்காகவே நோக்க வேண்டியுள்ளது.

2017-06-09.jpg
குறிப்பாக இன்று அரசாங்கம் காணி தொடர்பான செயற்பாடுகளில் அதீத அக்கறை காட்டுவதை காணமுடிகின்றது. குறிப்பாக காணிகளை பகிர்ந்தளிக்கும் விடயத்தினை திறந்த முறையில் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஒரு இலட்சம் பேருக்கு காணி வழங்குதல், சீர்திருத்த காணிகளை பகிர்ந்தளித்தல், அரச காணிகளை பராமரிப்பவர்களுக்கு அக்காணியை வழங்குதல் என்ற பல செயற்பாடுகளை அரசாங்கம் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக இந்த செயற்பாடுகள் தமிழர்களின் பகுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் இன்று அதிகளவில் தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் உள்ள காடுகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள வளமான காணிகளை கையகப்படுத்தி அங்கு திட்டமிட்ட குடியேற்றங்களை செய்யும் வகையிலான உத்திகளாகவே இவ்வாறான செயற்பாடுகளை பார்க்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் பெரும்பான்மையின மக்கள் வாழும் வனங்களை அரசு பாதுகாக்கும் பகுதியாக அறிவித்து, அவற்றினை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், வடகிழக்கில் உள்ள வனங்களை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவற்றினை அழிக்கும் நிலையினை இன்று உருவாக்கி வருகின்றது.

அதற்கு பல உதாரணங்கள் கிழக்கில் காணப்படுகின்றன. குறிப்பாக அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலந்தனை, மாதவனை பகுதியில் காலங்காலமாக வனப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த தமிழர்களின் காணிகளில் பெரும்பான்மையினைத்தைச் சேர்ந்தவர்கள் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்ற தோரணையில் அப்பகுதிகளில் அத்துமீறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக காடுகள் அழிக்கப்பட்டு, அம்பாறை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களைக் கொண்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயற்பாடுகளுக்கு பின்புலமாக கிழக்கு மாகாண ஆளுநர் இருப்பதாக தமிழ் கட்சிகளினால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுகளை உண்மைப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் கிழக்கு மாகாண ஆளுநரினால் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய மற்றும் சோளச் செய்கையினை தற்காலிகமாக இடைநிறுத்தி, குறித்த பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த பின்னர் தீர்வொன்றினை காணலாம் என அமைச்சர் சமல் ராஜபக்ச குழுவொன்றினை அமைத்து நடவடிக்கையெடுத்துவரும் நிலையிலும், கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாக இந்த விடயத்தில் அமைச்சரின் பணிப்பினை மீறி செயற்படும் நிலையுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகளினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் கிழக்கு மாகாணம் மட்டுமன்றி, வடமாகாணமும் குறிவைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது தமிழர்களின் இருப்பினை தக்கவைப்பதற்கு தமிழர்களின் பக்கத்தில் இருந்து இதுவரையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லையென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இனிவரும் காலத்தில் வடகிழக்கினை உள்ளடக்கியதாக தமிழர்களின் நிலபுலங்களை பாதுகாத்து முன்கொண்டு செல்லக்கூடியதாக, அவசியமானதுமான அவசரமானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என்று நடைபெற்று வரும் செயற்பாடுகள் எங்களுக்கு கட்டியம் சொல்லி நிற்கின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மற்றும் மாதவனை, மயிலத்தமடு பகுதிகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததை தமிழர்கள் காணி விடயங்களில் முன்கொண்ட செயற்பாடுகளின் அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து அபிவிருத்திக்குழுவின் தலைவராகவும், அமைச்சராகவும் கலந்து கொண்டவர்களினால் மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை சட்டவிரோத செயற்பாடுகள் என்று கூறக்கூட முடியாத நிலையில் உள்ளமை, கிழக்கில் அரசசார்பு கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்வாறான நிலையில் எதிர்கால செயற்பாடுகள் குறித்த கேள்வி இன்று கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களினால் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முடியுமே தவிர, இந்த பிரச்சினைக்கான தீர்வு என்ன உண்டு என்பது தொடர்பில் சிந்திக்கும் நிலைமையில் இருந்து அவர்கள் தவறியே வருகின்றனர்.

இந்த நிலையிலேயே வடகிழக்கு மாகாணத்தினை உள்ளடக்கியதாக அல்லது இரு மாகாணங்களிலும் தனித்தனியாக செயற்படக்கூடியதாக சட்ட அறிஞர்கள், காணி தொடர்பான செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகளை உள்ளடக்கியதான குழுவொன்றினை அமைத்து, அதன் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் நடைபெறும் அத்துமீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

625.0.560.350.390.830.053.800.670.160.91

அண்மையில் திருகோணமலை, தென்னமரவாடி பகுதியில் காணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலான குழுவினர் வழக்காடி, குறித்த தனியார் காணியை பௌத்த விகாரையிடம் இருந்து மீட்டு வழங்கிய செயற்பாடுகளை முன்னுதாரணமாக கொண்டு இந்த விடயங்கள் முன்நகர்த்தப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் சரியான முறையில் கையாளப்படாமல் விடுமாகவிருந்தால் இன்னும் பத்து வருடங்களில் தமிழர்களின் தாயகம் என்னும் நிலை மாற்றப்படும் நிலையுருவாகும். கிழக்கு தொடர்பில் நாங்கள் இன்னும் பாராமுகமாக இருப்போமானால், எதிர்காலத்தில் வடக்கின் நிலையும் கேள்விக்குறியாகும் நிலையுருவாகும்.

நாங்கள் இன்று கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் இந்த அத்துமீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் செல்லும் நிலையுருவானால்,  இந்த மண்ணில் கடந்த 30வருடத்திற்கு மேலாக போராடி ஆகுதியாகிய போராளிகளுக்கு செய்யும் துரோகமாகவே அது அமையும்.

 

 

https://www.ilakku.org/தமிழர்-பிரதேசத்தில்-முன/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.