-
Tell a friend
-
Similar Content
-
By கிருபன்
அரசாங்கத்திடம் செல்வாக்கிழந்த கருணா ! கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனம் இரத்து
By Battinews
நீண்டகாலமாக அம்பாறை தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் இன்னும் இழுபறி நிலையில் காணப்படுகின்றது . வெள்ளிக்கிழமையன்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனத்தை நிறுத்தும்படி அம்பாறை அரச அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடந்த அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கணக்காளர் நியமனம் வழங்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன .
பாராளுமன்றத்தில் இது பேசும் பொருளாக காணப்பட்டது. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிழக்கிற்கு வந்திருந்த வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர் .
கடந்த பாராளமன்ற தேர்தலில் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா ) கல்முனையை தர முயர்த்தி தருவேன் என பிரச்சாரங்களில் கூறி வந்தார் . இதனை நம்பி கல்முனை பிரதேச மக்களும் தேர்தலில் கணிசமான வாக்குகளை அளித்திருந்தனர் . இதனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் பிரநிதித்துவம் இல்லாமல் போனதுடன் அதாவுல்லா எம்.பி ஆகியுள்ளார் .
இதனையடுத்து ஆளுநர் பதவி கிடைக்கும் என்றும் நம்பியிருந்தனர் கடைசியில் அதுவும் ஏமாற்றமே . பின்னர் பிரதமர் மஹிந்தவின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் ஆனால் கல்முனை தரமுயர்த்தல் தொடர்பில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை .
நிறுத்தப்பட்ட கணக்காளர் நியமனத்தை தட்டி கேட்க திராணியற்றவராக விளங்குகிறார் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் பணியே அவருக்கு வழங்கப்பட்ட்தாகவும் அதை அவர் செய்து விட்டார் இப்பொழுது இருக்கும் மஹிந்த அரசாங்கத்தில் இவரை கணக்கெடுப்பதில்லை என கூட்டமைப்பினர் விமர்சிக்கின்றனர்.
தேர்தல் பிரசாரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவே பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார் ஆனால் தற்போதைய அரசாங்கம் ஹாரிஸ் எம்.பி போன்றவர்களை மதிக்கும் அளவிற்கு கருணாவை கணக்கெடுப்பதில்லை .
அம்பாறை தமிழ் மக்கள் கருணாவின் தேர்தல் கால உறுதிமொழியைக் கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என நம்பி கடைசியில் ஏமாற்றமே அடைந்துள்ளனர் .
http://www.battinews.com/2020/12/blog-post_24.html
-
By கிருபன்
கொரோனா முடிந்ததும் முதலாவது வேலை கல்முனையை தரமுயர்த்துவது தான் என்கின்றார் கருணா
Published: November 11, 2020 Thuyavan Mathi
நீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம் எனவும் இந்த தேர்தலில் நான் தோற்கவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி பகுதியில் பிரதமரின் இணைப்பாளர் அலுவலகத்தை இன்று(11) காலை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விரட்டியடித்து நாம் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளோம். குறிப்பாக கல்முனை பகுதியில் 89 வீதம் வாக்குகளை பெற்றமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எம்மை பாராட்டினார். கல்முனை தொகுதி மக்களிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பொத்துவிலில் சிறிய மாற்றம் இருந்திருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம்.தேர்தலின் பின்னர் நான் ஓடி ஒளிந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். நிறைவாகும் வரை மறைவாக இருக்க வேண்டுமென சொல்வார்கள். அதற்காக சிறிது இடைவெளி ஏற்பட்டது.
இருந்த போதிலும் நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார். இந்த அடிப்படையில் மட்டக்களப்பு அம்பாறையை என்னை நம்பி ஒப்படைத்துள்ளார். இந்த அதிகாரங்களை பயன்படுத்தி மேலும் பல மாற்றங்களை இந்த பிரதேசங்களில் கொண்டு வருவேன்.
மக்களுக்காக தொடரந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்காக மாத்திரம் நாம் மக்களை ஏமாற்ற கூடாது. எனக்கு கிடைத்த அதிகாரம் மிக்க பதவி ஊடாக மக்களிற்கு உதவி செய்வேன். இதற்கு தற்போது தடையாக உள்ளது கொரோனா நோய். இந்த நோய் காரணமாக அமைச்சுக்கள் செயலிழந்து உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று தோல்வியடைந்த கலையரசன் என்பவருக்கு தேசிய பட்டியல் கொடுத்துள்ளது. அவர் வாகனத்தில் பவனி வருகின்றார். அவர் ஒரு வேலைத்திட்டம் அம்பாறையில் செய்தால் நான் திரும்பிச்சென்று இருப்பேன். ஒன்றுமே செய்யபோவதில்லை. மக்களை ஏமாற்றவே இருப்பை தக்க வைக்க முயல்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது குழப்பம். கலையரசனுக்கு பதவி வழங்கியதால் கூட்டமைப்பின் செயலாளரின் பதவி பறிபோனது. எங்கள் அம்பாறை மாவட்ட மக்களை எமது இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது. நானும் கைவிட்டு போக மாட்டேன் என கூற விரும்புகின்றேன்.
அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று எமது மக்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர். எனவே தான் எதிர்வரும் தேர்தல்களில் எம்முடன் ஒரே சின்னத்தில் இணைந்து போட்டியிட கோடிஸ்வரன்இ கலையரசன் ஆகியோர் உணர்ந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கல்முனை விவகாரம் பற்றி பிரதமரிடம் பேசினேன். துறைசார்ந்த அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் பேசினேன். கொரோனா முடிந்ததும் அவர் கல்முனைக்கு வருவார். கொரோனா முடிந்ததும் முதலாவதாக கல்முனையை தரமுயர்த்துவோம் என குறிப்பிட்டார்.
https://www.meenagam.com/கொரோனா-முடிந்ததும்-முதலா/
-
By முதல்வன்
எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். அதேவேளை, முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என தமிழர் மகா சபை சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனூடாகத் தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற வேண்டும். இதனை ஓர் இனவாதமாக எவரும் பார்க்கக் கூடாது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புவழங்க வேண்டும்.
இன்று எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குச் சாட்டை அடி கொடுத்துள்ளனர். இதனை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இந்தத் திட்டத்தை எமது புலம்பெயர் மக்களின் உதவியுடன் மேற்கொள்ளத் தற்போது தீர்மானித்துள்ளோம்.
முதலில் சுய தொழில் முயற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சில கிராமங்களில் மக்களுக்கு அரசியல் தெளிவின்மை காணப்படுகின்றது.
கடந்த காலத் தேர்தல்களின்போது சில தரப்பினர் சாராயப் போத்தல்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள். இதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரின் தோல்வியைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.
விளையாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டமை வரவேற்கக் கூடியது. இது எமது இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும். அந்தவகையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவை விமர்சிக்க முடியாது. நாங்கள் சொல்கின்ற கருத்துக்களை அரசு ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
https://www.tamilwin.com/politics/01/255946?itm_source=parsely-api?ref=recommended3
-
By sudaravan
கருணாவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் இடமளிக்கப்படும் என் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் பொது செயலாளர்கள், இந்த விடயத்தை தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தேர்தலுக்கு பின்னர் தமக்கு தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் கருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.pathivu.com/news/41509/57//d,article_full.aspx
-
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக் கொரோனாத் தொற்று- தம்மிக்க பண்டார.! சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பில் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. எனினும், தமது அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாகவே அவர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தம்மிக்க பண்டார சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுகாதார அமைச்சர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொரோனாத் தடுப்புப் பாணி வழங்கப்பட்டபோது புகைப்பிடித்தல், மதுபான பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தம்மால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார். எனினும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தாம் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்மையில், தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புப் பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உட்கொண்டார். இது இலங்கையில் பேசு பொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/01/24/21909/ டிஸ்கி வாய்ல வாஸ்து சரியில்ல .. எங்கயோ வாங்கி கட்ட போறார்.👌 -
இந்தியா மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கிறார்கள்.
-
By vanangaamudi · Posted
சிவாஜி எரி சக்தி என்கிறார் அது புதிப்பிக்கது (renewable) என்றும் சொல்கிறார், புரியவில்லை. -
By பசுவூர்க்கோபி · பதியப்பட்டது
இன்றும் அன்றும்..! ************** இன்டர் நெட்டை திறந்தாலே ஏதோ ஒரு விளம்பரம் இடை குறைப்பா எழில் அழகா.. தொந்தியா, வயிற்றில் தொல்லையா தூக்கமா-அது இல்லையா சுகரா,கொழுப்பா, சூம்பலா,வீங்கலா இதுபோன்று எத்தனை எத்தனை.. அத்தனைக்கும் மருந்து அவரவர் சொல்லி அதைசெய்,இதைசெய் அப்படிச் செய் இப்படிச்செய்-என ஆயிரம் அறிவுரை இந்தபழத்தை இதுக்கு சாப்பிடு என்றொருவர் இதைசாப்பிடதே இந்த நோய்க்கு என்றொருவர்.. படுக்கும் முறை நடக்கும் முறை பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும் முறை சொல்லிச் சொல்லியே சுகநலம் உள்ளவரும் சோம்பேறியாக சுத்தும் நிலையாச்சு.. அந்தகாலத்து ஆச்சி அப்புவை இன்றுமொருக்கா எனக்கு.. எண்ணத்தோன்றுது பத்து பிள்ளையை பெத்து போட்டும் பம்பரம் போல சுத்தி திரிந்ததும் அம்மி உரல்ல ஆட்டுக்கல்லில அரைத்து இடித்து உண்ட உடம்பும் அப்பு வயலில அதிகாலை அங்கு உழுது,விதைத்து உழைத்த உடம்பும் காற்றுக்கடலில வலையை போட்டும் கரைவலை இழுத்த எங்கள் உடம்பும் பந்தையம் கட்டி பனைமரம் ஏறி கள்ளு இறக்கிய கட்டுடல் உடம்பும் சலவைத்துணியை சாத்துசாதென்று கல்லில் மோதிய-எம் கல்லான உடம்பும் இப்படி இப்படி-எம் செய்யும் தொழிலிலே தேக ஆரோக்கியம் கண்ட எம் உடம்பு. நோயற்ற நிலையும் நூறாண்டு வாழ்வும் எம்முன்னோர் காலத்து இனிமை வாழ்வும் இன்றும் தெரியுது. இது.. விஞ்ஞானம் வளர்ந்து வேலை இல்லாததால் பொய்ஞானம் சொல்லி புலம்புது உலகம். அன்புடன் -பசுவூர்க்கோபி- -
By nedukkalapoovan · Posted
ஆமாம் ஆமாம்.. நீங்கள் எல்லாம் ஜேசு நாதரின் வாரிசுகள். மற்றவர்கள் எல்லாம்.. எல்லாம் அசுத்தம். நீங்கள் சுத்தம். இப்படியான சிந்தனையோட்டத்தில் தான் நீங்களும் இங்கு சிலரும்..இப்போ புதிய வேடம் போட்டிருக்கிறார்கள். புலிகளின் ஒவ்வொரு தாக்கமும்.. மறுதாக்கமாக இருந்ததே யதார்த்தம். இந்த அம்மையார் முள்ளிவாய்க்காலில் மக்கள் இறந்து கொண்டிருக்க.. லண்டனில் பிரா மாநாடு போட்டவர் தானே. அப்ப எல்லாம் மக்கள் எருமைகளாகத் தெரிந்தார்களோ..??! பெண் என்பதற்காக பிரா மாநாடு பற்றிப் பேசினால்.. அது அநாகரிகமா..??! அப்போ பிரா விற்பது வாங்குவது அநாகரிகச் செயலா..?! கொடுமை.. இப்படித்தான் உங்களுக்கு உகந்ததாக கருத்தியலை வளைச்சு வைச்சு அதற்குள் வட்டமடிக்க நினைக்கிறீர்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.