Jump to content

கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்

கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்

பெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள்.

இன்னொரு வகை ஆத்திரக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க! நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்துவார்கள். அதை கேட்டு பெண்கள் ஆத்திரப்படக்கூடாது. சிரித்துக்கொண்டே கவனமாக கடந்துபோய்விடவேண்டும் அவ்வளவுதான். ஏன்என்றால் இப்படி பேசும் ஆண்கள் பெரும் பாலும் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

 
பெண்களால் இயக்கிச்செல்லப்படும் கார்களை ‘ஓவர் டேக்’ செய்வது, சிக்னலே போடாமல் வண்டியைத் திருப்புவது, திடீரென்று அதிர்ச்சியான சத்தத்தை எழுப்பி அவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். அவை அனைத்தும் சட்டவிரோதமானவை. இது பெண்களை தடுமாறச் செய்து அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

கார் ஓட்டும்போது மெல்லிய இசையைக் கேட்பது நல்லதுதான். அது கார் ஓட்டுவதை சுகமான அனுபவமாக்கும். ஆனால் அளவுக்கதிகமான சத்தத்தில் இசையை ஒலிக்கவைத்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது போக்குவரத்தை பாதிக்கச் செய்யும் செயல்.

உலகம் முழுக்க பெண்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே கார் ஓட்டும் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படவும் செய்கிறார்கள். உலகம் முழுக்க இது பற்றிய புகார்கள் இருப்பதால், சர்வதேச அளவில் இது தொடர்பான ஆய்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

ஜேக் பரூத் என்பவர் வாகனத்துறை சார்ந்த பத்திரிகையாளர். அமெரிக்காவை சேர்ந்த இவர் வாகன ஆராய்ச்சியாளராகவும் செயல்படுபவர். ஜேக் பரூத், ‘கார் ஓட்டும் பெண்களுக்கு, ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற கோணத்தில் ஆய்வு செய்து, தான் திரட்டிய தகவல்களை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பினார்.

ஜேக் பரூத் நடுத்தர வயது ஆண். இவர் கள ஆய்வுக்காக தன்னை பெண்போன்று மாற்றிக்கொண்டார். பெண்ணாக தோன்றினால்தான் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை உணரமுடியும் என்று அவர் கருதினார். மீசையை மழித்தார். கூந்தல் அலங்காரம் செய்துகொண் டார். பின்னால் இருந்தோ, ஓரத்தில் இருந்தோ பார்த்தால் பெண் போலவே காணப்பட்டார்.

பெண் தோற்றத்திலேயே காரை ஓட்டிக்கொண்டு சாலைகளில் வலம் வந்தார். அப்போது அவரை பெண்ணாக நினைத்துக்கொண்டு பல ஆண்கள் சேட்டை செய்திருக்கிறார்கள். இறுதியில் அவர் ஆண் என்பது தெரிந்ததும் அதிர்ந்து போய் நழுவிச்சென்றிருக்கிறார்கள்.

பெண் தோற்றத்தில் இருந்ததால் ஜேக்கிற்கு கசப்பான அனுபவங்கள் நிறைய கிடைத்திருக்கின்றன. பலர் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ஓவர்டேக் செய்திருக்கிறார்கள். மோதுவதுபோல் காரை அருகில் ஓட்டிச்சென்று பயப்படவைத்திருக்கிறார்கள். தகாதவார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அவரை வெறுப்பேற்றும் விதமாக சாலை விதிகளை மீறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.

அப்படி நடந்துகொண்ட பலரது கார் எண்களை சேகரித்து ஆதாரத்தோடு காவல் துறையில் புகார் செய்தார், ஜேக். விசாரிக்கப்பட்டு அவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

தன்னுடைய நீண்ட கூந்தலை பறக்கவிட்டபடி நியூயார்க் நகரில் கார் ஓட்டிய அவரை பலரும் பெண் என்று நினைத்து வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்டது சுவாரசியமான சம்பவம். காரை பார்க்கிங் செய்ய உதவி செய்வதும், கார் கதவை திறந்து விடுவதும், சிக்னலில் கமெண்ட் அடிப்பதுமாக இருந்த ஆண்கள் அவர் ஆண் என்று தெரிந்ததும் அசடு வழிந்திருக்கிறார்கள். அது ஜேக்கிற்கு வேடிக்கையான அனுபவமாக இருந்திருக்கிறது. இதை எல்லாம் ருசிகரமாக விவரிக்கும் ஜேக் முத்தாய்ப்பாக சொல்லும் விஷயம் பெண்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ‘உண்மையை சொன் னால், ஆண்களைவிட பெண்களே சிறப்பாக கார் ஓட்டுகிறார்கள். அந்த பொறாமையால்தான் ஆண்கள், கார் ஓட்டும் பெண்களை கேலிசெய்கிறார்கள். அதனால் ஆண்களின் எதிர்ப்பை ஓரங்கட்டிவிட்டு பெண்கள் வழக்கம் போல் கவனமாக கார் ஓட்டிச்செல்லவேண்டியதுதான்’ என்கிறார், அவர். பெண்கள் பெருமைப்படக்கூடிய விஷயம்தான்!

 

https://www.maalaimalar.com/health/womensafety/2020/11/20113813/2082844/tamil-news-men-not-like-women-driving-car.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.