Jump to content

மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல்

PHOTO-2020-11-21-16-44-47-696x338.jpg
 26 Views

தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் – மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு   வடமாகாணசபை அவைத்தலைவர் சிவிகே சிவஞானம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.

PHOTO-2020-11-21-16-44-46.jpg

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் சிவிகே சிவஞானம், உதயன் பத்திரிகை குழும தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்கினேஸ்வரனின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பாக மாணிக்கவாசகர் இளம்பிறையன், கருணாகரன் குணாளன், தனூபன் வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம் சார்பாக வேந்தன் ( ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் ) உட்பட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர் .

PHOTO-2020-11-21-16-44-46-1.jpg

இந்த கூட்டத்தில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்வரும் 24 ம் திகதியன்று தாயக மக்களை தெளிவுபடுத்துவது தொடர்பாக வெளியிடப்படவுள்ள அறிக்கைகள் தொடர்பாகவும், ஊடகங்கள் ஊடாக மக்களின் அச்சத்தினை போக்கி தெளிவுபடுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக நவம்பர் 27 ம் திகதி அனைத்து இல்லங்களின் வாசல்களிலும் தீப ஒளியை ஏற்றுமாறு தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/மாவீரர்-நாள்-நினைவு-கூரு-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் நாள் நினைவு கூரலுக்கான மாற்றுவழி குறித்து செவ்வாயன்று தீர்மானம்

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியப் பரப்பில் ஒருங்கிணைந்துள்ள அரசியல் கட்சிகள் மாவீரர்கள் நாள் நினைவு கூரலுக்கான மாற்றுவழி குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று தீர்மானம் எடுக்கவுள்ளன.

தமிழ்த் தேசியப் பரப்பில் ஒருங்கிணைந்துள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வடக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை யாழில் உள்ள வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கமலாகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோரும் வடக்கில் மாவீரர் துயிலுமில்லங்களை பராமரிப்பவர்களில் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவீரர் துயிலுமில்லங்களில் துப்புரவுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் முதலில் அவதானம் செலுத்தினோம். 

இதன்போது படையினர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் கூட்டிணைந்து மேற்கொண்ட நெருக்கடிகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தோம்.

அத்துடன் அனைத்து துயிலுமில்லங்களுக்கு முன்னாலும் புலனாய்வாளர்களின் நடமாட்டம் மற்றும் தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்மை தொடர்பிலும் துயிலுமில்ல பராமரிப்பாளர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்

இந்நிலையில் மாவீரர் நாள் நினைவுகூரலை முழுமையாக தடைசெய்வதற்கான நீதிமன்ற உத்தரவுகளை பொலிஸார் பெற்றுவருவது தொடர்பில் கவனம் செலுத்தினோம்.

குறிப்பாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிமன்றங்கள் நினைவு கூரலுக்கான தடைகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளன.

இதேவேளை மல்லாகம் நீதிமன்றம் சட்டத்திற்கு விரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் கைது செய்யுமாறு பணித்துள்ளது. இதனைவிடவும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று நாளை திங்கட்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. 

அதேபோன்று கோப்பாய், யாழ்.பொலிஸார் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தீர்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே இவ்விதமான அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்றே மாவீரர் நாளை நினைவு கூருவதற்கான மாற்றுவழி தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.

மேலும் மரணித்தவர்களை நினைவு கூருதல் அடிப்படை உரிமைகள் என்ற வகையில் நாம் இந்த விடயம் தொடர்பில் தீர்மான முடிவொன்றை ஒருங்கிணைந்துள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி முடிவெடுக்கவுள்ள என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/94933

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.