Jump to content

எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை

( எம்.எப்.எம்.பஸீர்)

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.

இதன்போது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்கும் வண்ணம் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் விஷேட கோரிக்கையினை தனது சட்டத்தரணி ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் முன்வைத்தார்.  

தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில்,  அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்துரைக்கப்பட்ட போதும், அதற்கு விருப்பம் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது தாய் மொழி தமிழ் என்ற ரீதியிலும் அம்மொழி அரசியலமைப்பின் அடிப்படையில் அரச கரும் அமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கு அமைவாகவும், தனக்கு தமிழில் சாட்சியமலிக்க வசதிகளைச் செய்துதருமாரு கோரினார்.

இறுதியில் அதற்கான ஏற்பாடுகளை சில மணி நேரங்கள் சாட்சிப் பதிவை ஒத்தி வைத்து ஜனாதிபதி ஆணைக் குழு ஏற்படுத்திக் கொடுத்தது.

 எவ்வாறாயினும் , அதன் பின்னர், மொழி பெயர்ப்பாளர்  மொழி பெயர்ப்பின் போது விட்ட தவறுகளை திருத்தி இடைக்கிடையே ரிஷாத் பதியுதீன் சிங்கள மொழியில் சாட்சியம் அளித்தமை ஆணைக் குழுவின்  கவனத்தை ஈர்த்தது.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந் நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சாட்சியம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்,  ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருதி ஹபீப் மற்றும் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆகியோர் ஆஜராகினர்.

இதன்போது ஆணைக் குழுவின் தலைமை நீதிபதி ஜனக் டீ சில்வா பின்வருமாறு அறிவித்தார்.

'  இதற்கு முன்னர், ரிஷாத் ப்தியுதீனின் சாட்சியத்தை ஸ்கைப் ஊடாக பதிவு செய்ய ஆணைக் குழு மறுத்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது அப்படி இல்லை.  ரிஷாத் பதியுதீனுடன் தொடர்புபட்ட ஒருவர், ஆணைக் குழுவில் பதிவு செய்யப்படும் சாட்சியங்களை, வெளியே ஊடகங்களுக்கு செவிமடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து பதிவு செய்தமையை மையப்படுத்தி,  ஆணைக் குழுவின் சாட்சிப் பதிவுகளின் போது  அதனை ஸ்கைப் ஊடாக தொடர்புபட்டு அவதானிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையையே நிராகரிக்கப்பட்டது.

  சாட்சியாளர்  ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டின் இரு பக்கத்திலும் உள்ள கூண்டுகளில் இருந்து இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்  அந்த சிறைக் கூண்டை சுத்தம் செய்யும் நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிறைச்சாலை அத்தியட்சர் எமக்கு அறிவித்துள்ளார்.

 எமது சாட்சி விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும்.  எனவே ரிஷாத் பதியுதீன் சாட்சியம் கண்டிப்பாக பெறப்பட வேண்டியது. எனவே  ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக அதனை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கின்றோம் ' என அறிவித்தார்.

 இதனையடுத்து ரிஷாத்தின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பின்வருமாறு கோரிக்கை முன்வைத்தார்.

' சாட்சியாளர் ரிஷாத் பதியுதீனுக்கு தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்க ஒரு மொழி பெயர்ப்பாளர் அவசியம். அவர் இதனை ஆணைக் குழுவில் முன்வைக்க ஆலோசனை வழங்கியுள்ளார். சாட்சியம் அளிப்பதற்கான அறிவித்தல்  இன்று காலை ( நேற்று) 9.00 மணிக்கே அவரது கைகளுக்கு கிடைத்ததாக அவர் கூறினார். எனவே அவருக்கு  தமிழ் மொழியில் சாட்சியமளிக்க  வசதிகளைச் செய்து தருமாரு கோருகின்றேன். ' என்றார்.

 இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் நீதிபதி ஜனக் டி சில்வா,

 எமது ஆணைக் குழுவின் மொழி பெயர்ப்பாளர் சுகயீன விடுமுறையில் உள்ளார். ஜனாதிபதி செயலகத்திலிருந்து அவ்வப்போது நாம் அழைக்கும் மொழி பெயர்ப்பாளரும் விடுமுறையில் உள்ளார்.

எனவே மொழி பெயர்ப்பாளர் ஒருவரை உடனடியாக  ஏற்பாடுச் செய்வதில் சிக்கல் உள்ளது.  சாட்சியாளர், சிங்களம், ஆங்கிலத்தில் சாட்சியமளிக்கலாம். ஏதேனும் விளங்காத சொற்கள் தொடர்பில் மீள அவர் வினவினால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஆணைக் குழு தயார்.' என அறிவித்தார்.

இதனையடுத்து ரிஷாத்தின் சட்டத்தரனி ருஷ்தி ஹபீப், ' சிங்கள மொழியில் சாட்சியம் அளிப்பது தொடர்பில் எனக்கு பிரச்சினை இல்லை. எனினும் சாட்சியாளர்  தமிழ் மொழியில் சாட்சியமளிப்பதையே விரும்புகின்றார். என தெரிவித்தார்.

இதனையடுத்து,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்ற  தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்கும் போதும்,  ஜனாதிபதி ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் வாக்குமூலமளிக்கும் போதும்   சிங்கள மொழியில் அவற்றை வழங்கியதை சுட்டிக்காட்டிய ஆணைக் குழு,  தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சரலமாக அவர் சிங்களத்தில் கதைப்பதை அவதானித்ததாக சுட்டிக்காட்டி சிங்கள மொழியில் சாட்சியமளிக்குமாறும் அவசியம் ஏற்பட்டால் விளங்காத சொற்கள் தொடர்பில்  ஆங்கிலம் அல்லது தமிழில் சட்டத்தரணி ஊடாக உதவவும் என சுட்டிக்காட்டி, அதனை ரிஷாத் பதியுதீனுக்கு அவரது சட்டத்தரனி ஊடாக அறிவித்தது.

இந் நிலையில், மெகஸின் சிறைச்சாலையின் பிரதான  அலுவலக அறையில், சிறை அதிகாரிகளான எம்.யூ.எச். விஜேதிலக,  பி.பீ.விக்ரமதிலக ஆகிய சிறை அதிகாரிகள் அருகே இருக்க ஸ்கைப் ஊடாக சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார்.

முதலில் ஸ்கைப் ஊடாக சாட்சியம் பெறுதல், அந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் உறுதி செய்ய 2015 ஆம் ஆண்டின்  4 ஆம் இலக்க குற்றச் செயல் ஒன்றினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்பு சட்டத்தின் 31(1)(2) ஆம் அத்தியாயங்களின் கீழ் விடயங்கள் உறுதி செய்யப்பட்டன.

 அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்சீவ  திஸாநாயக்கவின்  ஆரம்ப கேள்விகளுக்கு சிங்கள மொழியில் ரிஷாத் பதியுதீன் பதிலளித்ததுடன், அதனையடுத்து ஸ்கைப்பில்  ரிஷாத்திடம் சாட்சியங்களை தொடர ஆணைக் குழு தீர்மனித்தது. அந்த சாட்சியம் நம்பகரமானது என்ற முடிவுக்கு வந்த நிலையிலேயே சாட்சியங்களைப் பதிவு செய்ய தீர்மானித்தது.

 இதன்போது ஆணைக் குழுவில் ரிஷாத் பதியுதீன் தமிழில்  கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

'பாராளுமன்ற தெரிவுக் கூழுவில் சாட்சியமளிக்கும் போது எனக்கு அருகே சிங்களம் - தமிழ் தெரிந்த சட்டத்தரனி ஒருவரை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இங்கு அப்படியில்லை.  நான் சிங்களத்தில் கூறும் சில விடயங்கள் தெளிவில்லாமல் திரிவுபடலாம்.

 எனது தாய் மொழி தமிழ்.  அம்மொழியிலேயே கல்வி கற்றேன். தமிழ் மொழி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி.  எனக்கு தமிழில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் தாருங்கள்.

  எவ்வாறாயினும் அதனை மறுத்து சிங்களத்தில் சாட்சியமளிக்க  ஆணைக் குழு வற்புறுத்துமானால் அதன்படி செய்கின்றேன்.' என கூறினார்.

 இதனையடுத்து ஆணைக் குழுவின் நடவடிக்கைகள் முற்பகல், 11.45 மணியளவிலிருந்து பிற்பகல் 1.40 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மதிய போசன இடைவேளையின் பின்னர் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டு, அவரின் உதவியுடன் சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. 
 

 

https://www.virakesari.lk/article/94784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு.. இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால் எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு - 2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

 

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு.. இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால் எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு - 2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை

சிங்களவன் அடிக்கும்போதுதான் உன் தாய்மொழி தமிழென்பது புரிகிறதா உனக்கு? உனது பதவிக்காகவும், சலுகைக்காகவும் நீ பேசும் மொழிபேசிய இன்னொரு மக்கள் கூட்டத்தை எதிரியோடு சேர்ந்து கொன்றுகுவித்தாயே, அதற்குப்பிறகு அந்த மொழி பேச உனது நாக்கு இருந்தால்த்தான் என்ன இல்லாவிட்டால்த்தான் என்ன? 

தமிழ் இனத்தில் பிறந்த சகோதரிகளை சிங்கள மிருகங்களோடூ சேர்ந்து நீயும் புணர்ந்தபின் உனது ஆண்குறியின் சதைத்துண்டை நீ வெட்டியெறிந்தால் என்ன, ஆண்குறியினையே வெட்டியெறிந்தால் என்ன, எல்லமே ஒன்றுதான். 

சென்றுவா, உனது துரோகங்கள் நாம் அறியாதவை அல்லவே !

Link to comment
Share on other sites

ஆகா என்ன தாய்மொழி பற்று. இப்போது இவர் நல்லாக மாட்டுப்பட்டுவிடடார். தப்ப வழியே இல்லை. குண்டுதாரிகளின் திருமணத்தில் சாட்சியாக கையொப்பமிட்டிருக்கிறார். தொலைபேசியில் அடிக்கடி கதைத்திருக்கிறார். இவரது வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் வீடுகளுக்கு சென்று வந்திருக்கிறார். இராணுவத் தளபதியுடன் கதைத்து இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இருக்கிறார். இப்படியாக இந்த பயங்கரவாத சம்பவத்துடன் இவர் நிறையவே சம்பந்தப்பட்டிருக்கிறார்.

இப்போது தமிழர்களுக்கு எதிராக செய்த அநியாயங்களை மறைத்து , தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக தமிழ் தாய் மொழியை கையில் எடுத்திருக்கிறார்.

இந்த பயங்கரவாத தாக்குதல் மட்டுமல்ல, காடழிப்பு, அரச சொத்தை துஸ்பிரயோகம் செய்தது, அளவுக்கு அதிகமாக சேர்த்து என்று நிறையவே குற்றங்கள் செய்திருக்கிறார். காடழிப்புக்கு Rs 500 மில்லியன் கட்டும்படி வன இலாகா கேட்டிருக்கிறது. இது ஒன்றும் அவருக்கு பெரிய காரியம் இல்லை. அளவுக்கு அதிகமாக துள்ளினால் இதுதான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில்...  மற்றைய கருத்தாளர்கள், ஏன் வரவில்லை....⁉️
அவர்களின், ரோச நரம்பை... வெட்டியதின் விளைவு இது.  ⁉️ 

இப்ப.. சந்தோசமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, colomban said:

 

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு.. இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால் எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு - 2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை

இந்தக் கவிதையை எழுதியவர் தன் நாவை அறுத்து எறிந்து விட்டாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம்... கொழும்பான், போட்ட  பதிவிற்கு...
யாழ். களத்திலிருந்து  பலர், காரசாரமான... எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
இன்று.... ரஞ்சித்தை தவிர, எல்லோரும்...
அமைதியாக... இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள்- ஜனாதிபதி ஆணைக்குழு ரிசாத்திடம் கேள்வி?அவரின் பதில் என்ன?

November 22, 2020

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என முன்னாள அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

easter-attack-pco-6.jpg

துருக்கியில் தடைசெய்யப்பட்ட எவ்ஈடிஓ என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளில் தலையிட்டீர்களா என்ற கேள்விக்குடி பதிலளித்துள்ள ரிசாத் பதியுதீன் அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை தனக்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளில் தான் தலையிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் உள்ள ரிசாத் பதியுதீனின் சகோதரியின் வீட்டினை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியமை குறித்து அறிந்திருக்கின்றீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தான் அதனை அறிந்திருக்கவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே அதனை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வீட்டிற்கு தான் விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

risad-300x195.jpg

உங்கள் தம்பி எப்போதாவது கைதுசெய்யப்பட்டாரா என்ற கேள்விக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அவர் கைதுசெய்யப்பட்டார்,சினமன் கிரான்டில் தாக்குதலை மேற்கொண்டவர் எனது சகோதரரிற்கு ஏழு தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார் என்பதை ஊடகங்கள் மூலம அறிந்தேன் என ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நான் எனது சகோதரரிடம் இன்சாவினை ஏன் அவர் தொடர்புகொண்டார் என கேட்டதற்கு அரசாங்கம் செப்பு ஏற்றுமதியை இரத்துசெய்தமையால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தே பேச்சுக்களை மேற்கொண்டதாக எனது சகோதாரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் மறைமுகமாக இன்சாவ் சகோதரர்களிற்கு ஆதரவளித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ரிசாத் பதியுதீன் நான் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன்,இன்சாவ் சகோதரர்களிற்கு நான் உதவவேயில்லை என தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள் என ஆணைக்குழுவின் நீதிபதியொருவர் ரிசாத்பதியுதீனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரிசாத் பதியுதீன் நான் அகதியாகிவிட்டதால் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை,என்னால் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் உங்கள் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி இவ்வளவு சொத்தினை சேர்த்தீர்களா? உங்கள் குடும்பத்தினையும் வர்த்தகத்தினையும் முன்னேற்றினீர்களா என்ற கேள்விக்கு ரிசாத்பதியுதீன் நான் எந்த வர்த்தகத்தினை முன்னேற்றுவதற்கு எனது அமைச்சு பதவியை பயன்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/91767

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 05:04, தமிழ் சிறி said:

முன்பெல்லாம்... கொழும்பான், போட்ட  பதிவிற்கு...
யாழ். களத்திலிருந்து  பலர், காரசாரமான... எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
இன்று.... ரஞ்சித்தை தவிர, எல்லோரும்...
அமைதியாக... இருக்கிறார்கள். 

சிறீ, இனியும் அவரது முஸ்லிம்கள் சார்ந்த பதிவுகளுக்கு கருத்தெழுதி எங்களை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 07:24, தமிழ் சிறி said:

இந்தத் தலைப்பில்...  மற்றைய கருத்தாளர்கள், ஏன் வரவில்லை....⁉️
அவர்களின், ரோச நரம்பை... வெட்டியதின் விளைவு இது.  ⁉️ 

இப்ப.. சந்தோசமா?

மன்னார் பக்கம் அவ்வளவு செஞ்சிருக்கான் மனுசன் அங்கிருந்து ஒரு கண்டனகுரலும் வரல காடளிப்பு , குடியேற்றம் ஆனால் ஒரு வீதி வளைவு மட்டும் வைக்க பொங்கு எழுவானுகள் நம்ம டிசைன் அப்படி .

றிசாட் பொறி வைத்து பிடிக்கப்பட்ட எலி நழுவுவதென்பது மத்திய கிழக்கு மன்னர்கள் யாராவது பொறியின் ஸ்பிறிங்கை கொஞ்சம்  தூக்க வேண்டும் அது நடந்தால் வழக்கு பொய்யாகும் கொழும்பான் குறிப்பிட்டது மீண்டும் மெய்யாகும் ஏனென்றால் இவங்கள் டொப்பி பிரட்டிகள் என்பது உலகறிந்த உண்மை அதனால் சீரியசா எடுக்காதீங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 06:48, colomban said:

 

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு.. இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால் எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு - 2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை

தோழா,

முன் தோலில் ஏற்பட்ட அழற்சிக்காகா, குறி முழுவதையும் நீ வெட்டி கொண்டதன் மடமை இப்போதாவது உறைக்கிறதா?

 

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மன்னார் பக்கம் அவ்வளவு செஞ்சிருக்கான் மனுசன் அங்கிருந்து ஒரு கண்டனகுரலும் வரல காடளிப்பு , குடியேற்றம் ஆனால் ஒரு வீதி வளைவு மட்டும் வைக்க பொங்கு எழுவானுகள் நம்ம டிசைன் அப்படி .

றிசாட் பொறி வைத்து பிடிக்கப்பட்ட எலி நழுவுவதென்பது மத்திய கிழக்கு மன்னர்கள் யாராவது பொறியின் ஸ்பிறிங்கை கொஞ்சம்  தூக்க வேண்டும் அது நடந்தால் வழக்கு பொய்யாகும் கொழும்பான் குறிப்பிட்டது மீண்டும் மெய்யாகும் ஏனென்றால் இவங்கள் டொப்பி பிரட்டிகள் என்பது உலகறிந்த உண்மை அதனால் சீரியசா எடுக்காதீங்க

மன்னர் பக்கம் அப்படி ஒன்றும் செய்யவில்லை. மன்னர் முஸ்லிம்களுக்கு செய்திருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படி காடழித்து, ரோட்டு போட்டு, மின்சாரம், நீர் வழங்கி குடியேற்ற முடிந்ததென்றால் கடந்த கால அரசு அவர்களில் தங்கி இருக்க வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் ஆட்சி செய்ய முடியாத நிலை. ராஜபக்சேக்கள் தொடக்கம், ரணில் வரை அவர்களை குஷி படுத்த வேண்டி இருந்தது.

மன்னர் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவரது ஒத்துழைப்பு தேவைப்பட்ட்து தங்களது சடட விரோத வியாபாரங்களை நடத்துவதட்கு. அங்குள்ள மதத்தலைமையும் ஒரு சில சுயநலலங்களுக்காக மக்கள் நலனை விட்டுக்கொடுத்து.

எனவே அவர் அங்கு ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தது என்னவோ உண்மைதான். இப்போது குடும்பமே கூண்டோடு கைலாயம் போக வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. முழு குடும்பமும் பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி இருக்கிறது. பிழையான வழிகளில் பணம் சம்பாதித்திருக்கிறார். பிழையான வழிகளில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கிறார்.

இதை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வரை கர்தினால் மல்லாகம் ரஞ்சித் அவர்களும், சிங்கள அமைப்புக்களும் விடப்போவதில்லை.

Link to comment
Share on other sites

On 20/11/2020 at 17:15, Robinson cruso said:

இப்போது தமிழர்களுக்கு எதிராக செய்த அநியாயங்களை மறைத்து , தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக தமிழ் தாய் மொழியை கையில் எடுத்திருக்கிறார்.

தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக” ?? ..... தமிழர்களின் அனுதாபத்தை பெற்று என்ன பயன்? ரிசாட் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஏனைய யாழ். வாசிகளை போலவே சிங்கள அறிவு மட்டம். இந்த வழக்கில் கொஞ்சம் சறுக்கினாலும் பாதிப்பு கூட. வழக்கு நியாயமாக வெல்லக்கூடியதாக இருந்தால் பிறகு ராஜபக்ச குடும்பத்திடம் சரணடைந்து தப்பும் சாத்தியம் அதிகம். ஆகவே கவனமாக செய்ய தாய்மொழியில் உதவி கேட்கிறார்- அவ்வளவேதான்.

9 hours ago, goshan_che said:

தோழா,

முன் தோலில் ஏற்பட்ட அழற்சிக்காகா, குறி முழுவதையும் நீ வெட்டி கொண்டதன் மடமை இப்போதாவது உறைக்கிறதா?

மடமையாக தெரியவில்லை. அகதியாக வெளியேற்றப்பட்டவர் இன்று கோடீஸ்வரர். அரசியல் தொடர்புகளும் உள்ளவர் - தப்பிவிடுவார். மடமை என்றும் போல தமிழர்களின் தனியுரிமை. 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனையும் அவன் இனத்தையும் அழிக்க சிங்களம் தேவைப்பட்டது. இப்போ தன்னைக்காப்பாற்ற தமிழ் தேவைப்படுகிறது  இவருக்கு. காலங்கடந்த ஞானம்.

11 minutes ago, Robinson cruso said:

மன்னர் பக்கம் அப்படி ஒன்றும் செய்யவில்லை. மன்னர் முஸ்லிம்களுக்கு செய்திருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.

 

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மன்னார் பக்கம் அவ்வளவு செஞ்சிருக்கான் மனுசன் அங்கிருந்து ஒரு கண்டனகுரலும் வரல காடளிப்பு

 

3 minutes ago, கற்பகதரு said:

ஆகவே கவனமாக செய்ய தாய்மொழியில் உதவி கேட்கிறார்- அவ்வளவேதான்.

மொழிபெயர்ப்பாளர் விடும் தவறுகளை சிங்களத்தில் இவரே திருத்தி சொல்கிறாராம். முன்பு நடந்த குண்டுவடிப்பு விசாரணை  விளக்கத்தில் சிங்களத்தில் பதில் அளித்துள்ளாராம்.

Link to comment
Share on other sites

4 minutes ago, satan said:

தமிழனையும் அவன் இனத்தையும் அழிக்க சிங்களம் தேவைப்பட்டது. இப்போ தன்னைக்காப்பாற்ற தமிழ் தேவைப்படுகிறது  இவருக்கு. காலங்கடந்த ஞானம்.

 

 

மொழிபெயர்ப்பாளர் விடும் தவறுகளை சிங்களத்தில் இவரே திருத்தி சொல்கிறாராம். முன்பு நடந்த குண்டுவடிப்பு விசாரணை  விளக்கத்தில் சிங்களத்தில் பதில் அளித்துள்ளாராம்.

சில கருத்துகளை சொல்ல மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டாலும் தனக்கு தவறான மொழிபெயர்ப்பு என்று தெரிவதை திருத்துகிறார். 

Link to comment
Share on other sites

8 minutes ago, கற்பகதரு said:

தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக” ?? ..... தமிழர்களின் அனுதாபத்தை பெற்று என்ன பயன்? ரிசாட் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஏனைய யாழ். வாசிகளை போலவே சிங்கள அறிவு மட்டம். இந்த வழக்கில் கொஞ்சம் சறுக்கினாலும் பாதிப்பு கூட. வழக்கு நியாயமாக வெல்லக்கூடியதாக இருந்தால் பிறகு ராஜபக்ச குடும்பத்திடம் சரணடைந்து தப்பும் சாத்தியம் அதிகம். ஆகவே கவனமாக செய்ய தாய்மொழியில் உதவி கேட்கிறார்- அவ்வளவேதான்.

 

இவர் யாழ்ப்பாணத்தில் பிறக்கவில்லை. இவரைப்பற்றி முன்னர் ஒரு இடத்தில எழுதி இருந்தேன். இவர் மன்னர் தாராபுரத்தில் பிறந்தவர். அவரது வீடும் அங்குதான் இருக்கிறது. கொழும்பில் மனம் முடித்துள்ளார். இருந்தாலும் , ஆங்கிலமும் சிங்களமும் நன்றாக பேசுவார். இவரது குடும்பமே பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கிறது. எனவே இவர் தப்புவதட்கு சந்தர்ப்பம் குறைவு. சிங்கள அமைப்புக்களும், கர்தினால் ரஞ்சித்தும் ஒரு முடிவு காணும் வரையும் விட மாடடார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டினால் அமைக்கப்பட்டுள்ள ஊர்களுக்கு அரபியிலும் ஆங்கிலத்திலும் பெயர்.!

SudarSeithy-1368.jpg

கட்டார் உதவியில் ஜஸிம் சிட்டி என்ற பெயரில் ரிஷாட்டினால் மேற்படி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஊர்களுக்கு அரபியிலும் ஆங்கிலத்திலும் பெயரிட்டு இருந்தார்.

அதில் தமிழோ சிங்களமோ இடம்பெறவில்லை. ஆனால் இன்று சிறையில் இருந்து தான் பேசுவதற்குத் தாய்மொழியான தமிழை அனுமதிக்கக் கோருகின்றார்.

இதன் காரணம் ஒன்றே ஒன்றுதான், இப்போது இப்பிரச்சனையை மடைமாற்றி தனக்குப் பிரச்சனைகள் வரும்போது "தமிழ்"  என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் எளிய காரணமாகவே இதனைக் காணலாம்.

ஒரு பக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை வளர்ப்பதிலும் மறுபக்கம் தேசிய வனங்களையும் இயற்கையையும் அழிப்பதிலும் குறியாக இருந்த ரிஷாட் பதியுதீன் மீது இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது பெரும் பாராட்டுக்குரியது.

அதேபோல் ரிஷாட்மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தொடர்புகளையும் நிருபித்து அரசு தண்டனை வழங்கும் வரை காத்திருப்போம்…

முகநூல் பதிவிலிருந்து…

https://sudarseithy.com/43277/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

 

மடமையாக தெரியவில்லை. அகதியாக வெளியேற்றப்பட்டவர் இன்று கோடீஸ்வரர். அரசியல் தொடர்புகளும் உள்ளவர் - தப்பிவிடுவார். மடமை என்றும் போல தமிழர்களின் தனியுரிமை. 😇

வணக்கம் ஜூட் அண்ணா,

ரிசாத் தப்பிவிடுவார். ஆனால் இங்கே நான் உருவகித்தது ரிசாட்டை அல்ல, அவரின் இனக்குழுவை.

ஒரு இயக்கம் விட்ட மிகபெரும் தவறுக்கு, ஒரு இனத்தையே பலிகடா ஆக்கி, இந்த இயக்கத்தின் அழிவின் பின்னும், அதை வைத்து அரசியல் செய்யும், பேரினவாதத்தின் கோர பசிக்கு தமிழர் starters என்றால் முஸ்லீம்கள்தான் main meal என்பதை இன்றுவரை உணர மறுக்கும் ஒரு இனத்திற்கும் அதன் தலைவர்களுக்குமான உருவகம் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Robinson cruso said:

மன்னர் பக்கம் அப்படி ஒன்றும் செய்யவில்லை. மன்னர் முஸ்லிம்களுக்கு செய்திருக்கிறார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அப்படி காடழித்து, ரோட்டு போட்டு, மின்சாரம், நீர் வழங்கி குடியேற்ற முடிந்ததென்றால் கடந்த கால அரசு அவர்களில் தங்கி இருக்க வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் ஆட்சி செய்ய முடியாத நிலை. ராஜபக்சேக்கள் தொடக்கம், ரணில் வரை அவர்களை குஷி படுத்த வேண்டி இருந்தது.

மன்னர் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவரது ஒத்துழைப்பு தேவைப்பட்ட்து தங்களது சடட விரோத வியாபாரங்களை நடத்துவதட்கு. அங்குள்ள மதத்தலைமையும் ஒரு சில சுயநலலங்களுக்காக மக்கள் நலனை விட்டுக்கொடுத்து.

எனவே அவர் அங்கு ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தது என்னவோ உண்மைதான். இப்போது குடும்பமே கூண்டோடு கைலாயம் போக வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. முழு குடும்பமும் பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி இருக்கிறது. பிழையான வழிகளில் பணம் சம்பாதித்திருக்கிறார். பிழையான வழிகளில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கிறார்.

இதை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வரை கர்தினால் மல்லாகம் ரஞ்சித் அவர்களும், சிங்கள அமைப்புக்களும் விடப்போவதில்லை.

நான் குறிப்பிட்ட முஸ்லீம் மக்களுக்கு மட்டுமே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 03:36, கற்பகதரு said:

தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளுவதட்காக” ?? ..... தமிழர்களின் அனுதாபத்தை பெற்று என்ன பயன்? ரிசாட் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஏனைய யாழ். வாசிகளை போலவே சிங்கள அறிவு மட்டம். இந்த வழக்கில் கொஞ்சம் சறுக்கினாலும் பாதிப்பு கூட. வழக்கு நியாயமாக வெல்லக்கூடியதாக இருந்தால் பிறகு ராஜபக்ச குடும்பத்திடம் சரணடைந்து தப்பும் சாத்தியம் அதிகம். ஆகவே கவனமாக செய்ய தாய்மொழியில் உதவி கேட்கிறார்- அவ்வளவேதான்.

மடமையாக தெரியவில்லை. அகதியாக வெளியேற்றப்பட்டவர் இன்று கோடீஸ்வரர். அரசியல் தொடர்புகளும் உள்ளவர் - தப்பிவிடுவார். மடமை என்றும் போல தமிழர்களின் தனியுரிமை. 😇

மீண்டும் அவர்களுக்கு கொடிபிடிக்கும் உங்கள் வேலையை ஆரம்பித்துவிடீர்கள். தொடருங்கள்!!

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

மீண்டும் அவர்களுக்கு கொடிபிடிக்கும் உங்கள் வேலையை ஆரம்பித்துவிடீர்கள். தொடருங்கள்!!

தமிழே ஒழுங்காக புரியாதவர் “எப்படியும்” தமிழனாக தன்னை காட்டிக்கொள்ள முயல்வது தெரிகிறது. “அவர்களில்” ஒருவராக இருக்குமோ?😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 07:38, கிருபன் said:

தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில்,  அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்துரைக்கப்பட்ட போதும், அதற்கு விருப்பம் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது தாய் மொழி தமிழ் என்ற ரீதியிலும் அம்மொழி அரசியலமைப்பின் அடிப்படையில் அரச கரும அமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கு அமைவாகவும், தனக்கு தமிழில் சாட்சியமலிக்க வசதிகளைச் செய்துதருமாரு கோரினார்.

மிகவும் முட்டாள்தனமான வேண்டுகோள். தமிழை அரச கரும மொழியாக ஏற்றுகொள்வதென்பது தமிழில் வாக்குமூலம் வழங்குவதை அனுமதிப்பதுடன் நின்றுவிடாது.  சாட்சியாளர் சொன்ன அந்த வாக்குமூலத்தை  சொன்னது பிசகாமல் தமிழில் பதிவு செய்வதும் இதில் அடங்கும்.

சாட்சி தமிழில் வாக்குமூலம் வழங்க அதை பெறும் நபர்அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளர் அதைக்கேட்டு  மொழிபெயர்ப்பு செய்து சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ வக்குமூலத்தை பதிவுசெய்வது எந்தவகையிலும் ஏற்புடையதாகாது. தமிழில் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலத்தின் மூலப்பிரதியை அதை வழங்கியவர் அல்லது அவரின் சட்டதரணி வாசித்து சரிபார்த்தபின்னரே அவரின் கையொப்பம் பெறப்படுதல் வேண்டும்.

"எனது தாய் மொழி தமிழ்.  அம்மொழியிலேயே கல்வி கற்றேன். தமிழ் மொழி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி.  எனக்கு தமிழில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் தாருங்கள்."

இவர் சொல்லாமல் விட்டது: "முதலில் முஸ்லிம் அப்புறம் தேவைப்படும்போது மட்டும் நான் தமிழன்".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

தமிழே ஒழுங்காக புரியாதவர் “எப்படியும்” தமிழனாக தன்னை காட்டிக்கொள்ள முயல்வது தெரிகிறது. “அவர்களில்” ஒருவராக இருக்குமோ?😃

"எவ்வாறாயினும் , அதன் பின்னர், மொழி பெயர்ப்பாளர்  மொழி பெயர்ப்பின் போது விட்ட தவறுகளை திருத்தி இடைக்கிடையே ரிஷாத் பதியுதீன் சிங்கள மொழியில் சாட்சியம் அளித்தமை ஆணைக் குழுவின்  கவனத்தை ஈர்த்தது"

 

மேலேயுள்ள பதிவு தமிழில்தான் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் சொன்னதையே திருத்தி சொல்லுமளவுக்கு சிங்களத்தில் பாண்டித்தியம் உள்ளவர் சிங்களத்திலேயே பதிலளித்திருக்கலாம். ஆனாலும் அவரது கோரிக்கை நியாயமானது அது அவரின் உரிமையும் கூட. அதில் பிழையில்லை.

உங்களுக்கான எனது பதிவு உங்கள் இரண்டாவது கருத்துக்கானது. அதற்கான போதிய விளக்கத்தை கோஷான் மேலே கொடுத்துவிட்டார். உறைத்திருக்கும் என்று நினைக்கிறேன் இல்லாவிட்டால் இனியாவது கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடவும்.

Link to comment
Share on other sites

3 hours ago, Eppothum Thamizhan said:

இல்லாவிட்டால் இனியாவது கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடவும்.

இவர் சொல்கிறார் என்று உப்பு போட்டு சாப்பிடாதீர்கள். பெருமளவளவு மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. உங்களுக்கே அது தெரியாமலும் இருக்கலாம். தமிழர் சனத்தொகையை குறைப்பதில் இந்த “உப்பு போட்டு சாப்பிடவும்“ என்று சொல்பவர்களும் பெரும்பங்களிப்பு செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.