Jump to content

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்

spacer.png

 

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

பிகாரில் தேஜஸ்வி யாதவுக்கு வந்த நிலை, தமிழகத்தில் திமுகவுக்கு வரக்கூடாது என்றால் காங்கிரஸை அது கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சீமான், அதிமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் பாஜகவைக் கழற்றிவிட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பாஜக நடத்தும் வேல் யாத்திரை மூலமாக நாம் தமிழருக்குத்தான் விளம்பரம் கிடைக்குமெனவும், பாஜகவுக்கு அல்ல எனவும் கூறியவர், 10 ஆண்டுகளாக தான் பேசிவரும் கொள்கைகளை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாகச் சாடினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து போட்டி என அறிவித்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் நின்ற சீமான் 12,000 வாக்குகளைப் பெற்றார். அக்கட்சி 1 சதவிகித வாக்குகளையும் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.

 

https://minnambalam.com/politics/2020/11/19/12/asselbly-election-contest-against-stalin-says-ntk-chief-seeman

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு என்பது விற்பனைப்பொருள். அங்கே நீதி,நியாயம்,மக்கள் நலன் எதுவும் கிடையாது. இப்படியான சூழ்நிலையில் சீமான் போன்ற தமிழின நலன்வாதிகளும்,சமூக நலவாதிகளும் வெல்வது கடினமானதுதான்.  என்னவொன்று கொளத்தூரில் ஒவ்வொரு வாக்கும் பலமடங்கு விலை உயரும்.
இருந்தாலும்...

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

கிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு என்பது விற்பனைப்பொருள். அங்கே நீதி,நியாயம்,மக்கள் நலன் எதுவும் கிடையாது. இப்படியான சூழ்நிலையில் சீமான் போன்ற தமிழின நலன்வாதிகளும்,சமூக நலவாதிகளும் வெல்வது கடினமானதுதான்.  என்னவொன்று கொளத்தூரில் ஒவ்வொரு வாக்கும் பலமடங்கு விலை உயரும்.
இருந்தாலும்...

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நானும் இதை பார்த்தனான்.ஆனாலும் ஆஆஆ வென்றிருக்கிற முதலைகளுக்கு ஏன் தீனி போடுவான் என்று விட்டுவிட்டேன்.
நீண்ட காலத்தின் பின் சீமானைப் பற்றிய செய்தி.இணைப்புக்கு நன்றி கிருபன்.
கிருபன் இணைத்தபடியால் அணையாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

Quote

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

பாஜக வானாலென்ன எதுவாயிருந்தாற்தானென்ன - தமிழ்த்தேசியம் பாக்கு நீரிணைக்கு வடக்கிலும் தெற்கிலும் நிலைபெற்றால் சரி.

 

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

காங்கிரஸ் என்றால் ஓகேயா....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

காங்கிரஸ் என்றால் ஓகேயா....?

அவருக்கு யார் வென்றாலும் கவலையில்லை, தமிழ் தேசியம் தோற்றால் சரி

1 hour ago, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

சும்மா வாயில் வந்ததை பதிந்தால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது, அழுதிடுவேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் இதை பார்த்தனான்.ஆனாலும் ஆஆஆ வென்றிருக்கிற முதலைகளுக்கு ஏன் தீனி போடுவான் என்று விட்டுவிட்டேன்.
நீண்ட காலத்தின் பின் சீமானைப் பற்றிய செய்தி.இணைப்புக்கு நன்றி கிருபன்.
கிருபன் இணைத்தபடியால் அணையாமல் இருக்கும்.

இல்லாத பொல்லாததை சொல்லுவார்கள். நிரூபிக்க சொல்லி கேட்டால் 3,4 நாட்களுக்கு வனவாசம் சென்று விடுவார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.

 

ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டால் வரவுள்ள  தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்வதோடு ஸ்டாலின் முதலமைச்சர் என்பதையும் ஒத்துக்கொள்வதாக அமையும்.😀

இது ஒரு அரசியல் தற்கொலை என்பதால் காரைக்குடிப் பக்கம் போய்விடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: சீமான் ஏன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!? 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் பாணியில் இப்போதே "இது அழாப்பும் தேர்தல்" என்று கு.சா சொல்லி விட்டார்! எனவே போட்டியிட்டு முகம் குப்புற விழுந்தாலும் மீசைக்கு காப்புறுதி வாங்கியாகி விட்டது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்.. தாவீர் - கோலியாத் பலப்பரீட்சை தான். முயற்சி செய்வது வெற்றிகாக என்றாலும்.. முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்வது எவ்வளவோ மேல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

ஸ்டாலினுக்கு கிடைக்கும் வாக்குக்களை பிரித்து தனது B ரீம் அதிமுகவை வெல்ல வைக்க பாஜகா தனது C ரீம் சீமானை போடடியிட வைக்க  யோசித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

கட்டுரையின் இறுதிப் பகுதியையும் தயை கூர்ந்து வாசிக்கவும்..

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Catwalk Proud GIF - Catwalk Proud Tamil GIFs

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

Link to comment
Share on other sites

இப்படி தான் கொஞ்ச வித்துவான்கள் சைக்கிள் சின்னத்துக்கு நக்கலடித்தவர்கள். அவர்கள் திரும்பவும்  எதிர்வு கூறுவதை நினைக்கும் போது ...அதுவும்  A ரீம் ,  Bரீம்  என கன்னை பிரித்தலை நினைக்கும் போது.......   🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011-ல் கருணாநிதி... 2021-ல் ஸ்டாலின் - கொளத்தூரில் போட்டியிடுகிறாரா சீமான்?#TNElection2021

ஸ்டாலின் - சீமான்

ஸ்டாலின் - சீமான்

சீமான், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே இறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது, இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஒரு போர்க்களக் காட்சி வரும். ஒருபுறம் ரீமாசென் தரப்பினர், துப்பாக்கி, பீரங்கி, ஹெலிகாப்டர் என நவீன ஆயுதங்களோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பக்கம் பார்த்திபன் தரப்பு, வில், அம்பு, கற்களை வைத்துக்கொண்டு சண்டையிடுவார்கள். ஒரு கட்டத்தில் ரீமா தரப்பின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பார்த்திபன் படையின் ஒருசிலரைத் தவிர்த்து அனைவரும் இரையாகிப் போவார்கள். ஒரு நான்கைந்து பேர் சூழ்ந்திருக்க, பார்த்திபன் கார்த்தியிடம், ``இந்தப் படைக்கலத்தின் பேர் என்ன, இதைப் பற்றி தாங்கள் முன்னமே விவரிக்கவில்லையே... அச்சபடுவோம் என்றா?'' என தனக்குப் பின்னால் இருப்பவர்களைப் பார்க்க, அனைவரும் உரக்கச் சிரிப்பார்கள். அதற்கு ஈடான ஒரு காட்சி நேற்று, தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
 
சீமான் செய்தியாளர் சந்திப்பு

விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பத்திரிகையாளர்கள், ''நீங்கள் சென்னையில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் ஸ்டாலின் வெற்றிபெற்ற கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாகச் சொல்கிறார்களே அது உண்மைதானா, போட்டியிடுவீர்களா?'' எனக் கேட்க, சீமான் திரும்பி, தன் தம்பிமார்களைப் பார்க்க அனைவரும் உரக்கச் சிரித்துவிட்டு, ``நிக்கனும்னு எல்லோரும் நினைக்கிறாங்க... நானும் நிக்கலாம்னு நினைக்கிறேன்...அத அப்புறம் யோசிப்போம்'' என பதில் தந்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிரமான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்தான், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதி குறித்து பேச்சு எழுந்துள்ளது.

 
 

2010-ம் ஆண்டே நாம் தமிழர் இயக்கத்திலிருந்து கட்சியாக மாறினாலும், அது முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டது 2016-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில்தான். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் சீமான். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட்டார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அவரின் சொந்த மாவட்டத்தில்தான் போட்டியிடமுடியும் என்கிற மரபை உடைப்பதற்காக வட தமிழகத்திலும், அதிலும் குறிப்பாக வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அடிக்கடி பாதிக்கப்படும் கடலூரில் சீமான் போட்டியிட முடிவெடுத்ததாகவும் அப்போது அந்தக் கட்சியினரால் விளக்கம் தரப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

ஒருபுறம் அ.தி.மு.கவின் அமைச்சர் எம்.சி.சம்பத், மறுபுறம் தி.மு.க-வின் மாநில மாணவரணிச் செயலாளர் புகழேந்தி, பா.ம.க சார்பில் ஒருவர், மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா சார்பில் ஒரு வேட்பாளர் என ஐந்து முனைப் போட்டி நிலவியது. அதனால் சீமானால் அங்கு வெறும் 12,497 வாக்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதனால், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், தென் மாவட்டத்தில், தன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டு. சிவகங்கையா, காரைக்குடியா என விவாதிக்கப்பட்டு பின் காரைக்குடி தொகுதிதான் என முடிவானது. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்த சர்வேயில் அந்தத் தொகுதியில் சீமானால் வெற்றிபெறுவது கடினம் என ரிசல்ட் வர, சென்னையில் ஒரு தொகுதியில் போட்ட்யிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது பத்திரிகையாளர்கள் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்களே எனக் கேட்க இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

 

2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பில், வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமியை விட வெறும், 2,819 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார் ஸ்டாலின். ஆனால், 2016 தேர்தலில் தன்னை எதிர்த்துப் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜே.சி.டி பிரபாகரை விட 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் ஸ்டாலின். அவருக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே கொளத்தூர் தொகுதி இருக்கிறது. இந்தநிலையில் சீமான் இங்கு போட்டியிடுவாரா?...நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

''2011-ம் வருடமே அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து, எங்கள் அண்ணனை நிற்க வைக்க பலர் முயற்சி செய்தார்கள் ஆனால், நாங்கள் தேர்தல் பாதைக்கு அப்போது வரவில்லை. எங்களுக்கு சரியான கட்டமைப்புகளும் அப்போது இல்லை. ஆனால், இப்போது அப்படி அல்ல, 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு கிளைகள் இருக்கின்றன. சென்னையில்தான் அண்ணன் போட்டியிடுகிறார்; அது உறுதி. ஆலந்தூர்தான் முடிவாகியிருந்தது. ஆனால், கொளத்தூரில் போட்டியிடலாம் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்'' என்றனர்.

ஸ்டாலின்
 
ஸ்டாலின்

சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்ட்யிட்டால் அது ஸ்டாலினின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா என தி.மு.க வட்டாரத்தில் பேச, ''அவர் நிற்பதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. கடலூரில் போட்டியிட்டு அவர் டெபாசிட் கூட வாங்கவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினராக எங்கள் தலைவர், கொளத்தூர் தொகுதியில் செய்திருக்கிற பணிகள் என்பது மகத்தானது. கொரோனாவுக்கு பின்பு மட்டும் அல்ல அதற்கு முன்பாகவே அவர் அங்கு சிறப்பான பல பணிகளைச் செய்திருக்கிறார். அதனால் எங்கள் தலைவருக்கான வாக்குகளைச் சீமானால் ஒன்றும் செய்யமுடியாது. எங்களுக்கான வாக்குகள் அப்படியே எங்களுக்குத்தான் விழும். எதிர்க்கட்சிகளுக்குப் போகிற வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார். அதனால் எங்கள் தலைவரின் வெற்றி வித்தியாசம் இன்னும் அதிகமாகும்'' என்கின்றனர் மிகுந்த உற்சாகமாக.

 

ஆனால், சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காண்பிப்பதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து, அரசியல் விமர்சகர்கள் பேசும்போது,``கன்ஷிராம் பாணியைத்தான் சீமான் கடைபிடிக்கிறார். ஸ்டாலினை மையமாக முன்வைத்தால் மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும் என நினைக்கிறார். தவிர, ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலமாக, திராவிடமா, தமிழ்த் தேசியமா என்கிற விவாதத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கலாம் என நினைக்கிறார். அந்த ஒரு தொகுதியில் மட்டுமல்லாது, 233 தொகுதியிலும் அதை விரிவுபடுத்துவார் தன்னுடைய பேச்சுத் திறமையால் கருத்தியல் ரீதியாக கடுமையான சவாலை ஸ்டாலினுக்கு ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார். கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஸ்டாலினுக்கு நான்தான் போட்டி என முன்வைத்து தன் கட்சியை வளர்க்கப் பார்க்கிறார் சீமான்'' என்கின்றனர்.

சீமான்
 
சீமான்

அதேவேளை, ``ஆன்டி பிஜேபி என்கிற அடிப்படையில், தி.மு.க-வும் நாம் தமிழரும் ஒரே கொள்கையைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். அப்படியிருக்கும்போது, ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் பா.ஜ.கவின் 'பி' டீம் என்கிற பெயர்தான் அவருக்கு ஏற்படும். தேர்தல் அரசியல், கருத்தியல் ரீதியான விவாதத்துக்கான களம் அல்ல. அதனால், அது மக்களிடம் பெரியளவில் எடுபடாது. ஆனால், சீமான் அங்கு போட்டியிட்டால் அவர் தி.மு.க-வுக்குச் செல்கின்ற வாக்குகளைத்தான் பிரிப்பார். ஆனாலும்,கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் வெற்றி உறுதியானது. அதில், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால், சீமான் மற்றவர்களின் வெற்றியைத் தடுப்பது குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு, தனக்கு ஆதரவான தொகுதி எது, எங்கு நின்றால் வெற்றி பெறலாம் என யோசிப்பதே அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது'' என்கிற கருத்துக்களும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஏறக்குறைய நாம் ஆரம்பத்தில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் காட்சியைப் போல, துணிவும் தைரியமும் இருந்தால் மட்டும் போதாது; போதிய வலிமையும் களத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கையில் எடுத்தால் மட்டுமே வெற்றியைப் பெறலாம் என்பதே போர்க்களமும் சரி தமிழகத் தேர்தல் களமும் சரி நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடமாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் அதைப் புரிந்துகொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/is-seeman-competing-kolathur-in-2021-election

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 15:56, Justin said:

ட்ரம்ப் பாணியில் இப்போதே "இது அழாப்பும் தேர்தல்" என்று கு.சா சொல்லி விட்டார்! எனவே போட்டியிட்டு முகம் குப்புற விழுந்தாலும் மீசைக்கு காப்புறுதி வாங்கியாகி விட்டது! 

நான் இந்திய/தமிழக பழைய தேர்தல் நிலவரங்களை வைத்து கருத்து எழுதினேன். தாங்கள் ஒரு குறுகிய எண்ணைச்சட்டிக்குள் நின்று எரிந்து பொரிந்திருக்கின்றீர்கள்.

தடைகளிலும் அழிவுகளிலும் சுகம் காண்பவர்களிடம் நல்ல எண்ணங்களை/ கருத்துக்களை எதிர்பார்ப்பதும் ஒரு வித முட்டாள்தனம்தான்.

இனிவரும் காலங்களில் தமிழக அன்றைய இன்றைய அரசியல் நிலவரங்கள் எப்படியானது என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். இல்லையேல் வரலாற்று ஆசிரியர்களை அணுகி பயில முயலுங்கள். எமக்கு இந்திய அரசியலை உங்களுக்கு அறிவுறுத்தும் அளவிற்கு நேரமில்லை. அத்துடன் நேரம் காலம் எல்லாம் எமக்கு பொன்னானது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 23:07, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

அமித்சா வருகையின் பின் அதிமுக-பிஜேபி கூட்டணி உறுதி. அநேகமாக 30-35 தொகுதிகளில் பிஜேபி கேட்க கூடும். 

பிஜேபிக்கு 5-10 சீட் கன்பெர்ம்?

திமுக நாயக்கர் (தெலுங்கு) சாதி கட்சியிலும், அதிமுக தேவர் சாதி கட்சியிலும் பிரபலமானவை.

திமுகவின் வாக்கு வங்கியில் தமிழ் ஆதரவு வாக்கை சீமானும், தெலுங்கு ஆதரவு வாக்கை திமுகவில் இருந்து பாஜாகவுக்கு இழுக்க பட்ட வி பி துரைசாமியும், ராதாரவி, தெலுங்கு சமிதி ஆட்கள் பிரிக்க. அதிமுக தோளில் சவாரி செய்தபடி பாஜக தாமரையை தமிழ்நாட்டில் மலரச்செய்ய வேண்டும்.

இதுதான் அமித் ஜி மாஸ்டர் பிளான்.

ஏற்கனவே பீகாரில் 4 முறை முதல்வராக இருந்த ஜாம்பவான் நிதீஷ் குமாருடன் கூட்டணி வைத்து, கூடாரத்து ஒட்டகமாகி, இன்று பிஜேபி அங்கே தனி பெரும் கட்சியாகி நிதீசை பொம்மை முதலவராக்கி, தனக்கு இரெண்டு துணை முதலவர்களையும் எடுத்துள்ளது பிஜேபி.

இதே கேம்பிளாந்தான் அதிமுகவுக்கும். இன்னும் இரெண்டு தேர்தலின் பின் தமிழ்நாட்டில் பிஜேபிதான் தனி பெரும் கட்சி. அவர்களின் ஜூனியர் பார்ட்னர் அதிமுக.

தேர்தலுக்கு முதலே பேசியபடி ஒப்பந்த பணத்தை  தெலுங்கு சமிதி ராதாரவி தரவளிகளும், சீமானும் அமித்சாவிடம் கறாராக வாங்கி விட வேண்டும். இல்லாட்டி ஜி நாமத்தை போட்டுவிட்டு போய்கிட்டே இருப்பார்.

On 20/11/2020 at 21:11, nunavilan said:

இப்படி தான் கொஞ்ச வித்துவான்கள் சைக்கிள் சின்னத்துக்கு நக்கலடித்தவர்கள். அவர்கள் திரும்பவும்  எதிர்வு கூறுவதை நினைக்கும் போது ...அதுவும்  A ரீம் ,  Bரீம்  என கன்னை பிரித்தலை நினைக்கும் போது.......   🙃

சைக்கிளளை பற்றி அப்போ சொன்ன நக்கல் இப்போதும் பொருந்தும். பாராளுமன்றில் நேரு சூட் போட்டு ஆங்கிலத்தில்  கதைப்பதை விட ஒரு ஆணியும் அவர்கள் புடுங்க போவதில்லை.

குறைந்த பட்சம் விக்கியுடன் சேர கூடமுடியா அளவுக்கு கஜனின் சுயமுனைப்பு எழும்பி ஆடுகிறது. மணியை கூட தக்கவைக்க முடியவில்லை. அம்பாறைக்கு போய் டீ பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு கஜேந்திரன் அந்த பக்கம் தலை கறுப்பும் இல்லை.

சுமந்திரன் சம்பந்தரின் கையாலாகதனம், விக்கி வாக்கை பிரித்தமையால் ஒரு எம்பி சீட்டும், 60 வாக்கு வித்தியாசத்தில் ஒரு தேசிய பட்டியல் சீட்டும் கிடைத்தது - இதை வைத்து அடுத்த 5 வருடம் கமெடி பண்ணுவார்கள். வேறு எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

Quote

இரெண்டு தேர்தலின் பின்

கொரனா வரப்போவதே யாருக்கும் தெரியவில்லை. இதற்குள் நீங்கள் வேறு. பீகாரை தமிழ் நாட்டுடன் ஒப்பிடவே முடியாது. மொத்தத்தில் வித்தியாசமான வாக்காளர்கள். தெற்கில் பா ஜா க காலடி வைப்பதற்கு மிகுந்த பிராயதனம் பண்ணுவது உண்மை. அதற்காக உங்கள் சமன்பாடு?  ************ அடிக்க பல்லு கொட்டியது  போல என எண்ணுகிறேன். 
இருந்தாலும் யாரின் கருத்தையும் குறைவாக எடை போடுவதில்லை. இவர் இப்படி சொல்லி இருந்தேரே என எப்போதாவது ஒரு கணம் எண்ணுவதுண்டு.

இப்போதே தமிழக வாக்குகள் பிரிந்த நிலையில் (சீமான், கமல், ராமதாஸ், விஜயகாந், தி.முக, அ.தி.மு.க வகையறாக்கள்) பா.ஜ.க ஆட்சி அமைப்பது என்பது கற்பனைக்கெட்டிய தூரம் வரை இல்லை. 

நீங்களும் கஜேந்திரனை (சைக்கிள்) நக்கலடித்தவர் அல்லது அதற்கு ஆதரவாக பச்சை குத்தியவர் என எண்ணுகிறேன். 

என்ன இருந்தாலும் காலமும் காட்சிகளும் மாறிய படி உள்ளதை அவதானிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

கொரனா வரப்போவதே யாருக்கும் தெரியவில்லை. இதற்குள் நீங்கள் வேறு. பீகாரை தமிழ் நாட்டுடன் ஒப்பிடவே முடியாது. மொத்தத்தில் வித்தியாசமான வாக்காளர்கள். தெற்கில் பா ஜா க காலடி வைப்பதற்கு மிகுந்த பிராயதனம் பண்ணுவது உண்மை. அதற்காக உங்கள் சமன்பாடு?  ************ அடிக்க பல்லு கொட்டியது  போல என எண்ணுகிறேன். 
இருந்தாலும் யாரின் கருத்தையும் குறைவாக எடை போடுவதில்லை. இவர் இப்படி சொல்லி இருந்தேரே என எப்போதாவது ஒரு கணம் எண்ணுவதுண்டு.

இப்போதே தமிழக வாக்குகள் பிரிந்த நிலையில் (சீமான், கமல், ராமதாஸ், விஜயகாந், தி.முக, அ.தி.மு.க வகையறாக்கள்) பா.ஜ.க ஆட்சி அமைப்பது என்பது கற்பனைக்கெட்டிய தூரம் வரை இல்லை. 

நீங்களும் கஜேந்திரனை (சைக்கிள்) நக்கலடித்தவர் அல்லது அதற்கு ஆதரவாக பச்சை குத்தியவர் என எண்ணுகிறேன். 

என்ன இருந்தாலும் காலமும் காட்சிகளும் மாறிய படி உள்ளதை அவதானிக்கிறேன்.

பீகாரை போல அல்ல தமிழக வாக்காளர் என்பது என்னவோ உண்மைதான். மேற்கு வங்க, கேரள, தமிழக வாக்காளர் ஏனைய இந்திய வாக்காளர் போல இல்லை. முன்னைய இரெண்டுக்கு கம்யூனிஸ்டுகளும் பின்னையதுக்கு பெரியாரும் காரணம்.

ஆனால் தமிழகத்தை விட முற்போக்கான மாநிலமாக கருதபட்ட மேற்கு வங்கத்திலே கூட இப்போ மம்தாவுக்கு அடுத்து பிஜேபிதான்.

2021 பிஜேபி தமிழகத்தில் களத்தில் இறங்கும் தேர்தல். மூன்று தேர்தலின் பின், பிஜேபி இரெண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகவருவதே திட்டம்.

சைக்கிள்காரர் - நக்கல் அடித்தவர்களில் நான் ஒருவந்தான். இன்றுவரை நான் நக்கல் அடித்ததை சரி என்றே அவர்கள் நிறுவியும் வருகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

Quote

சைக்கிள்காரர் - நக்கல் அடித்தவர்களில் நான் ஒருவந்தான். இன்றுவரை நான் நக்கல் அடித்ததை சரி என்றே அவர்கள் நிறுவியும் வருகிறார்கள்.

நீங்கள் புரட்டுவதில் வல்லவர் என்பதும் தெரியும். நீங்கள் நக்கல் அடித்தது அவர்கள் வரமாட்டார்கள் என்பதே. ஒத்து கொள்ளுங்க ராஜா ஒத்து கொள்ளுங்க.

நீங்கள் கஜேந்திரனின் இன்றைய பாராளுமன்ற உரையை   கேட்கவில்லை என நினைக்கிறேன். சிரிப்பதற்கு எவ்வளவோ  பேர் இன்று உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 21:09, குமாரசாமி said:

 

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

On 20/11/2020 at 16:13, nedukkalapoovan said:

இந்தச் செய்தி உண்மை என்றால்.. தாவீர் - கோலியாத் பலப்பரீட்சை தான். முயற்சி செய்வது வெற்றிகாக என்றாலும்.. முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்வது எவ்வளவோ மேல். 

 

On 20/11/2020 at 20:47, தமிழ் சிறி said:

Catwalk Proud GIF - Catwalk Proud Tamil GIFs

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

 

ஐயாமார்களே,

இந்தப் பழைய செய்தியை ஒருமுறை படித்தால் உண்மை நிலவரம் விளங்கும். 

டெபாசிட் கட்ட பணம் பாட்டி சொத்தில் இருந்துதானே வரும். புகையாகக் போகட்டும்😁

டெபாசிட் இழந்த பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்... சீமான், தமிழிசையும் தப்பவில்லை

Published: Friday, May 20, 2016, 10:42 [IST]
 

சென்னை: தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான்உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை.

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

spacer.png

 

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை.

பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-tamilisai-loss-deposit-254149.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

 

 

 

ஐயாமார்களே,

இந்தப் பழைய செய்தியை ஒருமுறை படித்தால் உண்மை நிலவரம் விளங்கும். 

டெபாசிட் கட்ட பணம் பாட்டி சொத்தில் இருந்துதானே வரும். புகையாகக் போகட்டும்😁

டெபாசிட் இழந்த பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்... சீமான், தமிழிசையும் தப்பவில்லை

Published: Friday, May 20, 2016, 10:42 [IST]
 

சென்னை: தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான்உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை.

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

spacer.png

 

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை.

பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-tamilisai-loss-deposit-254149.html

தங்கள் கையெழுத்திலேயே இதற்குப் பதில் உள்ளது..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

குறைந்தது ஒரு சவாலை.. அழுத்தத்தை.. கொடுப்பதும்.. மக்களுக்கு செய்ய வேண்டியதை சொல்லி இனங்காட்டுவதும்.. வெற்றிக்கு முயற்சிப்பதும்.. தவறே அல்ல. நாம் தமிழர் முயற்சிக்கட்டும்.. வெற்றி ஓர் நாள் கைகூடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.