Jump to content

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா

breaking

இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும்
பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களும்; உங்கள் வீடுகளில் இருந்து இணைந்து மாவீர தெய்வங்களுக்கான வணக்கத்தினை செய்யும் புகைப் படத்தினை tccukinfo@gmail.com எனும் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் நேரலையில் உங்களையும் இணைத்துக்கொண்டு நாம் என்றென்றும் அவர்கள் வழி நடப்போம் என்ற உறுதியையும் உலகிற்கு எடுத்துரைப்போம்.
அன்பான உறவுகளே வழமையாக நாங்கள் மண்டபத்தில் வணக்கத்திற்கு வைக்கப்படும் அனைத்து மாவீரர் திருவுருவப் படங்களும் அன்றைய தினம் வைக்கப்படும். அத்துடன் உங்கள் உறவுகளின் படங்கள் இன்னும் வைக்கப்படாமல் இருப்பின் நீங்கள் கீழ்காணும் மின்னஞ்சலுக்கு 21-11-20 முன்னர் மாவீரரின் திருவுருவப் படத்தினை அனுப்பி வைத்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
– நன்றி –
மாவீரர் பணிமனை – பிரித்தானியா
eelam27uk@gmail.com
020 3371 9313 / 0796882208

 

https://www.thaarakam.com/news/5388e808-e79d-4228-8bf2-d7747eeb986d

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.