Jump to content

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

8 hours ago, கிருபன் said:

அவலங்களைச் சந்தித்த மக்களுக்கு உதவ ஏதாவது வழிவகைகள் செய்யலாமே என்று பலவருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் ஐயா இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் மக்களுக்கு உதவும் கட்டமைப்பு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் இன்னும் சில சாட்டுக்களையும் சொல்லி தட்டிக் கழித்துவிட்டார்.

மக்களுக்கு உதவும் கட்டமைப்புகளை உருவாகும் திடடம் வரையப்பட்டு புலம்பெயர் நிபுணர்களும் தமிழர் நலன்விரும்பிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் விடயங்களை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை. இந்த முயட்சிகள் 2009 ம் ஆண்டில் இருந்து 2010 வரை நடைபெற்றது. இது பற்றி முன்னர் எழுதிய ஜாபகம். மனித உரிமை, மீள்கட்டுமானம், பொருளாதார, அரசியல் விவகாரங்கள் என வகைப்படுத்தப்பட்டு அதட்கான நிர்வாகமுறைமை முதல் கொண்டு பல விடயங்களை புலம்பெயர் ஆர்வலர்கள் செய்ய முன்வந்திருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரின் நலன் சார்ந்த ஒரு நிழல் அரசு போல இயங்கவேண்டும் என்ற கருத்தியலில் இந்த முயறசிகள் இடம்பெற்றன. 

இந்த சமயத்தில் இன்று வெளியில் நின்று தேசியம் பேசும் சுரேஷும், மாவையும், சம்பந்தனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் ஒரு அதிகாரம் மிக்கவராக இருந்தார்கள். சுமந்திரன் அவர்களுடன் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இதனை சுமந்திரனை ஒரு தேவதையாக காட்ட நான் எழுதவில்லை. மாறாக தமிழர் தேசிய கூட்டமைப்புக்கள் அதிகாரம் செலுத்திய எல்லோரும் தமது செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்ட கூடும் என்று நினைத்தால் அவர்கள் என்ன நல்ல முயட்ஸியையும் மறைமுகமாக தடங்கல் போட்டு காலம் கட்டத்தி உதவிசெய்ய  வந்தவர்களை விரகத்திக்கு உட்படுத்தி கலைத்துவிட்டு பின்னர் புலம் பெயர் ஆட்கள் புலி கொடி மட்டும் தான் தூக்குவினம் எங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டினம் என்று உங்களை நம்பவைப்பார்கள்!

புலம் பெயர் நாட்டில் எல்லோரும் பெயர்சொல்லி வேலைசெய்பவர்கள் இல்லை. என்னுடன் சேர்த்து இன்னோரு  வீட்டு திட்டத்தில் பல  பொறியலாளர்கள் உதவினார்கள். எத்தனை 
தடங்கல்கள், எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு தங்கள் தொழிலையும் பார்த்துக்கொண்டு இரவு பகலாக உதவினாலும் அவர்களின் சேவை வீணானது காரணம் தமிழ் தேசியகூட்டமைப்புக்கும் மாகாணசபையினருக்குமிடையிலான பனிப்போர்/போட்டி . அமைச்சர் சுவாமிநாதனின் தகர வீட்டில் தொடங்கி இல்லை கல் வீடு மட்டும் தான் தேவை என்று சம்பந்தர் அடம்பிடிக்க அதக்கிடையில் நாம் ஒரு சாத்தியமான திட்டத்தை விரைவில் நடைமுறைபடுத்த வெளிக்கிட்டு மூக்குடைபட்டவர்கள். நாங்கள் சுனாமி வந்தவுடன் உடனடி தட்காலிக கொட்டகைகள் பின்னர் நிரந்தர வதிவிடம் திட்டம் போட்டு  பல பணிகளுக்கு நாங்கள் வாழும் நாடுகளில் இருந்து வளம் திரட்டி உதவியவர்கள். முயறசியன் பலனை நேரடியாகவும் படங்கள் வீடியோக்கள், நேர்காணல்கள் என்று கேட்டு மனம் மகிழ்ந்தவர்கள்.

எனவே புலம்பெயர் தமிழர் நேரடியாக உதவ முன்வந்தாலும் முதலில் அங்கு காரியங்களை சாதிக்க கூடியவர்களுடன் தொடர்பை வளர்த்து அதுனூடாக உதவிகளை புரியுங்கள். அரசியவாதிகளை ஒருபுறம் வைத்துவிட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2020 at 13:19, vanangaamudi said:

இவரின் சமயத்தவருக்கு மற்றைய சமயத்தவரின் கடவுள் முன் நின்றால் அலர்ஜி என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.

ஐயா, வணங்காதவரே! அவரே வழக்கு தள்ளுப்பட்டதால் மனமுடைந்த தாயாரைத் தேற்றி, அவரின் மகனின் உருவப்படத்துக்கு விளக்கேற்றி தன் அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல் நடப்பதென்றால் யாழ்ப்பாணத்தில் ஓடும் தனியார், அரசு பயணிகள் வண்டியில் எல்லா சமயத்தவரின் படங்களும் இருக்கின்றன. அப்படியென்றால் பலபேர் கால் நடையாகவே பயணம் செய்ய வேண்டியிருக்கும். நினைத்தால் எல்லாக் கடவுளையும் என்கடவுளாக நினைத்து வணங்கிக்கொண்டு பயணிக்கலாம். இங்கே இவர் சாமிப் படத்தில் உயிரிழந்த பாண்டியைப்பார்க்கலாம், பாண்டியின் படத்தில் சாமியையும் பார்க்கலாம். இன, மத பேதம் கடந்து மனிதாபிமானம் காட்டுவதே மதம். மற்றதெல்லாம் சுயநலம். இதற்காக மதத்தை கையிலெடுப்போரும் உண்டு, அதற்காக மதத்தை மறுதலிப்போரும் உண்டு. இருந்தாலும் நீராவியடி ஆலயப்பிரச்சனைக்காக நீதிமன்றம் சென்றவர், பாண்டியனுக்காக நீதிமன்றம் சென்றவர் சுமந்திரன்.  அவருக்கு இந்துக்கடவுள் முன் நின்றால் ஒன்றும் பிரச்சினை இருக்காது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

செய்வன திருந்தச் செய்.....

கட்டிக்கொடுக்கும் வீடுகளை பலமான வீடுகளாக கட்டிக்கொடுக்கும் படிதான் அப்போது சொல்லப்பட்டது.

பல வீடுகள் அந்த வீட்டுத்திட்டத்தில் மலையகத்திலும் இராணுவ , பொலிசாரின் தங்குமிடங்கள் இப்பவரைக்கும் நிரந்தரமாக தரமானதாகவும் இருக்கிறது 
நம்ம சனம் கொட்டிலிலும் ,குடிசையிலும் இப்பவும் இருக்கிறது இவர்களால் மாற்றீடாக ஏதாவது செய்ய முடிந்ததா அம்மக்களுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பல வீடுகள் அந்த வீட்டுத்திட்டத்தில் மலையகத்திலும் இராணுவ , பொலிசாரின் தங்குமிடங்கள் இப்பவரைக்கும் நிரந்தரமாக தரமானதாகவும் இருக்கிறது 
நம்ம சனம் கொட்டிலிலும் ,குடிசையிலும் இப்பவும் இருக்கிறது இவர்களால் மாற்றீடாக ஏதாவது செய்ய முடிந்ததா அம்மக்களுக்கு 

மலையகப் பகுதிகளுக்கு இரும்பு வீடு சரிவரும், வடக்கு கிழக்கிற்கு வெப்பம் காரணமாக உள்ள இருக்க முடியுமா? குளிரூட்டி வசதி இருக்காது தானே?
வீட்டுத் திட்டத்தில் வீடு கட்டிய பலர் அவ்வீடுகளில் வசிப்பதில்லை, அவ்வீடுகளை வீடில்லாதோருக்கு தற்காலிகமாகவாவது அரசு வழங்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

மலையகப் பகுதிகளுக்கு இரும்பு வீடு சரிவரும், வடக்கு கிழக்கிற்கு வெப்பம் காரணமாக உள்ள இருக்க முடியுமா? குளிரூட்டி வசதி இருக்காது தானே?
வீட்டுத் திட்டத்தில் வீடு கட்டிய பலர் அவ்வீடுகளில் வசிப்பதில்லை, அவ்வீடுகளை வீடில்லாதோருக்கு தற்காலிகமாகவாவது அரசு வழங்கலாமே!

இருக்க வீடே இல்ல இதில் வெப்பம் என்ன அப்படி வட கிழக்கு பாலைவனம் கிடையாது  வெப்பத்திற்கு 

இந்த வீடுகள் கட்டுப்படாமல் திரும்பிசென்றது உங்களுக்கு தெரியுமா வடகிழக்கில் கட்டி இருப்பது பொலிசாரின் தங்குமிடங்கள் மாத்திரம் அதை மக்களுக்கு கொடுக்காது அரசு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்க வீடே இல்ல இதில் வெப்பம் என்ன அப்படி வட கிழக்கு பாலைவனம் கிடையாது  வெப்பத்திற்கு 

இந்த வீடுகள் கட்டுப்படாமல் திரும்பிசென்றது உங்களுக்கு தெரியுமா வடகிழக்கில் கட்டி இருப்பது பொலிசாரின் தங்குமிடங்கள் மாத்திரம் அதை மக்களுக்கு கொடுக்காது அரசு 

நானும் தாயகத்தில் தான் வசிக்கிறேன், நீங்கள் குறிப்பிடுவது தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

நானும் தாயகத்தில் தான் வசிக்கிறேன், நீங்கள் குறிப்பிடுவது தெரியும்.

நீங்கள் தாயகத்தில் இருந்தும் இது தெரியாமலா இருக்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

9 hours ago, satan said:

ஐயா, வணங்காதவரே! அவரே வழக்கு தள்ளுப்பட்டதால் மனமுடைந்த தாயாரைத் தேற்றி, அவரின் மகனின் உருவப்படத்துக்கு விளக்கேற்றி தன் அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல் நடப்பதென்றால் யாழ்ப்பாணத்தில் ஓடும் தனியார், அரசு பயணிகள் வண்டியில் எல்லா சமயத்தவரின் படங்களும் இருக்கின்றன. அப்படியென்றால் பலபேர் கால் நடையாகவே பயணம் செய்ய வேண்டியிருக்கும். நினைத்தால் எல்லாக் கடவுளையும் என்கடவுளாக நினைத்து வணங்கிக்கொண்டு பயணிக்கலாம். இங்கே இவர் சாமிப் படத்தில் உயிரிழந்த பாண்டியைப்பார்க்கலாம், பாண்டியின் படத்தில் சாமியையும் பார்க்கலாம். இன, மத பேதம் கடந்து மனிதாபிமானம் காட்டுவதே மதம். மற்றதெல்லாம் சுயநலம். இதற்காக மதத்தை கையிலெடுப்போரும் உண்டு, அதற்காக மதத்தை மறுதலிப்போரும் உண்டு. இருந்தாலும் நீராவியடி ஆலயப்பிரச்சனைக்காக நீதிமன்றம் சென்றவர், பாண்டியனுக்காக நீதிமன்றம் சென்றவர் சுமந்திரன்.  அவருக்கு இந்துக்கடவுள் முன் நின்றால் ஒன்றும் பிரச்சினை இருக்காது.  

திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர் இந்துக்களின் வளைவை உடைத்ததற்கெதிராக இந்துக்கள் சார்பில் வழக்கு பேசி வென்றவரும் இதே சுமந்திரன் தான். சார்ள்ஸ் நிர்மலநாதன் கடந்த தேர்தலில் சுமந்திரனுக்கு எதிராக கிளம்பியதற்கு இந்த வழக்கில் கத்தோலிக்கர் தோற்றதும் ஒரு காரணம் என்று எங்கோ படிக்க கிடைத்தது. நெற்றியில் திருநீறும் சந்தனப்பொட்டுமாய் காட்சிதரும் சைவத்தமிழ் சட்டவல்லுனரான அரசியல்வாதிகள் நீராவியடி பிள்ளையாரையோ, திருக்கேதீஸ்வரத்தையோ திரும்பியும் பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

அப்புக்காத்து வேலை பார்த்தால் அதோடு போயிருக்கலாமே? பிறகேன்  பிடிக்காதவர்களுக்காக நினைவேந்தல் விளக்கேற்றல்?

சுமந்திரன் அப்புக்காத்து வேலையை செய்து கிடைத்த தீர்ப்பை வழக்காளிக்குச் சொல்லியிருக்கின்றார். அவருக்கு பிடிக்காதவர்கள் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் போராளிகள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இல்லை என்று சொன்னவர். ஆனால் போராளிகளையும், மாவீரர்களையும் பிடிக்காது என்று சொல்லியதாக நான் அறியவில்லை.

20 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல்வாதி இல்லை என ஏற்றுக்கொள்கின்றீர்கள்?

சுமந்திரன் நல்ல அப்புக்காத்து. தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல்வாதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. அவர் இந்தியாவைச் சுழிச்சுக்கொண்டு ரணிலோடும் மேற்குநாடுகளின் அனுசரணையுடனும் சேர்ந்து ஒரு தீர்வை அடையலாம் என்று நினைத்து வெளிக்கிட்டதே அரசியல் கெட்டித்தனம் இல்லையென்றுதானே காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் அதாவது போர் முடிந்த பின்னர்.....பெரும்பாலான உலக நாடுகளால் தமிழர் பகுதி அபிவிருத்திக்கென ஏராளமான நிதியுதவிகளும் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.  அதில் பெரும்பாலான பணம் வடகிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை என ஒரு கதையும் உண்டு. இது பற்றி சிங்கள அரசிடம் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கேட்கமாட்டீர்களா?

நாங்களும் என்னைப் போன்றவர்களும் ராஜபக்‌ஷக்களுடன் “ஹொட்லைனின்” கதைக்கும் அளவுக்கு பெரிய ஆட்களாக இருந்தால் யாழ் களத்தில் இருந்து விசமத்துடன் எழுதுபவர்களுடன் ஏன் குத்திமுறியப் போகின்றோம்😜

சிங்கள அரசு உலகநாடுகளுடனும், முக்கியமாக சீனா, இந்தியாவோடு சேர்ந்து ரோடுகளைப் போட்டார்கள். ரெயினை KKS மட்டும் விட்டார்கள். பலாலி விமானநிலையத்தையும் திறந்துவிட்டார்கள். கவனிக்கவில்லையா!

21 hours ago, குமாரசாமி said:

இல்லையேல் சிங்கள அரசு சரியான பாதையில்தான் பயணிக்கிறது .புலிகளின் பணம்தான் நாட்டு அபிவிருத்திக்கு அவசியமாக தேவைப்படுகின்றது என்கிறீர்களா?

சிங்கள அரசு சிங்களவர்களைக் காக்க சரியான பாதையில் பயணிக்கின்றது. 

புலிகளின் போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. முன்னாள் போராளிகளுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் உதவ பாவித்திருக்கலாமே. ஆனால் பணம் திரட்டியவர்களில் ஒரு பகுதியினர் சுருட்டி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

புலிகள் இல்லாவிட்டால் நாம் சுமுகமாக எல்லாவற்றையும் முடிப்போம் என்றார்கள்.அதுதான் உங்களிடம் கேட்டேன்

யார் சுமுகமாக முடிப்போம் என்று சொன்னார்கள்? அதை எப்படி “We want Tamil Eelam” “Our Leader Pirabakaran” என்று வெஸ்ட்மினிஸ்ரர் பார்லிமென்றுக்கு முன்னால் 2009 இல் கத்திய எங்களைப் பார்த்துக்கேட்கலாம்? 🤔🤔

Link to comment
Share on other sites

41 minutes ago, கிருபன் said:

யார் சுமுகமாக முடிப்போம் என்று சொன்னார்கள்? அதை எப்படி “We want Tamil Eelam” “Our Leader Pirabakaran” என்று வெஸ்ட்மினிஸ்ரர் பார்லிமென்றுக்கு முன்னால் 2009 இல் கத்திய எங்களைப் பார்த்துக்கேட்கலாம்? 🤔🤔

நான் கேட்க நினைத்ததே நீங்களும் கேட்டுள்ளீர கள் கிருபன். இந்த கருத்து இங்கே களத்தில் அடிக்கடி வருகிறது. புலிகள் உயிர்ப்புடன்  உள்ளவரை பெரும்பாலான மக்கள் புலிகளுக்கு பக்கபலமாகத்தன் நின்றார்கள். புலிகளால் தான் சிறந்த தீர்உ கிடைக்கும் என்றே நாம் அனைவரும் நம்புனோம். அப்படித்தான் அனைவரும் நம்ப வைக்கப்பட்டோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலமும் தியாகங்களும் என்றும் போற்றக்கூடியது தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கும் என்று நினைக்க வில்லை.இப்ப முக்கியம் எம் மக்களின் அங்குள்ள இருப்பு.

 

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

கடந்த காலமும் தியாகங்களும் என்றும் போற்றக்கூடியது தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கும் என்று நினைக்க வில்லை.இப்ப முக்கியம் எம் மக்களின் அங்குள்ள இருப்பு.

 

சரியாக சொன்னீர்கள். கடந்த காலத்தையே பேசி காலம் கடத்துவதில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். இங்கு சிங்களவன் தனது காரியங்களை கன கச்சிதமாக கொண்டு போகிறான். இனி இங்குள்ள மக்களின் இருப்பு கேள்விக்குறிதான். நேற்று அமைச்சரவையின் பல பொறுப்பாடுகளை கோத்த எடுத்துக்கொண்டு விடடார். எனவே அவை எல்லாவற்றையும் கன கச்சிதமாக ராணுவம் நிறைவேற்றும். கொஞ்சம் பொறுத்தால் எப்படியான நடவடிக்கைகளாக இருக்கும் என்பதை காணலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, Robinson cruso said:

சரியாக சொன்னீர்கள். கடந்த காலத்தையே பேசி காலம் கடத்துவதில் நாம் முன்னிலையில் இருக்கிறோம்.

வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?

 

GH014IROL.2-1.jpg?imwidth=810&impolicy=w

086e42f0-d5a8-11ea-8f95-6d813022b2d7.jpg

Link to comment
Share on other sites

5 hours ago, Robinson cruso said:

இப்ப முக்கியம் எம் மக்களின் அங்குள்ள இருப்பு.

தமிழரின் இருப்பை உறுதிசெய்ய பின்வருவன முக்கியமானது:

1. சனத்தொகையை கூட்டுதல்/சனத்தொகை பரம்பலை குறைதல் 

a  . இளைய சமூதாயம் வாய்ப்புகள் தேடி வெளியுலகு செல்லாமல் (Brain Drain) அங்கிருக்க பொருளாதார வாய்ப்புகளை ஏட்படுத்தவேண்டும். இளைய சமூதாயம் வருங்கால மூளை வளம் (Human Capital) அதோடு அவர்கள் தான் பிறப்பு விகிதத்தை (Birth Rate) உறுதிசெய்ய தேவையானவர்கள்.

b . பொருளாதார ஊக்குவிப்பு/முதலீடுகள்  வடக்கு/கிழக்கை மையப்படுத்தி நடக்கவேண்டும். அதன் மூலம் சனத்தொகை பரம்பலை (population spread) குறைத்து சனத்தொகை செறிவை (increase population density) நீண்டகால அளவில் கூட்டவேண்டும். இதன் மூலம் தென் பகுதி நோக்கி பொருளாதார நோக்கிக்காக செல்வதை குறைத்து மிகவும் உறுதியான ஒரு பொருளாதார மையத்தை (centre of economic activities) எமது நிலத்தில் கட்டியிழுப்ப வேண்டும். எமது பொருளாதார வலிமை (economic strength) எதிர்காலத்தில் நாம் மேலும் உரிமைகளை பெற வழிசமைக்கும்.

c. மனித பாதுகாப்பு (Human Security) அச்சுறுத்தலான விடயங்களை உடனடியாக சட்ட ரீதியாகவும் அழுத்தங்கள் மூலமும் தடுத்துநிறுத்த மக்கள் கண்காணிப்பு குழுக்கள் (Citizen Groups) சட்டவாளர்களுடன் சேர்ந்து  இயங்கவேண்டும். ஒரு மனித பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத இடத்தில் இருந்து மக்கள் வெளியேறத்தான் செய்வார்கள். அதனால் சனத்தொகை மேலும் குறையும் அல்லது பிறப்புக்களால் ஈடு செய்யமுடியாத அளவில் இருக்கும். இன்றைய நிலவரத்தில் உளூரில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாகாமல் தடுக்க ஒரு அரணாக சட்டவாளர்களும் அவர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளும் மனித பாதுகாப்பை ஓரளவாவது உறுதிப்படுத்தும்.

2. நிலங்களை பாதுகாத்தல்/பயன்படுத்தல் 

a. காணி அபகரிப்பு விடயங்களில் உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து அவற்றை தடுத்து நிறுத்தும் வழிவகைகளை உதவவேண்டும். அன்று யூதர்கள் செய்தது போல சட்ட நடவடிக்கைகளுக்கு நிதி/வள உதவி வழங்கி நீங்கள் உதவவேண்டும். இதனை மேல 1c ல் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கும் உதவ பாவிக்கவும். சுமந்திரன் ஒரு சட்ட குழுவையும் மணிவண்ணன் இன்னொரு குழுவையும் அமைக்கிறார்கள். அவர்கள் நல்லது  செய்தால் நீங்கள் உதவுங்கள். உதவினால் அவர்கள் கூடிய சட்ட நடவடிக்கைளை மேட்கொள்ள நிதி வளம் உதவலாம். குமாரவடிவேல் குருபரனும் இந்த விடயங்களில் சிறந்தவர். 

b. இருக்கும் காணிகளை பயன்படுத்த கூடிய திட்டங்களை ஊக்குவிக்க புலம்பெயர் அமைப்புகள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . பழைய மாணவர் சங்கங்கள் இந்த விடயத்திலும் பொருளாதார ஊக்குவிப்பு விடயத்திலும் உதவக்கூடியவர்கள்.

தமிழரின் இருப்பை உறுதி செய்யும் விடயங்களில் எது இப்பொழுது நடைமுறை சாத்தியமானது/ யதார்த்தமானது (current reality/currently practical) எது இப்போதைக்கு சாத்தியமில்லாத உயர்ந்த குறிக்கோள் (impractical idealism) என அடையாளம் கண்டு இயங்கவேண்டும். எம்மில் பலர் நடைமுறை சாத்தியமில்லாத கனவுகளுடன் விடயங்களை அணுகுவதால் காலம் விரையம் ஆகிறது. குறிகோளால் ஒன்று பட்டு இருங்கள். ஆனால் தனித்தோ சிறு குழுக்களாகவோ இயங்குங்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, கற்பகதரு said:

வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?

கடந்தகால அனுபவங்கள் தான் வருங்கால படிக்கட்கள். எந்த அணுகுமுறை பலனை தந்தது. எதனால் பலன் வரவில்லை. ஏன் பலன் வரவில்லை என்பவற்றை நாம் எமக்குள் பகிர்ந்து அதன் மூலம் புதிய அணுகுமுறைகளை கண்டறிந்து பயணிப்பது தான் நாம் விரைவில் எமது இலக்குகளை அடைய வழிகோலும். இங்குள்ள ஒவொருவரும் தமது நேரத்தை செலவழித்து தமது மக்கள்  மீது கரிசனை கொண்டு கருத்துக்களை பகிர்கின்றனர். அதில் ஒரு சில வீதத்தினர் அந்த அனுபவங்களை உள்வாங்கி தங்கள் நடவடிக்கைகளை எடுப்பார்கள். நான் கூட இந்த வருடம் தான் அதிகளவு பதிவிடுகிறேன். ஆனால வடக்கு/கிழக்கு  விடயங்களில் மும்மரமாக இருந்த காலத்தில் இந்த களத்தில்  இருந்து செய்திகள், கருத்துக்களை வாசித்து அதில் சொல்லப்படட விடயங்களை கவனத்தில் எடுத்திருக்கிறேன். எனவே எமது உரையாடைகள், கருத்துக்களின் தாக்கம் வெறும் உள/வள இன்பத்தை தாண்டி என்னவகையான நன்மையான விளைவுகளை உருவாகும் என்பது மதிப்பிடமுடியாதது அன்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?

 

GH014IROL.2-1.jpg?imwidth=810&impolicy=w

086e42f0-d5a8-11ea-8f95-6d813022b2d7.jpg

ஒரு  மனிதன் தன்பாட்டில் இரை  மீட்பதையே பொறுக்காத வைக்கற்பட்டறைக்கூட்டத்தை  விடவா???

Link to comment
Share on other sites

7 hours ago, puthalvan said:

கடந்தகால அனுபவங்கள் தான் வருங்கால படிக்கட்கள். எந்த அணுகுமுறை பலனை தந்தது. எதனால் பலன் வரவில்லை. ஏன் பலன் வரவில்லை என்பவற்றை நாம் எமக்குள் பகிர்ந்து அதன் மூலம் புதிய அணுகுமுறைகளை கண்டறிந்து பயணிப்பது தான் நாம் விரைவில் எமது இலக்குகளை அடைய வழிகோலும். இங்குள்ள ஒவொருவரும் தமது நேரத்தை செலவழித்து தமது மக்கள்  மீது கரிசனை கொண்டு கருத்துக்களை பகிர்கின்றனர். அதில் ஒரு சில வீதத்தினர் அந்த அனுபவங்களை உள்வாங்கி தங்கள் நடவடிக்கைகளை எடுப்பார்கள். நான் கூட இந்த வருடம் தான் அதிகளவு பதிவிடுகிறேன். ஆனால வடக்கு/கிழக்கு  விடயங்களில் மும்மரமாக இருந்த காலத்தில் இந்த களத்தில்  இருந்து செய்திகள், கருத்துக்களை வாசித்து அதில் சொல்லப்படட விடயங்களை கவனத்தில் எடுத்திருக்கிறேன். எனவே எமது உரையாடைகள், கருத்துக்களின் தாக்கம் வெறும் உள/வள இன்பத்தை தாண்டி என்னவகையான நன்மையான விளைவுகளை உருவாகும் என்பது மதிப்பிடமுடியாதது அன்பரே.

காத்திரமான கருத்துகள் புதல்வன். நன்றி

இங்கு இருக்கும் (புலம்பெயர் நாடுகளில்) இருக்கும் இளைய சமுதாயத்திற்கும் அங்கிருக்கும் இளைய சமுதாயத்துக்கும் இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணுவதற்குரிய வழி வகைகள் என்னவென நினைக்கின்றீர்கள்? உதாரணத்துக்கு வளர்ந்து வரும் என் பிள்ளைகளுக்கு தாயகத்தில் இருக்கின்ற இளைய சமூகத்திற்கும் இடையில் சரியான விகிதத்தில் தொர்புகள் உருவாகாது விடின், இன்னும் சில வருடங்களின் பின் தாயக மக்கள் மீதான அக்கறை கொண்ட புலம்பெயர் சமூகத்தின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து விடும். இதை தடுப்பது எப்படி? வெறுமனே பிள்ளைகளின் கையால் சில நன்கொடைகளை செய்வதுடனோ அல்லது விடுமுறை கால உல்லாசப் பயணமாக அவர்களை அழைத்துச் செல்வதுடன் மட்டுமோ இதை செய்துவிட முடியாது என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Robinson cruso said:

சரியாக சொன்னீர்கள். கடந்த காலத்தையே பேசி காலம் கடத்துவதில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். இங்கு சிங்களவன் தனது காரியங்களை கன கச்சிதமாக கொண்டு போகிறான். இனி இங்குள்ள மக்களின் இருப்பு கேள்விக்குறிதான். நேற்று அமைச்சரவையின் பல பொறுப்பாடுகளை கோத்த எடுத்துக்கொண்டு விடடார். எனவே அவை எல்லாவற்றையும் கன கச்சிதமாக ராணுவம் நிறைவேற்றும். கொஞ்சம் பொறுத்தால் எப்படியான நடவடிக்கைகளாக இருக்கும் என்பதை காணலாம்.

சிங்களம் தனது பூர்வீகத்தை முன்னிறுத்தி அதை  மனதில் வைத்து வரலாறுகளை அசைபோட்டு அசைபோட்டு  தனது இருப்பை மேம்படுத்துகின்றது.

எம்மவர்களோ நாளைக்கு கிடைக்கும் பிலாப்பழத்தை விட இன்று கிடைக்கும் கிலாக்காய் உத்தமம் என சொல்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

காத்திரமான கருத்துகள் புதல்வன். நன்றி

இங்கு இருக்கும் (புலம்பெயர் நாடுகளில்) இருக்கும் இளைய சமுதாயத்திற்கும் அங்கிருக்கும் இளைய சமுதாயத்துக்கும் இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணுவதற்குரிய வழி வகைகள் என்னவென நினைக்கின்றீர்கள்? உதாரணத்துக்கு வளர்ந்து வரும் என் பிள்ளைகளுக்கு தாயகத்தில் இருக்கின்ற இளைய சமூகத்திற்கும் இடையில் சரியான விகிதத்தில் தொர்புகள் உருவாகாது விடின், இன்னும் சில வருடங்களின் பின் தாயக மக்கள் மீதான அக்கறை கொண்ட புலம்பெயர் சமூகத்தின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து விடும். இதை தடுப்பது எப்படி? வெறுமனே பிள்ளைகளின் கையால் சில நன்கொடைகளை செய்வதுடனோ அல்லது விடுமுறை கால உல்லாசப் பயணமாக அவர்களை அழைத்துச் செல்வதுடன் மட்டுமோ இதை செய்துவிட முடியாது என நம்புகின்றேன்.

 

உண்மை  நிழலி

அநேகமான வேதனை  தரும்  கருத்தாடல்களின் கேலிகள் மற்றும் வசை பாடல்களின் பின் ஒதுங்க  நினைப்பதுண்டு

ஆனால்  எனது  தோல்வி அல்லது  எனது பின் வாங்குதல்  தான் எனது குடும்பத்தின் இறுதியாக  இருந்துவிடப்போகிறது என்ற  பயம் வாட்டி  வதைக்கிறது

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

சிங்களம் தனது பூர்வீகத்தை முன்னிறுத்தி அதை  மனதில் வைத்து வரலாறுகளை அசைபோட்டு அசைபோட்டு  தனது இருப்பை மேம்படுத்துகின்றது.

எம்மவர்களோ நாளைக்கு கிடைக்கும் பிலாப்பழத்தை விட இன்று கிடைக்கும் கிலாக்காய் உத்தமம் என சொல்கின்றார்கள்.

பிலா பழம் இல்லை, பிலா காயாவது கிடைத்தால் நல்லது.

Link to comment
Share on other sites

18 hours ago, puthalvan said:

தமிழரின் இருப்பை உறுதிசெய்ய பின்வருவன முக்கியமானது:

1. சனத்தொகையை கூட்டுதல்/சனத்தொகை பரம்பலை குறைதல் 

a  . இளைய சமூதாயம் வாய்ப்புகள் தேடி வெளியுலகு செல்லாமல் (Brain Drain) அங்கிருக்க பொருளாதார வாய்ப்புகளை ஏட்படுத்தவேண்டும். இளைய சமூதாயம் வருங்கால மூளை வளம் (Human Capital) அதோடு அவர்கள் தான் பிறப்பு விகிதத்தை (Birth Rate) உறுதிசெய்ய தேவையானவர்கள்.

b . பொருளாதார ஊக்குவிப்பு/முதலீடுகள்  வடக்கு/கிழக்கை மையப்படுத்தி நடக்கவேண்டும். அதன் மூலம் சனத்தொகை பரம்பலை (population spread) குறைத்து சனத்தொகை செறிவை (increase population density) நீண்டகால அளவில் கூட்டவேண்டும். இதன் மூலம் தென் பகுதி நோக்கி பொருளாதார நோக்கிக்காக செல்வதை குறைத்து மிகவும் உறுதியான ஒரு பொருளாதார மையத்தை (centre of economic activities) எமது நிலத்தில் கட்டியிழுப்ப வேண்டும். எமது பொருளாதார வலிமை (economic strength) எதிர்காலத்தில் நாம் மேலும் உரிமைகளை பெற வழிசமைக்கும்.

c. மனித பாதுகாப்பு (Human Security) அச்சுறுத்தலான விடயங்களை உடனடியாக சட்ட ரீதியாகவும் அழுத்தங்கள் மூலமும் தடுத்துநிறுத்த மக்கள் கண்காணிப்பு குழுக்கள் (Citizen Groups) சட்டவாளர்களுடன் சேர்ந்து  இயங்கவேண்டும். ஒரு மனித பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத இடத்தில் இருந்து மக்கள் வெளியேறத்தான் செய்வார்கள். அதனால் சனத்தொகை மேலும் குறையும் அல்லது பிறப்புக்களால் ஈடு செய்யமுடியாத அளவில் இருக்கும். இன்றைய நிலவரத்தில் உளூரில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாகாமல் தடுக்க ஒரு அரணாக சட்டவாளர்களும் அவர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளும் மனித பாதுகாப்பை ஓரளவாவது உறுதிப்படுத்தும்.

2. நிலங்களை பாதுகாத்தல்/பயன்படுத்தல் 

a. காணி அபகரிப்பு விடயங்களில் உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து அவற்றை தடுத்து நிறுத்தும் வழிவகைகளை உதவவேண்டும். அன்று யூதர்கள் செய்தது போல சட்ட நடவடிக்கைகளுக்கு நிதி/வள உதவி வழங்கி நீங்கள் உதவவேண்டும். இதனை மேல 1c ல் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கும் உதவ பாவிக்கவும். சுமந்திரன் ஒரு சட்ட குழுவையும் மணிவண்ணன் இன்னொரு குழுவையும் அமைக்கிறார்கள். அவர்கள் நல்லது  செய்தால் நீங்கள் உதவுங்கள். உதவினால் அவர்கள் கூடிய சட்ட நடவடிக்கைளை மேட்கொள்ள நிதி வளம் உதவலாம். குமாரவடிவேல் குருபரனும் இந்த விடயங்களில் சிறந்தவர். 

b. இருக்கும் காணிகளை பயன்படுத்த கூடிய திட்டங்களை ஊக்குவிக்க புலம்பெயர் அமைப்புகள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . பழைய மாணவர் சங்கங்கள் இந்த விடயத்திலும் பொருளாதார ஊக்குவிப்பு விடயத்திலும் உதவக்கூடியவர்கள்.

தமிழரின் இருப்பை உறுதி செய்யும் விடயங்களில் எது இப்பொழுது நடைமுறை சாத்தியமானது/ யதார்த்தமானது (current reality/currently practical) எது இப்போதைக்கு சாத்தியமில்லாத உயர்ந்த குறிக்கோள் (impractical idealism) என அடையாளம் கண்டு இயங்கவேண்டும். எம்மில் பலர் நடைமுறை சாத்தியமில்லாத கனவுகளுடன் விடயங்களை அணுகுவதால் காலம் விரையம் ஆகிறது. குறிகோளால் ஒன்று பட்டு இருங்கள். ஆனால் தனித்தோ சிறு குழுக்களாகவோ இயங்குங்கள்.

நீங்கள் குறிப்பிடட காரியங்கள் நன்றாகத்தான் இருக்கிறது. அதட்கு காலம் இருக்காது. நடக்கும் போலவும் தெரியவில்லை. அரசாங்கம் கன கட்சிதமாக எல்லாவற்றையும் திடடமிட்டு செயட்பட தொடங்கிவிடடார்கள். கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மட்டும்தான் இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை.

முடியுமெண்டால் வெளி நாட்டில் உள்ளவர்கள் இங்கு வந்து முதலீடு செய்து நிலங்களை இடங்களை கொஞ்சம் காப்பாத்தலாம். இந்தியாவில் உள்ள அகதிகளை கொண்டு வந்து குடியமர்த்தலாம். அவர்கள் வருவார்களோ தெரியவில்லை. அநேகர் அங்கு இருக்கவே விரும்புகிறார்கள்.

ஜூதர்களைப்போல எம்மால் அப்படி செய்யமுடியுமென்றால் எப்போதோ நாம் முன்னேறி இருப்போம்.

குருபரன் அவர்கள் இப்போது லண்டனில் குடும்பத்துடன் குடியேறி விடடார்.

அது சரி, நீங்கள் எந்த நாட்டிலிருந்து இதை எழுதுகிறீர்கள், இதில் உங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் எழுதினால் தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும்.

21 hours ago, கற்பகதரு said:

வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?

 

 

086e42f0-d5a8-11ea-8f95-6d813022b2d7.jpg

இங்குள்ள எமக்கு அது சுகமான அனுபவமாக இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.