Jump to content

தீர்வினைக் கோரி பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வினைக் கோரி பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த நிலையில், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன் பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 19 நாட்டு படகுகளை மீட்க மத்திய அரசு தவறியமையை கண்டித்தும் படகுகளுக்கு தீர்வினை கோரியும்  குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

spacer.png

கடந்த நான்கு வருடங்களாக இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தீர்வு எட்டப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் படகுகளை இழந்த மீனவ குடும்பங்கள் மற்றும் மீன்பிடி தொழில் சங்கத்தினர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள்  கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 19 நாட்டுப் படகுகள் இன்றைய தினம் வரைக்கும் விடுவிக்கப் படவில்லை.

இந்நிலையில் மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு  பாம்பன் (2) மற்றும் நம்புதாளை(3) பகுதியைச் சேர்ந்த ஐந்து படகுகளை  விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால்  இரண்டு வருடங்கள் ஆகியும் அதை மீட்க இந்திய அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காதது  கண்டனத்துக்குரியது  என தெரிவித்துள்ளனர்.

நான்கு வருடங்களாக இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகள் இனி மீட்கப்பட்டாலும் அதனை  மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்த முடியாது.

எனவே, ஒவ்வொரு படகையும் நம்பி சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கை வசமுள்ள 19 படங்களுக்கு தலா ரூ, 30 லட்சம்  ரூபாய்  நிவாரணமாக மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் இல்லையெனில் சென்னை கோட்டையில் பாதிக்கப்பட்ட மீனவக்குடும்பங்களையும், தமிழ்நாடு நாட்டுப்படகு மீன்பிடி  கடல் தொழிற்சங்க அமைப்புகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

 கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பியதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.virakesari.lk/article/94856

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.