Jump to content

தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி


Recommended Posts

தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி

 
  • கலாநிதி அமீரலி

Dr.Ameer-Ali-2.jpg

ழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலுகைகளைப் பெற்று வளம் பெறலாம் என்றபோக்கிலேயே தமது அரசியல் பாதையை வகுத்தனர். அதற்காக அவர்கள் தனிப்பட்ட அரசியல் கட்சிகளை ஆரம்பத்தில் உருவாக்காவிட்டாலும், கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் தமிழரைப்போன்று அவர்களும் ஓரிரு கட்சிகளை அமைத்து செயற்படத் தொடங்கினர். இதனால் இதுவரை தனித்தனியே நடந்து சென்ற முஸ்லிம்கள் இப்போது வாகனங்களில் பயணித்தனர். ஆனாலும் பாதை மாறவில்லை. இன்று அவர்களின் பாதையும் தடைப்பட்டு தமிழரைப்போன்று செய்வதறியாது நிற்கதியில் விடப்பட்டுள்ளனர்.

parliment.jpg

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆபத்தை எதிர்நோக்கித் திக்கற்றுத் தவிக்கும் இரு இனங்களுமே ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவ முன்வராதிருப்பதே. இது வெறுப்பினாலா செருக்கினாலா அல்லது எதிரியின் பிரித்தாளும் தந்திரத்தினாலா என்று தெரியவில்லை.

இவ்விரு இனங்களின் எதிரி ஒன்றுதான். சிங்கள பௌத்த பேராதிக்கம் இருவரையுமே நசுக்கி அடிமைகளாக்க விளைகிறது. ‘இலங்கை மட்டுமே எங்களின் சொந்த வீடு. அதில் உங்களை வாடகைக்காக வேண்டுமானால் குடியிருக்க விடுவோம். ஆனால் வீட்டின் உரிமையாளர்களாகிய எங்களுக்கு நீங்கள் உபத்திரமாக வாழக்கூடாது’ என்ற பாணியிலேயே சிங்கள பௌத்த பேராதிக்கவாதிகள் சிறுபான்மை இனங்கள் இரண்டுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர்களின் கைகளிலேயே இன்று ஆட்சியும் சிக்கியுள்ளது.

பல உதாரணங்கள் மூலம் இப்பேராதிக்கவாதிகளின் சிறுபான்மையோருக்கு எதிரான செயற்பாட்டினை விளக்க முடியுமானாலும் அவற்றுள் இரண்டை மட்டும் இக்கட்டுரைக்காகப் பொறுக்கியெடுத்து அவற்றுள் ஒன்று தமிழினத்தையும் மற்றது முஸ்லிம்களையும் தனித்தனியே எவ்வாறு பாதித்துள்ளது என்பதை நிறுவலாம்.

முதலாவது, கடந்த வருடம் முல்லைத்தீவில் நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இந்துமக்களின் புனித தலத்தை மாசுபடுத்தி அவர்களின் மதநம்பிக்கையிற் சேற்றைவீசியதுபோல் ஒரு பௌத்த சிதையை எரித்தமையாகும். நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி இதைச் செய்தார்கள். ‘நாங்கள் நினைத்ததை எப்போதம் எங்கேயும் செய்வோம், அதைக் கேட்க நீங்கள் யார்’ என்பதுபோல் இல்லாயா இது?

அதேபோன்று இந்த வருடம் கொள்ளை நோயால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்ய எடுக்கப்பட்ட முடிவு. எந்தவித விஞ்ஞான ரீதியான ஆதாரமுமின்றி ஓர் அரசாங்க வைத்தியனின் அபிப்பிராயத்தைக் காரணங்காட்டி முஸ்லிம்களின் மத உணர்வுகளை உதாசீனஞ்செய்து எடுத்த முடிவே இது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் சிறுபான்மை இனங்களை அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியாக அடக்கியொடுக்கத் தயங்காதவர்களே இப்பேராதிக்கவாதிகள். அன்று நீராவியடிப் பிள்ளையார் விடயத்தில் முஸ்லிம்கள் மௌனமாய் இருந்தனர். இன்று முலிம்களின் மரண விடயத்தில் தமிழினம் மௌனம் சாதிக்கிறது.

நாட்டின் ஆட்சியை நூறுவீத சிங்கள பௌத்த ஆட்சியாக மறற்ற வேண்டுமென்ற பேராதிக்கவாதிகளின் நீண்டகாலக் கனவு கடந்தவருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நனவாகத் தொடங்கி இவ்வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலுடன் பூர்த்தியடைந்தது. அவர்களின் இன்றையப் பிரயத்தனம் எவ்வாறு இந்த ஆட்சியை நிரந்தரமானதாக்குவது என்பதே. அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிதான் அண்மையில் நடந்தேறிய அரசியல் யாப்பு மாற்றங்கள். அந்த மாற்றங்கள் நிறைவேறுவதற்கு இரு சிறுபான்மை இனங்களின் அங்கத்தவர்களிற் சிலரும் ஆதரவாக இருந்தனர் என்பதை உணரும்போது அவ்வாதரவாளர்களைத் தமது இனங்களை அழிக்கவந்த கோடரிக்காம்புகள் என்றழைப்பதிற் தவறுண்டா?

இது நடந்து முடிந்த ஒரு கதை. அதைப்பற்றி ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. அதனை மறந்துவிட்டு இரு இனங்களும் தாம் இதுவரை பயணித்த பாதைகள் வழியே தொடர்ந்தும் பயணிப்பது பயனற்றது என்பதை உணர்ந்து ஒரு புதிய பாதையை நாடவேண்டும். அந்தப்பாதை எது?

அதை விபரிப்பதற்குமுன் இரண்டு அடிப்படை உண்மைகளை தமிழரும் முஸ்லிம்களும் உணரல் வேண்டும். ஒன்று, இரு இனங்களும் எப்படித்தான் தனியாகவோ கூட்டாகவோ கத்திக் கூச்சல்போட்டாலும் பெரும்பான்மை இனத்தின் ஆதரவில்லாமல் எந்த உரிமையையும் பெறமுடியாது. நாட்டுக்கு வெளியே எவ்வளவுதான் சிறுபான்மையோருக்குச் சாதகமான ஆதரவு திரண்டாலும் அந்த ஆதரவு ஒரு துணைக் கரமாக இயங்கலாமே ஒழிய அதுவே தனித்து நின்று எதையும் இவர்களுக்காகப் பெற்றுக் கொடுக்க முடியாது. தமிழீழப் போராட்டம் இந்த உண்மையை இரத்தத்தால் எழுதி வைத்துள்ளது.

மற்றது, சிங்கள பௌத்த மக்கள் அனைவருமே போராதிக்கவாதிகளல்லர். அதனை முஸ்லிம்கள் உணர்ந்த அளவுக்கு தமிழினம் இன்னும் உணரவில்லை. அதற்குக் காரணம் மொழி வேறுபாடு. தமிழிலே பேசி, தமிழிலே எழுதி உறவாடக்டகூடிய சிங்கள பௌத்தர்களும் சிங்களத்திலே பேசியும் எழுதியும் உறவாடக்கூடிய தமிழர்களும் மிகமிகச் சொற்பம். ஆனால் முஸ்லிம்களிடையே அந்தப் பிரச்சினை குறைவு. அதற்கான காரணங்களை இங்கே விளக்கத் தேவையில்லை. என்றாலும் இந்த வேறுபாட்டை ஒரு துரும்பாகப் பாவித்தே பேராதிக்கவாதிகள் சிறுபான்மை இனங்களை அதிலும் குறிப்பாகத் தமிழினத்தை பௌத்த சிங்களவர்களின் எதிரியெனச் சித்தரித்துள்ளனர். அதேபோன்றே தமிழினத்தின் தலைவர்களும் சிங்கள மக்களைப்பற்றிய உண்மைகளை மறைத்து தமிழ் மக்களிடையே அரசியல் செல்வாக்குத் தேடியுள்ளனர். இது ஒரு கசப்பான வரலாறு.

அது ஒரு புறமிருக்க, பௌத்த பேராதிக்கவாதமும் அதன் சித்தாந்திகளும் அவர்களின் அரசியற் பொம்மைகளும் எவ்வாறு நாட்டைக் குட்டிச்சுவராக்கி அதன் செல்வங்களைச் சூறையாடுகிறார்கள் என்பதை சிங்கள மக்களின் பல புத்திஜீவிகளும், நிர்வாக அனுபவசாலிகளும், மக்கள் இயக்கங்களும் இப்போது உணர்ந்துள்ளனர். இன்று நடைபெறும் ஏதேச்சதிகார இராணுவ ஆட்சியால் வறுமை வளர்ந்து, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்து, இன ஒற்றுமை சீரழிந்து, அமைதியும் இழக்கப்பட்டு, நாடே மீண்டும் அன்னியர் கைகளிற் சிக்குகின்ற ஓர் ஆபத்தையும் எதிர்நோக்குவதை அவர்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர். இன்றுள்ள எதிர்க்கட்சிகளுக்கும் அதனை மாற்றும் வல்லமை இல்லை என்பதையும் அந்தக் கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பேராதிக்கவாதிகளின் தயவினை நாடத் தயங்கமாட்டார்கள் என்பதையும் அறிவர்.

ஆதலால், இப்போது ஆட்சியிலிருப்போரையும் எதிரணியிலிருப்போரையும் ஒருங்கே ஒதுக்கிவிட்டு, ஜனநாயகப் பண்புகளைத் தழுவி, தேசத்தின் பல்லின அமைப்பைக் கட்டிக்காத்து, இன மதவாதங்களை உதறித்தள்ளி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து மக்களின் வறுமையைப் போக்கும் ஒரு செயற்திட்டத்தை வகுத்து அதனை நடைமுறைப் படுத்தும் வழிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் புதிதாக ஓர் அரசியல் யாப்பு அமைக்கப்படல் வேண்டுமென்ற குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

அவ்வாறான யாப்பு என்னென்ன அமிசங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கருத்திற்கொண்டு அவற்றை யாப்பு வல்லுனர்களின் பார்வைக்குச் சமர்ப்பித்துள்ளனர். சுருங்கக் கூறின் இலங்கையின் ஜனநாயகக் குரலாக அவர்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் வரவேற்கப்பட வேண்டிய ஓர் அமிசம் என்னவெனில் தனியே ஆட்சியாளர்களைப்பற்றியும் அவர்களது ஆட்சி முறையைப்பற்றியும் சதா கண்டித்துக்கொண்டே இருக்காமல் தேசப்பற்றுடன் சகலருக்கும் நலனளிக்கும் மாற்றுச் செயற் திட்டமொன்றை வகுத்து அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற எடுக்கும் முயற்சியாகும். இந்த முயற்சியில் மூவினங்களையும் உள்ளடக்கிய திறமைசாலிகளின் வட்டமொன்று நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து செயற்படத் தொடங்கியுள்ளனர்.

இது ஒரு புதுப்பாதை. பெரும்பான்மை இனத்துக்குள்ளிருந்து திறக்கப்படும் இப்பாதை எல்லா இனங்களும் ஒருமித்துப் பயணிக்கக்கூடிய ஒரு பொதுப்பாதை. அப்பாதையை வகுப்பது ஒரு குடும்பமோ குலமோ வர்க்கமோ அல்ல. மாறாக பல இனங்களையும் உள்ளடக்கிய திறமைசாலிகளின் ஒரு கூட்டு. எனவேதான் அதனை வரவேற்பது சிறுபான்மை மக்களின் எதிர்காலச் சபீட்சத்துக்கு நல்லது. இது சம்பந்தமாக இன்னுமொரு குறிப்பையும் முன்வைக்க வேண்டியுள்ளது.

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இதுவரை உருவாகிய தலைமைத்தவங்கள் இனத்தையும் குலத்தையும் மதத்தையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியே மக்களாதரவைத் தேட முயன்றன. அவற்றைத் தவிர்த்து, தனியே பொருளாதாரக் காரணிகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட ஓரிரு அரசியல் தலைமைகளை இரு சிறுபான்மை இனங்களும் உதறித் தள்ளின. ஆனால் மேலே சுட்டிக்காட்டப்பட்ட திறமைசாலிகளின் கூட்டு அல்லது வட்டம் ஒரு புதிய தலைமைத்துவம் பிறப்பதற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதாக அமைகின்றதே ஒழிய அது தலைமைத்துவத்தை நாடவில்லை.

எனவேதான் சிறுபான்மை இனங்களின் ஆண் பெண் புத்திஜீவிகளும் சமூகநல ஆர்வலர்களும் சேவை நாட்டம் கொண்டவர்களும் படைப்பாளிகளும் அவ்வட்டத்திற் சேர்வது நன்மை பயக்கும். அந்த வட்டத்தின் மடியிலிருந்துதான் ஒரு புதிய அரசியல் தலைமைத்துவம் பிறக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, கசப்பான கடந்தகால அனுபவங்களால் பெரும்பான்மையினரின் மத்தியிலிருந்து எழுகின்ற ஒவ்வொரு முயற்சியையும் சிறுபான்மை இனங்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது சகஜமாகிவிட்டது. இந்த நிலை மாறவேண்டும்.

ஜனநாயகம் மீண்டும் இலங்கையில் மலரவேண்டும் என்ற நோக்கில் பல செயற்குழுக்கள் அல்லது செயலணிகள் இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைகளிடம் மாற்றுத் திட்டமொன்று இல்லாவிட்டாலும் அவைகளை இனங்கண்டு, அவற்றுள் ஏதாவதொன்றுடன் சிறுபான்மை இனத்தவரின் புத்திஜீவிகள் இணைந்து செயற்படவேண்டியது அவசியம். இதனால் இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கை வளர்வது சாத்தியப்படும். அந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் மாற்றுத் திட்டத்தடன் ஒரு செயலணி முன்வரத் தொடங்கும்போது அதன் கரங்களைப் பலப்படுத்துவது இலகுவாயிருக்கும்.

தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி – Thinakkural

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.