Jump to content

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்தத் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதிலும் பிரச்சனகள் உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு படிகளாகத் தடுப்பூசி போட வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்கள். முதலாவது ஊசி போட்டு மூன்று வாரங்களில் இன்னொரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் தடுப்பு மருந்தினைப் பாதுகாக்க -80 °C வரையிலான வெப்பநிலையில் வைத்திருக்கவும் வேண்டுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, இணையவன் said:

தகவல்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்தத் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதிலும் பிரச்சனகள் உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு படிகளாகத் தடுப்பூசி போட வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்கள். முதலாவது ஊசி போட்டு மூன்று வாரங்களில் இன்னொரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் தடுப்பு மருந்தினைப் பாதுகாக்க -80 °C வரையிலான வெப்பநிலையில் வைத்திருக்கவும் வேண்டுமாம்.

இணையவன், கருத்துப் பகிர்வுக்கு நன்றி!

இரண்டு பகுதிகளாக தடுப்பூசி போட்டுக் கொள்வது பல தடுப்பூசிகளைப் பொறுத்தவரை சாதாரணமான ஒரு விடயம். எங்களுடைய நிர்ப்பீடனக் கலங்களுக்கு ஞாபக சக்தி (memory) என்றொரு இயல்பிருக்கிறது. இந்த ஞாபக சக்தியை அதிகரிக்க இரண்டு தடவைகள் அனேகமாக சில வாரங்கள் இடைவெளியில் போட்டுக் கொள்வது சாதாரணமான முறை. இதில் ஆரோக்கியப் பாதிப்புகள் மேலதிகமாக ஏற்படாது.

இந்த இரு தடுப்பூசிகளில், fபைசர் தடுப்பூசி - 80 பாகை செல்சியசில் பேணப்பட வேண்டும். மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது. இதனால், fபைசர் தடுப்பூசியை விநியோகிப்பதில் ஒரு மேலதிக சவால் இருக்கிறது. மொடெர்னா தடுப்பூசிக்கு பிரச்சினையில்ல. 

இவை இரண்டுமே அறை வெப்ப நிலையில் இலகுவாக அழியக் கூடிய ஆர்.என்.ஏ (RNA) மூலக் கூறுகளால்  ஆன தடுப்பூசிகளாக இருப்பினும், மொடெர்னா சில இரசாயன நுட்பங்களால் ஆர்.என்.ஏ யின் அழிவைத் தடுத்திருக்கிறது. இந்த எளிமையான நுட்பத்தை fபைசரும் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், அந்த தயாரிப்பை முதலில் இருந்து பரிசோதிக்க வேண்டியிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

இணைப்பிற்கு நன்றி ஜஸ்டின்...இப்போது ஒரு செய்தி உலாவுகின்றது மவுத் வோஸ்சுக்கு[Mouth Wash] வைரசை  கொல்லும் சக்தியுள்ளதென்று :unsure:இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

👍

நான் கொரோனாவுக்காக மருத்துவ அறிவுரைபடி அடிக்கடி கைகளை கழுவுவதால் முன்பு அடிக்கடி வரும் தடிமன் கூட 8 மாதமாக வரவில்லை.

25 minutes ago, Justin said:

மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது.

நல்லதே.

செய்தி ஒன்றில் சொன்னார்கள் மொடெர்னா தடுப்பூசி 20 பாகை செல்சியஸ்சில் வைக்க வேண்டும்  என்று அது கூட பிரச்சனை இல்லை freezer  வைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

 SARS-CoV-2: Impfstoff von Biontech/Pfizer verhindert in Phase-3-Studie...

 

ஜஸ்ரின், மூன்றாம் கட்ட, பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட...
அந்த, நான்கு நிறுவனங்களும்...  
எந்த நாட்டுக்கு சொந்தமானவை என அறிய ஆவலாக உள்ளது. 

ஏனென்றால்...  இன்று  ஜேர்மனியில் இருக்கும்   Biontech  நிறுவனமும்,
இப்போது... அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்...
Pfizer நிறுவனமும், ஜேர்மனியில்  ஆரம்பிக்கப் பட்டவை.

கூடுதல் தகவல்...  Biontech  நிறுவனம்,  ஒரு துருக்கி தம்பதியினரின், 
கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டது, என்பது... 
இங்கு  பலரையும், வியந்து பார்க்க வைக்கின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி ஜஸ்டின்...இப்போது ஒரு செய்தி உலாவுகின்றது மவுத் வோஸ்சுக்கு[Mouth Wash] வைரசை  கொல்லும் சக்தியுள்ளதென்று :unsure:இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 

ரதி, இது பற்றிய சிறு ஆய்வுகள் நடந்திருக்கின்றன, செய்திகளிலும் பேசப்படுகிறது. ஆனால், கோவிட் தொற்றை வாய் கழுவும் திரவங்கள் தடுக்காது என்பதே சுருக்கமான பதில். பல வாய் கழுவும் திரவங்களில் ஆகக் கூடியது 20% அல்கஹோல் இருக்கும் , சில வாய் கழுவும் திரவங்களில் அல்கஹோல் இருக்காது. கொரனாவைரசைக் கொல்ல குறைந்தது 60% அல்கஹோல் தேவை. 

வாய் துர்வாசனை தரும் பக்ரீரியாக்களை கொல்லும் இயலுமை மட்டுமே வாய் கழுவும் திரவங்களுக்கு உண்டு. 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

👍

நான் கொரோனாவுக்காக மருத்துவ அறிவுரைபடி அடிக்கடி கைகளை கழுவுவதால் முன்பு அடிக்கடி வரும் தடிமன் கூட 8 மாதமாக வரவில்லை.

நல்லதே.

செய்தி ஒன்றில் சொன்னார்கள் மொடெர்னா தடுப்பூசி 20 பாகை செல்சியஸ்சில் வைக்க வேண்டும்  என்று அது கூட பிரச்சனை இல்லை freezer  வைக்கலாம்.

வி.நி, ஆம். மொடெர்னா தடுப்பூசி - 20 பாகை செல்சியசில் ஆறு மாதங்களும், சாதாரண குளிரூட்டியில்  30 நாட்களும், அறை வெப்ப நிலையில் 12 மணிநேரங்களும் அழிந்து போகாமல் இருக்கும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.
 

1 hour ago, தமிழ் சிறி said:

 SARS-CoV-2: Impfstoff von Biontech/Pfizer verhindert in Phase-3-Studie...

 

ஜஸ்ரின், மூன்றாம் கட்ட, பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட...
அந்த, நான்கு நிறுவனங்களும்...  
எந்த நாட்டுக்கு சொந்தமானவை என அறிய ஆவலாக உள்ளது. 

ஏனென்றால்...  இன்று  ஜேர்மனியில் இருக்கும்   Biontech  நிறுவனமும்,
இப்போது... அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்...
Pfizer நிறுவனமும், ஜேர்மனியில்  ஆரம்பிக்கப் பட்டவை.

கூடுதல் தகவல்...  Biontech  நிறுவனம்,  ஒரு துருக்கி தம்பதியினரின், 
கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டது, என்பது... 
இங்கு  பலரையும், வியந்து பார்க்க வைக்கின்றது.  

த.சி: 

அஸ்ட்ரா செனக்கா - பிரிட்டன். இவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலையோடு சேர்ந்து தடுப்பூசியைத் தயாரித்தனர்.

மொடெர்னா - அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இருக்கும் மிக இளைய கம்பனி. இதன் தலைமை நிர்வாகி ஒரு பிரெஞ்சுக் காரர்.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன்: அமெரிக்கா, நியூ ஜேர்சி மாநிலம். 

fபைசர் இப்போது அமெரிக்காவில் தலைமையகம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

த.சி: 

அஸ்ட்ரா செனக்கா - பிரிட்டன். இவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலையோடு சேர்ந்து தடுப்பூசியைத் தயாரித்தனர்.

மொடெர்னா - அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இருக்கும் மிக இளைய கம்பனி. இதன் தலைமை நிர்வாகி ஒரு பிரெஞ்சுக் காரர்.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன்: அமெரிக்கா, நியூ ஜேர்சி மாநிலம். 

fபைசர் இப்போது அமெரிக்காவில் தலைமையகம். 
 

ஜ--ன்... தகவலுக்கு, நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎-‎11‎-‎2020 at 17:04, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

இந்த தடுப்பூசியினை போடுவதால் கொரோனா கட்டுப்பட்டாலும், ஏதும் பக்க விளைவுகள் பிற் காலத்தில் ஏற்படாதா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 14:09, ரதி said:

இந்த தடுப்பூசியினை போடுவதால் கொரோனா கட்டுப்பட்டாலும், ஏதும் பக்க விளைவுகள் பிற் காலத்தில் ஏற்படாதா ?

 

ரதி, இந்த இரு தடுப்பூசிகளும் புதிய தொழில் நுட்பமாக ஆர்.என்.ஏ (RNA) என்ற மூலக்கூறை முதன் முதலாகப் பயன்படுத்துகின்றன. 

ஆர்.என்.ஏ என்பது எங்கள் உடலின் ஒவ்வொரு செல்லினாலும் மில்லியன் கணக்கில் உற்பத்தியாகும் ஒரு மூலக் கூறு வகை தான். இந்த மில்லியன் கணக்கான எங்கள் உடலின் ஆர்.என்.ஏ சமுத்திரத்தினுள் ஒரு துளியாக தடுப்பூசிகளின் ஆர்.என்.ஏயும் சேர்ந்து கொள்ளும் போது குறுகிய கால நீண்ட கால விளைவுகள் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

தியரிப்படி , இந்த ஒரு துளி தடுப்பூசி ஆர்.என்.ஏ எங்கள் மரபணுக்களோடு இணைந்து (integrate) கொண்டால் அது இணைந்து கொள்ளும் இடத்தைப் பொறுத்து பாதிப்பு ஏற்படலாம். ஆனால், இப்படியான இணைவு நடக்க அவசியமான நொதியம் எங்கள் உடலின் கலங்களில் இல்லை! இதனால் இப்படியான இணைவு நடக்காது. 

எனவே இந்த theoretical ஆன பாதிப்பும் இந்த வகை தடுப்பூசிகளால் ஏற்படாது!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 23:56, Justin said:

இந்த இரு தடுப்பூசிகளில், fபைசர் தடுப்பூசி - 80 பாகை செல்சியசில் பேணப்பட வேண்டும். மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது. இதனால், fபைசர் தடுப்பூசியை விநியோகிப்பதில் ஒரு மேலதிக சவால் இருக்கிறது. மொடெர்னா தடுப்பூசிக்கு பிரச்சினையில்ல. 

இவை இரண்டுமே அறை வெப்ப நிலையில் இலகுவாக அழியக் கூடிய ஆர்.என்.ஏ (RNA) மூலக் கூறுகளால்  ஆன தடுப்பூசிகளாக இருப்பினும், மொடெர்னா சில இரசாயன நுட்பங்களால் ஆர்.என்.ஏ யின் அழிவைத் தடுத்திருக்கிறது. இந்த எளிமையான நுட்பத்தை fபைசரும் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், அந்த தயாரிப்பை முதலில் இருந்து பரிசோதிக்க வேண்டியிருக்கும். 

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

நல்ல கேள்வி ஏராளன். 

மருந்தை உடலினுள் செலுத்தும் வரை அழியாமல் வைத்திருக்கவே குளிர்மை தேவை. உடலினுள் செலுத்தப் பட்டவுடன், தடுப்பூசியில் இருக்கும் மூலக் கூறுகளை  உடற்கலங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இப்படி உள்வாங்கப் பட்ட தடுப்பு மருந்து அழியாமல் பாதுகாக்கப் படுவதற்கு குளிரூட்டல் தேவையில்லை! இந்தக் கலங்களினுள் இருக்கும் பொறிமுறைகள் மூலம், மூலக் கூறுகள் பாதுகாக்கப் பட்டு, ஆர்.என்.ஏயில் இருந்து கோவிட் வைரசை ஒத்த புரதங்களை உருவாக்கும். உண்மையில் இந்தப் பொறிமுறை நடப்பதற்கு உடல் வெப்ப நிலை தான் மிகவும் உகந்தது (optimal)! 

அனேக மருந்துகள் (உ+ம்: இன்சுலின்) குளிரூட்டியில் வைக்கப் படுவது அவை வெப்பத்தினால் அழியாமல் இருப்பதற்கு மட்டுமே. உடலினுள் செலுத்தப் பட்டதும் அவை செயல்பட வேண்டுமானால் உடல் வெப்பநிலை அவசியம்!  

Link to comment
Share on other sites

37 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

அருமையான ஒரு கேள்வி. இப்படி கேள்வி எல்லாம் ஏன் என் மண்டைக்குள் ஒரு போதுமே வருவதில்லை என யோசிச்சுப் பார்க்கின்றேன். ஐஸ்கிரீமை குளிருக்குள் வைத்திருக்கின்ற மாதிரி தான் இதுவும் கெட்டு விடாமல் வைத்திருக்கின்றனர் என்று தான் நினைத்து இருந்தேன்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அருமையான ஒரு கேள்வி. இப்படி கேள்வி எல்லாம் ஏன் என் மண்டைக்குள் ஒரு போதுமே வருவதில்லை என யோசிச்சுப் பார்க்கின்றேன். ஐஸ்கிரீமை குளிருக்குள் வைத்திருக்கின்ற மாதிரி தான் இதுவும் கெட்டு விடாமல் வைத்திருக்கின்றனர் என்று தான் நினைத்து இருந்தேன்.😃

உடலில் சமிபாட்டை அதிகரிக்கும் enzymes போன்றனவும் 37 பாகை செல்ஸியஸில்தான் optimum ஆக வேலை செய்யும். அவையும் புரதங்கள்தான். ஆனால் 41 பாகை தாண்டினால் புரதங்கள் வேலை செய்யாமல் இறப்பைக்கொண்டுவரும். இதெல்லாம் 13/14 வயதில் படிக்கின்றார்கள் என்பதை மகனுக்கு படிப்பிக்க ஆரம்பித்து அறிந்துகொண்டேன்☺️

மில்லியன் ஆண்டுகளாக கூர்ப்படைந்த மனித உடல் மிகவும் optimum ஆக இயங்க பல தொழிற்பாடுகளைக்கொண்டுள்ளது. ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

கொரோனாவுக்கு தடுப்பூசி மேற்கு நாடுகளில் மூன்றுக்கு மேல் வந்துவிட்டது. ரஷ்யா, சீனாவிலும் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் தொடர்பாடலின் வேகத்தால் மனிதர்கள் அறிவை தமக்குள் பகிர்ந்துகொள்வதாலும், கணணி பல்வேறு கடினமான modelling குகளை செய்ய உதவுவதாலுமே சாத்தியமானது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 17:04, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

அருமையான கட்டுரை அண்ணா,

நீங்கள் எடுத்துசொன்ன விதம் அதி சிறப்பு.

வந்த கேள்விகளும் கூடத்தான்.

உண்மையிலேயே இது போன்ற உரையாடல்களை வாசிக்கும் போது யாழ்களம் பற்றி நம்பிக்கையாகவும், ஏன் பெருமையாகவும் கூட உள்ளது.

 

இந்த மொடோர்னா ஊசியை FDA எப்ப அங்கீகரிக்க கூடும்?

பைசருடன் சேர்த்து அறிவிப்பார்கள் போல தெரியவில்லை. பைசரின் ஒப்படைப்பு நடந்து, மதிப்பிடலும் தொடங்கிவிட்டது.

மொடேர்னா வர தைமாதம் ஆகுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

 

 

அப்படி சொன்னால்தானே அவர்கள் டிசைன், டிசைனாக அனுபவிக்கலாம்🤣.

கொரோனா காலம் முழுவதும் பதுங்கி இருந்து விட்டு, தடுப்பூசி வேலை செய்ய தொடங்கியது வருவார்கள்,

”பார்த்தாயா எங்கள் கடவுளின் டிசனை” என்றபடி 🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

”பார்த்தாயா எங்கள் கடவுளின் டிசனை” என்றபடி 🤣.

அடுத்த சம்மருக்கு பிறகு யாழில் ஒரு திரி ஓடவிடுவம்😂😂🤣🤣🤣

அதுக்குள்ள என்னைக் கொரோனா கொண்டுபோகாமல் இருக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

அடுத்த சம்மருக்கு பிறகு யாழில் ஒரு திரி ஓடவிடுவம்😂😂🤣🤣🤣

அதுக்குள்ள என்னைக் கொரோனா கொண்டுபோகாமல் இருக்கவேண்டும்!

கொரொனா வந்தால் ரெண்டு புத்தகத்தை வாசிக்க கொடுங்கோ...பறந்திடும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மில்லியன் ஆண்டுகளாக கூர்ப்படைந்த மனித உடல் மிகவும் optimum ஆக இயங்க பல தொழிற்பாடுகளைக்கொண்டுள்ளது. ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

😂

இயற்கையான அழகான மலைகள் ஆறுகளை படம் பிடித்து அனுப்பியே கிரியேற்றரின் படைப்பை பார் என்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

அருமையான கட்டுரை அண்ணா,

நீங்கள் எடுத்துசொன்ன விதம் அதி சிறப்பு.

வந்த கேள்விகளும் கூடத்தான்.

உண்மையிலேயே இது போன்ற உரையாடல்களை வாசிக்கும் போது யாழ்களம் பற்றி நம்பிக்கையாகவும், ஏன் பெருமையாகவும் கூட உள்ளது.

 

இந்த மொடோர்னா ஊசியை FDA எப்ப அங்கீகரிக்க கூடும்?

பைசருடன் சேர்த்து அறிவிப்பார்கள் போல தெரியவில்லை. பைசரின் ஒப்படைப்பு நடந்து, மதிப்பிடலும் தொடங்கிவிட்டது.

மொடேர்னா வர தைமாதம் ஆகுமோ?

மொடெர்னாவின் பத்திரிகை அறிக்கையின் படி அவர்களது தடுப்பூசி பற்றிய மூன்றாம் நிலை ஆய்வுகள் fபைசர் தடுப்பூசி போலவே முடிந்து விட்டது. இன்னும் அவர்கள் FDA இற்கு எதையும் சமர்ப்பிக்கவில்லை. சமர்ப்பிக்கும் நாளில் இருந்து இரண்டு வாரங்களில் பதில் கிடைக்கலாம். 

எப்படி பார்த்தாலும் ஜனவரி தான் விநியோகம் ஆரம்பிக்கும் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

மொடெர்னாவின் பத்திரிகை அறிக்கையின் படி அவர்களது தடுப்பூசி பற்றிய மூன்றாம் நிலை ஆய்வுகள் fபைசர் தடுப்பூசி போலவே முடிந்து விட்டது. இன்னும் அவர்கள் FDA இற்கு எதையும் சமர்ப்பிக்கவில்லை. சமர்ப்பிக்கும் நாளில் இருந்து இரண்டு வாரங்களில் பதில் கிடைக்கலாம். 

எப்படி பார்த்தாலும் ஜனவரி தான் விநியோகம் ஆரம்பிக்கும் போல தெரிகிறது.

நன்றி.

பைசர் சொல்லி, ஒருவாரத்தில் மொடோனாவும் பூர்வாங்க முடிவை சொல்கியது. ஆனால் பைசர் சமர்பித்து ஒரு வாரம் ஆகியும் இவர்கள் இன்னும் சமர்பிக்கவில்லை.

நாளைக்கு சமர்பிக்க கூடும்.

ஆக்போர்ட்-அஸ்ராசெனிக்கா, அரைடோஸ் கொடுத்தது தவறுதலாய், அந்த குழுவில் இருந்தவர் எல்லாரும் இளவயதினர் என்பதால் 90% மீதான நம்பகதன்மை கேள்விகுறியாகியுள்ளது. 

அக்ஸ்போர்ட்டில் நடந்த குளறுபடியை பார்க்க, மொடோர்னா காலம் தாழ்துவதிலும் சந்தேகம் வருகிறது.

2 hours ago, சுவைப்பிரியன் said:

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

சுவை,

வரும். மிக அரிதாக சிலருக்கு 2 தரம் வந்துள்ளது. 

2ம் பாதிப்பு கடுமையானதாயும் தெரிகிறது.

அண்மையில் UCL செய்த ஆய்வு, கொரோனா இயற்கையாக வந்த பின் ஏற்படும் antibodies (நோயெதிர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பன) 6 மாதங்களில் பலருக்கு குறைய தொடங்குவதாய் காட்டுகிறது.

ஆனால் இன்னொரு வகையாக T Cells மூலம் வரும் நோயெதிர்ப்பு அதிக காலம் தாக்கு பிடிக்க முடியும் என்றும் வாசித்தேன். 

பாப்போம் ஜஸ்டின் அண்ணா பூரண விளக்கத்தை தருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு போனில் கதைத்த போது 107 பேர் கொரோனாவால் இறந்துவிட்டார்கள் என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.அமெரிக்கா யுகே ஒருநாள் கொரோனா இறப்பு தொகையை நினைத்து பார்த்தேன்.

கொரனா வந்த ஒருவர் தன்னை 10 அல்லது 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்று தொலைகாட்சி ஒன்றில் சொன்னார்கள்.ஜஸ்டின் அண்ணா தான் சரியா என்பதை சொல்ல வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 15:38, சுவைப்பிரியன் said:

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

சுவை, 

1. கோசான் சொன்னது போல, கொரனா இரண்டாம் தடவையும் வெகு சிலருக்கு வந்துள்ளது, ஆனால் இது பொதுவான ஒரு நிலைமையாகக் கொள்ளப் படவில்லை. நவீன கொரனா வைரஸ் உட்பட, எந்த வைரசும் தொற்றும் போது, எங்கள் உடல் உடனடியாக ஒரு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். சில வைரசுகளில், இந்த நோயெதிர்ப்பு சக்தி சில மாதங்களில் மறைந்து விடுவதால், மீளவும் தொற்று ஏற்படும். நவீன கொரனா வைரசுக்கான உடலின் எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களில் குறைந்ததாக ஆய்வுகள் சில சொல்கின்றன. ஆனால், அன்ரி பொடி எனப்படும் வைரஸ் எதிர்ப்பு பிறபொருளெதிரிகள் இவ்வாறு குறைந்தாலும், இரண்டாம் தொற்று ஏற்படாமல் இருக்க வேறு பொறிமுறைகள் எங்கள் உடலில் தொழிற்படுகின்றன. 

சுருக்கமாகச் சொன்னால், இரண்டாம் தொற்று பரவலாக இல்லை. ஆனால், தடுப்பூசி போன்ற   நிரந்தர தீர்வு வரும் வரையில் கொரனா தொற்று வந்தோர் தொடர்ந்தும் தடுப்பு முறைகளை ஏனையோர் போலக் கடைப்பிடிக்க வேண்டும். 

2. வீட்டில் கொரனா தொற்று வந்த ஒருவரோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கு இரண்டு கட்டங்களாக தனிமைப் படுத்தல் செய்யப் படுகிறது: 1) இவர்கள் நோயாளி தனிமையில் இருக்கும் நாள் வரை வெளியாருடன் தொடர்பின்றி இருக்க வேண்டும். 2) பின்னர், நோயுற்றவரின் தனிமைப் படுத்தல் காலம் முடிந்த நாளில் இருந்து அடுத்த 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 

 நோயாளியின் தனிமைப் படுத்தல் முடிவு நாள் , அவரது தீவிர நோய்க்குணங்குறிகளும் மறைந்து, கொரனா பரிசோதனை முடிவு நெகரிவாக வரும் நாளாக இருக்கும்.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.