Jump to content

சந்திவெளிக் கலைஞர்களின் கொரோனா கூத்து – சில குறிப்புக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சந்திவெளிக் கலைஞர்களின் கொரோனா கூத்து–சில குறிப்புக்கள்..

IMG-20201120-WA0038.jpg

ஒரு இனமானது காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் அவ் இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியங்கள்; தொடர்ந்து சந்ததி ஈர்ப்பின் ஊடாக கடத்தப்பட்டு அது பேணப்பட்டு வருகின்றமையே காரணமாகும்.
தமிழர்கள் மிக நீண்ட காலங்களாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த பண்பாட்டை கொண்டவர்கள்.மொழி, இலக்கியம்,கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டி இருந்தவர்கள்.

இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழில் ஒன்றான நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடககலையில் ஈடுபட்டுவருகின்றனர். தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் நாடகம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதினை நாம் வரலாற்று ஆதாரங்களுடன் அறிய முடிகின்றது.அந்த வகையிலே தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்கள் ஆதிகாலத்திலேயே வேரூன்றப்பட்டுவிட்டது.

 அக்கலைகள் எத்தனை நூற்றாண்டு காலம் கடந்தாலும் அத்தளத்தில் இருந்தே பேணப்பட்டு வரும் என்பதில் எவ்வித மாற்றுகருத்துக்கும் இடம் இல்லை. தமிழர்களின் ஆற்றுகைக்கலைமரபுகளில் மிக பிரதானமானது கூத்துக்கலைவடிவமாகும்.

இக் கலைமரபானது  குறிப்பாக ஈழத்திலே தமிழர்கள் வாழும் இடமெல்லாம் ஆடப்பட்டுக்கொண்டே வருகின்றது.
இன்றைய 21ஆம் நூற்றாண்டிலேநாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கலை சார்ந்து மேல்நாட்டு கலைமரபுகள் அரங்கமரபுகள் எனப்பல அறிமுகப்படுத்தப்பட்டாலும் மக்கள் அதனை இரசிக்க முனைந்தாலும் கூட எமது பாரம்பரியகலைகளை மறைப்பதும் இல்லை மறப்பதும் இல்லை. அதனைக்கொண்டே தமது ஆற்றுகைகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
அந்தவகையிலே ஆரம்ப காலம் தொடக்கம் இன்றைய காலம் வரை பல கூத்துக்களைஅரங்கேற்றி,பல் துறைசார் கலைஞர்களின் ஆற்றுகைகள் ஆற்றப்பட்டு,சைவமும் தமிழும் தழைத்தோங்கும்,பண்பாட்டுப்பாரம்பரியங்களை இன்றும் பேணிப்பாதுகாத்து இன்றைய தலைமுறையினரை சிறந்த கலைஞர்களாக படைத்து வரும் ஈழத்தின் சந்திவெளி எனும் ஊரிலே உள்ள மூத்த கலைஞர்கள் மற்றும் இளைய கலைஞர்கள் இணைந்து இன்றைய சூழலில் பரவிக்கொண்டிருக்கும் கொடிய நோயான கொரோனா தொடர்பாக கொரோணா  விழிப்புணர்வு எனும் கூத்து சாயல் கொண்டதான ஒரு ஆற்றுகையினை நிகழ்த்தியுள்ளார்கள்.

கொரொனாவால் மக்கள் அவதியுறுவதையும் அது தொடர்பான சிறந்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கத்துடனும் எமது கலைஞர்களால் இந்த ஆற்றுகை உருவாக்கப்பட்டது.
தென்மோடி சாயலில் பாடல்களை உருவாக்கி அதற்கேற்றதான ஆட்டக்கோலங்களை பழகி அதனை மறுநாள் காலை மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று ஆற்றுகை செய்தனர்.

இந்த ஆற்றுகையின் கதைச்சுருக்கம் ..

எமதர்மராஜன்,இந்திர மகாராஜன்,சித்திரபுத்திரனார் பூமியில் மக்கள் அவதியுறுவதை அறிந்து இக்கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக எமதர்மராஜன் சித்திரபுக்தனாரிடம் சுகாதார ஒழுங்கு விதிகளான முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியை பேணுதல்,கைகளை கழுவுதல் மற்றும் ஏனைய விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களை கணக்கெடுத்து தரும் படியும் இவர்களை எமலோகம் கொண்டு செல்ல போவதாகவும்; கூறுவார்.

அதற்கு நான் அப்படியே செய்கின்றேன் என்று கூறி விதிமுறைகளை பேணாதவர்களிடம் சென்று எமதர்மராஜன் கூறியதை கூறுவார். அச்சமயத்தில் இந்திரமகாராஜன் வந்து இல்லை அவ்வாறு செய்யத்தேவை இல்லை நான் அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றேன். மக்கள் அவ் வழிமுறைகளை பின்பற்றுவார்கள் என்று கூறி மக்களை முகக்கவசம் அணியும் படியும் சமூக இடைவெளிகளை பின்பற்றுமாறும் கைகளை கழுவிசுத்தபடுத்துமாறும் மற்றும் ஏனைய விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுரை கூறுவார்.

பொதுவாக இது திறந்தவெளி அரங்கினிலே நிகழ்த்தப்பட்டது. இதில் எமனாக பாக்கியராசா கரிசுதன் அவர்களும், இந்திரனாக இராசரெத்தினம் அச்சுதன்அவர்களும்,சித்திரபுத்தினாக பாலிப்போடி தவராஜா அவர்களும் ஆற்றுகை செய்திருந்தனர்.
இவ்வாற்றுகையில் அண்ணாவியார் ஆறுமுகம் இரரசரெத்தினம்,பாலிப்போடி கமலநாதன்,சுக்குறுசாமித்தம்பி,கந்தசாமி நிமலதாசன் ஆகிய கலைஞர்களும் பங்கு பற்றியிருந்தார்கள்.

இக்கலைஞர்கள் இவ் ஆற்றுகையின் மூலமாக பாரம்பரியக் கலைகளைக் கொண்டு எவ்விதமானஆற்றுகைகளையும் மேற்கொள்ளமுடியும் என்பதனையும் கூறவரும் விடயத்தினை எமது பாரம்பரிய முறைமைகளினூடாக கொண்டு சொல்லும் வேளையிலே எம்மவரை சிந்திக்க வைக்கவும் அவர்களை நம்பிக்கையின் பால் வழிப்படுத்தவும் முடியும் என்பதனையும் நிருபித்துக் காட்டியுள்ளனர்.

ஆற்றுகைகள் பலவிதமான வடிவங்களின் வழி வந்தாலும் கூட நம்மவரைவழிப்படுத்தநம் கலைகளைப் பயன்படுத்துவது சாதகங்கள்  நிறைந்தது என்பதற்கு சான்றாக சந்திவெளிக் கலைஞர்களின் இப்படைப்பானது அமைந்துள்ளது.இவ் ஆற்றுகையானது சந்திவெளி,திகிலிவெட்டை,கிரான்,முறக்கொட்டான்சேனைபோன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்டது.

கூத்தர்களின் ஆற்றுகையானது மக்கள் கூட்டமாகச் சேரும் இடங்களுக்கு அருகில் சென்று சமூக இடைவெளியை சுட்டிக்காட்டி சுகாதார விதிமுறைகளை பேணும் வண்ணம் நிகழ்த்தப்பட்டது. கலைஞர்கள் மோட்டார் சைக்கிள்களிலே ஊர் ஊராக சென்று தமது ஆற்றுகையினை நிகழ்த்தினர்.

இதில் சுகாதார அதிகாரிகளும் கலந்து கொண்டு மக்களை விழிப்பூட்டினர். மக்கள் மிகவும் மகிழ்வான சூழலிலே இதனை கண்டு மகிழ்ந்தனர். இதன் பின்னரான மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும் போது இது முழுமையாக சென்றடைந்துள்ளமையை அறிய முடிகின்றது. காரணம் நம் கலையில் உள்ள பற்றும் நம்பிக்கையுமே ஆகும்.

ஆகவே நம் இனம் வாழ வேண்டுமானால் நம் கலைகள் வாழ வேண்டும் என்ற கூற்றிற்கிணங்க எம் கலைகளும் கலைஞர்களும் எந்த சூழ்நிலையிலும் நம் கலைகளினூடாகவும் எம் பண்பாட்டின் ஊடாகவும் உள் வாங்கப்பட்டு சமகாலத்துக்கு ஏற்ற வகையிலும் புதிய போக்குகளுக்கு சமமாக சாதித்து காட்டமுடியும் என்பதனையும் நிருபித்து உள்ளனர்.

Screenshot-2020-11-23-13-04-27-185-org-m

எனவே ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள கலைஞர்கள் இலைமறைகாயாக இருக்காமல் எம்மால் எதையும் வெல்லமுடியும் என்ற உறுதியுடன் எதிர் வரும் காலங்களில் எம் கலைகளுடாக எதையும் சாதிக்கலாம் எனும் முனைப்புடன் சந்திவெளி கலைஞர்களின் முயற்சிகளை போன்று மென்மேலும் முயற்சிகளை மேற்கொண்டு எம் கலைகள் வளர இளந்தலைமுறையினர் கை கோர்ப்பது அவசியமாகும்.

சுந்தரலிங்கம் சஞ்சீபன்,
சந்திவெளி,
மூன்றாம் வருடம்
நாடகமும் அரங்கியலும் (சிறப்பு கற்கை) ,
நுண்கலைதுறை,
கிழக்குப்பல்கலைகழகம் - இலங்கை.

http://globaltamilnews.net/2020/153382/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.