Jump to content

தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் - தினேஷ் குணவர்தன.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் - தினேஷ் குணவர்தன

EJz95KZUcAEUD1t.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளுக்குச் சென்று மாவீரர்களைச் சுதந்திரமாக நினைவேந்தலாம்.

அங்கு அவர்களுக்குத் தடைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அது அவர்களின் சொந்த உரிமை. அதில் அவர்கள் ஏதோவொரு வழியில் சாதித்துக் காட்டுவார்கள்.

அதை ஜனாதிபதியோ அல்லது அரசோ அல்லது வேறு ஆட்களோ தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் தினேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் அடைக்கலம் கோரி அங்கு வாழும் சில முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் தாளத்துக்கு இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் மக்களும் ஆடுகின்றார்கள்.

இந்த நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். எனவே, இங்கு அவர்களை  நினைவுகூர அனுமதி இல்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெளிநாடுகள் தடை செய்திருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நினைவு கூருகின்றார்கள் என்பதற்காக இங்கு நாம் இங்கு  அனுமதி வழங்க முடியாது.

இங்கு மாவீரர் நாள் நிகழ்வை நடத்த கடந்த நல்லாட்சியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை படு முட்டாள்தனமாகும்.

அது ஆட்சியில் இருக்கும் தம்மைக் காப்பாற்றி வந்தமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ரணில் அரசு வழங்கிய நன்றிக் கடனாகும்.

இந்நாட்டின் சட்டத்தை மீறி நீதிமன்றத் தடையுத்தரவுகளை மீறி மரணித்த விடுதலைப்புலிகளை நினைவு கூர்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

https://thamilkural.net/newskural/mainnews/95788/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளுக்குச் சென்று மாவீரர்களைச் சுதந்திரமாக நினைவேந்தலாம்.

ஆக சொறீலங்காவில் தமிழ் மக்களுக்கு சுதந்திரமில்லை அதிகாரமில்லை..அதனையும் வழங்க சிங்களவர்கள் தயார் இல்லை என்பதை இவர் சொல்லிட்டார்.

இதுக்குப் பிறகும் எதுக்கு தமிழர்கள் சிங்களவனுக்கு பயந்து நடுங்கிக்கிட்டு. சொறீலங்கா ஒன்றும் சிங்களவரின் தனிச் சொத்தல்ல என்பது குடியேற்ற நாடுகளுக்குத் தெரியும். குறிப்பாக பிரிட்டனுக்குத் தெரியும். எனவே தமிழர்களின் சுதந்திரத்தை இலங்கைத் தீவில் நிலை நிறுத்த பிரிட்டன் உட்பட்ட சர்வதேச நாடுகளையும் ஐநாவையும் கோருவதே இந்த நேரத்தில் அமையும் நல்ல நகர்வாக இருக்க முடியும். 

உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒருமித்து இதனை வழியுறுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் - தினேஷ் குணவர்தன

வெளிநாட்டுக்கு போனாலும் வாய் திறக்க கூடாது - தமிழர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

வெளிநாட்டுக்கு போனாலும் வாய் திறக்க கூடாது - தமிழர்கள்

புலம்பெயர் தமிழர்களுக்கு எம்மைப்பற்றியோ/ எமது அரசியல்வாதிகள் பற்றியோ கதைக்க அருகதையில்லை.

இப்படிக்கு
இலங்கை தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் - தினேஷ் குணவர்தன

துணிவிருந்தா 2009 க்கு முன் கூறியிருக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

துணிவிருந்தா 2009 க்கு முன் கூறியிருக்கலாமே?

இதை நீங்கள்  தினேஷ் குணவர்தனத்துக்கு மட்டும் சொல்லுறியளோ இல்லாட்டி அங்கை  இஞ்சை   பங்கை   உங்கை சிதறி சிக்குண்டு 2009க்கு பிறகு முளைச்ச தமிழ் மழைக்காளான்களை பற்றி சொல்லுறியளோ..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதை நீங்கள்  தினேஷ் குணவர்தனத்துக்கு மட்டும் சொல்லுறியளோ இல்லாட்டி அங்கை  இஞ்சை   பங்கை   உங்கை சிதறி சிக்குண்டு 2009க்கு பிறகு முளைச்ச தமிழ் மழைக்காளான்களை பற்றி சொல்லுறியளோ..🤣

தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெளிநாடுகள் தடை செய்திருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நினைவு கூருகின்றார்கள் என்பதற்காக இங்கு நாம் இங்கு  அனுமதி வழங்க முடியாது.

ஜனநாயகம் என்றால் என்ன? சுதந்திரம் என்றால் என்ன? என்று தெரிந்த நாடுகள் அதை அனுமதிக்கிறார்கள். பயங்கரவாதத்தை செய்துகொண்டு, விடுதலை போரை பயங்கரவாதமாகச் சித்திரிபவர்களுக்கு,  மக்கள் உரிமையை பறிப்பவர்களுக்கு அது கஷ்ரமாகத்தான் இருக்கும். போகப்போக சிங்களவர்களும் அதன் தாக்கத்தை புரிந்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

வெளிநாட்டுக்கு போனாலும் வாய் திறக்க கூடாது - தமிழர்கள்

இல்லை. வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மாவீரர் நாளை நினைவுகூரும்படி சொல்லாமல் சொல்லுகிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.