Jump to content

பூமியின் மிக ஆழமான கடலுக்குள் ஆராய்ச்சி செய்யச் சென்றது சீனாவின் பென்டூஸ் கப்பல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் மிக ஆழமான கடலுக்குள் ஆராய்ச்சி செய்யச் சென்றது சீனாவின் பென்டூஸ்  கப்பல்! | Athavan News

பூமியின் மிக ஆழமான கடலுக்குள் ஆராய்ச்சி செய்யச் சென்றது சீனாவின் பென்டூஸ் கப்பல்!

பூமியின் மிக ஆழமான கடலடிப் படுகையை ஆராய்ச்சி செய்வதற்கு நீர்மூழ்கிக் கப்பலொன்றை சீனா அனுப்பியுள்ளது.

இந்த ஆராய்ச்சி, பசிபிக் பெருங்கடலில், நீரின் மேல்மட்டத்தில் இருந்து பத்தாயிரம் மீற்றர் ஆழங்கொண்ட மரியானா ட்ரெஞ்ச் (Mariana Trench) என்னும் பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பகுதியில் உயிர்ச் சூழல் பற்றிய மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பென்டூஸ் (Fendouzhe Submersible) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆராய்ச்சியாளர்களுடன் அப்பகுதிக்கு சீனா அனுப்பியுள்ளது.

இந்த நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கு அடியில் உள்ள மாதிரிகளைச் சேகரிக்கும் வகையில் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அங்குள்ள காட்சியைக் கண்டறிய மீயொலித் தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த பென்டூஸ் கப்பல் ஏற்கனவே இம்மாதத் தொடக்கத்தில் கடலுக்கு அடியில் பத்தாயிரத்து 909 மீற்றர் ஆழத்துக்குச் சென்று சாதனை படைத்துள்ளது.

எனினும், 2019ஆம் ஆண்டில் அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் ஆழ் கடலுக்குச் சென்று ஏற்படுத்திய 10 ஆயிரத்து 927 மீற்றர் என்ற உலக சாதனையை குறித்த சீனக் கப்பல் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியின் மிக ஆழமான கடலுக்குள் ஆராய்ச்சி செய்யச் சென்றது சீனாவின் பென்டூஸ்  கப்பல்! | Athavan News

http://athavannews.com/பூமியின்-மிக-ஆழமான-கடலுக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.