Jump to content

எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா

  • November 20, 202012:21 pm

FD95F644-8EA1-4803-9593-53A7541468AE-300

மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலதிகமாக இனவாத வைரஸையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு சட்டங்களும் அதன் உண்மையான நோக்கிலிருந்து திசை திரும்பி தமிழருக்கு எதிராகப் பாய்வது போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அதன் இலக்கிலிருந்து திசை திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. யுத்தம் முடிந்து பதினொரு ஆண்டுகளாகி விட்டன. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் அப்படியே இருக்க எமது பிள்ளைகளை நினைவுகூருவது புலிகளின் மீளுருவாக்கம் என்று கற்பிதம் பண்ண முயல்வது விஷமத்தனமான செயல்.

எங்கள் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடத்தில் நின்று கண்ணீராலும் வாய்மொழியாலும், மனதாலும் பிள்ளைகளிடம் உறவாட நினைக்கிறோம். அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு வரும்போது இந்த ஒரு வருடமாக மனதில் சுமந்த சுமைகளை கேள்விகளை அங்கே இறக்கி விட்டு வருவது போன்ற உணர்வும் திருப்தியும் எமக்கு ஏற்படும். நிலைமாறுகால நீதியும் உறவுகளை நினைவுகூருவதை ஏற்றுக்கொள்கின்றது. சங்கிலித் தொடராக நிகழ்ந்து வரும் உணர்வுபூர்வமான நிகழ்வைக் கைவிட எமது மனம் துணிய மாட்டாது.

இந்த நிலையிலும் உலக ஒழுங்கிலிருந்து நாம் மாறுபட்டு நடக்க முடியாது. ஒரு கட்டுப்பாடான வழிநடத்தலில் தம்மை ஆகுதியாக்கிய பிள்ளைகளின் பெயரால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணமாகி விடக்கூடாது. எல்லாத் துயிலும் இல்லங்களிலும் தனிநபர் இடைவெளியைப் பேணக்கூடியவாறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன். அவ்வாறான அறிவுறுத்தல்கள் சரியான முறையில் செய்யப்பட்டிருக்காவிடினும் முன்னுதாரணமான மக்கள் கூட்டமாக நாம் நடந்து கொள்வோம். 

அஞ்சலி செலுத்தும்போது மாவீரரின் பெற்றோர் பிள்ளைகள் உறவுகளில் யாரோ ஒருவர் மட்டும் விதைக்கப்பட்ட இடங்களில் நின்று அஞ்சலிக்கட்டும். ஏனையோர் நிகழ்விடத்துக்கு வெளியே தனிநபர் இடைவெளியையும் சுகாதார நடைமுறைகளையும் பேணியபடி தங்கள் சொந்தங்களுக்காக அஞ்சலிக்கட்டும். அங்கு நிற்கும்போது புதிய முகக் கவசத்தை அணிந்திருப்போம். எதற்கும் முன்னெச்சரிக்கையா இன்னொன்றை எமது உடைமையில் வைத்திருப்போம். 

கிருமி நீக்கும் திரவங்கள் மூலம் எமது கைகளைச் சுத்தப்படுத்துவதற்கு அடுத்தவரை நம்பியிராமல் வழமைபோல், பூக்கள், எண்ணெய், திரி ,சுட்டி, கற்பூரம் முதலானவற்றைக் கொண்டு செல்வதுபோல் அதனையும் கொண்டு செல்வோம். நினைவேந்தல் முடிந்த பின்னரும் தனிநபர் இடைவெளியைப் பேணிக் கொள்வோம். எமது நடத்தை முன்னுதாரணமாக அமையட்டும். 

ஆயுதம் ஏந்தி மடிந்த தமது பிள்ளைகளை நினைவுகூரத் தமக்குள்ள உரிமை எமக்கும் உள்ளது என்பதை இரு புரட்சியின்போதும் உயிரிநீத்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வர். அவர்கள் முழுநாட்டையுமே கைப்பற்ற நினைத்தவர்கள் எமது பிள்ளைகள் அவ்வாறில்லை. அப்படியிருந்தும் கண்ணீரில் வேறுபாடு காட்டச் சொல்லும் சட்டங்கள் பொருத்தப்பாடானவையல்ல. அந்தப் பெற்றோரின் வேதனைகள் உணர்வுகள் எம்மால் மதிக்கப்பட வேண்டியவை. அதுபோல எமது உணர்வுகளை தாங்கள் வாக்களித்த தெரிவு செய்த தரப்புகளுக்கு உணர்த்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர் முயல்வர் என்று நம்புகிறோம்.

பல்லினங்கள் வாழும் நாட்டில் எந்தவொரு இனத்தவரின் கௌரவமும் பாதிக்காத வகையில் ஆட்சி நடத்திய சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூவின் வரலாற்றை தென்பகுதி மக்களுக்கு அங்குள்ள அறிஞர்கள் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். களத்தில் தன்னெதிரே போரிட்டு மடிந்த எல்லாள மன்னனின் நினைவிடத்தில் சகலரும் மரியாதை செலுத்த வேண்டும் என அறிவித்த துட்டகைமுனு மன்னனின் நோக்கத்தையும் வரலாற்றையும் சரியான முறையில் மக்களிடம் விளக்கத் தவறியதால்தான் இன்றைய பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எப்போது புரியப் போகிறார்கள். 

திரு. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்” என்ற பெயரில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழு அனைவரினதும் அபிப்பிராயத்தைக் கோரியது. “எனது மகள் விதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்”, என நான் எழுத்துமூலம் தெரிவித்திருந்தேன். ஒவ்வொரு மாவீரரின் பெற்றோரின் எதிர்பார்ப்பும் அதுதான். இன்றைய ஜனாதிபதிக்கும் இதே விடயத்தையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நல்லது நடக்குமென எதிர்பார்ப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை. 

புலம்பெயர் உறவுகள் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்தபடி நினைவேந்தலை மேற்கொள்ளுங்கள். எம்மைப் புரிந்து கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகள், குழுக்களையும் பணிவாக வேண்டுகிறோம். எமது கண்ணீரில் தயவு செய்து அரசியல் இலாப – நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்.

 

https://www.meenagam.com/எம்-செல்வங்களின்-தியாகத்/

 

Link to comment
Share on other sites

On 20/11/2020 at 10:52, கிருபன் said:

எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா

  • November 20, 202012:21 pm

FD95F644-8EA1-4803-9593-53A7541468AE-300

யாழ் களத்தில் பொழுதுபோக்கு செய்யலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2020 at 05:52, கிருபன் said:

களத்தில் தன்னெதிரே போரிட்டு மடிந்த எல்லாள மன்னனின் நினைவிடத்தில் சகலரும் மரியாதை செலுத்த வேண்டும் என அறிவித்த துட்டகைமுனு மன்னனின் நோக்கத்தையும் வரலாற்றையும் சரியான முறையில் மக்களிடம் விளக்கத் தவறியதால்தான் இன்றைய பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எப்போது புரியப் போகிறார்கள். 

தமிழரை துடிக்க, துடிக்க கொன்றொழித்த மஹிந்தவை இரண்டாவது துட்ட கைமுனு என்று சிங்கள மக்கள் புகழ்ந்ததையும் அதைக்கண்ட மஹிந்த தன்னை அரசராக வரைந்து கட்டவுட் வைத்ததில் இருந்தும் தெரிய வருவது: வஞ்சகமாக  எல்லாளனை தான் கொன்றதை மறைத்து தன்னை ஒரு நல்லவனாக காட்டவுமே இந்த இடத்தில் பயணம் செய்வோர் நின்று தம் தொப்பிகளை கழற்றி தலை குனிந்து மரியாதை செலுத்த வேண்டும் என அறிவித்தல் பலகை வைத்தான். இதன் மூலம் தான் செய்த பாவத்துக்கு பரிகாரம் கிடைத்துவிடும் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் தனது சின்னத்தனத்தையும் வயதான  எல்லாளனின் வீரத்தையும் அவனால் அன்று மறுதலித்திருக்க முடியாது. போர்க்களத்தில் போர்க்கருவிகளை  இழந்து தலைகுனிந்து  நின்ற இராவணனை பார்த்த இராமன்  "இன்று  போய் போர்க்கு நாளை வா." என்று அனுப்பி வைத்தானாம். அதுதான் யுத்த தர்மம். கைதியாகப் பிடிபட்ட சிங்கள இராணுவத்துக்கு சிகறற், படிப்பதற்கு சிங்கள பத்திரிகை கொடுத்த, இறந்த இராணுவத்தினரின் உடலை சுத்தப்படுத்தி சீருடை தரித்து உரிய மரியாதையுடன் அனுப்பி வைத்த தலைவரின் மனிதாபிமானம், மரியாதை  எங்கே? இறந்த பெண்  போராளிகளின் உடலை அசிங்கப்படுத்திய, சிறையில் இருக்கும் போராளிகளை அவமானப்படுத்தும், கல்லறைகளை கிளறும்   காட்டுமிராண்டி சிங்கள இராணுவம் எங்கே? இதுகளிடம் உள்ளதையே கொடுக்கமுடியும். இல்லாததை எப்படிக் கொடுக்கமுடியும்? நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்? 

தீமையிலும் நன்மையை காண முயற்சித்து, இப்படி இல்லாததை சொல்லி  புலம்புகிறோம். இது எங்களின் ஆற்றாமை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2020 at 05:05, கற்பகதரு said:

யாழ் களத்தில் பொழுதுபோக்கு செய்யலாமா?

அப்போ நீங்கள் என்ன செய்கிறீர்கள்????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.