Jump to content

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition  PCoI probing Easter Sunday attacks Hizbullah received over Rs.4 Bn foreign  funds to BoC accounts

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சொந்தமான இரு இலங்கை வங்கி கணக்கில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறித்த விடயம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று சாட்சியம் வழங்கியுள்ள இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர் ஐ.சி.கே. கண்ணங்கரா, குறித்த வாங்கி கிளையில் ஹிஸ்புல்லா 5 கணக்குகளை வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லாவால் இயக்கப்படும் ஐந்து வங்கிக் கணக்குகளில் ஹிரா அறக்கட்டளை மற்றும் மட்டக்களப்பு வளாக தனியார் லிமிடெட் என்ற இரண்டு கணக்குகள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கை ஹிரா அறக்கட்டளை கணக்கு பதினைந்து சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு நிதிகளும் மட்டக்களப்பு வளாகம் தனியார் லிமிடெட் கணக்கிற்கு 2016 மற்றும் 2019 க்கு இடையிலான காலகட்டத்தில் ஏழு சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு நிதி கிடைத்துள்ளது.

மத்திய வங்கியில் உள்ள நிதி பரிவர்த்தனை ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெறும் கணக்கில் பரிவர்த்தனைகள் மத்திய வங்கியில் தெரிவிக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், ஹிஸ்புல்லாவால் இயக்கப்படும் இவ்வளவு பெரிய தொகைகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களையோ அல்லது இந்த பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்குரியவை என்றோ இலங்கை வங்கி கண்டுபிடிக்கவில்லை என்றும் தலைமை அலுவலகம் தெரிவித்ததாக அவர் சாட்சியமளித்தார்.

இருப்பினும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்த பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்குரியவை என்று இலங்கை வங்கி, மத்திய வங்கிக்கு அறிக்கை அளித்திருந்தது அதன்படி மத்திய வங்கி நிதி மோசடி புலனாய்வு பிரிவில் முறைப்பாட்டினை வழங்கியது.

முதல் கணக்கு, இலங்கை ஹிரா அறக்கட்டளை, 1993 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18 அன்று சமூக சேவை கணக்காக திறக்கப்பட்டது என்று சாட்சி கூறினார்.

கணக்கைத் திறந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் அதாவது 1993 செப்டம்பரில் சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு சான்றிதழை வங்கி பெற்றுள்ளது என்றும் சாட்சி கூறினார்.

முன்னதாக, சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்வதற்காக ஹிஸ்புல்லா போலி ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார் என்றும் அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கப்பட்டது.

ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, ஹிஸ்புல்லாவின் இலங்கை ஹிரா அறக்கட்டளை கணக்கு 2016 முதல் 2019 க்கு இடையில் பதினைந்து பரிவர்த்தனைகள் மூலம் 313 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளது.

இரண்டாவது கணக்கிற்கு, மட்டக்களப்பு வளாகம் தனியார் லிமிடெட்க்கு 2016 செப்டம்பர் 09 அன்று வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு 2016 -2019 காலத்திற்குள் 3.6 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு நிதி கிடைத்ததாகவும் இலங்கை வங்கியின் கொள்ளுபிட்டி கிளையின் முன்னாள் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஈஸ்டர்-தாக்குதலுக்கு-முன/

Link to comment
Share on other sites

மிக முக்கிய இஸ்லாமிய பாயங்கரவாதிகளில் இவரும் ஒருவர். தமிழர் போராட்டத்துக்கு எதிராக செயட்பட்டு கிழக்கு தமிழர் கொலைக்கும் முக்கிய காரணமாக இருந்தவர். பணம், ஆயுதம் சம்பந்தமாக இவருக்கு எதிராக நிறைய குற்ற சாட்டுகள் ஆணைக்குழு முன் வைக்கப்பட்டுள்ளது. ரிஸார்டுடன் சேர்ந்து இவரும் கம்பி என்ன வேண்டும் இல்லாவிட்ட்தால் தூக்கு மேடைக்கு போக வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.