Jump to content

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றுவதை மகிந்த விரும்பவில்லை –மகிநத சமரசிங்க


Recommended Posts

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றுவதை மகிந்த விரும்பவில்லை –மகிநத சமரசிங்க

 

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகளின் பகுதியில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றும் முக்கிய நாடொன்றின் வேண்டுகோள்களை அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்ச நிராகரித்தார் என நாடாளுமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மனித உரிமைகள் விவகாரத்திற்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

Mahinda-Samarasinghe-1-300x214.jpg
உலகின் பலம்வாய்ந்த நாடொன்றின் தூதுவர் தலைமையிலான வெளிநாட்டு தூதுவர்கள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பொதுமக்களை கப்பல்கள் மூலம் வெளியேற்றும் யோசனையை முன்வைத்தது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இது இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னொரு நாடும் கப்பல் மூலமாக மக்களை வெளியேற்றும் யோசனையை முன்வைத்துள்ளது அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இது குறித்து கருத்து தெரிவிப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

mulivaikal-300x190.jpg
நான் பின்னர் ஜனாதிபதியிடம் இன்னொரு நாடு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளதா என கேட்டேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
எனினும் வடக்கில் சிக்குண்டுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் அந்த கப்பலில் தப்பிச்செல்லக்கூடும் என்பதால் தான் அவ்வாறு தெரிவித்தேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தான் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை மகிந்த ராஜபக்ச தெரிவித்துவிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றுவதை மகிந்த விரும்பவில்லை –மகிநத சமரசிங்க – Thinakkural

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகளின் பகுதியில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றும் முக்கிய நாடொன்றின் வேண்டுகோள்களை அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்ச நிராகரித்தார் என நாடாளுமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மனித உரிமைகள் விவகாரத்திற்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்டம் உங்கள் கையில். நீங்கள் ஒன்றும் அடிக்கலாம், இரண்டும் அடிக்கலாம், மூன்றும் அடிக்கலாம், பவுன்றியும் அடிக்கலாம், சிக்சரும் அடிக்கலாம், ஆடுமட்டும் ஆடுங்கோ. 

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நேரம்தான்.

ஆனாலும் அவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் தப்புன்னுன்னா.. மகிந்தகிட்ட கேட்டுக்கிட்டு இருந்திருக்கமாட்டார். எத்தனையோ வழிகள் இருந்தன. இறுதிக்கட்டத்தில் எத்தனையோ போராளிகள் பத்திரமாக தாயகம் விட்டு வெளியேறி இருக்கிறார்கள். அப்படி இருந்தும்.. இறுதிவரை வெளியேறவே மாட்டேன் என்று கடைசிவரை சமர்க்களத்தில் இருந்து வீழ்ந்த தலைவர் எங்க.. புலிகளுக்கு பயந்து நடுங்கி.. உலக வல்லரசுகளின் நேரடிப் படைப்பங்களிப்போடு போரை முடித்துவிட்டு.. வெளிநாடுகளில் கிடந்துவிட்டு.. கடைசி நேரத்தில்.. பிளானால் வந்திறகி.. சொறீலங்கா மண்ணை முத்தமிட்டவர்கள்.. முழக்கமிட்டவர்கள் எங்கே..??!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.