Jump to content

எனக்கு வருத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கை வைத்தியம்/வீட்டு வைத்தியம் பற்றி ஒரு சுவாரசியமான அனுபவம் எனக்கு: 

தொண்டைக் கரகரப்பு வரும் போது வெறும் தேனிருடன் தேன் கலந்து குடித்தால் போய் விடும் என்று, சில காலங்கள் அதைச் செய்து வந்தேன்.

ஒரு நாள் தேன் முடிந்து விட்டது. சரியென்று வெறும் தேனீரை மட்டும் சுடச் சுடக் குடித்தேன், கரகரப்புக் குறைந்தது. பிறகு கொஞ்ச நாள் தேனில்லாமல் தேனீர் மட்டும்.

பிறகு தேயிலை இல்லாத ஒரு நாளில், போனாப் போகுதென்று சுடுதண்ணீரைக் குடித்தேன். முன்னர் போலவே தொண்டைக் கரகரப்புப் போய் விட்டது.

இதில் மருத்துவ குணம் என்று எதுவும் இல்லை, தொண்டையை நீங்கள் சூடாக்கும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து அழற்சியுடன் தொடர்பான mediators அகற்றப்படுவதால் சுகம் கிடைக்கிறது.

சைனஸ் அடைக்கும் பிரச்சினையுள்ளோர் காரமான குடிநீருக்குப் பதிலாக காரமான (super spicy) தாய் அல்லது சைனீஸ் உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள். மூக்கால் கண்ணால் எல்லாம் ஓடி கிளியராகி விடும்! Decongestants போல கார உணவு வேலை செய்வதே காரணம். 

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை குணமடைந்து   மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

இந்தக் கை வைத்தியம்/வீட்டு வைத்தியம் பற்றி ஒரு சுவாரசியமான அனுபவம் எனக்கு: 

தொண்டைக் கரகரப்பு வரும் போது வெறும் தேனிருடன் தேன் கலந்து குடித்தால் போய் விடும் என்று, சில காலங்கள் அதைச் செய்து வந்தேன்.

ஒரு நாள் தேன் முடிந்து விட்டது. சரியென்று வெறும் தேனீரை மட்டும் சுடச் சுடக் குடித்தேன், கரகரப்புக் குறைந்தது. பிறகு கொஞ்ச நாள் தேனில்லாமல் தேனீர் மட்டும்.

பிறகு தேயிலை இல்லாத ஒரு நாளில், போனாப் போகுதென்று சுடுதண்ணீரைக் குடித்தேன். முன்னர் போலவே தொண்டைக் கரகரப்புப் போய் விட்டது.

இதில் மருத்துவ குணம் என்று எதுவும் இல்லை, தொண்டையை நீங்கள் சூடாக்கும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து அழற்சியுடன் தொடர்பான mediators அகற்றப்படுவதால் சுகம் கிடைக்கிறது.

சைனஸ் அடைக்கும் பிரச்சினையுள்ளோர் காரமான குடிநீருக்குப் பதிலாக காரமான (super spicy) தாய் அல்லது சைனீஸ் உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள். மூக்கால் கண்ணால் எல்லாம் ஓடி கிளியராகி விடும்! Decongestants போல கார உணவு வேலை செய்வதே காரணம். 

நல்ல காலம் உங்கள் வீட்டில் தண்ணீர் முடியவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இது என்ரை லண்டன் தங்கச்சி 😎

சரியாய் சொன்னியள். அவ தன்னை மாட்டி விட்டாலும் எண்டு இந்தப் பக்கமே வரேல்லை  😀

7 hours ago, colomban said:

மிக்க மகிழ்ச்சி குணமடைந்து வந்தது

நன்றி கொழும்பான்

6 hours ago, உடையார் said:

பாவம் எம் கள உறவு & குடும்பம், இப்படியெல்லாம் திட்டுவாங்கி எங்களுக்கு தகவல்களை தந்தவருக்கு நன்றி. நாங்கள் எவ்வளவு கவலைப்பட்டிருப்போம் சுமேயை காணவில்லையென்று. 😢

இல்லை கனாடவில் இருந்து மட்டுறுத்தினரின் மனைவி😎

அது ரதியாக்கும் 😃

6 hours ago, மல்லிகை வாசம் said:

சுமே அக்கா விரைவில் பூரண நலமடைய வாழ்த்துக்கள். 💐 கண்டதில் மகிழ்ச்சி. 😊

நன்றி மல்லிகை வாசம்

5 hours ago, Eppothum Thamizhan said:

சுமேயை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. 

நன்றி எப்போதும் தமிழா

4 hours ago, நந்தன் said:

மகிழ்ச்சி 

நன்றி நந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வகைக்கும் போனில் விசாரித்ததுக்கும் நன்றி நிழலி

3 hours ago, MEERA said:

இல்லை என்டு நான் நினைக்கிறன்😀😀

சுமோவை கண்டது மகிழ்ச்சி...

முதலில் நீங்கள் தான் போன் செய்து கதைத்தது என்று நான் யாருக்கும் சொல்லவேமாட்டன்.நன்றி மீரா. 😀😂

 

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

சுமே அன்ரி 
நலமோடு திரும்பியமையை இட்டு மகிழ்ச்சி ,அன்ரி   உந்த பதிமார்கள்  தரும் சூரணம், உருட்டித்தரும் தார் உருண்டைகள், மூலிகை கஷாயங்கள் உடன்   படுகவனம், இலங்கையில் ஒருகாலத்தில் பல அன்ரிமார்களின்  பாசமிகு தோழன் சித்தாலேப்பையால் காலை கழற்ற வேண்டி வந்த கேசும் உண்டு  

வருகைக்கு நன்றி அக்னியஷ்த்ரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vaasi said:

உங்களை குணமடைந்து   மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

வருகைக்கு நன்றி

வாசி

44 minutes ago, Justin said:

இந்தக் கை வைத்தியம்/வீட்டு வைத்தியம் பற்றி ஒரு சுவாரசியமான அனுபவம் எனக்கு: 

தொண்டைக் கரகரப்பு வரும் போது வெறும் தேனிருடன் தேன் கலந்து குடித்தால் போய் விடும் என்று, சில காலங்கள் அதைச் செய்து வந்தேன்.

ஒரு நாள் தேன் முடிந்து விட்டது. சரியென்று வெறும் தேனீரை மட்டும் சுடச் சுடக் குடித்தேன், கரகரப்புக் குறைந்தது. பிறகு கொஞ்ச நாள் தேனில்லாமல் தேனீர் மட்டும்.

பிறகு தேயிலை இல்லாத ஒரு நாளில், போனாப் போகுதென்று சுடுதண்ணீரைக் குடித்தேன். முன்னர் போலவே தொண்டைக் கரகரப்புப் போய் விட்டது.

இதில் மருத்துவ குணம் என்று எதுவும் இல்லை, தொண்டையை நீங்கள் சூடாக்கும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து அழற்சியுடன் தொடர்பான mediators அகற்றப்படுவதால் சுகம் கிடைக்கிறது.

சைனஸ் அடைக்கும் பிரச்சினையுள்ளோர் காரமான குடிநீருக்குப் பதிலாக காரமான (super spicy) தாய் அல்லது சைனீஸ் உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள். மூக்கால் கண்ணால் எல்லாம் ஓடி கிளியராகி விடும்! Decongestants போல கார உணவு வேலை செய்வதே காரணம். 

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரண நலமடைந்து, சுகதேகியாய் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருகைக்கு நன்றி

வாசி

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

வாயில் புண் இதர பிரச்சனைகளுக்கு 1/2 கிலோ பாகற்காயை அரைத்து சோறு சாப்பிடுமாப்போல் பச்சையாக சாப்பிட வேணும் என்று இன்னொரு வீடியோ வந்ததே பார்க்கவில்லையா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருகைக்கு நன்றி

வாசி

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

 இனி உங்கள் பகுதியில் எழுதுவதில் எந்த வித பிரியோசனமும் நமக்கு இல்லை.நேர விரயம் மட்டுமே.. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இப்ப ஒரு மாத காலமாக வெறும்  வயிற்றில் இன்னொரு மூலிகைத் தேநீர் அருந்திவிட்டு அதன் பின்னர் வெந்தயம் உண்டு காலை உணவும் எடுத்துக் கொள்ளுவேன்"

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

 

கண்டதையும் தேடித்தேடி அமுக்கிற அளவுக்கு என்ன பிரச்சனை?? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

 

கண்டதையும் தேடித்தேடி அமுக்கிற அளவுக்கு என்ன பிரச்சனை?? 😁

நான் வேலை செய்யுமிடத்துக்கு எத்தனையோ பேர் வருவார்கள். பணமும் வரும் போகும். கொரோனா எந்தக் காசோடு வருதோ? பார்சலோடு வருதோ? என்று யார் கண்டா. அதுதான் முன்னெச்சரிக்கையாக இருப்பம் என்று நோயெதிர்ப்பைக் கூட்டத்தான் உந்தக் கூத்தெல்லாம்

1 hour ago, பிரபா said:

பூரண நலமடைந்து, சுகதேகியாய் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள். 

நன்றி பிரபா

40 minutes ago, யாயினி said:

 இனி உங்கள் பகுதியில் எழுதுவதில் எந்த வித பிரியோசனமும் நமக்கு இல்லை.நேர விரயம் மட்டுமே.. நன்றி.

😂😎

1 hour ago, goshan_che said:

வாயில் புண் இதர பிரச்சனைகளுக்கு 1/2 கிலோ பாகற்காயை அரைத்து சோறு சாப்பிடுமாப்போல் பச்சையாக சாப்பிட வேணும் என்று இன்னொரு வீடியோ வந்ததே பார்க்கவில்லையா🤣

அடடே இன்னும் என் கண்ணுக்குப் படவில்லையே  🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் வேலை செய்யுமிடத்துக்கு எத்தனையோ பேர் வருவார்கள். பணமும் வரும் போகும். கொரோனா எந்தக் காசோடு வருதோ? பார்சலோடு வருதோ? என்று யார் கண்டா. அதுதான் முன்னெச்சரிக்கையாக இருப்பம் என்று நோயெதிர்ப்பைக் கூட்டத்தான் உந்தக் கூத்தெல்லாம்

உங்கடை தோட்டத்திலை வேலை செய்யேக்கை கையுறை போடாமல் வேலை செய்யுங்கோ. நோய் எதிர்ப்பு சக்தி தானாய் வரும். அப்பப்ப மழையிலை நனைய வேணும்.வெய்யில்லை காய வேணும்.சின்ன சின்ன தடிமல் காய்ச்சல் எல்லாம் அப்பப்ப வரவேணும் கண்டியளோ...😁

Link to comment
Share on other sites

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

அது சரி கவுண்டமணி சொன்ன வீர பீம சூரணம் பாவிச்சு பாத்தனீங்களோ??😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

அது சரி கவுண்டமணி சொன்ன வீர பீம சூரணம் பாவிச்சு பாத்தனீங்களோ??😛

அதை ஒருக்கா விபரமா சொல்லுங்கோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஆனாலும் பாருங்கோ......
உங்களுக்கு வந்த இந்த வருத்தமும்......நீங்கள் எழுதின இந்த அனுபவ பகிர்வும் யாழ்கள உறவுகளுக்கு மட்டுமில்லை .யாழ்களத்தை வாசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் நல்லதொரு பாடமும் படிப்பினையும். ஏனென்றால் இந்த அவசர உலகில் பலரும் இப்படி மாட்டுப்பட்டு அவதிப்படுவதை கண்ணெதிரே பாத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

உங்கள் இந்த பகிர்வுக்கு நன்றிகள் பல...👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

அது சரி கவுண்டமணி சொன்ன வீர பீம சூரணம் பாவிச்சு பாத்தனீங்களோ??😛

என்ன அது?????

பிளீஸ் ரெல் மீ..... அதையும் விழுங்கிப்போட்டு  என்ன வருத்தம் எண்டு தெரியாமல் டாக்குத்தர்மாரை திக்குமுக்காட வைப்பம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அது சரி கவுண்டமணி சொன்ன வீர பீம சூரணம் பாவிச்சு பாத்தனீங்களோ??😛

நுனா றெசுப்பி சொல்லும் மட்டும் மட்டுறுத்தல் செய்ய இயலாது..ஓகே நுனா.😛😆

Link to comment
Share on other sites

இது எல்லோருக்கும் ஒரு நல்ல அனுபவம். கொறோனா தொடங்கியதில் இருந்து எல்லாவீடுகளிலும் YouTube வைத்தியம்தான். எங்கட வீட்டில நான் தேநீரில் தொடங்கி இரவு சாப்பாடுவரை இஞ்சி சேர்ப்பேன். இனி அதை குறைக்க வேண்டும் என்று எண்ணத்தொன்றுகிறது..நல்ல காலம் ஒரு ஆபத்தில் இருந்து தப்பி விட்டீர்கள் இனி கவனமாய் இருங்கள்..கடவுள் என்றும் துணை நிற்பாராக ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகமாகி வந்தது ஆறுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி புதுபுது adventure களை செய்து, உங்கள் வீட்டுக்காரரையும், பிள்ளைகளையும் எப்போதும் ஒரு பரபரப்பில் வைத்திருப்பதால், உங்களால் வீட்டில் நல்லா பொழுதுபோகும் போலுள்ளது. 😛

Untitled.jpg

பல முனைகளிலிருந்து கேள்விகளும், பதில்களும் வருவதும் அதற்கு நீங்களும் சீரியஸாக பதில் சொல்வதையும் பார்க்கும்போது "பசங்க" படத்தில் வரும் இந்தக் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது..!

மீண்டு வந்தீர்கள், (உங்களை கிண்டலடித்தாலும்) யாழ்களமும் கலகலப்பாகிவிட்டது. 🤪

Stay blessed..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் சித்த வைத்தியம் பொய்யா? சித்தர்கள் பல்வெறு பிணிதீர்க்கும் ரகசியங்களை விட்டு சென்றுள்ளார்களே? பலவ‌யேதிபர்கள் தங்கபஸ்பம், குங்முமபூ, செம்பருத்திபூ போன்றவவை  சாப்பிட்டு இன்றும் நிமிர்ந்து ஆரோக்கியமாக நிற்கின்றார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, colomban said:

அப்படியென்றால் சித்த வைத்தியம் பொய்யா? சித்தர்கள் பல்வெறு பிணிதீர்க்கும் ரகசியங்களை விட்டு சென்றுள்ளார்களே? பலவ‌யேதிபர்கள் தங்கபஸ்பம், குங்முமபூ, செம்பருத்திபூ போன்றவவை  சாப்பிட்டு இன்றும் நிமிர்ந்து ஆரோக்கியமாக நிற்கின்றார்களே?

கறுப்பன் குசும்புக்காரன். அக்காவ போட்டுத்தள்ள முடிவெடுத்திட்டான். 

Link to comment
Share on other sites

On 24/11/2020 at 08:34, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

" என் கணவர் பாவம் நல்லவர். என் நண்பர்கள் சிலருடன் தான் பிரச்சனை. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் தொலைபேசி இணைப்பையும்   துண்டித்து விட்டதனால் ஒரே டென்ஷன். அதனால் ஈரல் பாதித்திருக்குமா"

வைத்தியர் ஒருநாளும் உங்களிடம் கடன் கேட்க வரமாட்டார். 

20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மருத்துவமனை எனக்குத் தந்த மருத்துவ அறிக்கையில் "இவரின் நோய்க்குக் காரணம் இவர் அருந்திய மூலிகைத் தேநீர். இவர் தன்னைத் தானே நோயாளி ஆக்கிக்கொண்டார்" என்று இருக்க மனிசன் முதல் வேலையா நான் அரைச்சு வச்சிருந்த அத்தனை மூலிகைப் பொடிகளையும் குப்பையில் கொட்டிவிட்டார்

பாவம் மனுஷன். குற்றவாளியை கண்டவுடன் தண்டனையை நிறைவேற்றிப்போட்டுது! 🤣

நோயிலிருந்து மீண்டது சந்தோசம். அதுவும் இந்த கொரோன காலத்தில்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி , உங்க‌ளை காண‌ வில்லை திரியிலும் தேடினேன் , உடம்பை க‌வ‌ண‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

ஆனாலும் பாருங்கோ......
உங்களுக்கு வந்த இந்த வருத்தமும்......நீங்கள் எழுதின இந்த அனுபவ பகிர்வும் யாழ்கள உறவுகளுக்கு மட்டுமில்லை .யாழ்களத்தை வாசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் நல்லதொரு பாடமும் படிப்பினையும். ஏனென்றால் இந்த அவசர உலகில் பலரும் இப்படி மாட்டுப்பட்டு அவதிப்படுவதை கண்ணெதிரே பாத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

உங்கள் இந்த பகிர்வுக்கு நன்றிகள் பல...👍🏽

நன்றி குமாரசாமி

16 hours ago, nige said:

இது எல்லோருக்கும் ஒரு நல்ல அனுபவம். கொறோனா தொடங்கியதில் இருந்து எல்லாவீடுகளிலும் YouTube வைத்தியம்தான். எங்கட வீட்டில நான் தேநீரில் தொடங்கி இரவு சாப்பாடுவரை இஞ்சி சேர்ப்பேன். இனி அதை குறைக்க வேண்டும் என்று எண்ணத்தொன்றுகிறது..நல்ல காலம் ஒரு ஆபத்தில் இருந்து தப்பி விட்டீர்கள் இனி கவனமாய் இருங்கள்..கடவுள் என்றும் துணை நிற்பாராக ...

நானும் முன்னர் ஒவ்வொருநாளும் இஞ்சிச் தேநீர் குடிப்பேன். இப்போது எப்பவாவது தான். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள் 😀

13 hours ago, Kadancha said:

சுகமாகி வந்தது ஆறுதல்.

நன்றி கண்டசா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.