Jump to content

எனக்கு வருத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த எனக்கு இரண்டு நாள் வேலை அப்பத்தான் கிடைச்சிருந்தது. நானாகத் தேடித் போகாமல் தானாகக் கிடைச்ச வேலை என்பதும் மிகவும் சந்தோசமாக இருக்க முதல் நாள் வேலைக்குப் போய் வந்த சந்தோசத்தில் இருக்க, இரவு முழுதும் வயிற்றில் ஒருவித அவஸ்த்தை. என்னடா இது நாளை காலை வெள்ளண எழும்ப வேணுமே! இரவு தூங்க முடியாமல் இருக்கே என்று கவலைப்பட்டபடியே சாமம் தாண்டி இரண்டு மணிக்குக் கண்ணயர்ந்து காலை ஆறு மணிக்கு எலாம் சத்தம் கேட்டு எழும்பி இரண்டு கறி வைத்து சோறும் போட்டு மனுசனுக்கும் எனக்கும் சாப்பாட்டைக் கட்டி முடித்து குளித்து வெளிக்கிட்டு நானும் வெறும் வயிற்றுடன் போகக் கூடாது என்று தானியங்கள் சேர்ந்த கஞ்சி ஒன்றுடன் வேலைக்குப் போய்ச் சேர மீண்டும் அந்த வயிற்று வலி ஆரம்பித்தது. என்னடா இது வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாளே இப்பிடி என்று எண்ணி ஒருவாறு சமாளித்துக்கொண்டு வேலை செய்தால் மதியத்துக்குப் பிறகும் உண்டபின் வலி அதிகரிக்க ஒரு பரசிற்றாமல் போட்டுக்கொண்டு மாலை ஆறு மணிவரை சமாளிச்சு முடிஞ்சு வீட்டுக்கு வந்தால் அப்பத்தான் வேலையால வந்த மனிசன் ஒரு நல்ல டீ போடு என்கிறார்.

வாயில வந்ததை அடக்கிக்கொண்டு பால்த் தேனீர் போட்டுக்கொண்டு போய் அவருக்கும் குடுத்து நானும் இருந்து குடிக்கிறன்.

ஒரு வருஷம் சும்மா இருந்து சாப்பிட்டுட்டு வேலைக்குப் போனது களைப்பாக்கும்

வழமையான மனிசனின் எள்ளல் கதைக்கு எரிச்சல் வந்தாலும் ஏனோ அடக்கிக்கொண்டு சரியான வயிற்று நோ என்கிறேன்.

கடையில ஏதும் வாங்கிச் சாப்பிட்டிருப்பாய்

சொல்லி மனிசன் சிரிக்க வந்த கடுப்பில் நான் கடையில சாப்பிட்டிட்டன். இரவுக்கும் சோறுதான் சாப்பாடு. நான் படுக்கப் போறன் என்றபடி ஏழு மணிக்கே போய்ப் படுத்தாச்சு.

அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு எழும்பினால் சாடையான தலை சுற்றல். என்னடா இது நல்ல காலம் இன்று வேலை இல்லை என்று எண்ணியபடி பல்விளக்கச் சென்றால் சிறுநீர் ஒரேஞ் நிறத்தில் போகுது. நான் வேலை செய்யும் இடம் கடையுடன் சேர்ந்த அஞ்சல் நிலையம். ஆதலால் ஏதும் சிறுநீர் தொற்று அங்கு ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ணத்துடன் சரி இண்டைக்கு முழுதும் பாப்பம் என்றபடி மற்ற வேலைகளைப் பார்க்கிறேன். சாப்பிடட பிறகு மீண்டும் மேல் வயிற்றுப்பக்கம் நோ அதிகமாக வயிற்றினுள் வாயுத் தொல்லையோ என்று எண்ணியபடி ன்னிடம் இருந்த Omeprazole என்னும் மாத்திரையைப் போடுகிறேன். அன்று மதியம் சிறிது குணமானதுபோல் இருந்தாலும் சிறுநீரின் நிறம் மாறிக்கொண்டே வர நாளை கட்டாயம் வைத்தியருக்குக் கதைக்கவேண்டும் என்று எண்ணியபடி வேலை ஒன்றும் செய்யாது படுத்தே இருக்கிறேன்.

காலை எட்டு மணிவரை காத்திருந்து வைத்தியருடன் கதைக்கவேண்டும் என்கிறேன். 10 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வைத்தியர் போன் செய்வார் என்று கூறுகிறார் அங்கிருக்கும் பெண். சரி என்று கூறிவிட்டு காலை உணவாகப் பானை உண்டு சிறிது நேரத்தில் மீண்டும் தலை சுற்றலுடன் வயிற்றையும் பிரட்டுவதுபோலும் இருக்கிறது. அதற்குள்ளும் அந்த மனிசன் இந்த வயதில வயித்தில பிள்ளை எண்டு குண்டைத்தூக்கிப் போட்டுடாதை என்றுவிட்டுப் போக நேரகாலம் தெரியாத எழிய மனிசன் என்று வாய்விட்டே திட்டுகிறேன்.

பிள்ளைகள் எல்லாரும் வீட்டில் என்பதுடன் பெரியவர்கள் என்பதால் மனிசனைத் தவிர ஆலவட்டம் பிடிக்கவேண்டிய தேவை இல்லை என்பதால் போய் மீண்டும் கட்டிலில் படுக்கிறேன். தமிழ் வைத்தியர் ஒரு மணிக்கு போன் செய்கிறார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிலவேளை யூரின் தொற்றாக இருக்கலாம். எதுக்கும் இண்டைக்கு வந்து டியூப் வாங்கிக்கொண்டு போய் நாளைக்கு காலையில சிறுநீர் எடுத்துக்கொண்டு வந்து தாங்கோ. நானே டெஸ்ட் செய்து பாக்கிறேன் என்கிறார். மகள் அவரிடம் சென்று டியூப் வாங்கி வர அடுத்த நாள் காலை வரை வேறு வழியின்றி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மாத்திரை போட்டு சிறிது தணிந்ததாக எண்ணிக்கொண்டு கட்டிலே கதியாகக் கிடக்க, உணவு தேநீர் எல்லாம் கட்டிலுக்கே வர நீண்ட நாட்களின் பின்னர் ஒரு மகிழ்வும் எட்டிப் பார்க்கிறது.  

அடுத்தநாட் காலை சிறுநீரைச் சேகரித்துக் கொடுக்க மகள் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வருகிறாள். எனக்கோ தலை சுற்றலும் வாந்தி வருவதுபோன்ற நிலையம் வயிற்று நோவும் அதிகரிக்கிறது. மதியம் வரை வைத்தியர் தொடர்புகொள்ளவில்லை. நானே போன் செய்து பார்க்கிறேன். அவர் மாலை மூன்றுக்குத்தான் வருவார். அதன் பின் தொடர்பு கொள்வார் என்கிறார் அங்குள்ள பெண். நான் மீண்டும் படுத்துத் தூங்கிவிடுகிறேன். தொடர்ந்து போன் அடிக்கும் சத்தத்தில் எழுந்தால் வைத்தியர் தான்.

நடந்ததை அவருக்கு விபரித்தவுடன் சிறுநீர் கழிக்கும்போது எரிகிறதா என்கிறார். இல்லை என்றவுடன் நான் வீடியோவில் உங்களை பார்க்கலாமா என்றவுடன் நான் பதைபதைத்து இப்பவோ??? நான் நேற்றுத்தொடக்கம் தலைகூட இழுக்கவில்லை ..... என்கிறேன். சரி நான் ஐந்து நிமிடத்தில் திரும்ப வீடியோ கோலுக்கு வாறன். பவுடர் பூசி லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு ரெடியா இருங்கோ என்றுவிட்டு வைத்துவிட. நான் எழுந்து தலையை மட்டும் இழுத்துவிட்டு மீண்டு கட்டிலில் வசதியாக அமர்ந்துகொள்கிறேன்.

வைத்தியர் மீண்டும் வீடியோ கோலில் வந்து நான் உங்கள் வயிற்றை வீடியோவில் பார்க்கலாமா என்று கேட்கிறார். வீடியோவில் பார்த்து எதைக் கண்டுபிடிக்கப் போகிறார் என்று மனதுக்குள் எண்ணிக்கொள்கிறேன். பிள்ளைகள் யாரையும் கூப்பிடுங்கள் என்கிறார். எதற்கு என்றுநான் கேட்க உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும் என்று கேட்டனான் என்கிறார். எனக்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஒருமாதிரி இருக்கோ என்று நான் கேட்க இல்லை இல்லை என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, நான் உங்கள் வயிற்றைப் பார்க்கலாமா என்கிறார். சரியென்று நான் மேலாடையை சிறிது உயர்த்துகிறேன்.

"என்ன உங்கள் வயிறு வீங்கி இருக்கா"

"இல்லையே. எனக்கு கொஞ்சம் வயிறு இருக்குத்தான்"

"நல்லாச் சாப்பிடுவீங்களா"

"இல்லை மூன்றுநேரம் மட்டும் சாப்பிடுவன்"

"உங்களுக்கு எரிச்சல் இல்லை எண்டபடியா நான் உது வேறை வருத்தம் எண்டுதான் யோசிக்கிறன்."

"என்ன வருத்தம்"

"வயிற்றிலே எந்தப்பக்கம் நோ உங்களுக்கு "

"மேல் வயிறும் வலப்பக்கமும் அதிக நோ"

"தொடர்ந்தும் சத்தி, வயிறு நோகுது ஏண்டா உடனடியா கொஸ்பிற்றல் போங்கோ"

"என்ன வருத்தமாய் இருக்கும் எண்டு நீங்கள் சொல்லவேயில்லையே"

"நான் ஒரு கிழமைக்கு அன்டிபயோரிக் எழுதிவிடுறன். பிள்ளையள் வந்து எடுப்பினம் தானே"

"ஓம். நான் பயப்பிட மாட்டன். என்ன வருத்தம் எண்டாலும் சொல்லுங்கோ"

"உங்கள் அறிகுறிகளைப் பார்த்தால் நான் நினைக்கிறன் உங்களுக்கு Bladder Cancer ஆய் இருக்கலாம். பயப்பிடாதேங்கோ"

"நான் பயப்பிடேல்லை"

"ஒரு ஸ்பெஷல் ஸ்கானிங்குக்கு போட்டிருக்கிறன். மூண்டு கிழமைக்குல்ல கூப்பிடுவாங்கள்"

" அதுக்குள்ளே ஒண்டும் சீரியசா நடக்காதே"

" சீச் சீ. அப்பிடி ஏதும் வலி அதிகமானா உடன ஹாஸ்பிட்டல் போயிடுங்கோ"

" சரி "

வைத்தியர் போனை வைத்தவுடன் மனதெல்லாம் எதோ வெறிச்சோடியது போல் இருக்கு. "இந்த உலகத்தில இத்தனை நாள் வாழ்ந்தது போதும்தான். என் நோய் பற்றி மனிசனுக்கோ பிள்ளையளுக்கோ சொல்லக் கூடாது. 2 லட்சம் பவுண்ட்ஸ் என் பேரில் life இன்சூரன்ஸ் இருக்கு. ஒவ்வொருத்தரும் 50 ஆயிரம் படி எடுங்கோ எண்டு எழுதி வைப்பமோ? சீச்சீ மனிசன் எல்லாம் பாத்துக்கொள்ளுவார். என்ன இன்னும் சில நாடுகள் பாக்கவேணும் எண்ட ஆசைதான் நிறைவேறாமல் போகப்போகுது" என்று எண்ணியபடி மகளைக் கூப்பிட்டு மருந்தைப் போய் எடுத்து வரும்படி சொல்லிவிட்டு மீண்டும் கட்டிலில் படுக்கிறேன்.

எனக்கு ஒருநாளும் உடல் சூடாக்கிக் காச்சல் வருவதில்லை. குளிர் காச்சல் தான் வரும். அந்த நேரங்களில் இரண்டு போர்வையை போர்த்துக்கொண்டு படுத்தால் ஒரு மணி நேரத்தில் வேர்த்து ஒழுக மீண்டும் போர்வையை உதறிவிட்டுப் படுக்க வருத்தம் அதோட நின்றுவிடும்.

இன்று சரியான குளிர் குளிர இரண்டு போர்வையுடன் படுத்தால் குளிர் குறைவதாய்க் காணவில்லை. கடைசி மகளைக் கூப்பிட்டு என் முதுகுடன் ஒட்டியபடி படுக்கச் சொல்கிறேன். அவள் அரை மணிநேரம் படுத்தபின் தனக்கு zoom வகுப்பு ஆரம்பிக்கப்போகுது என்று எழ குளிர் சரியாக அதிகரிக்கிறது. இதற்குமுன்னர் இத்தனை அதிகமாக சினோவுக்குள் நடக்கும்போது கூடக் குளிரவில்லை என்பதும் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. மூத்தவள் இரண்டு பரசிர்ராமலைக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் படுக்கும்படி கூட அதையும் போட்டுக்கொண்டு அவள் இன்னும் இரண்டு போர்வைகளைக் கொண்டுவந்து  போர்த்துவிட நான்கு போர்வைகளும் பாரமாக இருந்தாலும் குளிர் குறைந்ததுபோல் உணர அப்படியே தூங்கிப்போகிறேன். மூன்றரை மணிநேரம் நல்ல தூக்கம். அத்தனை போர்வை போர்த்தும் எனக்கு இம்முறை வியர்க்கவே இல்லை என்பது மனதில் வந்து கான்சர் வந்தால் இப்பிடித்தான் இருக்குமோ என்று எண்ணுகிறது மனம்.

அம்மா அம்மா என்று மகள் அருட்டத்தான் எழுகிறேன்.

"சாப்பிடேல்லையோ அம்மா"

"சாப்பிடத்தான் வேணும். என்ன சமைச்சியள்"

"இடியப்பம் இருக்கு.

"சரி இரண்டு இடியப்பம் கொண்டு வாங்கோ. மருந்தையும் தாங்கோ"

உண்டு முடியத் தேநீரும் வருது.

"அப்பா வேலையால வந்திட்டாரா"

"ஓம் டிவி பாக்கிறார் "

"பாரன் வேலையால வந்தவர் என்னை ஒன்றுமே கேக்கேல்லை"

"நீங்கள் நித்திரை எண்டதால எழுப்பேல்லை"

மகள் கீழே செல்ல நான் சென்று கையைக் கழுவிவிட்டு மருந்தையும் உண்டுவிட்டுப் படுக்கிறன். உணவு உண்ட பிறகு மீண்டும் வயிற்று நோ ஆரம்பிக்கிறது. எதுக்கு மூன்று வாரங்கள் வரை பொறுக்க வேணும். கான்சர் இருக்கோ இல்லையோ எண்டுறது வேறை என்று எண்ணியபடி இரவு பதினோரு மணிபோல மனுஷனை எழுப்பி எனக்கு ஏலாமல் இருக்கு என்று சொல்ல அவரும் தயாராகி வருகிறார். சாமமென்பதனால் வீதிகள் வெறிச்சோடி இருக்க ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனைக்குச் சென்று இருவரும் A&E இக்குப் போகிறோம். கோவிட் என்பதனால் உள்ளே எல்லோரையும் அனுமதிக்கமுடியாது என்று வாசலில் கூற, "எதுக்கும் நீங்கள் வீட்டுக்குப் போங்கோ. எப்பிடியும் இரண்டு மணிநேரமாவது செல்லும். முடிஞ்சதும் போன் செய்கிறேன் என்றவுடன் கணவர் திரும்பிச் செல்ல நான் சென்று என் விபரங்களைக் கூறிவிட்டு வரவேற்பில் அமர்ந்துகொள்கிறேன். சாமம் என்றாலும் 20, முப்பதுபேர் இருக்கும் A & E  இல் ஐந்து பேர் மட்டுமே இருக்கின்றனர்.

நான் போனை மட்டும் வைத்திருந்தாலும் அதை வெளியே எடுக்காமல் சும்மா இருக்கிறன். ஒரு அரை மணி நேரத்திலேயே என்னைக் கூப்பிடுகிறார்கள். நான் நடந்ததைக் கூறுகிறேன். முதலில் இரத்தப்பரிசோதனை செய்து பார்ப்போம் என்று கூறி ஆறு டியூப்பில் இரத்தம் எடுத்துவிட்டு என்னை அங்குள்ள ஒரு தற்காலிக இடத்தில் அமர வைக்கிறார்கள். பரிசோதனை முடிவு வர இரண்டுமணிநேரம் ஆகும் என்றுவிட்டுச் செல்கின்றனர். இரவு என்பதனாலும் அதிகப்பேர் இல்லை என்பதனாலும் எனக்கு ஒரு பயம் வருது. போனை எடுத்து முகநூலைப் பார்த்து நேரத்தைப் போக்குவோம் என்றால் உள்ளே போன் வேலை செய்யுதில்லை. கையைத் தலைக்கு முண்டு கொடுத்தபடி எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது. யாரோ வந்து எழுப்புகின்றனர்.

ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் பெண்ணும் நிற்கின்றனர். என்னை வா என்று கூட்டிக்கொண்டு சென்று தாங்கள் படித்துக்கொண்டு இருக்கும் மருத்துவர்கள். உன்னை செக் பண்ணலாமா என்று கேட்க ஓம் என்று தலையாட்டுறன். அங்கு சென்றதும் என் நோய் பற்றி அவர்கள் கேள்விகளுக்கு பதில் கூறவே எனக்கு ஏலாமல் இருக்கு. நான் இதில் படுக்கட்டா என்று கேட்க ஓம் என்கின்றனர். நான் படுத்தபடி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன். இன்னொருதடவை இரத்தம் எடுக்கப்போகிறோம் என்கின்றனர். ஏற்கனவே எடுத்ததே. அதன் முடிவு என்ன என்று கேட்க, அதை வேறு ஒரு வைத்தியர் வந்து கூறுவார். அவர் இப்ப பிசியாக இருக்கிறார். இது நாங்கள் வேறு பகுதி என்கின்றனர்.

இவர்கள் வேறு ஆறு டியூப்பில் எடுக்க, என் உருவத்தைப் பார்த்திட்டு எவ்வளவும் எடுக்கலாம் என்று எண்ணுகின்றனரோ என மனதில் எண்ணியபடி இருக்க, நீ இங்கேயே படுத்திரு. மற்ற வைத்தியர் வருவார் என்றபடி போய்விட நான் படுத்து நல்ல நித்திரை கொண்டிட்டன். யாரோ என்னைத் தொட்டு உலுப்பக் கண் விழிக்கிறேன். ஒரு தாதி என்னை எழுப்புகிறார். எழும்பு  உன்னை வேறு இடத்துக்கு அழைத்துப் போகிறேன் என்கிறார். நான் கீழே இறங்க " என்ன ஒன்றுமே விரிக்கவில்லை. இதிலா படுத்திருந்தாய் என்கிறார். அப்போதுதான் பார்த்தால் அது தற்காலிகமாக நோயாளிகளைப் பார்க்குமிடம். வெள்ளைத்தாள்களைத்தான் இழுத்து விரிப்பார்கள். அவர்களும் விரிக்கவில்லை. நானும் அதைக்கவனிக்காமல் தூங்கிவிட்டேன். எத்தனை நோயாளிகள் இதில் வந்து இருந்து, படுத்துச் சென்றார்களோ??? ஆருக்கு கொரோனா இருந்ததோ என்ற எண்ணம் மனதில் ஓடினாலும் அதைப் பற்றி மனம் பெரிதாகக் கவலை கொள்ளாது அவரைப் பின்தொடர்ந்து. இத்தனைக்கும் வின்டர் யக்கற் போட்டபடிதான் எல்லாம். 

அடுத்த பகுதிக்குள் போனால் அது அறைபோல் இருந்தாலும் நோயாளிகள் தங்கும் நிரந்தர அறையில்லை என்று தெரிகிறது. அங்கே ஒடுக்கமான கட்டில்களைப் போட்டு திரைச் சீலைகள் போட்டு மறைத்திருந்தார்கள். இங்கே இரு. மருத்துவர் வந்து பார்ப்பார் என்றுவிட்டுப் போக எத்தனிக்க, எனக்குச் சரியான தாகமாக இருக்கு குடிக்க ஏதும் தேநீர் அல்லது கோப்பி தருகிறாயா என்கிறேன். எனக்கே அப்படிக் கேட்டது ஒருமாதிரி இருந்தாலும் நான்கு ஐந்து மணிநேரம் எதுவும் குடிக்காமல் இருந்தது மட்டுமன்றி அங்கே குளிரவும் ஆரம்பித்துவிட்டது. தண்ணீர் கொண்டு வரவா என்கிறார் அந்தப் பெண். எனக்கு குளிர்கிறது சூடாக எதுவும் குடித்தால் நல்லது என்கிறேன்.

சரி என்றுவிட்டுப் போன பெண்ணை அதன்பின் காணவே இல்லை. கட்டிலில் படுத்தால் திரும்பிப் படுக்க முடியாத சிறிய கட்டில். இங்கு சிலவேளை போன் வேலை செய்கிறதா என்று பாப்போம் என்று போனை எடுத்தால் கணவன் பிள்ளைகளிடம் இருந்து பல போன். சத்தம் கேட்காதவாறு நிறுத்திவைத்திருந்தபடியால்  எனக்குக்கேட்கவில்லை. காலை நான்கு மணி. போன் செய்து விபரத்தைக் கூறுகிறேன். எனக்கு மாற்று ஆடைகள் மற்றும் முக்கியமான பொருட்கள் அதைவிட முக்கியமான போன் சார்ஜர் எல்லாம் கொண்டுவரும்படி கூறுகிறேன்.

மீண்டும் படுத்தாலும் நித்திரையில் கீழே விழுந்துவிடுவேனோ என்ற எண்ண த்தில் தூக்கம் வரவில்லை. முழங்கையில் உள்ளே ஊசி ஒன்றை நிரந்தரமாக ஏற்றிவிட்டிருந்தபடியால் கையையும் வசதியாக வைத்துக்கொள்ள முடியவில்லை. தாதிகள் அங்கும் இங்கும் போய்வந்தாலும் என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. காலை ஆறு மணியாகிவிட வேறு புதிய தாதியர்கள் வந்திருப்பதைக் கவனிக்கிறேன். ஒருவரை மறித்தது எனக்குத் தாமாக இருக்கு தேநீர் ஒன்று தர முடியுமா என்கிறேன் மீண்டும். பொறு உன் பைலைப் பார்க்கிறேன் என்றவர், உனக்கு ஸ்கானிங் இருக்கிறபடியால் நீ எதுவும் உண்ணவோ குடிக்கவோ கூடாது என்றுவிட்டுப் போய்விட மீண்டும் போனை எடுத்தால் மகளின் இலக்கத்திலிருந்து எட்டு போன் அழைப்புகள் வந்திருக்க மீண்டும் அவளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நானும் அப்பாவும் உங்கள் பொருட்களையும் கொண்டு வந்திருந்தோம். அவள் உங்கள் பெயரே அங்கு இல்லை என்கிறாள். ஒருவாறு கதைத்து உங்கள் பாக்கையும் விபரங்களையும் கொடுத்துவிட்டு இப்பதான் வீட்டை வந்தோம் என்கிறாள். 

சரி என்று போனை வைத்துவிட்டு அங்கே நின்ற தாதியை அழைத்து விபரம் சொல்லிக்கொண்டிருக்க இன்னொரு பெண் எனது பொருட்கள் அடங்கிய பையைக் கொண்டு வருகிறார். இந்தக்கட்டிலில் படுக்க முடியாமல் இருக்கு என்கிறேன். இங்கு கட்டில்கள் எல்லாம் நிரம்பியிருக்கு. அதனால் நடக்கவே ஏலாதவர்களுக்குத்தான் முதலிடம். உனக்கு ஸ்கானிங்க் எல்லாம் முடிந்த பிறகுதான் அதுபற்றிமுடிவு செய்வார்கள் என்றுவிட்டுப் போய்விட நான் தூங்காமல் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்க்கிறேன். 

 

தொடரும் இன்னும்........

  

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மிகவும் கவலையாக இருக்குது சகோதரி, ஆனாலும் எழுத்தில் உங்களின் வழமையான லொள்ளுக்கு குறைவில்லாமலும் இருக்கு.....எதுவாய் இருந்தாலும் நீங்கள் சீக்கிரம் குணமாகி சந்தோசமாக குடும்பத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களை கன்டதில் மிக்க மகிழ்ச்சி.இப்ப குணம் அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலம்  பெற வேண்டுகின்றேன்

இப்படியான உறவுகளுடனான கதைகளில்  கூட தொடரும் என்று  எழுதுவதை தவிர்க்கவும்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயை கண்டதில் மிக்க மகிழ்ச்சி, எப்படி இருக்கின்றீர்கள், உங்களை காணாமல் யாழ்களம் கழையிழந்துவிட்டது

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலமுடன் மீண்டு வர வேண்டுதல்கள் அம்மணி. தைரியமுடன் இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டதில் சந்தோசம்.நலமோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடரும் கண்டு பிடித்த ஆள் யாரோ தெரிய வில்லை.சரி தொடருங்கோ...

நான் உங்களை பல வழிகளில் தேடினேன் ஒன்றுக்கும் பதில் இல்லை..உண்மையாக எங்கயோ ஊர் சுற்றி பார்க்க போய் விட்டீர்கள் என்று தான் நினைத்தேன்..எது எப்படி இருந்தாலும் மீண்டும் கண்டது சந்தோசம்.. மறுபடியும் சொல்கிறேன் கண்டதையும் ஆக்கி சாப்பிடாதீங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலமடைய வேண்டுகிறேன் 
இப்போ சுகமாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா சுகமாகியிருப்பீர்கள் என நம்புகிறேன், நீங்கள் பல்லாண்டு நலமோடு வாழுங்கள்.

Link to comment
Share on other sites

சுமே,  மீண்டும்  உங்களைக் கண்டதும்  மகிழ்ச்சியாக இருக்கின்றது.  நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.வாசிக்கும்போதே கண் பனிக்கிறது.இப்போது சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களிற்காக நான் இறைவனை பிரார்த்த்திக்கிறேன்..

Link to comment
Share on other sites

கடவுளின் அருளால்  இப்போது சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களிற்காக நான் இறைவனை பிரார்த்த்திக்கிறேன்..

Link to comment
Share on other sites

சுமே அக்கா உசாராக எழுதுவதால் இப்போது குணமடைந்து விட்டீர்கள் என்ன நினைக்கிறேன். மகிழ்ச்சி. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நீங்கள் பயந்தது போல் இல்லாமல் பூரண சுகமடைந்து யாழிற்கு வந்து உங்கள் அனுபவங்களைப் பதிர்ந்து உள்ளீர்களென நம்புகின்றேன். நலம் வாழ வாழ்த்துக்கள். இறைவனுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அக்காவை காண்பதில் மகிழ்ச்சி  
நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே அக்கா,
வழக்கமான பாணியில் ஏதாவது குண்டக்கா எழுதி இருப்பீர்கள் என்று தான் வாசிக்கத்  தொடங்கினேன் ...
2, 3 பந்தி கடந்ததும் மனது சஞ்சலப்பட , கடவுளே இவை யாவும் கற்பனை என்றே முடியவேண்டும் என்ற வேண்டுதலோடு மிகுதியையும் வாசிக்கிறேன்...
உங்கள் நலனிட்கு இறைவனை வேண்டுகிறேன். 🙏🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அன்டி மீண்டும் கண்டது மகிழ்ச்சி 

நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஆன்ரியை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. கஷ்டங்களில் இருந்து மீண்டுவிட்டார் என்று நினைக்கின்றேன். டொக்டரின் கதை மிகவும் பரிச்சயமாக இருக்கின்றது!

Link to comment
Share on other sites

வணக்கம். மற்றய உறவுகள் எழுதியதைப் போலவே  உங்களை தாக்கிய நோயிலிருந்து நீங்கள் மீண்டுவிட்டீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள். உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள். 🥦🍒🍅🥒🍊🍏

Link to comment
Share on other sites

நோயில் இருந்து சுகமாகி மீண்டும் வந்தது மகிழ்ச்சி சுமோக்கா.

சுகத்தை கவனித்துக்கொள்ளுங்கள். இந்த வருடம் ஏன் தான் வந்ததோ என்று நினைக்குமளவிற்கு கவலையான செய்திகள் தான் அதிகம் வருகின்றது :(

எல்லோரும் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரி,

உங்களுக்கு முன் நோயாவது பேயாவது!

மீண்டு வந்தது, மீண்டும் கண்டது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஆனாலும் எழுத்தில் உங்களின் வழமையான லொள்ளுக்கு குறைவில்லாமலும் இருக்கு....

அது இரத்தத்திலை ஊறினது....கொத்தாரும் லொள்ளுக்கு குறைஞ்ச ஆள் இல்லைப்போலை கிடக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை எழுதியிருக்கும் உறவுகள் சுவி அண்ணா, சுவைப்பிரியன்,விசுகு அண்ணா, புரட்சிகரத் தமிழ்த் தேசியன், உடையார், ராசவன்னியன் அண்ணா, குமாரசாமி,யாயினி,மருதங்கேணி ஏராளன், ஜெகதா துரை, நிகே, அபராஜிதன்,இணையவன், கண்மணி அக்கா, தனிக்காட்டு ராஜா,சசிவண்ணம், வாதவூரன், கிருபன், துல் ப்பன், தமிழினி,கோசான் ஆகியோர்க்கு மிக்க நன்றி. நான் நோயிலிருந்து மீண்டுவிட்டேன். 

Just now, குமாரசாமி said:

அது இரத்தத்திலை ஊறினது....கொத்தாரும் லொள்ளுக்கு குறைஞ்ச ஆள் இல்லைப்போலை கிடக்கு 😁

அத்தாரை லொள்ளுக்குக் குறைவில்லை. ஆனாலும் சிலநேரம் எரிச்சல் தான் வரும்.🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.