Jump to content

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்தத் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதிலும் பிரச்சனகள் உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு படிகளாகத் தடுப்பூசி போட வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்கள். முதலாவது ஊசி போட்டு மூன்று வாரங்களில் இன்னொரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் தடுப்பு மருந்தினைப் பாதுகாக்க -80 °C வரையிலான வெப்பநிலையில் வைத்திருக்கவும் வேண்டுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, இணையவன் said:

தகவல்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்தத் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதிலும் பிரச்சனகள் உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு படிகளாகத் தடுப்பூசி போட வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்கள். முதலாவது ஊசி போட்டு மூன்று வாரங்களில் இன்னொரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் தடுப்பு மருந்தினைப் பாதுகாக்க -80 °C வரையிலான வெப்பநிலையில் வைத்திருக்கவும் வேண்டுமாம்.

இணையவன், கருத்துப் பகிர்வுக்கு நன்றி!

இரண்டு பகுதிகளாக தடுப்பூசி போட்டுக் கொள்வது பல தடுப்பூசிகளைப் பொறுத்தவரை சாதாரணமான ஒரு விடயம். எங்களுடைய நிர்ப்பீடனக் கலங்களுக்கு ஞாபக சக்தி (memory) என்றொரு இயல்பிருக்கிறது. இந்த ஞாபக சக்தியை அதிகரிக்க இரண்டு தடவைகள் அனேகமாக சில வாரங்கள் இடைவெளியில் போட்டுக் கொள்வது சாதாரணமான முறை. இதில் ஆரோக்கியப் பாதிப்புகள் மேலதிகமாக ஏற்படாது.

இந்த இரு தடுப்பூசிகளில், fபைசர் தடுப்பூசி - 80 பாகை செல்சியசில் பேணப்பட வேண்டும். மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது. இதனால், fபைசர் தடுப்பூசியை விநியோகிப்பதில் ஒரு மேலதிக சவால் இருக்கிறது. மொடெர்னா தடுப்பூசிக்கு பிரச்சினையில்ல. 

இவை இரண்டுமே அறை வெப்ப நிலையில் இலகுவாக அழியக் கூடிய ஆர்.என்.ஏ (RNA) மூலக் கூறுகளால்  ஆன தடுப்பூசிகளாக இருப்பினும், மொடெர்னா சில இரசாயன நுட்பங்களால் ஆர்.என்.ஏ யின் அழிவைத் தடுத்திருக்கிறது. இந்த எளிமையான நுட்பத்தை fபைசரும் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், அந்த தயாரிப்பை முதலில் இருந்து பரிசோதிக்க வேண்டியிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

இணைப்பிற்கு நன்றி ஜஸ்டின்...இப்போது ஒரு செய்தி உலாவுகின்றது மவுத் வோஸ்சுக்கு[Mouth Wash] வைரசை  கொல்லும் சக்தியுள்ளதென்று :unsure:இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

👍

நான் கொரோனாவுக்காக மருத்துவ அறிவுரைபடி அடிக்கடி கைகளை கழுவுவதால் முன்பு அடிக்கடி வரும் தடிமன் கூட 8 மாதமாக வரவில்லை.

25 minutes ago, Justin said:

மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது.

நல்லதே.

செய்தி ஒன்றில் சொன்னார்கள் மொடெர்னா தடுப்பூசி 20 பாகை செல்சியஸ்சில் வைக்க வேண்டும்  என்று அது கூட பிரச்சனை இல்லை freezer  வைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

 SARS-CoV-2: Impfstoff von Biontech/Pfizer verhindert in Phase-3-Studie...

 

ஜஸ்ரின், மூன்றாம் கட்ட, பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட...
அந்த, நான்கு நிறுவனங்களும்...  
எந்த நாட்டுக்கு சொந்தமானவை என அறிய ஆவலாக உள்ளது. 

ஏனென்றால்...  இன்று  ஜேர்மனியில் இருக்கும்   Biontech  நிறுவனமும்,
இப்போது... அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்...
Pfizer நிறுவனமும், ஜேர்மனியில்  ஆரம்பிக்கப் பட்டவை.

கூடுதல் தகவல்...  Biontech  நிறுவனம்,  ஒரு துருக்கி தம்பதியினரின், 
கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டது, என்பது... 
இங்கு  பலரையும், வியந்து பார்க்க வைக்கின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி ஜஸ்டின்...இப்போது ஒரு செய்தி உலாவுகின்றது மவுத் வோஸ்சுக்கு[Mouth Wash] வைரசை  கொல்லும் சக்தியுள்ளதென்று :unsure:இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 

ரதி, இது பற்றிய சிறு ஆய்வுகள் நடந்திருக்கின்றன, செய்திகளிலும் பேசப்படுகிறது. ஆனால், கோவிட் தொற்றை வாய் கழுவும் திரவங்கள் தடுக்காது என்பதே சுருக்கமான பதில். பல வாய் கழுவும் திரவங்களில் ஆகக் கூடியது 20% அல்கஹோல் இருக்கும் , சில வாய் கழுவும் திரவங்களில் அல்கஹோல் இருக்காது. கொரனாவைரசைக் கொல்ல குறைந்தது 60% அல்கஹோல் தேவை. 

வாய் துர்வாசனை தரும் பக்ரீரியாக்களை கொல்லும் இயலுமை மட்டுமே வாய் கழுவும் திரவங்களுக்கு உண்டு. 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

👍

நான் கொரோனாவுக்காக மருத்துவ அறிவுரைபடி அடிக்கடி கைகளை கழுவுவதால் முன்பு அடிக்கடி வரும் தடிமன் கூட 8 மாதமாக வரவில்லை.

நல்லதே.

செய்தி ஒன்றில் சொன்னார்கள் மொடெர்னா தடுப்பூசி 20 பாகை செல்சியஸ்சில் வைக்க வேண்டும்  என்று அது கூட பிரச்சனை இல்லை freezer  வைக்கலாம்.

வி.நி, ஆம். மொடெர்னா தடுப்பூசி - 20 பாகை செல்சியசில் ஆறு மாதங்களும், சாதாரண குளிரூட்டியில்  30 நாட்களும், அறை வெப்ப நிலையில் 12 மணிநேரங்களும் அழிந்து போகாமல் இருக்கும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.
 

1 hour ago, தமிழ் சிறி said:

 SARS-CoV-2: Impfstoff von Biontech/Pfizer verhindert in Phase-3-Studie...

 

ஜஸ்ரின், மூன்றாம் கட்ட, பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட...
அந்த, நான்கு நிறுவனங்களும்...  
எந்த நாட்டுக்கு சொந்தமானவை என அறிய ஆவலாக உள்ளது. 

ஏனென்றால்...  இன்று  ஜேர்மனியில் இருக்கும்   Biontech  நிறுவனமும்,
இப்போது... அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்...
Pfizer நிறுவனமும், ஜேர்மனியில்  ஆரம்பிக்கப் பட்டவை.

கூடுதல் தகவல்...  Biontech  நிறுவனம்,  ஒரு துருக்கி தம்பதியினரின், 
கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டது, என்பது... 
இங்கு  பலரையும், வியந்து பார்க்க வைக்கின்றது.  

த.சி: 

அஸ்ட்ரா செனக்கா - பிரிட்டன். இவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலையோடு சேர்ந்து தடுப்பூசியைத் தயாரித்தனர்.

மொடெர்னா - அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இருக்கும் மிக இளைய கம்பனி. இதன் தலைமை நிர்வாகி ஒரு பிரெஞ்சுக் காரர்.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன்: அமெரிக்கா, நியூ ஜேர்சி மாநிலம். 

fபைசர் இப்போது அமெரிக்காவில் தலைமையகம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

த.சி: 

அஸ்ட்ரா செனக்கா - பிரிட்டன். இவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலையோடு சேர்ந்து தடுப்பூசியைத் தயாரித்தனர்.

மொடெர்னா - அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இருக்கும் மிக இளைய கம்பனி. இதன் தலைமை நிர்வாகி ஒரு பிரெஞ்சுக் காரர்.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன்: அமெரிக்கா, நியூ ஜேர்சி மாநிலம். 

fபைசர் இப்போது அமெரிக்காவில் தலைமையகம். 
 

ஜ--ன்... தகவலுக்கு, நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎-‎11‎-‎2020 at 17:04, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

இந்த தடுப்பூசியினை போடுவதால் கொரோனா கட்டுப்பட்டாலும், ஏதும் பக்க விளைவுகள் பிற் காலத்தில் ஏற்படாதா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 14:09, ரதி said:

இந்த தடுப்பூசியினை போடுவதால் கொரோனா கட்டுப்பட்டாலும், ஏதும் பக்க விளைவுகள் பிற் காலத்தில் ஏற்படாதா ?

 

ரதி, இந்த இரு தடுப்பூசிகளும் புதிய தொழில் நுட்பமாக ஆர்.என்.ஏ (RNA) என்ற மூலக்கூறை முதன் முதலாகப் பயன்படுத்துகின்றன. 

ஆர்.என்.ஏ என்பது எங்கள் உடலின் ஒவ்வொரு செல்லினாலும் மில்லியன் கணக்கில் உற்பத்தியாகும் ஒரு மூலக் கூறு வகை தான். இந்த மில்லியன் கணக்கான எங்கள் உடலின் ஆர்.என்.ஏ சமுத்திரத்தினுள் ஒரு துளியாக தடுப்பூசிகளின் ஆர்.என்.ஏயும் சேர்ந்து கொள்ளும் போது குறுகிய கால நீண்ட கால விளைவுகள் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

தியரிப்படி , இந்த ஒரு துளி தடுப்பூசி ஆர்.என்.ஏ எங்கள் மரபணுக்களோடு இணைந்து (integrate) கொண்டால் அது இணைந்து கொள்ளும் இடத்தைப் பொறுத்து பாதிப்பு ஏற்படலாம். ஆனால், இப்படியான இணைவு நடக்க அவசியமான நொதியம் எங்கள் உடலின் கலங்களில் இல்லை! இதனால் இப்படியான இணைவு நடக்காது. 

எனவே இந்த theoretical ஆன பாதிப்பும் இந்த வகை தடுப்பூசிகளால் ஏற்படாது!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 23:56, Justin said:

இந்த இரு தடுப்பூசிகளில், fபைசர் தடுப்பூசி - 80 பாகை செல்சியசில் பேணப்பட வேண்டும். மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது. இதனால், fபைசர் தடுப்பூசியை விநியோகிப்பதில் ஒரு மேலதிக சவால் இருக்கிறது. மொடெர்னா தடுப்பூசிக்கு பிரச்சினையில்ல. 

இவை இரண்டுமே அறை வெப்ப நிலையில் இலகுவாக அழியக் கூடிய ஆர்.என்.ஏ (RNA) மூலக் கூறுகளால்  ஆன தடுப்பூசிகளாக இருப்பினும், மொடெர்னா சில இரசாயன நுட்பங்களால் ஆர்.என்.ஏ யின் அழிவைத் தடுத்திருக்கிறது. இந்த எளிமையான நுட்பத்தை fபைசரும் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், அந்த தயாரிப்பை முதலில் இருந்து பரிசோதிக்க வேண்டியிருக்கும். 

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

நல்ல கேள்வி ஏராளன். 

மருந்தை உடலினுள் செலுத்தும் வரை அழியாமல் வைத்திருக்கவே குளிர்மை தேவை. உடலினுள் செலுத்தப் பட்டவுடன், தடுப்பூசியில் இருக்கும் மூலக் கூறுகளை  உடற்கலங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இப்படி உள்வாங்கப் பட்ட தடுப்பு மருந்து அழியாமல் பாதுகாக்கப் படுவதற்கு குளிரூட்டல் தேவையில்லை! இந்தக் கலங்களினுள் இருக்கும் பொறிமுறைகள் மூலம், மூலக் கூறுகள் பாதுகாக்கப் பட்டு, ஆர்.என்.ஏயில் இருந்து கோவிட் வைரசை ஒத்த புரதங்களை உருவாக்கும். உண்மையில் இந்தப் பொறிமுறை நடப்பதற்கு உடல் வெப்ப நிலை தான் மிகவும் உகந்தது (optimal)! 

அனேக மருந்துகள் (உ+ம்: இன்சுலின்) குளிரூட்டியில் வைக்கப் படுவது அவை வெப்பத்தினால் அழியாமல் இருப்பதற்கு மட்டுமே. உடலினுள் செலுத்தப் பட்டதும் அவை செயல்பட வேண்டுமானால் உடல் வெப்பநிலை அவசியம்!  

Link to comment
Share on other sites

37 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

அருமையான ஒரு கேள்வி. இப்படி கேள்வி எல்லாம் ஏன் என் மண்டைக்குள் ஒரு போதுமே வருவதில்லை என யோசிச்சுப் பார்க்கின்றேன். ஐஸ்கிரீமை குளிருக்குள் வைத்திருக்கின்ற மாதிரி தான் இதுவும் கெட்டு விடாமல் வைத்திருக்கின்றனர் என்று தான் நினைத்து இருந்தேன்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அருமையான ஒரு கேள்வி. இப்படி கேள்வி எல்லாம் ஏன் என் மண்டைக்குள் ஒரு போதுமே வருவதில்லை என யோசிச்சுப் பார்க்கின்றேன். ஐஸ்கிரீமை குளிருக்குள் வைத்திருக்கின்ற மாதிரி தான் இதுவும் கெட்டு விடாமல் வைத்திருக்கின்றனர் என்று தான் நினைத்து இருந்தேன்.😃

உடலில் சமிபாட்டை அதிகரிக்கும் enzymes போன்றனவும் 37 பாகை செல்ஸியஸில்தான் optimum ஆக வேலை செய்யும். அவையும் புரதங்கள்தான். ஆனால் 41 பாகை தாண்டினால் புரதங்கள் வேலை செய்யாமல் இறப்பைக்கொண்டுவரும். இதெல்லாம் 13/14 வயதில் படிக்கின்றார்கள் என்பதை மகனுக்கு படிப்பிக்க ஆரம்பித்து அறிந்துகொண்டேன்☺️

மில்லியன் ஆண்டுகளாக கூர்ப்படைந்த மனித உடல் மிகவும் optimum ஆக இயங்க பல தொழிற்பாடுகளைக்கொண்டுள்ளது. ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

கொரோனாவுக்கு தடுப்பூசி மேற்கு நாடுகளில் மூன்றுக்கு மேல் வந்துவிட்டது. ரஷ்யா, சீனாவிலும் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் தொடர்பாடலின் வேகத்தால் மனிதர்கள் அறிவை தமக்குள் பகிர்ந்துகொள்வதாலும், கணணி பல்வேறு கடினமான modelling குகளை செய்ய உதவுவதாலுமே சாத்தியமானது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 17:04, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

அருமையான கட்டுரை அண்ணா,

நீங்கள் எடுத்துசொன்ன விதம் அதி சிறப்பு.

வந்த கேள்விகளும் கூடத்தான்.

உண்மையிலேயே இது போன்ற உரையாடல்களை வாசிக்கும் போது யாழ்களம் பற்றி நம்பிக்கையாகவும், ஏன் பெருமையாகவும் கூட உள்ளது.

 

இந்த மொடோர்னா ஊசியை FDA எப்ப அங்கீகரிக்க கூடும்?

பைசருடன் சேர்த்து அறிவிப்பார்கள் போல தெரியவில்லை. பைசரின் ஒப்படைப்பு நடந்து, மதிப்பிடலும் தொடங்கிவிட்டது.

மொடேர்னா வர தைமாதம் ஆகுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

 

 

அப்படி சொன்னால்தானே அவர்கள் டிசைன், டிசைனாக அனுபவிக்கலாம்🤣.

கொரோனா காலம் முழுவதும் பதுங்கி இருந்து விட்டு, தடுப்பூசி வேலை செய்ய தொடங்கியது வருவார்கள்,

”பார்த்தாயா எங்கள் கடவுளின் டிசனை” என்றபடி 🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

”பார்த்தாயா எங்கள் கடவுளின் டிசனை” என்றபடி 🤣.

அடுத்த சம்மருக்கு பிறகு யாழில் ஒரு திரி ஓடவிடுவம்😂😂🤣🤣🤣

அதுக்குள்ள என்னைக் கொரோனா கொண்டுபோகாமல் இருக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

அடுத்த சம்மருக்கு பிறகு யாழில் ஒரு திரி ஓடவிடுவம்😂😂🤣🤣🤣

அதுக்குள்ள என்னைக் கொரோனா கொண்டுபோகாமல் இருக்கவேண்டும்!

கொரொனா வந்தால் ரெண்டு புத்தகத்தை வாசிக்க கொடுங்கோ...பறந்திடும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மில்லியன் ஆண்டுகளாக கூர்ப்படைந்த மனித உடல் மிகவும் optimum ஆக இயங்க பல தொழிற்பாடுகளைக்கொண்டுள்ளது. ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

😂

இயற்கையான அழகான மலைகள் ஆறுகளை படம் பிடித்து அனுப்பியே கிரியேற்றரின் படைப்பை பார் என்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

அருமையான கட்டுரை அண்ணா,

நீங்கள் எடுத்துசொன்ன விதம் அதி சிறப்பு.

வந்த கேள்விகளும் கூடத்தான்.

உண்மையிலேயே இது போன்ற உரையாடல்களை வாசிக்கும் போது யாழ்களம் பற்றி நம்பிக்கையாகவும், ஏன் பெருமையாகவும் கூட உள்ளது.

 

இந்த மொடோர்னா ஊசியை FDA எப்ப அங்கீகரிக்க கூடும்?

பைசருடன் சேர்த்து அறிவிப்பார்கள் போல தெரியவில்லை. பைசரின் ஒப்படைப்பு நடந்து, மதிப்பிடலும் தொடங்கிவிட்டது.

மொடேர்னா வர தைமாதம் ஆகுமோ?

மொடெர்னாவின் பத்திரிகை அறிக்கையின் படி அவர்களது தடுப்பூசி பற்றிய மூன்றாம் நிலை ஆய்வுகள் fபைசர் தடுப்பூசி போலவே முடிந்து விட்டது. இன்னும் அவர்கள் FDA இற்கு எதையும் சமர்ப்பிக்கவில்லை. சமர்ப்பிக்கும் நாளில் இருந்து இரண்டு வாரங்களில் பதில் கிடைக்கலாம். 

எப்படி பார்த்தாலும் ஜனவரி தான் விநியோகம் ஆரம்பிக்கும் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

மொடெர்னாவின் பத்திரிகை அறிக்கையின் படி அவர்களது தடுப்பூசி பற்றிய மூன்றாம் நிலை ஆய்வுகள் fபைசர் தடுப்பூசி போலவே முடிந்து விட்டது. இன்னும் அவர்கள் FDA இற்கு எதையும் சமர்ப்பிக்கவில்லை. சமர்ப்பிக்கும் நாளில் இருந்து இரண்டு வாரங்களில் பதில் கிடைக்கலாம். 

எப்படி பார்த்தாலும் ஜனவரி தான் விநியோகம் ஆரம்பிக்கும் போல தெரிகிறது.

நன்றி.

பைசர் சொல்லி, ஒருவாரத்தில் மொடோனாவும் பூர்வாங்க முடிவை சொல்கியது. ஆனால் பைசர் சமர்பித்து ஒரு வாரம் ஆகியும் இவர்கள் இன்னும் சமர்பிக்கவில்லை.

நாளைக்கு சமர்பிக்க கூடும்.

ஆக்போர்ட்-அஸ்ராசெனிக்கா, அரைடோஸ் கொடுத்தது தவறுதலாய், அந்த குழுவில் இருந்தவர் எல்லாரும் இளவயதினர் என்பதால் 90% மீதான நம்பகதன்மை கேள்விகுறியாகியுள்ளது. 

அக்ஸ்போர்ட்டில் நடந்த குளறுபடியை பார்க்க, மொடோர்னா காலம் தாழ்துவதிலும் சந்தேகம் வருகிறது.

2 hours ago, சுவைப்பிரியன் said:

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

சுவை,

வரும். மிக அரிதாக சிலருக்கு 2 தரம் வந்துள்ளது. 

2ம் பாதிப்பு கடுமையானதாயும் தெரிகிறது.

அண்மையில் UCL செய்த ஆய்வு, கொரோனா இயற்கையாக வந்த பின் ஏற்படும் antibodies (நோயெதிர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பன) 6 மாதங்களில் பலருக்கு குறைய தொடங்குவதாய் காட்டுகிறது.

ஆனால் இன்னொரு வகையாக T Cells மூலம் வரும் நோயெதிர்ப்பு அதிக காலம் தாக்கு பிடிக்க முடியும் என்றும் வாசித்தேன். 

பாப்போம் ஜஸ்டின் அண்ணா பூரண விளக்கத்தை தருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு போனில் கதைத்த போது 107 பேர் கொரோனாவால் இறந்துவிட்டார்கள் என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.அமெரிக்கா யுகே ஒருநாள் கொரோனா இறப்பு தொகையை நினைத்து பார்த்தேன்.

கொரனா வந்த ஒருவர் தன்னை 10 அல்லது 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்று தொலைகாட்சி ஒன்றில் சொன்னார்கள்.ஜஸ்டின் அண்ணா தான் சரியா என்பதை சொல்ல வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 15:38, சுவைப்பிரியன் said:

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

சுவை, 

1. கோசான் சொன்னது போல, கொரனா இரண்டாம் தடவையும் வெகு சிலருக்கு வந்துள்ளது, ஆனால் இது பொதுவான ஒரு நிலைமையாகக் கொள்ளப் படவில்லை. நவீன கொரனா வைரஸ் உட்பட, எந்த வைரசும் தொற்றும் போது, எங்கள் உடல் உடனடியாக ஒரு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். சில வைரசுகளில், இந்த நோயெதிர்ப்பு சக்தி சில மாதங்களில் மறைந்து விடுவதால், மீளவும் தொற்று ஏற்படும். நவீன கொரனா வைரசுக்கான உடலின் எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களில் குறைந்ததாக ஆய்வுகள் சில சொல்கின்றன. ஆனால், அன்ரி பொடி எனப்படும் வைரஸ் எதிர்ப்பு பிறபொருளெதிரிகள் இவ்வாறு குறைந்தாலும், இரண்டாம் தொற்று ஏற்படாமல் இருக்க வேறு பொறிமுறைகள் எங்கள் உடலில் தொழிற்படுகின்றன. 

சுருக்கமாகச் சொன்னால், இரண்டாம் தொற்று பரவலாக இல்லை. ஆனால், தடுப்பூசி போன்ற   நிரந்தர தீர்வு வரும் வரையில் கொரனா தொற்று வந்தோர் தொடர்ந்தும் தடுப்பு முறைகளை ஏனையோர் போலக் கடைப்பிடிக்க வேண்டும். 

2. வீட்டில் கொரனா தொற்று வந்த ஒருவரோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கு இரண்டு கட்டங்களாக தனிமைப் படுத்தல் செய்யப் படுகிறது: 1) இவர்கள் நோயாளி தனிமையில் இருக்கும் நாள் வரை வெளியாருடன் தொடர்பின்றி இருக்க வேண்டும். 2) பின்னர், நோயுற்றவரின் தனிமைப் படுத்தல் காலம் முடிந்த நாளில் இருந்து அடுத்த 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 

 நோயாளியின் தனிமைப் படுத்தல் முடிவு நாள் , அவரது தீவிர நோய்க்குணங்குறிகளும் மறைந்து, கொரனா பரிசோதனை முடிவு நெகரிவாக வரும் நாளாக இருக்கும்.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.