Jump to content

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்

spacer.png

 

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

பிகாரில் தேஜஸ்வி யாதவுக்கு வந்த நிலை, தமிழகத்தில் திமுகவுக்கு வரக்கூடாது என்றால் காங்கிரஸை அது கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சீமான், அதிமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் பாஜகவைக் கழற்றிவிட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பாஜக நடத்தும் வேல் யாத்திரை மூலமாக நாம் தமிழருக்குத்தான் விளம்பரம் கிடைக்குமெனவும், பாஜகவுக்கு அல்ல எனவும் கூறியவர், 10 ஆண்டுகளாக தான் பேசிவரும் கொள்கைகளை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாகச் சாடினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து போட்டி என அறிவித்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் நின்ற சீமான் 12,000 வாக்குகளைப் பெற்றார். அக்கட்சி 1 சதவிகித வாக்குகளையும் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.

 

https://minnambalam.com/politics/2020/11/19/12/asselbly-election-contest-against-stalin-says-ntk-chief-seeman

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு என்பது விற்பனைப்பொருள். அங்கே நீதி,நியாயம்,மக்கள் நலன் எதுவும் கிடையாது. இப்படியான சூழ்நிலையில் சீமான் போன்ற தமிழின நலன்வாதிகளும்,சமூக நலவாதிகளும் வெல்வது கடினமானதுதான்.  என்னவொன்று கொளத்தூரில் ஒவ்வொரு வாக்கும் பலமடங்கு விலை உயரும்.
இருந்தாலும்...

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

கிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு என்பது விற்பனைப்பொருள். அங்கே நீதி,நியாயம்,மக்கள் நலன் எதுவும் கிடையாது. இப்படியான சூழ்நிலையில் சீமான் போன்ற தமிழின நலன்வாதிகளும்,சமூக நலவாதிகளும் வெல்வது கடினமானதுதான்.  என்னவொன்று கொளத்தூரில் ஒவ்வொரு வாக்கும் பலமடங்கு விலை உயரும்.
இருந்தாலும்...

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நானும் இதை பார்த்தனான்.ஆனாலும் ஆஆஆ வென்றிருக்கிற முதலைகளுக்கு ஏன் தீனி போடுவான் என்று விட்டுவிட்டேன்.
நீண்ட காலத்தின் பின் சீமானைப் பற்றிய செய்தி.இணைப்புக்கு நன்றி கிருபன்.
கிருபன் இணைத்தபடியால் அணையாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

Quote

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

பாஜக வானாலென்ன எதுவாயிருந்தாற்தானென்ன - தமிழ்த்தேசியம் பாக்கு நீரிணைக்கு வடக்கிலும் தெற்கிலும் நிலைபெற்றால் சரி.

 

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

காங்கிரஸ் என்றால் ஓகேயா....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

காங்கிரஸ் என்றால் ஓகேயா....?

அவருக்கு யார் வென்றாலும் கவலையில்லை, தமிழ் தேசியம் தோற்றால் சரி

1 hour ago, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

சும்மா வாயில் வந்ததை பதிந்தால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது, அழுதிடுவேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் இதை பார்த்தனான்.ஆனாலும் ஆஆஆ வென்றிருக்கிற முதலைகளுக்கு ஏன் தீனி போடுவான் என்று விட்டுவிட்டேன்.
நீண்ட காலத்தின் பின் சீமானைப் பற்றிய செய்தி.இணைப்புக்கு நன்றி கிருபன்.
கிருபன் இணைத்தபடியால் அணையாமல் இருக்கும்.

இல்லாத பொல்லாததை சொல்லுவார்கள். நிரூபிக்க சொல்லி கேட்டால் 3,4 நாட்களுக்கு வனவாசம் சென்று விடுவார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.

 

ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டால் வரவுள்ள  தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்வதோடு ஸ்டாலின் முதலமைச்சர் என்பதையும் ஒத்துக்கொள்வதாக அமையும்.😀

இது ஒரு அரசியல் தற்கொலை என்பதால் காரைக்குடிப் பக்கம் போய்விடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: சீமான் ஏன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!? 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் பாணியில் இப்போதே "இது அழாப்பும் தேர்தல்" என்று கு.சா சொல்லி விட்டார்! எனவே போட்டியிட்டு முகம் குப்புற விழுந்தாலும் மீசைக்கு காப்புறுதி வாங்கியாகி விட்டது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்.. தாவீர் - கோலியாத் பலப்பரீட்சை தான். முயற்சி செய்வது வெற்றிகாக என்றாலும்.. முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்வது எவ்வளவோ மேல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

ஸ்டாலினுக்கு கிடைக்கும் வாக்குக்களை பிரித்து தனது B ரீம் அதிமுகவை வெல்ல வைக்க பாஜகா தனது C ரீம் சீமானை போடடியிட வைக்க  யோசித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

கட்டுரையின் இறுதிப் பகுதியையும் தயை கூர்ந்து வாசிக்கவும்..

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Catwalk Proud GIF - Catwalk Proud Tamil GIFs

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

Link to comment
Share on other sites

இப்படி தான் கொஞ்ச வித்துவான்கள் சைக்கிள் சின்னத்துக்கு நக்கலடித்தவர்கள். அவர்கள் திரும்பவும்  எதிர்வு கூறுவதை நினைக்கும் போது ...அதுவும்  A ரீம் ,  Bரீம்  என கன்னை பிரித்தலை நினைக்கும் போது.......   🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011-ல் கருணாநிதி... 2021-ல் ஸ்டாலின் - கொளத்தூரில் போட்டியிடுகிறாரா சீமான்?#TNElection2021

ஸ்டாலின் - சீமான்

ஸ்டாலின் - சீமான்

சீமான், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே இறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது, இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஒரு போர்க்களக் காட்சி வரும். ஒருபுறம் ரீமாசென் தரப்பினர், துப்பாக்கி, பீரங்கி, ஹெலிகாப்டர் என நவீன ஆயுதங்களோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பக்கம் பார்த்திபன் தரப்பு, வில், அம்பு, கற்களை வைத்துக்கொண்டு சண்டையிடுவார்கள். ஒரு கட்டத்தில் ரீமா தரப்பின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பார்த்திபன் படையின் ஒருசிலரைத் தவிர்த்து அனைவரும் இரையாகிப் போவார்கள். ஒரு நான்கைந்து பேர் சூழ்ந்திருக்க, பார்த்திபன் கார்த்தியிடம், ``இந்தப் படைக்கலத்தின் பேர் என்ன, இதைப் பற்றி தாங்கள் முன்னமே விவரிக்கவில்லையே... அச்சபடுவோம் என்றா?'' என தனக்குப் பின்னால் இருப்பவர்களைப் பார்க்க, அனைவரும் உரக்கச் சிரிப்பார்கள். அதற்கு ஈடான ஒரு காட்சி நேற்று, தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
 
சீமான் செய்தியாளர் சந்திப்பு

விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பத்திரிகையாளர்கள், ''நீங்கள் சென்னையில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் ஸ்டாலின் வெற்றிபெற்ற கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாகச் சொல்கிறார்களே அது உண்மைதானா, போட்டியிடுவீர்களா?'' எனக் கேட்க, சீமான் திரும்பி, தன் தம்பிமார்களைப் பார்க்க அனைவரும் உரக்கச் சிரித்துவிட்டு, ``நிக்கனும்னு எல்லோரும் நினைக்கிறாங்க... நானும் நிக்கலாம்னு நினைக்கிறேன்...அத அப்புறம் யோசிப்போம்'' என பதில் தந்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிரமான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்தான், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதி குறித்து பேச்சு எழுந்துள்ளது.

 
 

2010-ம் ஆண்டே நாம் தமிழர் இயக்கத்திலிருந்து கட்சியாக மாறினாலும், அது முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டது 2016-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில்தான். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் சீமான். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட்டார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அவரின் சொந்த மாவட்டத்தில்தான் போட்டியிடமுடியும் என்கிற மரபை உடைப்பதற்காக வட தமிழகத்திலும், அதிலும் குறிப்பாக வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அடிக்கடி பாதிக்கப்படும் கடலூரில் சீமான் போட்டியிட முடிவெடுத்ததாகவும் அப்போது அந்தக் கட்சியினரால் விளக்கம் தரப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

ஒருபுறம் அ.தி.மு.கவின் அமைச்சர் எம்.சி.சம்பத், மறுபுறம் தி.மு.க-வின் மாநில மாணவரணிச் செயலாளர் புகழேந்தி, பா.ம.க சார்பில் ஒருவர், மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா சார்பில் ஒரு வேட்பாளர் என ஐந்து முனைப் போட்டி நிலவியது. அதனால் சீமானால் அங்கு வெறும் 12,497 வாக்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதனால், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், தென் மாவட்டத்தில், தன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டு. சிவகங்கையா, காரைக்குடியா என விவாதிக்கப்பட்டு பின் காரைக்குடி தொகுதிதான் என முடிவானது. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்த சர்வேயில் அந்தத் தொகுதியில் சீமானால் வெற்றிபெறுவது கடினம் என ரிசல்ட் வர, சென்னையில் ஒரு தொகுதியில் போட்ட்யிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது பத்திரிகையாளர்கள் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்களே எனக் கேட்க இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

 

2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பில், வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமியை விட வெறும், 2,819 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார் ஸ்டாலின். ஆனால், 2016 தேர்தலில் தன்னை எதிர்த்துப் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜே.சி.டி பிரபாகரை விட 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் ஸ்டாலின். அவருக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே கொளத்தூர் தொகுதி இருக்கிறது. இந்தநிலையில் சீமான் இங்கு போட்டியிடுவாரா?...நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

''2011-ம் வருடமே அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து, எங்கள் அண்ணனை நிற்க வைக்க பலர் முயற்சி செய்தார்கள் ஆனால், நாங்கள் தேர்தல் பாதைக்கு அப்போது வரவில்லை. எங்களுக்கு சரியான கட்டமைப்புகளும் அப்போது இல்லை. ஆனால், இப்போது அப்படி அல்ல, 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு கிளைகள் இருக்கின்றன. சென்னையில்தான் அண்ணன் போட்டியிடுகிறார்; அது உறுதி. ஆலந்தூர்தான் முடிவாகியிருந்தது. ஆனால், கொளத்தூரில் போட்டியிடலாம் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்'' என்றனர்.

ஸ்டாலின்
 
ஸ்டாலின்

சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்ட்யிட்டால் அது ஸ்டாலினின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா என தி.மு.க வட்டாரத்தில் பேச, ''அவர் நிற்பதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. கடலூரில் போட்டியிட்டு அவர் டெபாசிட் கூட வாங்கவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினராக எங்கள் தலைவர், கொளத்தூர் தொகுதியில் செய்திருக்கிற பணிகள் என்பது மகத்தானது. கொரோனாவுக்கு பின்பு மட்டும் அல்ல அதற்கு முன்பாகவே அவர் அங்கு சிறப்பான பல பணிகளைச் செய்திருக்கிறார். அதனால் எங்கள் தலைவருக்கான வாக்குகளைச் சீமானால் ஒன்றும் செய்யமுடியாது. எங்களுக்கான வாக்குகள் அப்படியே எங்களுக்குத்தான் விழும். எதிர்க்கட்சிகளுக்குப் போகிற வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார். அதனால் எங்கள் தலைவரின் வெற்றி வித்தியாசம் இன்னும் அதிகமாகும்'' என்கின்றனர் மிகுந்த உற்சாகமாக.

 

ஆனால், சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காண்பிப்பதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து, அரசியல் விமர்சகர்கள் பேசும்போது,``கன்ஷிராம் பாணியைத்தான் சீமான் கடைபிடிக்கிறார். ஸ்டாலினை மையமாக முன்வைத்தால் மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும் என நினைக்கிறார். தவிர, ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலமாக, திராவிடமா, தமிழ்த் தேசியமா என்கிற விவாதத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கலாம் என நினைக்கிறார். அந்த ஒரு தொகுதியில் மட்டுமல்லாது, 233 தொகுதியிலும் அதை விரிவுபடுத்துவார் தன்னுடைய பேச்சுத் திறமையால் கருத்தியல் ரீதியாக கடுமையான சவாலை ஸ்டாலினுக்கு ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார். கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஸ்டாலினுக்கு நான்தான் போட்டி என முன்வைத்து தன் கட்சியை வளர்க்கப் பார்க்கிறார் சீமான்'' என்கின்றனர்.

சீமான்
 
சீமான்

அதேவேளை, ``ஆன்டி பிஜேபி என்கிற அடிப்படையில், தி.மு.க-வும் நாம் தமிழரும் ஒரே கொள்கையைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். அப்படியிருக்கும்போது, ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் பா.ஜ.கவின் 'பி' டீம் என்கிற பெயர்தான் அவருக்கு ஏற்படும். தேர்தல் அரசியல், கருத்தியல் ரீதியான விவாதத்துக்கான களம் அல்ல. அதனால், அது மக்களிடம் பெரியளவில் எடுபடாது. ஆனால், சீமான் அங்கு போட்டியிட்டால் அவர் தி.மு.க-வுக்குச் செல்கின்ற வாக்குகளைத்தான் பிரிப்பார். ஆனாலும்,கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் வெற்றி உறுதியானது. அதில், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால், சீமான் மற்றவர்களின் வெற்றியைத் தடுப்பது குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு, தனக்கு ஆதரவான தொகுதி எது, எங்கு நின்றால் வெற்றி பெறலாம் என யோசிப்பதே அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது'' என்கிற கருத்துக்களும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஏறக்குறைய நாம் ஆரம்பத்தில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் காட்சியைப் போல, துணிவும் தைரியமும் இருந்தால் மட்டும் போதாது; போதிய வலிமையும் களத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கையில் எடுத்தால் மட்டுமே வெற்றியைப் பெறலாம் என்பதே போர்க்களமும் சரி தமிழகத் தேர்தல் களமும் சரி நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடமாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் அதைப் புரிந்துகொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/is-seeman-competing-kolathur-in-2021-election

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 15:56, Justin said:

ட்ரம்ப் பாணியில் இப்போதே "இது அழாப்பும் தேர்தல்" என்று கு.சா சொல்லி விட்டார்! எனவே போட்டியிட்டு முகம் குப்புற விழுந்தாலும் மீசைக்கு காப்புறுதி வாங்கியாகி விட்டது! 

நான் இந்திய/தமிழக பழைய தேர்தல் நிலவரங்களை வைத்து கருத்து எழுதினேன். தாங்கள் ஒரு குறுகிய எண்ணைச்சட்டிக்குள் நின்று எரிந்து பொரிந்திருக்கின்றீர்கள்.

தடைகளிலும் அழிவுகளிலும் சுகம் காண்பவர்களிடம் நல்ல எண்ணங்களை/ கருத்துக்களை எதிர்பார்ப்பதும் ஒரு வித முட்டாள்தனம்தான்.

இனிவரும் காலங்களில் தமிழக அன்றைய இன்றைய அரசியல் நிலவரங்கள் எப்படியானது என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். இல்லையேல் வரலாற்று ஆசிரியர்களை அணுகி பயில முயலுங்கள். எமக்கு இந்திய அரசியலை உங்களுக்கு அறிவுறுத்தும் அளவிற்கு நேரமில்லை. அத்துடன் நேரம் காலம் எல்லாம் எமக்கு பொன்னானது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 23:07, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

அமித்சா வருகையின் பின் அதிமுக-பிஜேபி கூட்டணி உறுதி. அநேகமாக 30-35 தொகுதிகளில் பிஜேபி கேட்க கூடும். 

பிஜேபிக்கு 5-10 சீட் கன்பெர்ம்?

திமுக நாயக்கர் (தெலுங்கு) சாதி கட்சியிலும், அதிமுக தேவர் சாதி கட்சியிலும் பிரபலமானவை.

திமுகவின் வாக்கு வங்கியில் தமிழ் ஆதரவு வாக்கை சீமானும், தெலுங்கு ஆதரவு வாக்கை திமுகவில் இருந்து பாஜாகவுக்கு இழுக்க பட்ட வி பி துரைசாமியும், ராதாரவி, தெலுங்கு சமிதி ஆட்கள் பிரிக்க. அதிமுக தோளில் சவாரி செய்தபடி பாஜக தாமரையை தமிழ்நாட்டில் மலரச்செய்ய வேண்டும்.

இதுதான் அமித் ஜி மாஸ்டர் பிளான்.

ஏற்கனவே பீகாரில் 4 முறை முதல்வராக இருந்த ஜாம்பவான் நிதீஷ் குமாருடன் கூட்டணி வைத்து, கூடாரத்து ஒட்டகமாகி, இன்று பிஜேபி அங்கே தனி பெரும் கட்சியாகி நிதீசை பொம்மை முதலவராக்கி, தனக்கு இரெண்டு துணை முதலவர்களையும் எடுத்துள்ளது பிஜேபி.

இதே கேம்பிளாந்தான் அதிமுகவுக்கும். இன்னும் இரெண்டு தேர்தலின் பின் தமிழ்நாட்டில் பிஜேபிதான் தனி பெரும் கட்சி. அவர்களின் ஜூனியர் பார்ட்னர் அதிமுக.

தேர்தலுக்கு முதலே பேசியபடி ஒப்பந்த பணத்தை  தெலுங்கு சமிதி ராதாரவி தரவளிகளும், சீமானும் அமித்சாவிடம் கறாராக வாங்கி விட வேண்டும். இல்லாட்டி ஜி நாமத்தை போட்டுவிட்டு போய்கிட்டே இருப்பார்.

On 20/11/2020 at 21:11, nunavilan said:

இப்படி தான் கொஞ்ச வித்துவான்கள் சைக்கிள் சின்னத்துக்கு நக்கலடித்தவர்கள். அவர்கள் திரும்பவும்  எதிர்வு கூறுவதை நினைக்கும் போது ...அதுவும்  A ரீம் ,  Bரீம்  என கன்னை பிரித்தலை நினைக்கும் போது.......   🙃

சைக்கிளளை பற்றி அப்போ சொன்ன நக்கல் இப்போதும் பொருந்தும். பாராளுமன்றில் நேரு சூட் போட்டு ஆங்கிலத்தில்  கதைப்பதை விட ஒரு ஆணியும் அவர்கள் புடுங்க போவதில்லை.

குறைந்த பட்சம் விக்கியுடன் சேர கூடமுடியா அளவுக்கு கஜனின் சுயமுனைப்பு எழும்பி ஆடுகிறது. மணியை கூட தக்கவைக்க முடியவில்லை. அம்பாறைக்கு போய் டீ பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு கஜேந்திரன் அந்த பக்கம் தலை கறுப்பும் இல்லை.

சுமந்திரன் சம்பந்தரின் கையாலாகதனம், விக்கி வாக்கை பிரித்தமையால் ஒரு எம்பி சீட்டும், 60 வாக்கு வித்தியாசத்தில் ஒரு தேசிய பட்டியல் சீட்டும் கிடைத்தது - இதை வைத்து அடுத்த 5 வருடம் கமெடி பண்ணுவார்கள். வேறு எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

Quote

இரெண்டு தேர்தலின் பின்

கொரனா வரப்போவதே யாருக்கும் தெரியவில்லை. இதற்குள் நீங்கள் வேறு. பீகாரை தமிழ் நாட்டுடன் ஒப்பிடவே முடியாது. மொத்தத்தில் வித்தியாசமான வாக்காளர்கள். தெற்கில் பா ஜா க காலடி வைப்பதற்கு மிகுந்த பிராயதனம் பண்ணுவது உண்மை. அதற்காக உங்கள் சமன்பாடு?  ************ அடிக்க பல்லு கொட்டியது  போல என எண்ணுகிறேன். 
இருந்தாலும் யாரின் கருத்தையும் குறைவாக எடை போடுவதில்லை. இவர் இப்படி சொல்லி இருந்தேரே என எப்போதாவது ஒரு கணம் எண்ணுவதுண்டு.

இப்போதே தமிழக வாக்குகள் பிரிந்த நிலையில் (சீமான், கமல், ராமதாஸ், விஜயகாந், தி.முக, அ.தி.மு.க வகையறாக்கள்) பா.ஜ.க ஆட்சி அமைப்பது என்பது கற்பனைக்கெட்டிய தூரம் வரை இல்லை. 

நீங்களும் கஜேந்திரனை (சைக்கிள்) நக்கலடித்தவர் அல்லது அதற்கு ஆதரவாக பச்சை குத்தியவர் என எண்ணுகிறேன். 

என்ன இருந்தாலும் காலமும் காட்சிகளும் மாறிய படி உள்ளதை அவதானிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

கொரனா வரப்போவதே யாருக்கும் தெரியவில்லை. இதற்குள் நீங்கள் வேறு. பீகாரை தமிழ் நாட்டுடன் ஒப்பிடவே முடியாது. மொத்தத்தில் வித்தியாசமான வாக்காளர்கள். தெற்கில் பா ஜா க காலடி வைப்பதற்கு மிகுந்த பிராயதனம் பண்ணுவது உண்மை. அதற்காக உங்கள் சமன்பாடு?  ************ அடிக்க பல்லு கொட்டியது  போல என எண்ணுகிறேன். 
இருந்தாலும் யாரின் கருத்தையும் குறைவாக எடை போடுவதில்லை. இவர் இப்படி சொல்லி இருந்தேரே என எப்போதாவது ஒரு கணம் எண்ணுவதுண்டு.

இப்போதே தமிழக வாக்குகள் பிரிந்த நிலையில் (சீமான், கமல், ராமதாஸ், விஜயகாந், தி.முக, அ.தி.மு.க வகையறாக்கள்) பா.ஜ.க ஆட்சி அமைப்பது என்பது கற்பனைக்கெட்டிய தூரம் வரை இல்லை. 

நீங்களும் கஜேந்திரனை (சைக்கிள்) நக்கலடித்தவர் அல்லது அதற்கு ஆதரவாக பச்சை குத்தியவர் என எண்ணுகிறேன். 

என்ன இருந்தாலும் காலமும் காட்சிகளும் மாறிய படி உள்ளதை அவதானிக்கிறேன்.

பீகாரை போல அல்ல தமிழக வாக்காளர் என்பது என்னவோ உண்மைதான். மேற்கு வங்க, கேரள, தமிழக வாக்காளர் ஏனைய இந்திய வாக்காளர் போல இல்லை. முன்னைய இரெண்டுக்கு கம்யூனிஸ்டுகளும் பின்னையதுக்கு பெரியாரும் காரணம்.

ஆனால் தமிழகத்தை விட முற்போக்கான மாநிலமாக கருதபட்ட மேற்கு வங்கத்திலே கூட இப்போ மம்தாவுக்கு அடுத்து பிஜேபிதான்.

2021 பிஜேபி தமிழகத்தில் களத்தில் இறங்கும் தேர்தல். மூன்று தேர்தலின் பின், பிஜேபி இரெண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகவருவதே திட்டம்.

சைக்கிள்காரர் - நக்கல் அடித்தவர்களில் நான் ஒருவந்தான். இன்றுவரை நான் நக்கல் அடித்ததை சரி என்றே அவர்கள் நிறுவியும் வருகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

Quote

சைக்கிள்காரர் - நக்கல் அடித்தவர்களில் நான் ஒருவந்தான். இன்றுவரை நான் நக்கல் அடித்ததை சரி என்றே அவர்கள் நிறுவியும் வருகிறார்கள்.

நீங்கள் புரட்டுவதில் வல்லவர் என்பதும் தெரியும். நீங்கள் நக்கல் அடித்தது அவர்கள் வரமாட்டார்கள் என்பதே. ஒத்து கொள்ளுங்க ராஜா ஒத்து கொள்ளுங்க.

நீங்கள் கஜேந்திரனின் இன்றைய பாராளுமன்ற உரையை   கேட்கவில்லை என நினைக்கிறேன். சிரிப்பதற்கு எவ்வளவோ  பேர் இன்று உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 21:09, குமாரசாமி said:

 

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

On 20/11/2020 at 16:13, nedukkalapoovan said:

இந்தச் செய்தி உண்மை என்றால்.. தாவீர் - கோலியாத் பலப்பரீட்சை தான். முயற்சி செய்வது வெற்றிகாக என்றாலும்.. முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்வது எவ்வளவோ மேல். 

 

On 20/11/2020 at 20:47, தமிழ் சிறி said:

Catwalk Proud GIF - Catwalk Proud Tamil GIFs

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

 

ஐயாமார்களே,

இந்தப் பழைய செய்தியை ஒருமுறை படித்தால் உண்மை நிலவரம் விளங்கும். 

டெபாசிட் கட்ட பணம் பாட்டி சொத்தில் இருந்துதானே வரும். புகையாகக் போகட்டும்😁

டெபாசிட் இழந்த பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்... சீமான், தமிழிசையும் தப்பவில்லை

Published: Friday, May 20, 2016, 10:42 [IST]
 

சென்னை: தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான்உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை.

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

spacer.png

 

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை.

பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-tamilisai-loss-deposit-254149.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

 

 

 

ஐயாமார்களே,

இந்தப் பழைய செய்தியை ஒருமுறை படித்தால் உண்மை நிலவரம் விளங்கும். 

டெபாசிட் கட்ட பணம் பாட்டி சொத்தில் இருந்துதானே வரும். புகையாகக் போகட்டும்😁

டெபாசிட் இழந்த பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்... சீமான், தமிழிசையும் தப்பவில்லை

Published: Friday, May 20, 2016, 10:42 [IST]
 

சென்னை: தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான்உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை.

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

spacer.png

 

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை.

பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-tamilisai-loss-deposit-254149.html

தங்கள் கையெழுத்திலேயே இதற்குப் பதில் உள்ளது..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

குறைந்தது ஒரு சவாலை.. அழுத்தத்தை.. கொடுப்பதும்.. மக்களுக்கு செய்ய வேண்டியதை சொல்லி இனங்காட்டுவதும்.. வெற்றிக்கு முயற்சிப்பதும்.. தவறே அல்ல. நாம் தமிழர் முயற்சிக்கட்டும்.. வெற்றி ஓர் நாள் கைகூடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.