Jump to content

ஆக்ஸ்போர்ட்-தடுப்பூசியும் 70-90% வினைத்திறனானதே - பூர்வாங்க முடிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸ்போர்ட் பல்கலை-அஸ்டிரா செனிக்கா இணைந்து தயாரிக்கும் தடுப்பூசியும் அண்ணளவாக 70-90% வெற்றி அளிப்பதாக பூர்வாங்க முடிவுகள் காட்டுகிறன.

முதலில் அரை டோஸ் - இரண்டாம் முறை முழு டோஸ் கொடுத்தால் 90% வினைத்திறனும், 

முதலில் முழு டோஸ், இரண்டாம் முறையும் முழு டோஸ் கொடுத்தால் 70% வினைத்திறனும் கிடைக்கிறதாம்.

இந்த தடுப்பூசியை சாதாரண குளிரூட்டியில் வைத்து பாதுகாக்க முடியும் என்பதாலும் இதன் விலை கிட்டதட்ட ஏனைய தடுபூசிகளை விட 10 மடங்கு குறைவு என்பதாலும் நீண்ட கால நோக்கில் கொவிட் ஒழிப்பில், குறிப்பாக வளர்முக நாடுகளில் இது பாரிய தாக்கத்தை செலுத்தலாம்.

https://www.theguardian.com/society/2020/nov/23/astrazeneca-says-its-coronavirus-vaccine-has-70-per-cent-efficacy-covid-oxford-university

Link to comment
Share on other sites

  • goshan_che changed the title to ஆக்ஸ்போர்ட்-தடுப்பூசியும் 70-90% வினைத்திறனானதே - பூர்வாங்க முடிவு
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி: "ஆக்ஸ்ஃபோர்ட் மருந்து 70% பாதுகாப்பானது" - எந்த அளவுக்கு நம்பலாம்?

  • ஜேம்ஸ் கலேகர்
  • அறிவியல் மற்றும் சுகாதார செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கொரோனா

பட மூலாதாரம்,OXFORD UNIVERSITY/JOHN CAIRNS

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, அந்த வைரஸ் அறிகுறி மேம்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு தொற்றை தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மிகப்பெரிய அளவிலான பரிசோதனை வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வு முன்னோடியாக உள்ளது.

அதே சமயம், ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயாளிக்கு 95% பாதுகாப்பை வழங்குவதாக தெரிவிக்கப்படுவதால், ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி பரிசோதனை வெற்றி என்றபோதிலும் அது சற்றே ஏமாற்றமாகவும் கருதப்படுகிறது.

இதேவேளை, ஃபைசர் ,மாடர்னா நிறுவனங்களின் வைரஸ் தடுப்பு மருந்துடன் ஒப்பிடும்போது, ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி விலை மிகவும் மலிவானது மற்றும் எளிதாக உலகின் எந்த மூலைக்கும் எளிதில் கொண்டு செல்லக் கூடியது.

இந்த தடுப்பூசி மருந்துக்கு முறைப்படி உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கினால், இந்த தடுப்பு மருந்துகள், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் அளவை இன்னும் சரியாகக் கணித்துக் கொடுத்தால், இந்த மருந்து 90% வரை பாதுகாப்பளிக்கும் என்கிறது இந்த மருந்து சார்ந்த தரவுகள்.

சராசரியாக ஒரு தடுப்பு மருந்தை தயாரிக்க 10 ஆண்டுகள் வரை ஆகும். அந்தப் பணியை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சுமார் 10 மாதங்களில் செய்துள்ளனர்.

"நாம் எப்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என்பதற்கு, மற்றொரு படி முன்னேறிச் செல்ல வைத்திருக்கிறது இன்றைய அறிவிப்பு" என்கிறார் தடுப்பூசி தயாரிப்புப் பணியில் முன்னோடியாக கருதப்படும் பேராசிரியர் சாரா கில்பர்ட்.

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை 100 மில்லியன் டோஸ் அளவுக்கு பெறுவதற்கான ஆர்டரை பிரிட்டன் அரசு முன்கூட்டியே செய்துள்ளது. அதைக் கொண்டு 50 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடலாம்.

கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சோதனை விவரங்கள் காட்டியது என்ன?

இந்த பரிசோதனையில் 20,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள். 50 சதவிகிதத்தினர் பிரிட்டனில் இருந்தும், 50 சதவிகிதத்தினர் பிரேஸிலில் இருந்து கலந்து கொண்டார்கள்.

இந்த தடுப்பு மருந்தில் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் 30 பேருக்கு கொரோனா இருந்தது. டம்மி ஊசி எனப்படும் தடுப்பு மருந்து 101 பேருக்கு போடப்பட்டது. அந்த வகையில் இந்த மருந்து 70 சதவீதம் பாதுகாப்பு அளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

"இரண்டு அதிக டோஸ் மருந்து, தன்னார்வலர்களுக்கு கொடுத்த போது, அந்த மருந்து 62 சதவிகிதம் பாதுகாப்பு கொடுத்தது. அதற்குப் பிறகு குறைந்த டோஸ் மருந்து கொடுத்த போது, பாதுகாப்பு 90 சதவிகிதமாக அதிகரித்தது. இந்த வித்தியாசம் ஏன் என்று தெரியவில்லை. இந்த முடிவுகளால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம்" என இந்த சோதனையின் முதன்மை ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஆண்ட்ரூவ் பொல்லார்ட் கூறி இருக்கிறார்.

பொதுமக்களுக்கு எப்போது கிடைக்கும்?

பிரிட்டனில் ஏற்கனவே 4 மில்லியன் டோஸ் மருந்துகள் தயாராக இருக்கின்றன.

இந்த தடுப்பு மருந்தின் பாதுகாப்பு, செயல் திறன் மற்றும் மருந்தின் தரம் போன்றவை மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு சுகாதார அமைப்பு ஆய்வுக்குழு ஆராய்ந்து அனுமதிக்கும் வரை எதுவும் நடக்காது. இந்த செயல்முறைகள் எல்லாம், அடுத்து வரும் வாரங்களில் நடக்கவிருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், பிரிட்டன் அரசு, இதற்கு முன் இல்லாத வெகுஜன நோய்த்தடுப்பு பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்க தயாராக இருக்கிறது என்றே கூற வேண்டும்.

வைரஸ் தடுப்பூசியைப் பெறுவோரில், Care home residents என்றழைக்கப்படுபவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதன் பின் வயதை அடிப்படையாகக் கொண்டு வைரஸ் தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்துவதுதான் அரசின் திட்டம்.

இது எப்படி செயல்படுகிறது?

பொதுவாக சிம்பான்ஸிக்களை தாக்கும் சளி போன்ற வைரஸை எதிர்கொள்ள, மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கிறது.

வைரஸை மனித உயிரணுக்களுடன் இணைக்கப் பயன்படும் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவை செல்களுடன் சிறப்பாக ஒட்டிக்கொள்ளவும் மேலும் திறம்பட செயல்படவும் வகைசெய்கின்றன.

'ஸ்பைக் புரதம்' என்ற முள்முடி போன்ற பாகம்தான் அந்த வைரஸ் மனித உடலின் உயிரணுக்களுக்குள் ஊடுருவ பயன்படுத்தும் ஒரு சாதனம். கொரோனா வைரசின் மரபணுத் தொடரில் இந்த ஸ்பைக் புரதத்துக்கான குறியீடுகளைப் பிரித்தெடுத்து அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர். இதனால், இந்த தடுப்பூசியில் உள்ள மரபணு மாற்றப்பட்ட வைரஸ் பார்ப்பதற்கு கொரோனா வைரஸ் போலவே தோற்றம் அளிக்கும்.

இப்படி கொரோனா போலவே மாறுவேடம் பூண்ட மரபணு மாற்ற வைரஸ் மனித உடலுக்குள் செலுத்தப்படும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இதனை அடையாளம் காணவும், அதனோடு போரிடவும் பயிற்சி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் பிறகு உண்மையான கொரோனா வைரஸ் எப்போதாவது உடலுக்குள் நுழையும்போது, அதனை உடனடியாக அடையாளம் காணவும், எதிர்த்துப் போராடவும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்குப் போதிய பயிற்சி இருக்கும் என்பதால், கொரோனா வைரஸால் உடலில் தொற்றாக மாற முடியாது.

இந்த முடிவுகள் ஏமாற்றமளிக்கிறதா?

ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பு மருந்துகள் 95% பாதுகாப்பு அளிக்கின்றன. ஆக்ஸ்ஃபோர்ட் மருந்து 70% மட்டுமே பாதுகாப்பு அளிப்பது ஏமாற்றமளிக்கிறது.

இருப்பினும் ஒரு மாதம் முன்புவரை 50% மேல் சாதகமாக முடிவுகள் வந்தாலே அது வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

இந்த மருந்தை, குளிரூட்டி சாதன வெப்பநிலையில் கூட வைக்கலாம். அதாவது இந்த மருந்தை, உலகின் எந்த பகுதிக்கும் விநியோகிக்கலாம். ஃபைசர், பயோஎன்டெக் மற்றும் மாடர்னா மருந்துகள் போல அதிக குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து விரைவில் உலக அளவில் கிடைக்கும் என்ற செய்தி மகிழ்ச்சி தருவதாகவும் அது 90 சதவீத அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் இந்தியாவில் உள்ள சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து இந்தியாவின் புணேவில் சீரம் நிறுவனம் கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையிலான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-55042765

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.