Jump to content

மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள்- சாள்ஸ் நிர்மலநாதன் – காணொளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள்- சாள்ஸ் நிர்மலநாதன் – காணொளி

 

மன்னார் நிருபர்

மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களக்காக உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த 2019 ஆம் ஆண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டாலும்,கடந்த வருடம் மாவீரர்களினுடைய , மாவீரர்களை அடக்கம் செய்த இடங்களுக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்த பெரிய அளவில் தடை விதிக்கப்படவில்லை.

அரசாங்கத்தினுடைய காரணம் பாராளுமன்ற தேர்தல் ஒன்று இடம் பெற இருந்த சூழ்நிலையில், தமிழ் மக்களினுடைய வாக்கினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் பெரிய அளவில் தடை ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் தற்போது கடந்த மாதம் தியாக தீபம் திலிபனுடைய நினைவேந்தல்களின் போது அவருடைய நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் நீதிமன்ற தடை உத்தரவை எனக்கும் எடுத்திருந்தார்கள்.

என்னைப் போல பலருக்கும் நீதி மன்ற தடை உத்தரவை எடுத்திருந்தார்கள். அதேபோல நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுக்கு கூட இந்த அரசாங்கம் முழுமையான நீதிமன்ற தடை உத்தரவை விடுத்திருக்கிறார்.

மேலும் இன்றிலிருந்து சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஒரு வர்த்தமானி அறிவித்தலை கையெழுத்திட்டு நடைமுறைப் படுத்தி இருக்கிறார்.

இலங்கையினுடைய பொதுமக்களுடைய பாதுகாப்புக்கு முழுமையான பொறுப்பும் இராணுவம் மற்றும் முப்படைக்கும் அந்த பொறுப்பை ஒப்படைப்பதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று 22 ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றது.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக வந்த இந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஒரு அச்ச உணர்வில் சுயமாக செயற்பட முடியாதவாறு கொண்டு வருவதற்குத்தான் இந்த மாவீரர்களின் அஞ்சலி நிகழ்வுகளுக்கும், பொது மக்களுடைய பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பது, குறிப்பாக நவம்பர் 21 ஆம் திகதியில் இருந்து மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் அவசர அவசரமாக 22 ஆம் திகதியில் இருந்து பொது மக்களுடைய பாதுகாப்பு முழுமையாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களை நசுக்கி அவர்களை மிரட்டி தான் யுத்தத்தை எப்படி வழி நடத்திய போது தமிழ் மக்கள் எப்படி அச்ச உணர்வுகளோடு இருந்தார்களோ அதே அச்ச உணர்வை தொடர்ச்சியாக தக்க வைத்து தங்களுடைய குடியேற்றங்களை குறிப்பாக தமிழ் மக்கள் அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளுக்கு எதிராக செயல் படாமல் விடுத்து அச்ச உணர்வு இருக்கின்ற போது வடக்கு கிழக்கில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை மிக விரைவாக செய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

அதுக்கு தற்பொழுது ‘கியுல் ஓயா’ திட்டம் ஒன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு அடங்கலாக அரசாங்கத்தினுடைய மகாவலி அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

பத்தாயிரம் (10.000) சிங்கள மக்களை குடியேற்றம் செய்வது. அரசாங்கத்தினுடைய இந்த செயல்பாடு கண்டிக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கிறது. இந்த நாட்டில் ஜனநாயக முற்றுமுழுதாக அற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது.

இராணுவத்தினுடைய ஆட்சி இலங்கையில் படிப்படியாக நாளுக்கு நாள் வைரஸ் போல் மலர்வதற்கு இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கான புதிய சூழ் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இராணுவ அதிகாரிகள் செயலாளர்களாக இரக்கின்றார்கள், பொறுப்பாளர்களாக இருக்கின்றார்கள். பொது மக்களுடைய பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் என்ன பயங்கரவாதம் இருக்கின்றது இலங்கையின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டமைக்கு என நான் கேட்க விரும்புகின்றேன்.

2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று மார்பு தட்டி சிங்கள மக்களுடைய வாக்கைப் பெற்ற நீங்கள் ஏன் அவசர அவசரமாக இவ்வாறான விடையங்களை மேற்கொள்ள வேண்டும்?.

இந்த அரசாங்கத்தினுடைய நடவடிக்கை குறிப்பாக ஜனாதிபதியின் நடவடிக்கையை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

எங்களுடைய மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ் நிலையில் இராணுவத்தின் பிரசன்னத்தின் மூலம் மக்களை முழுமையாக கட்டுப்படுத்த ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்னாள் இராணுவ தளபதியும் திட்டமிட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் எங்களுடைய உறவுகளின் இருப்பிற்காகவும் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்கள், யுத்தத்தில் உயிர் நீத்த பொது மக்கள் அனைவருக்கும் அவர்கள் என்ன தடை விதித்தாலும் மக்கள் ஏதோ ஒரு வகையில் அஞ்சலி செலுத்துவார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

அவர்களால் மனதால் செலுத்தலாம் அல்லது அவர்களுடைய வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம்.

என்னை கைது செய்வதற்காக நான் பயப்படவில்லை.ஆனால் பொது மக்களை ஒரு தர்ம சங்கடமான சூழ் நிலைக்கு கொண்டு போகக் கூடாது என்ற ஒரு சூழ் நிலைக்காக தான் அந்த 27ஆம் திகதி நிகழ்வுக்கு தடை விதித்த போதும் அதற்குரிய முயற்சிகளை தற்போது வரை எடுக்க வில்லை.

இருந்தாலும் பொது மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக தமது உறவுகளுக்காக அஞ்சலி நிகழ்வை ஏதோ ஒரு வகையில் முன்னெடுப்பார்கள். என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் கெரரோனா தொற்றில் மரணமடைபவர்களின் சடலங்களை மன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதன் போது பதில் வழங்குகையில்,

கொரோனா தொற்று உலகத்தில் பல நாடுகளில் பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் அதனுடைய தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய மதத்தலைவர்கள் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டும் என்று .

-அதனை நான் வரவேற்கிறேன் . அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கைக்கு சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெற்று அதை செய்வதை நான் வரவேற்கின்றேக்.

குறித்த விடையம் தொடர்பாக பாராளுமன்றத்தில் என்னுடைய யோசனையை நான் கூறியிருக்கின்றேன்.

-ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இலங்கையில் கொரோனா தொற்றில் மரணிக்கின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளினுடைய உடல்களை மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வதற்கு ஒரு யோசனை முன்வைத்ததாக அறிகின்றேன்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்க விரும்புகின்றேன் மன்னர் என்ன சுடுகாடா? கடல் இருக்கின்ற பிரதேசத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றால் இலங்கையை சுற்றி எல்லா இடமும் கடல் தான் இருக்கின்றது.

அந்தந்த மாவட்டங்களில் இறக்கின்றவர்களை அவர்களுடைய மாவட்டத்தில் ஒரு பொதுவான இடத்தில் அடக்கம் செய்வது தான் முறை.

ஆனால் ஏனைய மாவட்டங்களில் மரணிக்கின்றவர்களையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வது என்பதனை மன்னார் மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அது ஒரு நியாயமான செயலும் அல்ல. அபிவிருத்திகளை அம்பாந்தோட்டை அவர்களுடைய மாவட்டங்களுக்கு செய்து கொண்டு சடலங்களை அடக்கம் செய்வதற்கு மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்த மன்னார் மாவட்டம் என்ன சுடுகாடா என்பதை அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

 

https://thinakkural.lk/article/91743

Link to comment
Share on other sites

நீதிமன்றங்களூடாக இவை தடை செய்யப்படட படியால் அதை மதிக்க வேண்டியுள்ளது. எனவே தனிப்படட ரீதியில் வடமராட்சியில் சுமந்திரன் செய்ததுபோல எல்லா இடங்களிலும் செய்ய வேண்டியதுதான். அதட்கு முன்னர் முடியுமென்றால் ஜனாதிபதியுடன் பேசி ஒரு முடிவெடுத்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனத்திற்காக உயிர்நீத்தவா்களை நினைவுக்கூருவதை யாராலும் தடுத்து விட முடியாது -ப.கருணாவதி

 
1-157-696x387.jpg
 46 Views

இனத்திற்காக உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூருவதை யாராலும் தடுத்து விட முடியாது என வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கப் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இனத்துக்காக தங்களது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை  நினைவு கூறுவதை தடுக்க முடியுமா?

எங்களது பிள்ளைகளை நினைவு கூருவதனை எவராலும் தடுக்க முடியாது. எங்களது வாழ்க்கைக்காக வீரகாவியமான எமது பிள்ளைகளை நினைவு கூருவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதனை தடுக்கும் உரிமை எந்ததொரு நாட்டிலும் இல்லாத நிலையில், இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்பது ஏற்புடையதல்ல.

எனவே, அனைவரும் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக உலகறிய செய்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/இனத்திற்காக-உயிர்நீத்தவ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் டமார் டமார் என்று வீசி அழிச்சு அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்ப் ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள். எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக இருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
    • இனி…. எப்படியும் தெரிய வரும். 🤣 ஆதவனுக்கு ஏழரையா… சவுக்குக்கு ஏழரையா… என்று தெரியவில்லை. 😂
    • ஓம்… ஆனால் இதில் இன்னொரு பாடமும் உள்ளது. என்னதான் அப்பா டக்கர் இஸ்ரேலாய் இருந்தாலும்…. பெரிய பானையை உடைக்கக்கூடாது. @விசுகு அண்ணை கவனத்துக்கு👆🏼🙏. சிலவேளை பைடன் வெண்டதும் அடிக்கலாம் என ஒரு உத்தரவாதம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். டிரம்ப் வந்தால் எப்படியும் ஈரானுக்கு அடிதான். எப்ப என்பதுதான் கேள்வி. புட்டின் கடுமையாக கண்டிப்பதோடு சரி🤣. ஆனால் நவெம்பர் வரை நெத்தன்யாகு தாக்கு பிடிக்கோணும் எண்ட கவலை அவருக்கு🤣. அவனவனுக்கு அவனவன் பதவி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.