Jump to content

பென்னு என்ற சிறு கோளில் (ஆஸ்ட்ராய்ட்) கால் பதித்த நாசா விண்கலம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bennu என்ற சிறு கோளில் (ஆஸ்ட்ராய்ட்) கால் பதித்த நாசா விண்கலம் .!

Screenshot-2020-11-23-16-06-11-561-org-m 

நமது சூரிய குடும்பத்தில் பல மில்லியன் கணக்கான சிறிய கற்கள் வடிவிலான கோள்கள் (asteroid) சுற்றி வருகின்றன. அதில் ஒன்றுதான் bennu என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் ஒரு சிறிய சுழலும் சிறுகோளில் (Spinning rock) நாசாவின் விண்கலம் தரை இறங்கி இருக்கிறது.

இது நமது பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கிறது. அதோடு நம் சூரிய குடும்பத்தில் மிக அருகில் இருக்கும் Ryugu என்ற சிறுகோளுக்கு அடுத்து (177 மில்லியன் மைல்கள்) இருப்பது இதுவே ஆகும்.

கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்த விண்கலம் 'OSIRIS-REx' (asteroid sample return mission) தரை இறங்கியதை அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு மையம் Lockheed Martin Space Systems Facility in Littleton, Colorado, இதனை உறுதிப்படுத்தியது.

அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 'touchdown' என்று கூறி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். 'touchdown' என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது, அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டான அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டில் எதிரணியினரின் கோல் கம்பத்தின் பக்கம் பந்தை தரையில் வைத்துவிட்டால் நமக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும். அதன் பெயர்தான் touchdown.

இந்த சிறு கோளில் தரையிறங்கிய விண்கலமானது அங்கிருந்து சிறிய அளவிலான கற்கள், தூசு, தாதுக்கள் பொருட்களை (Samples) பூமிக்கு எடுத்து வர உள்ளது. நாம் நினைப்பது போல அதிக நேரம் விண்கலம் அங்கு நிற்காது. குறைந்தது ஐந்து அல்லது பத்து வினாடிகள் மட்டுமே நிற்கும் பின்னர் சில காலம் அதனைச் சுற்றியே வட்டமிடும்.

இந்த சிறிய கால அளவுகளே அங்கிருந்து samples -களை எடுப்பதற்கு போதுமானது என்கிறார்கள். விண்கலம் சேகரித்த samples களின் அளவு எவ்வளவு தெரியுமா? வெறும் தோராயமாக 60 கிராம் மட்டுமே.

மொத்தமாக 2 கிலோகிராம் தூசிகளை கொண்டுவரும் படியாக விண்கலம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து எடுத்து வருவது மிகவும் சவாலான காரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த அளவு samples போதுமானது என்கிறது நாசா.

இதே போன்று ஒரு ஆய்வினை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் asteroid Ryugu -க்கு ஒரு விண்கலத்தை 2003 ஆம் ஆண்டில் அனுப்பியது. மிக நீண்ட பயணத்திற்கு பிறகு 2018ல் Ryugu சிறுகோளை சுற்றிவந்தது. எனினும் 2019 ஏப்ரல் மாதத்தில் தான் அது தரையிறங்கியது.

இதுதான் பூமியில் இருந்து astroid -க்கு செலுத்தப்படும் முதல் முயற்சி ஆகும். ஆனால், அதிலிருந்து சில மில்லி கிராம் அளவிலான samples மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த விண்கலம் இப்போது பூமிக்கு திரும்பி கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு 2020, வரும் டிசம்பர் மாதத்தில் அது ஆஸ்திரேலியா பகுதியில் தரையிறங்கும். ஆராய்ச்சியாளர்கள் அதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நமது பூகோளமும் எப்படி உருவானது என்று நாமும் காத்துக் கொண்டு இருப்போம்.

bennu என்ற சிறுகோள் பார்ப்பதற்கு பெரிய அளவில் இருக்காது. ஒரு பெரிய கட்டிடத்தின் உயரம் அளவில் (Empire State building) தான் இருக்கும், கரடுமுரடான பாறைகளைக் கொண்ட வட்ட வடிவில் இருக்கும்.

இது நம்முடைய பூமியைத் தாக்குவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்றாலும், 2700 சாத்தியக் கூறுகளில் ஒரு அளவு மட்டுமே பூமியை நோக்கி வரலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த வாய்ப்பும் கூட இன்னும் 150 ஆண்டுகளுக்கு இல்லை.

எதற்காக இந்த ஆய்வுகள்:

"பால்வழி அண்டம் உருவாக்கியதில் இருக்கும் மிச்சம் மீதி உள்ள கற்கள் தான் இந்த சிறு கோள்கள். இவைகள் பல பில்லியன் ஆண்டுகளாக நம்முடைய சூரிய குடும்பத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வகை கோள்களில் இருக்கும் மூலக் கூறுகளே ஆரம்ப காலத்தில் பிற கோள்கள் உருவாகுவதற்கு மூலத் காரணமாக கூட இருந்திருக்கலாம்" என்கிறார் Lori Glaze, director of NASA's planetary science division.

நமது சூரிய குடும்பம் எவ்வாறு உருவாகியது என்பதைக் கண்டறிய சிறு கோள்களின் மூலம் பெறப்படும் மூலக்கூறுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

OSIRIS-REX என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாசாவின் விண்கலம் 2016ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கியது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர் Mike Darke இவரின் முயற்சியால் bennu என்ற சிறு கோள்களைப் பற்றிய ஆய்வு தொடங்கியது.

பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் 2011ல் நாசா இதற்கு ஒப்புதல் அளித்தது. இது சோகமான ஒரு சம்பவம் என்னவென்றால் நாசா ஒப்புதல் அளித்து சில மாதங்கள் கழித்து அவர் காலமாகிவிட்டார்.

இது மிகப்பெரிய விண்கலம் என்று நாம் கூறி விட முடியாது பார்ப்பதற்கு 15 வேன்கள் வரிசையில் நின்றால் எப்படி இருக்குமோ அதே அளவில் தான் இருக்கும்.

2018 ஆம் ஆண்டே இந்த விண்கலம் bennu -வை நெருங்கிவிட்டது என்றாலும் சரியான இடத்தில் samples சேகரிக்கும் இடத்தை இத்தனை நாட்களாக தேடிக்கொண்டு இருந்தது. தரையிறங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக விஞ்ஞானிகளை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஏனென்றால் அதில் மிக மோசமான தடிமனான பாறைகள் இருந்தன என்பதை விண்கலத்தில் உள்ள 3D புகைப்படங்கள் மூலம் கண்டறிந்தார்கள்.

ஆமாம் சரியாக தரை இறங்க வில்லை என்றால் இதன் நோக்கமே வீணாகிவிடும். அதிலிருந்து samples -களை விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த probe மூலமாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி பாறைகளை உடைத்த பின்னர் வெளிவந்த வாயுக்கள், தூசுகள் விண்கலத்திற்கு உள்ளே செல்வதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் இருந்து எடுக்கப்பட்ட sample -களை கணக்கிட எந்த ஒரு கருவியும் இல்லாததால் தோராயமாக 60கிராம் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த விண்கலம் அங்கேயே சுற்றி வரும் பின்னர் அங்கிருந்து பூமிக்கு மீண்டும் திரும்பி விடும். 2023 செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் தரை இறங்குவதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பூமியில் தரையிறங்கும் போது அது பேராஷூட் வடிவில் இருக்கும்.

சூரியனையும், பூமியையும், நிலவையும் கடவுள்தான் படைத்தார் என்று பல மதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களின் நம்பிக்கைக்கு உரிய விடயம் அதில் நாம் தலையிடுவதில்லை. ஆனால் நம் பூகோளம் சூரிய குடும்பம் இவையெல்லாம் எவ்வாறு உருவாகியது என்று ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

பதினேழாம் நூற்றாண்டில் விண்வெளி அறிஞர் கலிலியோ பூமி தட்டையாக இல்லை அது உருண்டையாக இருக்கிறது என்று கூறினார். அப்போது ஐரோப்பியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தினர் அவரை கடுமையாக எதிர்த்தார்கள்.

பின்னாட்களில் பூமி உருண்டையாக தான் இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னர் கத்தோலிக்க மதத்தினர் அதற்காக வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த வரலாறு முக்கியமானது. (Source:https://www.theguardian.com/science/the-h-word/2016/jan/21/flat-earthers-myths-science-religion-galileo)

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தான் சூரிய குடும்பம் உருவாக்கியதில் இருந்து மிச்சமிருக்கும் சிறு கற்கள், கோள்களின் மேற்பரப்பில் இருக்கும் மூலக் கூறுகளை வைத்து பால் அண்டம் எப்படி உருவானது என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியும். ஜப்பானிய விண்கலமும் நாசாவின் விண்கலம் பூமிக்கு தரை இறங்கிய பின் அதற்கான தடயங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரைக்கும் காத்திருப்போம்.

- பாண்டி 

http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/41118-bennu

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.