Jump to content

கவிதைகள் பல ரகம் ஒவ்வொன்றும் தனி ரகம்


Recommended Posts

கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன் 

@

கவிப்புயல் இனியவன் 

1) ஹைக்கூ 

2) சென்றியு 

3) லிமரைக்கூ 

4) ஹைபுன் 

5) குறள்கூ 

6) சீர்க்கூ 

7) கஸல் 

என்பவை முதலில் வருகின்றன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கவிப்புயல் இனியவன் said:

அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன்.

வாசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆம் வெயிட்டிங் .....!   😁

Link to comment
Share on other sites

01) ஹைக்கூ 

இது ஜப்பான் கவிதை மொழி என்று சகலரும் அறிந்ததே. தமிழில் 3அடி கவிதையை 1974 ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் முதல் முதலில் எழுதினார். 

......

ஹைக்கூ மரபுகள் 

1) தமிழில் 3அடி கவிதையே பயன் படுகிறது. மூன்று அடியும் 

மூன்று வாக்கியமாக இருக்க வேண்டும். 3 சொல் அல்ல 

2) தலைப்பு இடக்கூடாது 

3) முதல் அடி ஒரு கூறு. மூன்றாம் அடி ஒரு கூறு 

மூன்றாம் அடியே மிக மிக பிரதானம். இது திடீர் திருப்பமாக, உணர்வாக இருக்க வேண்டும். 

4) படைப்பாளிகள் வார்த்தையை விளக்கக் கூடாது. 

5) ஈற்றடி பெயர் சொல்லாக இருக்க வேண்டும். 

.....

மரபு கவிதைக்கு அடுத்து 

சற்று கடினமானது. ஹைக்கூ ஆகும். சிலர் 3 வரி எழுதினால் ஹைக்கூ என தவறாக நினைத்து விடுகிறார்கள். 

Link to comment
Share on other sites

அடியேன் 100 க்கும் மேற்பட்ட ஹைக்கூ எழுதியுள்ளேன் அவற்றில் சில.... 

............

 

இட்ட முட்டை சுடுகிறது.
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்.
ஏக்கத்தோடு பார்த்தது கோழி.

^^^

கடத்தல்காரன் கையில் பணம்.
வன அதிகாரிகள் பாராமுகம்.
ஓடமுடியாமல் தவிக்கும் மரம்.

^^^

காடழிப்பு.
ஆற்று நீர் ஆவியானது.
புலம்பெயரும் அகதியானது கொக்கு.

^^^

குடும்ப தலைவர் மரணம்.
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்.
கருத்தடை நாயின் சாபம். 

^^^

சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை

^^^^^

வியர்வை சிந்தாமல் வேண்டாம்.
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்.
ஊதியம்.

@

கண் வரைதல் ஓவிய போட்டி.
முதல் பரிசு பெற்றான் மாணவன்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி

@

தொட்டிக்குள் இலை குவிகிறது.
தூய்மையானது சாப்பாட்டுக்கடை.
ஏழை வயிறு நிரம்பியது.

@

பூமி உருண்டை
அதுதான் சிறிதாக இருக்கிறது
தொட்டிக்குள் மீன்
 

தொண்டன் தீக்குளிப்பு. 

கட்சி தவைவர் பெரும் சோகம். 

ஒரு வாக்காள் தோல்வி 

....

இவ்வாறு முடிவு எதிர் பாராத திருப்பமாய் இருக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

02) சென்றியு 

.........

இதுவும் ஜப்பான் கவிதை மொழி மூன்று அடிகளை கொண்ட ஹைக்கூ முறை. இதனை சிலேடை, நகைச்சுவை, கிண்டல், என்ற முறையில் எழுதலாம் 

....

ஜப்பான் கவிஞர் கராய்ஹச்சிமேன் என்பவர் 18 நூற்றாண்டு அறிமுகம் செய்தார் 

....

இவரின் புனை பெயர் சென்றியு என்பதால் அதையே கவிதை பெயர் ஆனது.. 

....

தமிழில் ஈரோடு தமிழன்பன் தான் முதல் முதல் எழுதினார் 

Link to comment
Share on other sites

கவிப்புயல் இனியவன் சென்ரியூ

 
உறவினருக்கு தேனீர்
இடைக்கிடையே பேச்சு
விளம்பர இடைவேளை

^^^

பணம் பாதாளம் பாயும்
பாதாள அறைக்குள்
பணம்

^^^

பணம் பத்தும் செய்யும்
கடன் கொடாதவன் கையில்
பத்து

^^^
Link to comment
Share on other sites

முகநூலில் காதல்
நான் யாரையும் காதலிக்கவில்லை
மறுபக்கத்தில் பழைய காதலி

^^^

தொடர்ந்து பாடும்
தொண்டைகட்டாது
ரேடியோ

^^^

சத்தியம் கேட்டு
சலித்துவிட்டார் கடவுள்
குடிகாரன்

^^^

நவீன சுயம்பரம் நடைபெறுகிறது
கல் பல் உடைக்கும் போட்டி
போட்டியில் முதியவர்

......

நேர அட்டவனை படி. 
சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 
பள்ளி மாணவர். 
..... 

பகலிரவு ஆட்டம். 
இரவு சூதாடம். 
பகல் கிரிக்கெட் ஆட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 விளம்கங்களுடன் கவிதைகளையும் தருவதற்கு நன்றி கவிப்புயல்!🙂

Link to comment
Share on other sites

03) லிமரைக்கூ (லிமரிக் )

ஆங்கிலத்தில் லிமரிக் என்பது ஒரு கவிதை வடிவம் ஆகும். 5 அடிகளை கொண்ட இந்த கவிதையை தமிழில் ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ளார். 

....

வேடிக்கை, வினோதம், நகைச்சுவை, சமூக விழிப்புணர்வு வகையில் எழுதலாம். 

....

ஹைக்கூ மற்றும் சென்றியு என்ற இரண்டும் கலந்தது 

....

இதன் மரபு 

1) மூன்று அடிகளை கொண்டது. 

2) முதல் அடியில் 3 சொற்கள் 

3) இரண்டாம் அடியில் 4சொற்கள் 

4) மூன்றாம் அடியில் 3சொற்கள் 

5) முதல் அடியின் இறுதி சொல்லும் 3ம் அடியின் இறுதி சொல்லும் "ரைமிங்கில் " வரவேண்டும் 

Link to comment
Share on other sites


முட்களின் நடுவே ரோஜா.
இரத்தம் கையில் வடிய பறித்து.
கொடுத்தார் காதலியின் ராஜா

^^^

மாப்பிளைக்கும் பணம்.
காலமாய் காதல் செய்தவரின்.
மாறியது குணம்
...

அரச துறையில் தனியார். 
தொழில் சங்க தலைவர் இரட்டை வேஷம். 
இவரை கேட்போர் இனியார்.

....

ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி. 
கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு. 
இழைத்து போனது உடல் ஒல்லி.
.....

இழுத்து கொன்றது உன் பார்வை.
விழித்து படித்து கண்டதொன்றுமில்லை. 
இழந்து விட்டேன் பள்ளி தேர்வை. 

@

கவிப்புயல் இனியவன் 
 

Link to comment
Share on other sites

04) குறட்கூ கவிதைகள்
............
புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது.
 
குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது.  கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார். 
.... 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

1) திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது. 

காதல் கரிநாள் ஆனது 

.....

2) உறவுகள் பறிபோனது. 

காதல் வந்தது. 

....

3) நொடி மூச்சு நிலையில்லை. 

காதல் நிலையானது. 

...

4) கண்ணால் காதல் வந்தது. 

இதயம் நொறுங்கிப்போனது. 

...

5) நித்திரையில் சிரித்தேன். 

திட்டி எழுப்பினார் அம்மா 

@

கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

05) ஹைபுன் 

ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.

தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் வெளிந்துள்ளன.

.....

இதன் மரபு..... 

ஒரு கதை, சிறுகதை, கட்டுரை, பேட்டி, விமர்சனம், இதில் ஏதாவது ஒன்றை எழுதி அதற்கு பொருத்தமான ஹைக்கூ ஒன்றை உருவாக்கவேண்டும் 

கவிப்புயல் இனியவன் ஹைபுன் 

காத்திருப்பேன் அவள் வருவாள் ..
பக்கத்தில் அவள் அண்ணன் ...
சைக்கிளில் வருவார் ..
அருகிலே செல்வேன் ..
கண்ணால் கதைப்பேன் ..
அவள் யாடையால் கதைப்பாள் ..
அண்ணன் கிட்டவரும் போது..
என் நடை வேகமாகும் ...
பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..
கொப்பியை பரிமாறும் போது ..
கடிதமும் பரிமாறும் ...
விழுந்தது கடிதம் நிலத்தில் ..
கண்டார் ஆசிரியர் தந்தார் ..
முதுகில் நல்ல பூசை ..
நண்பர்கள் கிண்டல்
நண்பிகள் அவளை கிண்டல் ..
காலம் காதலாகியது ..
கல்வி கரைக்கு வந்தது ..
காதலும் கரைக்கு வந்தது 

^
பள்ளி காதல் தொடரும்
பள்ளிவரை இல்லை
பள்ளி படலை வரை

Link to comment
Share on other sites

கவிப்புயல் இனியவன் ஹைபுன் 02

...........
தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் கேள்விக்கு பதில் சொல்ல முதல் தடீரென விழுந்தான் பூட்டான் ..யாரப்பா பிள்ளையை தூக்குங்கோ பூட்டான் விழுந்திட்டான் ...!!!

தனது வலது காலை பார்த்தார் அப்புத்துரை... பெரிய தழும்பு சின்ன வயதில் மாட்டு வண்டி ஓடியபோது வண்டிளால் விழுந்த காயம் நினைவு வந்தது ...!!!

மதியம் சாப்பாட்டு நேரம் பேரன் வந்தான் வயது 18 இருக்கும் வந்தவுடன் அவன் தாய் நித்திய பூசையை ஆரம்பித்தாள் நேத்து எங்கடாபோண்ணி ஸ்கூலுக்கு போறாண்டு
விஜய் படத்துக்கு போனது தெரியாதா எனக்கு அப்பா வரட்டும் ...
அப்பாவரட்டும் ......தாத்தா சிரித்தார்
போடா போ கைகாலை கழுவிட்டு சாப்பிடு ....!!!
தான் பொய் சொல்லி நாடகத்துக்கு போனதும் தனக்கு அடிவிழுந்ததையும் எண்ணி சிரித்தார் .....!!! தாத்தா
அன்று தண்டனையாக இருந்தவை வேதனையாக இருந்தவை இன்று இனிமையாக இருந்தது அவருக்கு ...!!!

*
இளமையின் இனிமை
தாமதமாக இனித்தது
முதுமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கவிதைகளும் நிறைவாக இருக்கின்றது புயல்.....பாராட்டுக்கள்.....!  👍

Link to comment
Share on other sites

 
06) சீர்க்கூ கவிதைகள்

காலந் தோறும் அடிவரையறையைக் கொண்டு தமிழ் இலக்கியங்களை வகைமை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சீர்க் கவிதைகள் ஒரே ஒரு அடியில் முடிந்துவிடுவதால் அடிக் கவிதை எனப் பெயர் சூட்டாமல் ஒன்றிரண்டு சீர்களில் கவிதை முடிந்துவிடுவதால் சீர்க்கூ எனப் பெயர் சூட்டியுள்ளேன். ஒன்றிரண்டு சீர்களில் கவிதை இயற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. வடிவத்திற்கேற்ப உள்ளடக்கத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தக் கவிஞனின் கடமையாகிறது. கவிதையின் வடிவ சுருக்கத்தால் இருண்மை / கூடார்த்தம் ஒரு உத்தியாகி விட்டது. கவிதையின் தலைப்புக்கேற்பவே உள்ளடக்கத்தின் பொருளை வாசகர்கள் விரித்துரைத்துக் கொண்டால் இருண்மையைத் தவிர்க்க முடியும். கால வேகத்துக்கு இந்த வடிவத்தை நவீனக் கவிதை உலகம் வரவேற்கும் என நம்புகிறேன்.
- ம. ரமேஷ்
( இவர் எனது மதிப்புக்குரிய முனைவர் ம. ரமேஷ். கவிதையை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர் )

Link to comment
Share on other sites

கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள் 

01) மரம் உயிர்களின் நுரையீரல் 

02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள் 

03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி 

04) மனம் குரு இல்லாத தியானம் 

05) கவிதை காதலின் தலையெழுத்து 

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

எல்லா கவிதைகளும் நிறைவாக இருக்கின்றது புயல்.....பாராட்டுக்கள்.....!  👍

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

07) கஸல் கவிதை 

இக் கவிதை பல மொழிகளை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுகிறது. இங்கு யான் இது எவ்வாறு எழுதுவது என்று பார்க்கிறேன் 

....

தமிழில் கவிகோ அப்துல் ரகுமான் அவர்கள் நல்ல வடிவம் கொடுத்தார். அதனையே பெருமளவு பயன்படுகிறது. 

.....

பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை 
முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )

இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் 
( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் 
மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .

அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது 
ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)
3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது 
ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....

உதாரணத்துக்கு ஒரு கவிதை 
-----
வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)
----- 01
வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)
-----02
அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)
-----03
&
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

அடியேன் 1800 கஸல் எழுதியுள்ளேன் 

Link to comment
Share on other sites

காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட  மாட்டாய் .......!

உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!

என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

ஐம்புலனை ....
அடக்கும் ஆமையின் ...
ஆற்றல் எனக்கில்லை ...(-)
நான் .....
ஆறறிவு மனிதன் (+)

&
ஆன்மீக கஸல்
....

நீந்த துடிக்கும்
மீன் குஞ்சு போல் ....
இறை ஆசை .....(+)

வறண்டிருக்கும்
குளம் போல் ......
மனம் ......(-)

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

...
சமுதாய கஸல் கவிதை

....
சண்டை போடுவதாயின்...
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!

^^^^^

பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!

 

^^^^^

ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!


------

விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!

நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!

விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

08) திருக்குறள் கவிதைகள் 

திருக்குறள் சென்றியு 

..........

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)



கவிப்புயல் இனியவன் திருக்குறள் -சென்ரியூ

எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -

.....

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (02)
****

கவிப்புயல் இனியவன்  திருக்குறள் -சென்ரியூ 02
**********
இறை சிந்தனை
தொடர் சிந்தனை
-நீடிய வாழ்வு -

.....

இவ்வாறு 50 க்கும் மேற்பட்ட சென்றியு எழுதியுள்ளேன் 

நன்றி 

Link to comment
Share on other sites

திருக்குறள் கவிதைகள் 

.........

திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்" 

எனும் பகுதியை கவிதை ஆக்கியுள்ளேன் இதனை முதல்

முயற்சியாக அடியேன் வடிவமைத்துள்ளேன். 

....

 பெண்ணே நீ யார் ....?


என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

.......

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
 
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01
.... 
இவ்வாறு அனைத்தும் வடிவமைத்துள்ளேன் 

நன்றி

Link to comment
Share on other sites

09) வசனக்கவிதை 

அதிசய குழந்தை அவன் ...
ஆசான் நான் ...
என்னைவிட அவனே முன்னுக்கு " அ "
நான் "ஆ "

இந்த குழந்தை இப்படியெல்லாம் ....
பேசுமா....?  சிந்திக்குமா ...?
நம்ப முடியவில்லை என்போர் ...
இந்த கவிதையை மூடிவிட்டு 
போகலாம் ....!!!

இந்த குழந்தை என்னதான் 
சொல்லப்போகிறது என்பதை ...
பார்க்க விரும்புவோர் ....
பொறுமையோடு காத்திருந்து ....
தொடராக வரும் வசனக்கவிதையை ....
பாருங்கள் .....!!!

அதிசயக்குழந்தை ....
எப்படி இருப்பான் ...?

ஆசான் நேரான சிந்தனையில் ...
பேசினால் அவன் எதிர் சிந்தனையில் 
பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் 
பேசினால் அவன் நேர் நித்தனையில் ...
பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!!

ஆன்மீகம் பேசுவான் 
அரசியில் பேசுவான் 
இல்லறம் பேசுவான் 
எல்லாமே பேசுவான் 

இலக்கண தமிழில் உரைப்பான் 
இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும் 
பேசுவான் ....
கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ...
இனிப்பான பொய்களையும் சொல்வான் ...
மொத்தத்தில் அதிசய குழந்தை 
இடையிடையே அதிர்ச்சியை ....
தருவான் என்பது மட்டும் உண்மை ....!!!

^
அதிசயக்குழந்தை 
 வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.