Jump to content

விடிவைத்தேடி தொடரும் வாழ்க்கைப் போராட்டம்- கோ. ரூபகாந்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடிவைத்தேடி தொடரும் வாழ்க்கைப் போராட்டம்- கோ. ரூபகாந்

 
IMG_3220-1-696x464.jpg
 59 Views

தாயகத்தில் யுத்தம் ஓய்ந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும், யுத்தத்தின் வடுக்கள் ஆறாத வடுக்களாகவே உள்ளன. மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்களென அரச வீடுகள் அமைத்துக் கொடுப்பதும், வீதிகள் செப்பனிடுவதுமென மேலோட்டமாக பார்க்கும்போது தாயக உறவுகள் செல்வச் செழிப்புடனேயே வாழ்ந்து வருவதாகவே தெரியும். 

ஆனால் அவர்களின் வீட்டின் அடுப்பங்கரையை சென்று பாருங்கள், அப்போது தெரியும் அவர்கள் உண்மைநிலை; உணவு சமைத்து எத்தனை நாட்களாகி விட்டன என்று.

20160112_171101-1.jpg

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களும், யுத்தத்தில் அவயவங்களை பறிகொடுத்த நிலையில் வாழும் ஆண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுமே அதிகம் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் தமது அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக தினமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தத்தின் பின், வடபுலத்திலும், கிழக்குப் பகுதியிலும் தென்னிலங்கையரின் ஆதிக்கம் அதிகளவில் செல்வாக்குச் செலுத்துவதால், இவர்களின் தொழில் வாய்ப்புக்கள் குறைந்து, வாழ்க்கைச் செலவை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலையே தாயகத்தில் அரங்கேறுகின்றது.
விவசாயம், மீன்பிடி, வியாபாரம், வீதி செப்பனிடுதல், கூரைவேலை, அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் சிங்களவரை அதிகம் உள்வாங்குதல், உயர் பதவிகளை வகிப்பவர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள் என தென்னிலங்கை சிங்களவரின் ஆதிக்கம் தாயகத்தில் அதிகம் செல்வாக்குச்  செலுத்துகின்றது.

New-Picture-2-1-1.bmp

வேலை வாய்ப்புக்களைப் பெறுத்தவரை, கூலிவேலை முதல், அபிவிருத்தி வேலைகளுக்கெல்லாம் சிங்களவருக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதால், தாயகத்தில் யுத்த வலிகளை அனுபவித்த, வாழ்வாதாரத்தை தேடத் தவிக்கும் உறவுகளுக்கு தொழில் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

பொன்விளையும் தாயகமண்ணில் விவசாயிகள் வெய்யில், மழை என்று பாராமல் மரக்கறி வகைகள், நெல், தானியங்கள், பழவகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றனர்.  உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தைக்குச் சென்றால், அங்கும் சிங்களவரின் ஆதிக்கம். விளைவிப்பவன் பொருட்களின் விலையை தீர்மானிக்க முடியாது. கடினமாக உழைத்த தமிழனின் விளைபொருட்களின் விலைகளை தீர்மானிப்பவன் சிங்களவன், கடின உழைப்புக்கு ஏற்ற விலை தாயக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

அதே போன்று காற்று, மழை, வெய்யில் என்று எவற்றையும் பொருட்படுத்தாமல் பாரிய அலைகளைத் தாண்டி கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் சந்தை வாய்ப்பையும் சிங்கவன்தான் தீர்மானிக்கின்றான். அத்துடன் நின்றுவிடாது, தமிழர் தாயகத்தில் குறிப்பாக முல்லைத்தீவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டன்கேணி, புல்மோட்டை, திருகோணமலை கரையேரங்களில் தமிழருக்குச் சொந்தமான கடற்கரையில் சிங்களவர்கள் சட்டவிரோதமான முறையில் வலைகளையும், இழுவைப் படகுகளையும் பயன்படுத்தி அதிகளவில் மீன்பிடித்து வருகின்றனர். அதனால் தமிழர்களின் கடல்வளம் சூறையாடப்படுகின்றது.

IMG_5686-1.jpg

வீதி ஒப்பந்தம் முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டட ஒப்பந்ததாரர் வரை சிங்களவருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. கூலிவேலைக்குகூட தென்னிலங்கையிலிருந்து சிங்களவர் வரவழைக்கப்பட்டு, வேலைகளைச் செய்கின்றார்கள். அந் நிலையில் கால், கை, அவயவங்களை இழந்த தாயக உறவுகளால் எவ்வாறு வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்..? கணவனை இழந்த பெண்களால் எவ்வாறு சமூகத்தில் வாழமுடியும்..?
நாட்டில் நல்லாட்சி என்று மேடை போட்டு கத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்சரி, கடந்தகால வடமாகாண அமைச்சர்களும் சரி தமது சுய அரசியல் இலாபத்துக்காக, காணாமல்போன உறவுகள், தமிழீழம், தமிழ்த்தேசியம், நல்லிணக்கம், சர்வதேச விசாரணை என உணர்வுபூர்வமாக ஆசை வார்த்தைகள் பேசுகின்றார்களே தவிர தாயக மக்களின் வாழ்வாதாரம் பற்றி அக்கறை செலுத்துபவர்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்பவர்களே தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தமது குடும்பச் செலவை ஈடுசெய்ய போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அன்றாடம் கூலிக்கு வேலைசெய்து அரைவயிற்றுக் கஞ்சிக்காக போராடும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் நிலையை நீங்களே ஊகித்து பார்க்க முடியும்.

இந்த நிலையில், தமிழ் மண்ணுக்காக தமது கணவர்களைப் பறிகொடுத்த பெண்களையும், விசேட தேவைக்குட்பட்ட ஆண்களையும் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களில் தங்கி வாழும்  சிறுவர்களின் வயிற்றுப் பசியை யார் தீர்த்து வைக்கப் போகிறார்கள்..?

 

https://www.ilakku.org/விடிவைத்தேடி-தொடரும்-வாழ/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.