Jump to content

கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய உயர் விருதை பெற்ற ஈழத்தமிழர் ; குவியும் வாழ்த்து - Jvpnews

கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்

கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார்.

கடனாவின் உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்ற விருதினை அவருக்கு  வழங்கி, பாராட்டி கௌரவித்துள்ளனர்.

யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மதியாபரணம் வாகீசனுக்கு (1988ம் ஆண்டு உயர்தரம்) கல்லூரி நிர்வாகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

குறித்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் இலங்கைத் தமிழ் கனடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கனடிய-உயர்-விருதை-பெற்று/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதியாபரணம் வாகீசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .......&    பகிர்வுக்கு நன்றி சிறியர்.....!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய பாதுகாப்புப் படையின் உயர் மதிப்புறு விருது பெற்ற ஈழத்தமிழ் மகன் – ‘யாழ் இந்து’ செதுக்கிய வாகீசன் மதியாபரணம்

னேடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் கூடிய பணியை ஆற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்னும் சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட ஈழத்தமிழ் மகன் வாகீசன் மதியாபரணம் அவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

01-8-9-1024x689.jpgஅண்மையில் கனடாவின் தலைநகரான ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள கனடிய பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் இடம்பெற்ற படை நிகழ்வொன்றில் தனது சிரேஸ்ட படைத் தளபதியிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொண்ட ஈழத்தமிழ் மகனும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி செதுக்கிய மாணவச் செம்மல் வாகீசன் மதியாபரணம் அவர்களை எமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதிலும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவ்வாறான கனடிய அரச சார்ந்த கௌரவத்தைப் பெற்ற வாகீசன் மதியாபரணம்  கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஒரு சிரேஷ்ட நிதியியல் சேவைகள் நிர்வாகியாக தற்போது பணியாற்றி வருகின்றார் என்பதும் பெருமைக்குரிய ஒரு விடயமாகும்.

vaheesan.jpgசாதனையாளர் வாகீசன் மதியாபரணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவாக்கிய மாணவச் செல்வங்களில் சிறப்புகள் நிறைந்த ஒருவராகவும் விளங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற 1983 தொடக்கம் 1988 வரையிலான காலப்பகுதியில் ஒரு முக்கியமான மாணவராக விளங்கியுள்ளார்.

1986 தொடக்கம் 1988 வரை அவர் கல்லூரியின் மாணவத் தலைவராக விளங்கியுள்ளார். அத்துடன் கல்லூரியின் உதைபந்தாட்டக் அணியின் மூன்று பிரிவுகளிலும் அங்கம் வகித்து பல போட்டிகளில் வெற்றிகளை ஈட்டுவதற்கு காரணமாக இருந்துள்ளார். அத்துடன் யாழ். இந்துக் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியிலும் பங்கெடுத்துள்ளார். 1987ல் கல்லூரியின் வர்த்தக மன்றத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார். அத்துடன் சாரணர் அணியையும் அலங்கரித்துள்ளார்.

பின்னர் 1988ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்த வாகீசன், கனடிய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பட்டம் பெற்று 1995ஆம் ஆண்டு கனடிய இராணுவத்தில் இணைந்து கொண்டார். அதன் தொடர்ச்சியான காலப் பகுதியில் கனடாவின் பாதுகாப்புப் படையின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும் நேட்டோ நாடுகளின் சமாதானப் படையிலும் பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டார்.

2003ஆம் ஆண்டளவில் ரொரென்ரோவில் அமைந்துள்ள பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் இங்குள்ள தமிழ்ச் சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு பல சமூகப் பணிகளை ஆற்றத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் தமிழர் சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக TVI/CMR ஆகிய தமிழ் ஊடக நிறுவனங்களில் தொண்டராக இணைந்து கொண்டார். அப்போது மேலும் ஆர்வம் காரணமாக குறுகிய கால விடுமுறையை எடுத்துக் கொண்டு முழு நேரமாக மேற்படி TVI/CMR ஊடகங்களின் வளர்ச்சிக்காக உழைத்தார்.

vaheesan0.jpgகுறிப்பாக, மேற்படி ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டமிடல் இயக்குனராக 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை பணியாற்றிய பின்னர் மீண்டும் கனடிய பாதுகாப்புப் படையில் இணைந்து கொண்டார்.

கனடாவில் மிகவும் பொறுப்புகள் நிறைந்த பதவிகளில் அமர்ந்திருந்தாலும் தான் கல்வி கற்று தன்னை உயர்ந்த ஓர் இடத்தில் அமர்த்தியிருக்கின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கனடாவில் இயங்கும் அதன் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து அந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் தமது தாய்க் கல்லூரியின் உயர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டார்.

தொடர்ந்து யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா பழைய மாணவர் சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டுவருகின்றார். மேலும் இவர் எமது தாயகத்தில் பொருளாதார கஷ்டங்களால் தமது கல்வியை சிறந்த முறையில் தொடர முடியாமல் உள்ள தமிழ் மாணவர்களின் நலன் கருதி, ‘தமிழ் மாணவர்கள் உதவித் திட்டம்’ (Tamil Students Assistance) என்னும் அமைப்பை சில நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்து தொடர்ந்து இந்த நற்பணியை ஆற்றி வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

vaheesan-9.jpgவாகீசன் தற்போது தனது குடும்பத்தினரோடு வசித்து வருகின்ற ஒட்டாவா மாநகரில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் இணைந்து, அங்கும் பல சமூக மற்றும் சமயப் பணிகளை ஆற்றி வருகின்றார்.

https://thinakkural.lk/article/92736

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.