Jump to content

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்

spacer.png

 

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

பிகாரில் தேஜஸ்வி யாதவுக்கு வந்த நிலை, தமிழகத்தில் திமுகவுக்கு வரக்கூடாது என்றால் காங்கிரஸை அது கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சீமான், அதிமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் பாஜகவைக் கழற்றிவிட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பாஜக நடத்தும் வேல் யாத்திரை மூலமாக நாம் தமிழருக்குத்தான் விளம்பரம் கிடைக்குமெனவும், பாஜகவுக்கு அல்ல எனவும் கூறியவர், 10 ஆண்டுகளாக தான் பேசிவரும் கொள்கைகளை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாகச் சாடினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து போட்டி என அறிவித்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் நின்ற சீமான் 12,000 வாக்குகளைப் பெற்றார். அக்கட்சி 1 சதவிகித வாக்குகளையும் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.

 

https://minnambalam.com/politics/2020/11/19/12/asselbly-election-contest-against-stalin-says-ntk-chief-seeman

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு என்பது விற்பனைப்பொருள். அங்கே நீதி,நியாயம்,மக்கள் நலன் எதுவும் கிடையாது. இப்படியான சூழ்நிலையில் சீமான் போன்ற தமிழின நலன்வாதிகளும்,சமூக நலவாதிகளும் வெல்வது கடினமானதுதான்.  என்னவொன்று கொளத்தூரில் ஒவ்வொரு வாக்கும் பலமடங்கு விலை உயரும்.
இருந்தாலும்...

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

கிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு என்பது விற்பனைப்பொருள். அங்கே நீதி,நியாயம்,மக்கள் நலன் எதுவும் கிடையாது. இப்படியான சூழ்நிலையில் சீமான் போன்ற தமிழின நலன்வாதிகளும்,சமூக நலவாதிகளும் வெல்வது கடினமானதுதான்.  என்னவொன்று கொளத்தூரில் ஒவ்வொரு வாக்கும் பலமடங்கு விலை உயரும்.
இருந்தாலும்...

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நானும் இதை பார்த்தனான்.ஆனாலும் ஆஆஆ வென்றிருக்கிற முதலைகளுக்கு ஏன் தீனி போடுவான் என்று விட்டுவிட்டேன்.
நீண்ட காலத்தின் பின் சீமானைப் பற்றிய செய்தி.இணைப்புக்கு நன்றி கிருபன்.
கிருபன் இணைத்தபடியால் அணையாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

Quote

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

பாஜக வானாலென்ன எதுவாயிருந்தாற்தானென்ன - தமிழ்த்தேசியம் பாக்கு நீரிணைக்கு வடக்கிலும் தெற்கிலும் நிலைபெற்றால் சரி.

 

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

காங்கிரஸ் என்றால் ஓகேயா....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

காங்கிரஸ் என்றால் ஓகேயா....?

அவருக்கு யார் வென்றாலும் கவலையில்லை, தமிழ் தேசியம் தோற்றால் சரி

1 hour ago, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

சும்மா வாயில் வந்ததை பதிந்தால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கப்படாது, அழுதிடுவேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் இதை பார்த்தனான்.ஆனாலும் ஆஆஆ வென்றிருக்கிற முதலைகளுக்கு ஏன் தீனி போடுவான் என்று விட்டுவிட்டேன்.
நீண்ட காலத்தின் பின் சீமானைப் பற்றிய செய்தி.இணைப்புக்கு நன்றி கிருபன்.
கிருபன் இணைத்தபடியால் அணையாமல் இருக்கும்.

இல்லாத பொல்லாததை சொல்லுவார்கள். நிரூபிக்க சொல்லி கேட்டால் 3,4 நாட்களுக்கு வனவாசம் சென்று விடுவார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

தமிழகத்தில் வழக்கமாகத் தேர்தலில் இரண்டு தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதில்லை. எனினும், சிரித்துக்கொண்டே சொன்னதைப் பார்த்தால் இது சீமானின் இறுதி முடிவும் அல்ல என்பது தெரிகிறது.

 

ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டால் வரவுள்ள  தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்வதோடு ஸ்டாலின் முதலமைச்சர் என்பதையும் ஒத்துக்கொள்வதாக அமையும்.😀

இது ஒரு அரசியல் தற்கொலை என்பதால் காரைக்குடிப் பக்கம் போய்விடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: சீமான் ஏன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!? 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் பாணியில் இப்போதே "இது அழாப்பும் தேர்தல்" என்று கு.சா சொல்லி விட்டார்! எனவே போட்டியிட்டு முகம் குப்புற விழுந்தாலும் மீசைக்கு காப்புறுதி வாங்கியாகி விட்டது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்.. தாவீர் - கோலியாத் பலப்பரீட்சை தான். முயற்சி செய்வது வெற்றிகாக என்றாலும்.. முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்வது எவ்வளவோ மேல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

ஸ்டாலினுக்கு கிடைக்கும் வாக்குக்களை பிரித்து தனது B ரீம் அதிமுகவை வெல்ல வைக்க பாஜகா தனது C ரீம் சீமானை போடடியிட வைக்க  யோசித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, zuma said:

 

சீமான்  பாஜகாவின் C  டீம் என, மீண்டும் நிறுவியுள்ளார். 

கட்டுரையின் இறுதிப் பகுதியையும் தயை கூர்ந்து வாசிக்கவும்..

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Catwalk Proud GIF - Catwalk Proud Tamil GIFs

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

Link to comment
Share on other sites

இப்படி தான் கொஞ்ச வித்துவான்கள் சைக்கிள் சின்னத்துக்கு நக்கலடித்தவர்கள். அவர்கள் திரும்பவும்  எதிர்வு கூறுவதை நினைக்கும் போது ...அதுவும்  A ரீம் ,  Bரீம்  என கன்னை பிரித்தலை நினைக்கும் போது.......   🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011-ல் கருணாநிதி... 2021-ல் ஸ்டாலின் - கொளத்தூரில் போட்டியிடுகிறாரா சீமான்?#TNElection2021

ஸ்டாலின் - சீமான்

ஸ்டாலின் - சீமான்

சீமான், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே இறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது, இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஒரு போர்க்களக் காட்சி வரும். ஒருபுறம் ரீமாசென் தரப்பினர், துப்பாக்கி, பீரங்கி, ஹெலிகாப்டர் என நவீன ஆயுதங்களோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பக்கம் பார்த்திபன் தரப்பு, வில், அம்பு, கற்களை வைத்துக்கொண்டு சண்டையிடுவார்கள். ஒரு கட்டத்தில் ரீமா தரப்பின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பார்த்திபன் படையின் ஒருசிலரைத் தவிர்த்து அனைவரும் இரையாகிப் போவார்கள். ஒரு நான்கைந்து பேர் சூழ்ந்திருக்க, பார்த்திபன் கார்த்தியிடம், ``இந்தப் படைக்கலத்தின் பேர் என்ன, இதைப் பற்றி தாங்கள் முன்னமே விவரிக்கவில்லையே... அச்சபடுவோம் என்றா?'' என தனக்குப் பின்னால் இருப்பவர்களைப் பார்க்க, அனைவரும் உரக்கச் சிரிப்பார்கள். அதற்கு ஈடான ஒரு காட்சி நேற்று, தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
 
சீமான் செய்தியாளர் சந்திப்பு

விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பத்திரிகையாளர்கள், ''நீங்கள் சென்னையில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் ஸ்டாலின் வெற்றிபெற்ற கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாகச் சொல்கிறார்களே அது உண்மைதானா, போட்டியிடுவீர்களா?'' எனக் கேட்க, சீமான் திரும்பி, தன் தம்பிமார்களைப் பார்க்க அனைவரும் உரக்கச் சிரித்துவிட்டு, ``நிக்கனும்னு எல்லோரும் நினைக்கிறாங்க... நானும் நிக்கலாம்னு நினைக்கிறேன்...அத அப்புறம் யோசிப்போம்'' என பதில் தந்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிரமான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்தான், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதி குறித்து பேச்சு எழுந்துள்ளது.

 
 

2010-ம் ஆண்டே நாம் தமிழர் இயக்கத்திலிருந்து கட்சியாக மாறினாலும், அது முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டது 2016-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில்தான். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் சீமான். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட்டார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அவரின் சொந்த மாவட்டத்தில்தான் போட்டியிடமுடியும் என்கிற மரபை உடைப்பதற்காக வட தமிழகத்திலும், அதிலும் குறிப்பாக வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அடிக்கடி பாதிக்கப்படும் கடலூரில் சீமான் போட்டியிட முடிவெடுத்ததாகவும் அப்போது அந்தக் கட்சியினரால் விளக்கம் தரப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
 
நாம் தமிழர் கட்சி

ஒருபுறம் அ.தி.மு.கவின் அமைச்சர் எம்.சி.சம்பத், மறுபுறம் தி.மு.க-வின் மாநில மாணவரணிச் செயலாளர் புகழேந்தி, பா.ம.க சார்பில் ஒருவர், மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா சார்பில் ஒரு வேட்பாளர் என ஐந்து முனைப் போட்டி நிலவியது. அதனால் சீமானால் அங்கு வெறும் 12,497 வாக்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதனால், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், தென் மாவட்டத்தில், தன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டு. சிவகங்கையா, காரைக்குடியா என விவாதிக்கப்பட்டு பின் காரைக்குடி தொகுதிதான் என முடிவானது. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்த சர்வேயில் அந்தத் தொகுதியில் சீமானால் வெற்றிபெறுவது கடினம் என ரிசல்ட் வர, சென்னையில் ஒரு தொகுதியில் போட்ட்யிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது பத்திரிகையாளர்கள் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்களே எனக் கேட்க இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

 

2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பில், வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமியை விட வெறும், 2,819 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார் ஸ்டாலின். ஆனால், 2016 தேர்தலில் தன்னை எதிர்த்துப் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜே.சி.டி பிரபாகரை விட 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் ஸ்டாலின். அவருக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே கொளத்தூர் தொகுதி இருக்கிறது. இந்தநிலையில் சீமான் இங்கு போட்டியிடுவாரா?...நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

''2011-ம் வருடமே அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து, எங்கள் அண்ணனை நிற்க வைக்க பலர் முயற்சி செய்தார்கள் ஆனால், நாங்கள் தேர்தல் பாதைக்கு அப்போது வரவில்லை. எங்களுக்கு சரியான கட்டமைப்புகளும் அப்போது இல்லை. ஆனால், இப்போது அப்படி அல்ல, 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு கிளைகள் இருக்கின்றன. சென்னையில்தான் அண்ணன் போட்டியிடுகிறார்; அது உறுதி. ஆலந்தூர்தான் முடிவாகியிருந்தது. ஆனால், கொளத்தூரில் போட்டியிடலாம் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்'' என்றனர்.

ஸ்டாலின்
 
ஸ்டாலின்

சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்ட்யிட்டால் அது ஸ்டாலினின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா என தி.மு.க வட்டாரத்தில் பேச, ''அவர் நிற்பதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. கடலூரில் போட்டியிட்டு அவர் டெபாசிட் கூட வாங்கவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினராக எங்கள் தலைவர், கொளத்தூர் தொகுதியில் செய்திருக்கிற பணிகள் என்பது மகத்தானது. கொரோனாவுக்கு பின்பு மட்டும் அல்ல அதற்கு முன்பாகவே அவர் அங்கு சிறப்பான பல பணிகளைச் செய்திருக்கிறார். அதனால் எங்கள் தலைவருக்கான வாக்குகளைச் சீமானால் ஒன்றும் செய்யமுடியாது. எங்களுக்கான வாக்குகள் அப்படியே எங்களுக்குத்தான் விழும். எதிர்க்கட்சிகளுக்குப் போகிற வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார். அதனால் எங்கள் தலைவரின் வெற்றி வித்தியாசம் இன்னும் அதிகமாகும்'' என்கின்றனர் மிகுந்த உற்சாகமாக.

 

ஆனால், சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காண்பிப்பதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து, அரசியல் விமர்சகர்கள் பேசும்போது,``கன்ஷிராம் பாணியைத்தான் சீமான் கடைபிடிக்கிறார். ஸ்டாலினை மையமாக முன்வைத்தால் மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும் என நினைக்கிறார். தவிர, ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலமாக, திராவிடமா, தமிழ்த் தேசியமா என்கிற விவாதத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கலாம் என நினைக்கிறார். அந்த ஒரு தொகுதியில் மட்டுமல்லாது, 233 தொகுதியிலும் அதை விரிவுபடுத்துவார் தன்னுடைய பேச்சுத் திறமையால் கருத்தியல் ரீதியாக கடுமையான சவாலை ஸ்டாலினுக்கு ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார். கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஸ்டாலினுக்கு நான்தான் போட்டி என முன்வைத்து தன் கட்சியை வளர்க்கப் பார்க்கிறார் சீமான்'' என்கின்றனர்.

சீமான்
 
சீமான்

அதேவேளை, ``ஆன்டி பிஜேபி என்கிற அடிப்படையில், தி.மு.க-வும் நாம் தமிழரும் ஒரே கொள்கையைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். அப்படியிருக்கும்போது, ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் பா.ஜ.கவின் 'பி' டீம் என்கிற பெயர்தான் அவருக்கு ஏற்படும். தேர்தல் அரசியல், கருத்தியல் ரீதியான விவாதத்துக்கான களம் அல்ல. அதனால், அது மக்களிடம் பெரியளவில் எடுபடாது. ஆனால், சீமான் அங்கு போட்டியிட்டால் அவர் தி.மு.க-வுக்குச் செல்கின்ற வாக்குகளைத்தான் பிரிப்பார். ஆனாலும்,கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் வெற்றி உறுதியானது. அதில், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால், சீமான் மற்றவர்களின் வெற்றியைத் தடுப்பது குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு, தனக்கு ஆதரவான தொகுதி எது, எங்கு நின்றால் வெற்றி பெறலாம் என யோசிப்பதே அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது'' என்கிற கருத்துக்களும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஏறக்குறைய நாம் ஆரம்பத்தில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் காட்சியைப் போல, துணிவும் தைரியமும் இருந்தால் மட்டும் போதாது; போதிய வலிமையும் களத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கையில் எடுத்தால் மட்டுமே வெற்றியைப் பெறலாம் என்பதே போர்க்களமும் சரி தமிழகத் தேர்தல் களமும் சரி நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடமாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் அதைப் புரிந்துகொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/is-seeman-competing-kolathur-in-2021-election

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 15:56, Justin said:

ட்ரம்ப் பாணியில் இப்போதே "இது அழாப்பும் தேர்தல்" என்று கு.சா சொல்லி விட்டார்! எனவே போட்டியிட்டு முகம் குப்புற விழுந்தாலும் மீசைக்கு காப்புறுதி வாங்கியாகி விட்டது! 

நான் இந்திய/தமிழக பழைய தேர்தல் நிலவரங்களை வைத்து கருத்து எழுதினேன். தாங்கள் ஒரு குறுகிய எண்ணைச்சட்டிக்குள் நின்று எரிந்து பொரிந்திருக்கின்றீர்கள்.

தடைகளிலும் அழிவுகளிலும் சுகம் காண்பவர்களிடம் நல்ல எண்ணங்களை/ கருத்துக்களை எதிர்பார்ப்பதும் ஒரு வித முட்டாள்தனம்தான்.

இனிவரும் காலங்களில் தமிழக அன்றைய இன்றைய அரசியல் நிலவரங்கள் எப்படியானது என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். இல்லையேல் வரலாற்று ஆசிரியர்களை அணுகி பயில முயலுங்கள். எமக்கு இந்திய அரசியலை உங்களுக்கு அறிவுறுத்தும் அளவிற்கு நேரமில்லை. அத்துடன் நேரம் காலம் எல்லாம் எமக்கு பொன்னானது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 23:07, nunavilan said:

எப்படி என விளங்கப்படுத்தவும்??

 

அமித்சா வருகையின் பின் அதிமுக-பிஜேபி கூட்டணி உறுதி. அநேகமாக 30-35 தொகுதிகளில் பிஜேபி கேட்க கூடும். 

பிஜேபிக்கு 5-10 சீட் கன்பெர்ம்?

திமுக நாயக்கர் (தெலுங்கு) சாதி கட்சியிலும், அதிமுக தேவர் சாதி கட்சியிலும் பிரபலமானவை.

திமுகவின் வாக்கு வங்கியில் தமிழ் ஆதரவு வாக்கை சீமானும், தெலுங்கு ஆதரவு வாக்கை திமுகவில் இருந்து பாஜாகவுக்கு இழுக்க பட்ட வி பி துரைசாமியும், ராதாரவி, தெலுங்கு சமிதி ஆட்கள் பிரிக்க. அதிமுக தோளில் சவாரி செய்தபடி பாஜக தாமரையை தமிழ்நாட்டில் மலரச்செய்ய வேண்டும்.

இதுதான் அமித் ஜி மாஸ்டர் பிளான்.

ஏற்கனவே பீகாரில் 4 முறை முதல்வராக இருந்த ஜாம்பவான் நிதீஷ் குமாருடன் கூட்டணி வைத்து, கூடாரத்து ஒட்டகமாகி, இன்று பிஜேபி அங்கே தனி பெரும் கட்சியாகி நிதீசை பொம்மை முதலவராக்கி, தனக்கு இரெண்டு துணை முதலவர்களையும் எடுத்துள்ளது பிஜேபி.

இதே கேம்பிளாந்தான் அதிமுகவுக்கும். இன்னும் இரெண்டு தேர்தலின் பின் தமிழ்நாட்டில் பிஜேபிதான் தனி பெரும் கட்சி. அவர்களின் ஜூனியர் பார்ட்னர் அதிமுக.

தேர்தலுக்கு முதலே பேசியபடி ஒப்பந்த பணத்தை  தெலுங்கு சமிதி ராதாரவி தரவளிகளும், சீமானும் அமித்சாவிடம் கறாராக வாங்கி விட வேண்டும். இல்லாட்டி ஜி நாமத்தை போட்டுவிட்டு போய்கிட்டே இருப்பார்.

On 20/11/2020 at 21:11, nunavilan said:

இப்படி தான் கொஞ்ச வித்துவான்கள் சைக்கிள் சின்னத்துக்கு நக்கலடித்தவர்கள். அவர்கள் திரும்பவும்  எதிர்வு கூறுவதை நினைக்கும் போது ...அதுவும்  A ரீம் ,  Bரீம்  என கன்னை பிரித்தலை நினைக்கும் போது.......   🙃

சைக்கிளளை பற்றி அப்போ சொன்ன நக்கல் இப்போதும் பொருந்தும். பாராளுமன்றில் நேரு சூட் போட்டு ஆங்கிலத்தில்  கதைப்பதை விட ஒரு ஆணியும் அவர்கள் புடுங்க போவதில்லை.

குறைந்த பட்சம் விக்கியுடன் சேர கூடமுடியா அளவுக்கு கஜனின் சுயமுனைப்பு எழும்பி ஆடுகிறது. மணியை கூட தக்கவைக்க முடியவில்லை. அம்பாறைக்கு போய் டீ பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு கஜேந்திரன் அந்த பக்கம் தலை கறுப்பும் இல்லை.

சுமந்திரன் சம்பந்தரின் கையாலாகதனம், விக்கி வாக்கை பிரித்தமையால் ஒரு எம்பி சீட்டும், 60 வாக்கு வித்தியாசத்தில் ஒரு தேசிய பட்டியல் சீட்டும் கிடைத்தது - இதை வைத்து அடுத்த 5 வருடம் கமெடி பண்ணுவார்கள். வேறு எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

Quote

இரெண்டு தேர்தலின் பின்

கொரனா வரப்போவதே யாருக்கும் தெரியவில்லை. இதற்குள் நீங்கள் வேறு. பீகாரை தமிழ் நாட்டுடன் ஒப்பிடவே முடியாது. மொத்தத்தில் வித்தியாசமான வாக்காளர்கள். தெற்கில் பா ஜா க காலடி வைப்பதற்கு மிகுந்த பிராயதனம் பண்ணுவது உண்மை. அதற்காக உங்கள் சமன்பாடு?  ************ அடிக்க பல்லு கொட்டியது  போல என எண்ணுகிறேன். 
இருந்தாலும் யாரின் கருத்தையும் குறைவாக எடை போடுவதில்லை. இவர் இப்படி சொல்லி இருந்தேரே என எப்போதாவது ஒரு கணம் எண்ணுவதுண்டு.

இப்போதே தமிழக வாக்குகள் பிரிந்த நிலையில் (சீமான், கமல், ராமதாஸ், விஜயகாந், தி.முக, அ.தி.மு.க வகையறாக்கள்) பா.ஜ.க ஆட்சி அமைப்பது என்பது கற்பனைக்கெட்டிய தூரம் வரை இல்லை. 

நீங்களும் கஜேந்திரனை (சைக்கிள்) நக்கலடித்தவர் அல்லது அதற்கு ஆதரவாக பச்சை குத்தியவர் என எண்ணுகிறேன். 

என்ன இருந்தாலும் காலமும் காட்சிகளும் மாறிய படி உள்ளதை அவதானிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

கொரனா வரப்போவதே யாருக்கும் தெரியவில்லை. இதற்குள் நீங்கள் வேறு. பீகாரை தமிழ் நாட்டுடன் ஒப்பிடவே முடியாது. மொத்தத்தில் வித்தியாசமான வாக்காளர்கள். தெற்கில் பா ஜா க காலடி வைப்பதற்கு மிகுந்த பிராயதனம் பண்ணுவது உண்மை. அதற்காக உங்கள் சமன்பாடு?  ************ அடிக்க பல்லு கொட்டியது  போல என எண்ணுகிறேன். 
இருந்தாலும் யாரின் கருத்தையும் குறைவாக எடை போடுவதில்லை. இவர் இப்படி சொல்லி இருந்தேரே என எப்போதாவது ஒரு கணம் எண்ணுவதுண்டு.

இப்போதே தமிழக வாக்குகள் பிரிந்த நிலையில் (சீமான், கமல், ராமதாஸ், விஜயகாந், தி.முக, அ.தி.மு.க வகையறாக்கள்) பா.ஜ.க ஆட்சி அமைப்பது என்பது கற்பனைக்கெட்டிய தூரம் வரை இல்லை. 

நீங்களும் கஜேந்திரனை (சைக்கிள்) நக்கலடித்தவர் அல்லது அதற்கு ஆதரவாக பச்சை குத்தியவர் என எண்ணுகிறேன். 

என்ன இருந்தாலும் காலமும் காட்சிகளும் மாறிய படி உள்ளதை அவதானிக்கிறேன்.

பீகாரை போல அல்ல தமிழக வாக்காளர் என்பது என்னவோ உண்மைதான். மேற்கு வங்க, கேரள, தமிழக வாக்காளர் ஏனைய இந்திய வாக்காளர் போல இல்லை. முன்னைய இரெண்டுக்கு கம்யூனிஸ்டுகளும் பின்னையதுக்கு பெரியாரும் காரணம்.

ஆனால் தமிழகத்தை விட முற்போக்கான மாநிலமாக கருதபட்ட மேற்கு வங்கத்திலே கூட இப்போ மம்தாவுக்கு அடுத்து பிஜேபிதான்.

2021 பிஜேபி தமிழகத்தில் களத்தில் இறங்கும் தேர்தல். மூன்று தேர்தலின் பின், பிஜேபி இரெண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகவருவதே திட்டம்.

சைக்கிள்காரர் - நக்கல் அடித்தவர்களில் நான் ஒருவந்தான். இன்றுவரை நான் நக்கல் அடித்ததை சரி என்றே அவர்கள் நிறுவியும் வருகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

Quote

சைக்கிள்காரர் - நக்கல் அடித்தவர்களில் நான் ஒருவந்தான். இன்றுவரை நான் நக்கல் அடித்ததை சரி என்றே அவர்கள் நிறுவியும் வருகிறார்கள்.

நீங்கள் புரட்டுவதில் வல்லவர் என்பதும் தெரியும். நீங்கள் நக்கல் அடித்தது அவர்கள் வரமாட்டார்கள் என்பதே. ஒத்து கொள்ளுங்க ராஜா ஒத்து கொள்ளுங்க.

நீங்கள் கஜேந்திரனின் இன்றைய பாராளுமன்ற உரையை   கேட்கவில்லை என நினைக்கிறேன். சிரிப்பதற்கு எவ்வளவோ  பேர் இன்று உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 21:09, குமாரசாமி said:

 

சீமான் வெற்றி பெற நானும் என நண்பர்கள் சார்பிலும் தமிழ் நலன் விரும்பிகள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

On 20/11/2020 at 16:13, nedukkalapoovan said:

இந்தச் செய்தி உண்மை என்றால்.. தாவீர் - கோலியாத் பலப்பரீட்சை தான். முயற்சி செய்வது வெற்றிகாக என்றாலும்.. முயற்சி செய்யாமல் இருப்பதை விட முயற்சி செய்வது எவ்வளவோ மேல். 

 

On 20/11/2020 at 20:47, தமிழ் சிறி said:

Catwalk Proud GIF - Catwalk Proud Tamil GIFs

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

 

ஐயாமார்களே,

இந்தப் பழைய செய்தியை ஒருமுறை படித்தால் உண்மை நிலவரம் விளங்கும். 

டெபாசிட் கட்ட பணம் பாட்டி சொத்தில் இருந்துதானே வரும். புகையாகக் போகட்டும்😁

டெபாசிட் இழந்த பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்... சீமான், தமிழிசையும் தப்பவில்லை

Published: Friday, May 20, 2016, 10:42 [IST]
 

சென்னை: தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான்உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை.

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

spacer.png

 

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை.

பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-tamilisai-loss-deposit-254149.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

 

 

 

ஐயாமார்களே,

இந்தப் பழைய செய்தியை ஒருமுறை படித்தால் உண்மை நிலவரம் விளங்கும். 

டெபாசிட் கட்ட பணம் பாட்டி சொத்தில் இருந்துதானே வரும். புகையாகக் போகட்டும்😁

டெபாசிட் இழந்த பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்... சீமான், தமிழிசையும் தப்பவில்லை

Published: Friday, May 20, 2016, 10:42 [IST]
 

சென்னை: தமிழக சட்டசபை 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சீமான்உட்பட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இதேபோல சட்டசபை தேர்தலில் தனி அணியாக களமிறங்கிய பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இதில் தப்பவில்லை.

ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். முதன்முறையாக இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் மொத்தம் 4, 58,104 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. மொத்தம் 1.1% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி

spacer.png

 

நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்த தொகுதியில் அவர் 12,497 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை இழந்தார்.

இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 157 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் குமரி, கோவை மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பாஜக வேட்பாளர்கள் பெறவில்லை.

பாஜக இந்த தேர்தலில் மொத்தம் 12,28, 692 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 2.8% ஆகும்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-tamilisai-loss-deposit-254149.html

தங்கள் கையெழுத்திலேயே இதற்குப் பதில் உள்ளது..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

குறைந்தது ஒரு சவாலை.. அழுத்தத்தை.. கொடுப்பதும்.. மக்களுக்கு செய்ய வேண்டியதை சொல்லி இனங்காட்டுவதும்.. வெற்றிக்கு முயற்சிப்பதும்.. தவறே அல்ல. நாம் தமிழர் முயற்சிக்கட்டும்.. வெற்றி ஓர் நாள் கைகூடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.