Jump to content

அமித் ஷா-எடப்பாடி: பேசியது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமித் ஷா-எடப்பாடி: பேசியது என்ன?

 

spacer.png

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (நவம்பர் 21) கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழா முடிந்த பிறகு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றார். சில நிமிடங்களில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் அந்த ஹோட்டலுக்கு சென்று அமித் ஷாவை சந்தித்தனர்.

ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க சென்றனர். சில நிமிடங்களில் அமித்ஷாவின் அறையிலிருந்து ஜெயக்குமார் வெளியில் வந்துவிட்டார். பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக

ஓ .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரடியாக அமித்ஷாவுடன் பேசியிருக்கிறார்கள்.

இருவருமே முதலில் பிகார் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தங்களது வாழ்த்துக்களை நேரடியாக அமித்ஷாவிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவித்தார் அமித்ஷா. அப்போது எடப்பாடி பழனிச்சாமி. “அங்கே மூன்று முறை ஆட்சியிலிருந்த நித்திஷ் குமார் மீண்டும் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் நாங்களும் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவோம்’என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சில நிமிடங்கள் பிகார் தேர்தல் நிலவரம் பற்றியும் அவர்களிடம் பேசினார்.

“தமிழக அரசு மீது மக்களுக்கு இதுவரை எந்த கோபமும் இல்லை. அதனால் மீண்டும் நிச்சயமாக நாம் ஆட்சியைப் பிடித்து விடுவோம். பிகாரில் உங்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததைப் போல தமிழகத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும்” என்று எடப்பாடி கூற நிச்சயமாக என்று உறுதியளித்துள்ளார் அமித் ஷா. மேலும், ”நீங்கள் இருவரும் (எடப்பாடி, பன்னீர்) இப்படி இணைந்து செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி. இது தொடரவேண்டும்” என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.

யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி இப்போது இந்த சந்திப்பின் போது பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. வரும் ஜனவரி மாதத்துக்குள் பாஜகவுக்கான தொகுதிகளைப் பற்றி சொல்லி விடுங்கள் என்று இபிஎஸ் ஓபிஎஸ் இருவரிடமும் கூறியிருக்கிறார் அமித் ஷா. அத்தோடு இந்த சந்திப்பு நிறைவடைந்துள்ளது.

 

பாஜக வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது..."அமித்ஷா தமிழகத்தில் ரஜினியின் அரசியல் வருகையை வைத்து ஒரு திட்டமிட்டிருந்தார். ரஜினி, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு அணி அமைத்து மத்திய அரசின் முழுமையான ஆதரவோடு தேர்தலை எதிர்கொள்வது என்பதுதான் அமித்ஷாவின் நம்பர் ஒன் ஆபரேஷன்.

ஆனால் ரஜினியிடமிருந்து உறுதியான இறுதியான எந்தப் பதிலும் அமித் ஷா சென்னை வரும் வரைக்கும் வராத நிலையில் அதிமுக கூட்டணியை அடுத்த கட்ட ஆபரேஷன் ஆப்ஷனாக வைத்திருக்கிறார் அமித் ஷா” என்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது,

"தன்னை விமான நிலையத்திலேயே வந்து முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்றதில் அமித் ஷாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுவும் குடியரசுத் தலைவர், பிரதமருக்குக் கொடுக்கும் வரவேற்பைப் போல அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் அமித் ஷா திக்குமுக்காடிவிட்டார். அந்தக் கூட்டத்தைப் பார்த்துதான் விமான நிலையத்தில் இருந்து வெளியே சில நிமிடங்கள் வெளியே நடந்து வந்து கையசைத்தார்.

சில மாதங்களாகவே அமித்ஷாவுடன் தனது தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுக தலைமை கழகத்தில் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு முன்பு இந்த அறிவிப்புக்கு ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. இதை விரிவாக அமித்ஷாவிடம் கொண்டு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி தூதுவராக ஒரு மூத்த அரசியல் பிரமுகர் தேனியில் பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அதன்பிறகு அமித்ஷாவே நேரடியாக ஓ பன்னீர்செல்வம் லைனுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்பிறகே ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக்கொண்டு எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

இந்தப் பின்னணியில்தான் நேற்று அமித் ஷாவே ஆச்சரியப்படும் அளவுக்கு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி களை அதிமுக சார்பில் பிரமாண்டப்படுத்தியிருந்தார் எடப்பாடி. இதை அமித் ஷாவும் முதல்வரிடமே நேரடியாகக் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.

 

https://minnambalam.com/politics/2020/11/22/27/amitsha-edapadi-ops-in-hotel-what-discussed

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.