Jump to content

பூனை பசிக்கிறது என்று சொல்வது இனி உங்களுக்குப் புரியலாம்: மியாவ் சத்தத்தை மொழி பெயர்க்க ஓர் ஆப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • க்ரிஸ்டினா க்ரிடில்
  • தொழில் நுட்ப நிருபர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
Akvelon விளம்பரம்

பட மூலாதாரம்,MEOWTALK/AKVELON

அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக் (Meow Talk).

இந்த மியாவ் டாக் செயலி முதலில் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச் சொல்ல முயற்சிக்கிறது.

பூனையின் உரிமையாளர்களும், பூனைகளின் சத்தத்துக்கு என்ன பொருள் என்று சொல்கிறார்கள். இதனால், இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் இருந்து ஒரு டேட்டா பேஸே உருவாகிக் கொண்டு இருக்கிறது.

இதுவரை மொத்தம் 13 சொற்கள் மட்டுமே இருக்கிறதாம். "பசிக்கிது" "சாப்பிடக் கொடுங்க" "என்னை தனியாக விடுங்கள்" என மிகச் சில சொற்கள் மட்டுமே இருக்கிறதாம்.

பூனைகள் பொதுவாக, ஒரே மாதிரியான மொழியைப் பகிர்வதில்லை என்கிறது ஆராய்ச்சி.

ஒவ்வொரு பூனையின் மியாவ் சத்தமும், தனித்தன்மை கொண்டதாகவும், தங்களின் உரிமையாளருக்கு என்றே தனித்துவமானதுமாகவும் இருக்கிறது.

எனவே, பொதுவாக பூனைகளின் மியாவ் சப்தத்துக்கு, ஒரு டேட்டா பேஸை உருவாக்குவதை விட, இந்த செயலியின் மொழி பெயர்ப்பு, ஒவ்வொரு தனிப்பட்ட பூனைக்கும் மாறுபடும்.

பூனையின் மியாவ் சப்தத்தை பதிவு செய்வது மற்றும் அதற்கான பொருளை பிரித்துப் பட்டியலிடுவதால், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல் மென்பொருளால், ஒவ்வொரு பூனையின் குரலையும் இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியும். இந்த செயலியை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அதிக துல்லியமாக இது விடைகளைக் கொடுக்கும்.

ஆப்பின் ஸ்கிரீன் ஷாட்

பட மூலாதாரம்,MEOWTALK/AKVELON

இதன் நோக்கமே, ஒரு ஸ்மார்ட் காலர் உருவாக்குவது தான் என, அக்வேலான் செயலி மேம்பாட்டாளர்கள் குழுவின் தொழில்நுட்ப ப்ரோகிராம் மேலாளர், ஜேவியர் சான்சேஸ் ஒரு வலைதளக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார்.

இந்த தொழில்நுட்பம், பூனையின் மியாவ் சப்தத்தை உடனடியாக மொழி மாற்றிக் கொடுக்கும், மனித குரலைக் கொண்ட, பூனையிடம், இந்த ஸ்மார்ட் காலர் வழியாகப் பேசலாம்.

"இது இப்போது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் தற்போது சமூக இடைவெளியுடன், பூனை உட்பட, வெகு சிலருடன் நீங்கள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளீர்கள்" என்கிறார் சான்செஸ்.

இது அவர்களின் பூனைகளோடு பேச, தொடர்பு கொள்ள உதவும், குறைந்தபட்சம், அவர்களின் பூனையின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளவாவது உதவும். அதோடு பூனைகளோடு ஒரு தொடர்பை நிறுவ உதவும். என்கிறார் சான்செஸ்.

இந்த செயலி, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது.

இந்த செயலி, தன் ஆரம்ப காலங்களில் இருப்பதால், இந்த செயலி குறித்த விமர்சனங்களும் கலவையாக இருக்கின்றன. சில பயனர்கள், இந்த செயலியில் தவறு இருப்பதாக புகார் அளிக்கிறார்கள்.

இது தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது என ஒரு விமர்சனம் இருக்கிறது.

நான் இதை பதிவிரக்கம் செய்த பின், என்னால் இதைப் பயன்படுத்த முடியவில்லை, தொடர்ந்து வைபை பிரச்சனை இருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

எனக்கு இதன் மொழிபெயர்ப்புகள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. எனக்கு இந்த செயலி மிகவும் பிடித்து இருக்கிறது என மற்றொரு விமர்சனம் இருக்கிறது.

இந்த செயலிக்கு, கூகுள் ப்ளே ஸ்டோரில் சராசரியாக 4.3 ரேட்டிங் இருக்கிறது.

இப்போதைக்கு, நீங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், இது மிகவும் வேடிக்கையான பயன்பாடாக இருக்கும்" என ஒரு விமர்சனம் கூறியது.

"யாருக்குத் தெரியும், காலப்போக்கில், இது எல்லா சமயங்களிலும் என் பூனையின் உண்மையான மியாவைக் கற்றுக் கொள்ளும். இது நிச்சயமாக நம்பிக்கைக்குரியதாக தோன்றுகிறது. "

"உண்மையிலேயே அருமையான கருத்தாக்கம். என் பூனைகள் ஒருபோதும் பேசுவதை நிறுத்தாததால் நான் அதை அனுபவித்திருக்கிறேன்" என மற்றொரு விமர்சனம் கூறுகிறது.

இருப்பினும், தரவுகள் எவ்வாறு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் பயனர்கள் தனியுரிமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த செயலியின் தனியுரிமைக் கொள்கையில், இந்த செயலி இன்னும் "மேம்பாட்டு கட்டத்தில்" இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு, தனியுரிமை குறித்து கவலைப்படுபவர்கள் யாராக இருந்தாலும், செயலியை அழித்துவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிடிபிஆர் தனியுரிமைச் சட்டத்துடன் முழுமையாக இணங்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது.

பெரும்பாலான பூனைகளின் குரல்கள் உண்மையில் மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்குத் தான். ஏனெனில் பெரும்பாலும் பூனை வைத்திருப்பவர்கள், அவைகளுக்கு பதிலளிப்பார்கள் "என பூனை நடத்தை மற்றும் நடவடிக்கை நிபுணர் ஜூலியட் ஜோன்ஸ் கூறுகிறார்.

இந்த செயலி, பூனை வைத்திருக்கும் உரிமையாளர்களின் வகைப்படுத்தலை நம்பி இருப்பதால், தவறான தகவல் தொடர்புக்கு இடம் உள்ளது, என்று கூறுகிறார் ஜோன்ஸ்.

"சில தவறுகள் இருக்கலாம், அவை உரிமையாளர்களுக்கு தங்கள் பூனைகள் என்ன உணர்கின்றன என்பது பற்றிய தவறான எண்ணத்தை அளிக்கக்கூடும்.

இது பூனை, உரிமையாளர் மற்றும் அவற்றின் உறவுக்கு தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, ஒரு பூனை தொடர்ந்து குறைந்த ஒலியில் கத்திக் கொண்டு இருக்கிறது (ஆங்கிலத்தில் Purring) என்றால், பூனைகள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கின்றன என்று அர்த்தமல்ல. அந்த குரலுக்கு, பாசத்தைத் தேடுவதாகவோ அல்லது தன் நெருக்கடியான சூழலை வெளிப்படுத்துவதாகவோ இருக்கலாம். இந்த செயலியை அதன் தற்போதைய வடிவத்தில், பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஜோன்ஸ்.

ஒரு பூனையின் மியாவ் சப்தத்தை, நம்மால் ஒரு போதும் மனித வார்த்தைகளாக மாற்ற முடியாமல் போகலாம் என்று பூனை நடத்தை நிபுணரும், 'பூனைகளைப் பற்றி பேசலாம்' என்கிற புத்தகத்தின் ஆசிரியருமான அனிதா கெல்சி கூறுகிறார். பூனைகள், மனித கண்ணோட்டத்தில், என்ன சொல்கின்றன என்று வேண்டுமானால், வேடிக்கையாக சிந்தித்துக் கொள்ளலாம். இந்த செயலி பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. இதைப் பயன்படுத்தி உங்கள் பூனைகளோடு விளையாடுவதில் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் அனிதா.

https://www.bbc.com/tamil/science-55014554

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நாய்களுக்கு ஏதாவது செயலி உள்ளதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 20:25, சுவைப்பிரியன் said:

இப்படி நாய்களுக்கு ஏதாவது செயலி உள்ளதா.

நாட்டு நாய்க்கா அல்லது வளர்ப்பு நாய்க்கா அண்ண 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.