Jump to content

சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

spacer.png

 

வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்றிரவு (20.11.2020) மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் வாயிற்கதவிலிருந்த  பாம்பு ஒன்று, அவரின் கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டதையடுத்து, அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

https://www.virakesari.lk/article/94876

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்! கடித்த பாம்பு உயிரிழந்தது!

  • November 22, 202012:47 pm

 

பாம்பு கடிக்கு இலக்கான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆபத்தான கட்டத்தைக் கடந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 
நேற்றிரவு வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அலுவலகத்தின் கதவை அவர் மூடியபோது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியது.

ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் தற்போது சாதாரண நிலைக்கு வந்துள்ளார்.

இதேவேளை, அவருக்குக் கடித்த பாம்பைப் போத்தில் ஒன்றில் அடைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அது உயிரிழந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.IMG_9552-300x199.jpg

 

https://www.meenagam.com/பாம்புக்-கடிக்கு-இலக்கான/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி நலம் பெற வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

தூரிகையோடு வந்த தோழருக்கு வணக்கம்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

சிவாஜி நலம்பெற வேண்டுகின்றேன்.....ஆனால் அந்தப் பாம்பு செத்தது பரிதாபம்.....!  😁

ஓவியமும் கருத்தும் அருமை.....காண்பது சந்தோசம் கவி அருணாசலம்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஅருகாச்சலம் உங்களை இங்கு மீன்டும் கன்டது மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

கவி அருணாசலம் ஐயாவை மீண்டும் நல்லதோர் கருத்துப்படத்தோடு காண்பதில் மகிழ்ச்சி😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பை அடித்தே  கொன்று விட்டார்களா அல்லது ஐயாவின் விஷம் பாம்புக்கு ஏறிட்டுதா:unsure:
 

Link to comment
Share on other sites

உலகிலேயே சிறந்த ஒளதடமாக விளங்குவது பாம்பின் விடம். அது இப்போ சிவாயிலிங்கம் அவர்களின் இரத்தத்தில் கலந்து அவரது உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தியைப் பலமடங்காக அதிகரித்துள்ளது. இனி அவரை எந்தப் பாம்பு தீண்டினால் என்ன! கொரோனாதான் அவருள் புகுந்தாலென்ன! எதுவுமே நடக்காது அவர் நலமுடன் பல்லாண்டு வாழ்வார்!!. 💐🤣    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

பாம்பை அடித்தே  கொன்று விட்டார்களா அல்லது ஐயாவின் விஷம் பாம்புக்கு ஏறிட்டுதா:unsure:
 

பாம்பிற்குத் தேவையில்லாத வேலை. 

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

பாம்பிற்குத் தேவையில்லாத வேலை. 

😂

அவரை மாதிரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருவர் உயிரை விட்டு மற்றவரை காத்தார் நல்ல பாம்பாக இருக்கும்..... வாழ்பவரை வாழ்த்துவோம். வாழ்க நலமுடன்.

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

அவரை மாதிரி.

உங்கள் கருத்துப்படி அவர் தேவை இல்லாத விடயங்களில் தலையிடுகிறார். இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்ததில் இருந்து என் மனதை அரிக்கும் கேள்வி:

பாம்பை ஏன் போத்தலில் போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாம்பு கடித்தது? அதன் விஷத்தை முறிக்க எந்த மருந்து கொடுக்கவேண்டும்? என்பதை மருத்துவர் விரைவாக, நேரத்தை விரயமாக்காமல் சிகிச்சையை ஆரம்பிப்பதற்காக  என நினைக்கிறேன். கண்ணாடிபோத்தலில் இருக்கும் பாம்பை கண்டுகொள்வதற்கு இலகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது. 

இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் பற்றிக்கலோ மோட்டர் கராச்சிற்குரிய அறை ஒன்றில் நான் சிலகாலம் தங்கியிருக்கவேண்டி வந்தது. அந்தக் கராச்சில் வாகனங்கள் கழுவும் வேலைபார்த்த ஒருவர் செய்வினை, பில்லி, சூனியங்கள் எடுப்பவர் என்று அங்குள்ளவர்கள் சொன்போது நான் நம்பவில்லை.  அவருக்கு விசக்கடி வைத்தியமும் தெரியும் என்று சொன்னார்கள். ஒருநாள் ஒரு சிறுவன் அவரிடம் ஓடிவந்து அண்ணனைப் பூச்சி கடித்துவிட்டது என்று சொன்னான். சிறுவனைப் பார்த்ததும் அவர் பயப்படவேண்டாம் அது சாரைப்பாம்பு என்று சொல்லி சில இலைகளின் பெயரைச் சொல்லி அவற்றின் சாற்றைக் கொடுக்கும்படி கூறினார். அடுத்த சில நாட்களில் சிறுவனின் அண்ணன் வந்து அவருக்கு நன்றிசொல்லி தன்னைச் சாரைதான் கடித்தது என்று சொல்லிப் பணமும் கொடுக்க முயன்றபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வை நேரில்கண்ட எனக்கே இன்றும் நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

மட்டக்களப்பில் பற்றிக்கலோ மோட்டர் கராச்சிற்குரிய அறை ஒன்றில் நான் சிலகாலம் தங்கியிருக்கவேண்டி வந்தது. அந்தக் கராச்சில் வாகனங்கள் கழுவும் வேலைபார்த்த ஒருவர் செய்வினை, பில்லி, சூனியங்கள் எடுப்பவர் என்று அங்குள்ளவர்கள் சொன்போது நான் நம்பவில்லை.  அவருக்கு விசக்கடி வைத்தியமும் தெரியும் என்று சொன்னார்கள். ஒருநாள் ஒரு சிறுவன் அவரிடம் ஓடிவந்து அண்ணனைப் பூச்சி கடித்துவிட்டது என்று சொன்னான். சிறுவனைப் பார்த்ததும் அவர் பயப்படவேண்டாம் அது சாரைப்பாம்பு என்று சொல்லி சில இலைகளின் பெயரைச் சொல்லி அவற்றின் சாற்றைக் கொடுக்கும்படி கூறினார். அடுத்த சில நாட்களில் சிறுவனின் அண்ணன் வந்து அவருக்கு நன்றிசொல்லி தன்னைச் சாரைதான் கடித்தது என்று சொல்லிப் பணமும் கொடுக்க முயன்றபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வை நேரில்கண்ட எனக்கே இன்றும் நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

மட்டக்களப்பு மாந்திரீகம் என்பது இதுதானோ .... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

மட்டக்களப்பு மாந்திரீகம் என்பது இதுதானோ .... 😂😂

பாயோட பசை வைக்கிறயும் சொல்லல இந்த யாழ்ப்பாணத்தாருக்கு சூனியம் வச்சு என்னத்தையா கண்டம் நாங்கள் மட்டு வந்தவர்கள் விட்டு போக மனமில்லாமல் இருப்பதற்கு அங்க உள்ளவன் வச்ச சேதி தான் அது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பாயோட பசை வைக்கிறயும் சொல்லல இந்த யாழ்ப்பாணத்தாருக்கு சூனியம் வச்சு என்னத்தையா கண்டம் நாங்கள் மட்டு வந்தவர்கள் விட்டு போக மனமில்லாமல் இருப்பதற்கு அங்க உள்ளவன் வச்ச சேதி தான் அது 🤣

கிடுகு வேலிக் கசாச்சாரத்திற்கு நேர் எதிர் எண்டா கதை இப்படித்தான் வரும் கண்டியளோ 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது. 

இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 

 

14 hours ago, satan said:

என்ன பாம்பு கடித்தது? அதன் விஷத்தை முறிக்க எந்த மருந்து கொடுக்கவேண்டும்? என்பதை மருத்துவர் விரைவாக, நேரத்தை விரயமாக்காமல் சிகிச்சையை ஆரம்பிப்பதற்காக  என நினைக்கிறேன். கண்ணாடிபோத்தலில் இருக்கும் பாம்பை கண்டுகொள்வதற்கு இலகு. 

சாத்தான்/ஜஸ்ரின் விளக்கத்துக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

மட்டக்களப்பில் பற்றிக்கலோ மோட்டர் கராச்சிற்குரிய அறை ஒன்றில் நான் சிலகாலம் தங்கியிருக்கவேண்டி வந்தது. அந்தக் கராச்சில் வாகனங்கள் கழுவும் வேலைபார்த்த ஒருவர் செய்வினை, பில்லி, சூனியங்கள் எடுப்பவர் என்று அங்குள்ளவர்கள் சொன்போது நான் நம்பவில்லை.  அவருக்கு விசக்கடி வைத்தியமும் தெரியும் என்று சொன்னார்கள். ஒருநாள் ஒரு சிறுவன் அவரிடம் ஓடிவந்து அண்ணனைப் பூச்சி கடித்துவிட்டது என்று சொன்னான். சிறுவனைப் பார்த்ததும் அவர் பயப்படவேண்டாம் அது சாரைப்பாம்பு என்று சொல்லி சில இலைகளின் பெயரைச் சொல்லி அவற்றின் சாற்றைக் கொடுக்கும்படி கூறினார். அடுத்த சில நாட்களில் சிறுவனின் அண்ணன் வந்து அவருக்கு நன்றிசொல்லி தன்னைச் சாரைதான் கடித்தது என்று சொல்லிப் பணமும் கொடுக்க முயன்றபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வை நேரில்கண்ட எனக்கே இன்றும் நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

இப்படிதான், ஒரு முறை என்னையும் அம்மம்மாவையும் விட்டு விட்டு மிகுதி குடும்பம் எல்லாம் கொழுப்புக்கு போன சமயம் அவவை ஒரு புலிமுகசிலந்தி கடித்து விட்டது.

கிழவி ஆஸ்பத்திரி வேண்டாம் பரியாரியிட்ட போவம் என அடம்பிடித்து சொல்லியும் கேட்காமல் கொட்டடியில் ஒரு பரியாரியாரிட்ட போனோம்.

போகும் போது எமக்கு என்ன கடித்தது என தெரியாது, மனுசன் பார்த்தே இது புதுமை சிலந்திதான் எண்டு சொல்லிப்போட்டார்.

பிறகு ஒரு வெள்ளை கல்லை தந்தார். அந்த கல் காயத்தில் பிசின் போட்டு ஒட்டியமாரி நிற்கும். கல் முழுவதும் நீலமானதும் விழுந்து விடும்.

நீல கல்லை எடுத்து பாலில் போட்டால், பால் நீலமாகும், கல் வெள்ளையாகும். கல்லை எடுத்து மறுபடியும் கடித்த இடத்தில் வைத்து சிகிச்சையை தொடர வேண்டும்.

கேட்டால் அந்த கல் நஞ்சை உறிஞ்சுவதாயும் பின் பாலில் வெளியேற்றுவதாயும் சொன்னார்கள்.

இப்படி ஒரு கல் கிடைக்காதா என்று இன்றுவரை தேடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

மட்டக்களப்பில் பற்றிக்கலோ மோட்டர் கராச்சிற்குரிய அறை ஒன்றில் நான் சிலகாலம் தங்கியிருக்கவேண்டி வந்தது. அந்தக் கராச்சில் வாகனங்கள் கழுவும் வேலைபார்த்த ஒருவர் செய்வினை, பில்லி, சூனியங்கள் எடுப்பவர் என்று அங்குள்ளவர்கள் சொன்போது நான் நம்பவில்லை.  அவருக்கு விசக்கடி வைத்தியமும் தெரியும் என்று சொன்னார்கள். ஒருநாள் ஒரு சிறுவன் அவரிடம் ஓடிவந்து அண்ணனைப் பூச்சி கடித்துவிட்டது என்று சொன்னான். சிறுவனைப் பார்த்ததும் அவர் பயப்படவேண்டாம் அது சாரைப்பாம்பு என்று சொல்லி சில இலைகளின் பெயரைச் சொல்லி அவற்றின் சாற்றைக் கொடுக்கும்படி கூறினார். அடுத்த சில நாட்களில் சிறுவனின் அண்ணன் வந்து அவருக்கு நன்றிசொல்லி தன்னைச் சாரைதான் கடித்தது என்று சொல்லிப் பணமும் கொடுக்க முயன்றபோது அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வை நேரில்கண்ட எனக்கே இன்றும் நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

அது உண்மைதான் ......சொன்னால் நக்கல் செய்வார்கள்....ஆனால் அது சாதாரணமான விடயமல்ல. குரு வழியாக அந்த ஆற்றல்கள் வருபவை. ஒருத்தர் வைத்தியராகவோ அன்றி பொறியியலாளராகவோ கடைசி ஆறேழு வருடங்கள் கருத்துன்றிப் படித்து பட்டம் பெறுகின்றார் என்றால் அதைவிட அதிகமாக அவர்கள் இவ் விடயத்தில் காலத்தைக் கழித்திருப்பார்கள். மூலிகைகளுக்காக காடுமேடெல்லாம் அலைந்து அர்த்த ராத்திரிகளில் மயாணங்களில் குருவோடு சேர்ந்து பூசைகள்,யாகங்கள் என்று செய்திருப்பார்கள். என்ன ஒரு கறுமமென்றால் சிலர் இந்த ஆற்றல்களை நல்லதுகளுக்கு பயன்படுத்துவார்கள்.எதையும் இலவசமாக பணம் உட்பட பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனையோர் அதை தீயவழிகளில் பயன்படுத்தி கேவலமானவர்களாக போய்சேருவார்கள்....!

--- ஒருத்தர் இப்படியான தகவல் சொல்ல வரும்பொழுதே அவர் வரும் நேரம், எந்தக் கால் வைத்து உள்ளே வருகிறார், அந்த நேரத்தில் வெளியே வரும் பட்சிகள் மற்றும் விலங்குகள் போன்ற பலப்பல விடயங்களை மனதுக்குள் ஓரிரு நிமிடங்களில் கணித்தே சொல்லி விடுவார். இந்நேரத்தில் பல்லி சொல்வதைக்கூட கவனத்தில் கொள்வர். சம்பந்தப்பட்டவர் பிழைக்க வழியில்லை என்றாலோ அல்லது இவர் வரும்போது அங்கே அவர் இறந்து விட்டாலோ மருந்துகள் குடுக்க மாட்டார்கள்.அதுக்கு அவசியமில்லை நீங்கள் போங்கோ என்று அனுப்பி விடுவார்கள்....!

இப்பொழுது நான் கொட்டடி வைத்தியர் பற்றி சொல்ல நினைக்க கீழே கோஷன் சே எழுதியுள்ளார்.பாஞ்சும், கோஷன் சேயும் இங்கு எழுதியதால் தான் நான் இவற்றை எழுதுகின்றேன்......!

44 minutes ago, goshan_che said:

இப்படிதான், ஒரு முறை என்னையும் அம்மம்மாவையும் விட்டு விட்டு மிகுதி குடும்பம் எல்லாம் கொழுப்புக்கு போன சமயம் அவவை ஒரு புலிமுகசிலந்தி கடித்து விட்டது.

கிழவி ஆஸ்பத்திரி வேண்டாம் பரியாரியிட்ட போவம் என அடம்பிடித்து சொல்லியும் கேட்காமல் கொட்டடியில் ஒரு பரியாரியாரிட்ட போனோம்.

போகும் போது எமக்கு என்ன கடித்தது என தெரியாது, மனுசன் பார்த்தே இது புதுமை சிலந்திதான் எண்டு சொல்லிப்போட்டார்.

பிறகு ஒரு வெள்ளை கல்லை தந்தார். அந்த கல் காயத்தில் பிசின் போட்டு ஒட்டியமாரி நிற்கும். கல் முழுவதும் நீலமானதும் விழுந்து விடும்.

நீல கல்லை எடுத்து பாலில் போட்டால், பால் நீலமாகும், கல் வெள்ளையாகும். கல்லை எடுத்து மறுபடியும் கடித்த இடத்தில் வைத்து சிகிச்சையை தொடர வேண்டும்.

கேட்டால் அந்த கல் நஞ்சை உறிஞ்சுவதாயும் பின் பாலில் வெளியேற்றுவதாயும் சொன்னார்கள்.

இப்படி ஒரு கல் கிடைக்காதா என்று இன்றுவரை தேடுகிறேன்.

ஒருமுறை அயலில் ஒருவருக்கு பாம்பு கடித்து அவரிடம் போயிருக்கிறோம்.(இரவில்ஆஸ்பத்திரி என்றாலும் பாம்பு கடித்தாலும்  எதுவென்றாலும் காருக்கு எங்கள் வீட்டுக்குத்தான் வருவினம். நான்தான் சாரதி). இரவென்றபடியால் என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஆனால் அவர் கொஞ்சம் யோசித்து விட்டு கடிவாயையும் பார்த்து விட்டு இது இன்ன பாம்புதான், கொத்த வேண்டும் என்று பலமாக கொத்தவில்லை என்று சொல்லிவிட்டு இலை சாறுகள் விட்டு ஒன்று மாற்றி ஒன்றாக அஞ்சாறு கோழிகளை கொண்டுவந்து அவற்றின் ஆசனவாயை அந்த கடித்த இடத்தில் வைக்க சில கோழிகள் இறந்துபோக, கோழி உயிரோடு இருக்கும் வரை அந்த வைத்தியம் நடக்கின்றது.....இரவிரவாக அவரை தூங்க விடாமல் பார்த்திருக்க வேண்டும்....பின் குணமாகி காலையில் திரும்பினோம்....!

( கதைக்களத்தில் "பொட்டல்காட்டில் ஒரு கதை" என்னும் கதையில் ஒரு சம்பவம் இந்த அனுபவத்தில் எழுதியதுதான்).

உங்களுக்கு தெரியும் விடத்தல்தீவு மன்னாருக்கு அண்மையில் உள்ளது.அங்கு பாஸ்கரன் என்றொரு ஐயா இருந்தவர். இதுபோன்ற வைத்தியங்கள் பலவற்றிலும் அவர் மிகவும் பிரபலமானவர்.அசாத்தியமான திறமையுள்ளவர்......மேலும் சைக்கிளில் சில திருத்தங்கள் செய்து அங்குள்ள குளத்தில் குடும்பத்தோடு பிரயாணம் செய்து காட்டியவர்.அந்நாளில் பத்திரிகைகளில் படங்களுடன் அந்தப் படங்கள் வந்திருந்தன....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படிதான், ஒரு முறை என்னையும் அம்மம்மாவையும் விட்டு விட்டு மிகுதி குடும்பம் எல்லாம் கொழுப்புக்கு போன சமயம் அவவை ஒரு புலிமுகசிலந்தி கடித்து விட்டது.

கிழவி ஆஸ்பத்திரி வேண்டாம் பரியாரியிட்ட போவம் என அடம்பிடித்து சொல்லியும் கேட்காமல் கொட்டடியில் ஒரு பரியாரியாரிட்ட போனோம்.

போகும் போது எமக்கு என்ன கடித்தது என தெரியாது, மனுசன் பார்த்தே இது புதுமை சிலந்திதான் எண்டு சொல்லிப்போட்டார்.

பிறகு ஒரு வெள்ளை கல்லை தந்தார். அந்த கல் காயத்தில் பிசின் போட்டு ஒட்டியமாரி நிற்கும். கல் முழுவதும் நீலமானதும் விழுந்து விடும்.

நீல கல்லை எடுத்து பாலில் போட்டால், பால் நீலமாகும், கல் வெள்ளையாகும். கல்லை எடுத்து மறுபடியும் கடித்த இடத்தில் வைத்து சிகிச்சையை தொடர வேண்டும்.

கேட்டால் அந்த கல் நஞ்சை உறிஞ்சுவதாயும் பின் பாலில் வெளியேற்றுவதாயும் சொன்னார்கள்.

இப்படி ஒரு கல் கிடைக்காதா என்று இன்றுவரை தேடுகிறேன்.

பாஞ்ச் ஐயாவின் கதையைத் தாண்டிப் போகலாம் என்று தான் நினைத்தேன்😇, இப்ப கோசானும் வந்து விசமுறிஞ்சிக் கல்லைப் பற்றிச் சொன்னதும் சும்மா போகேலாமல் சொல்கிறேன்:

1. சாரை கடிச்சதா அல்லது விசப் பாம்பு கடிச்சதா என்று சொல்ல மந்திரம் மாயம் தேவையில்லை. விசப் பாம்புகளுக்கு மட்டும் தான் fangs என்ற விசப்பல் இருக்கும். இது பாம்பின் வாயின் மேற் தாடையில் இரு பக்கமும் கூரிய ஊசி போல இருக்கும். எனவே விசப் பாம்பு கடித்த இடத்தில் இரண்டு ஊசித்துளைகள் போல அடையாளமும், அதைச் சுற்றி வீக்கமும் இருக்கும். ஆனால் விசமில்லாத பாம்புகளுக்கு சாதாரண பல்வரிசை தான், அப்படியே ஒரு நாய் கவ்விய மாதிரிப் பல்லடையாளம் தெரியும், வீக்கமும் குறைவாக இருக்கும். விசமில்லாத பாம்புக் கடிக்கு மூலிகை மருத்துவமும் தேவையில்லை. ஆக மிஞ்சிப் போனால் பக்ரீரியாத் தொற்று வராமல் காயத்திற்கு மருந்து மட்டும் போதும்.

2. இந்த விசம் உறிஞ்சும் கல் விளையாட்டு பிள்ளையார் பால் குடிச்சது மாதிரியான ஒரு விளையாட்டுத் தான்.  அப்படி விசம் உறிஞ்சும் செயன் முறை எதுவும் இல்லை! இந்த விசமுறுஞ்சிக் கல்லால் இரத்தப் புடையன் பாம்பின் விசத்தை முறிக்கிறேன் என்றதை நம்பிய சித்தப்பா 70 களில் மருத்துவ மனைக்குப் போக நேரம் இருந்தும் போகாமல் 3 நாட்கள் கோமாவில் இருந்து இறந்தார். 

இந்தப் போலி மருத்துவங்கள் விச ஜந்துக் கடிகளில் தான் அதிகம் பிரபலம்! நம்பி உயிரை விடாதீர்கள்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.