Jump to content

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் மற்றும் வினோத் என ழைக்கப்படும் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு தலா 1லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/154911

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

பிள்ளையான் பிணையில் விடுதலை

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போதே அவர் பிணையில் விடுதலை செய்யப்படதுடன் வழக்குடன் சம்பந்தப்படட ஏனைய ஐவரும் தலா இரு சரீரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் குறித்த வழக்குதொடர்பான வழக்கு டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

இரண்டு கிழமைக்கு முதல், கொரோனாவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேன் என்று சொன்னவர். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

கரை புரண்டோடப்போகின்றது பிள்ளையான் & CO வின் வங்கி கணக்குகளில்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு கிழமைக்கு முதல், கொரோனாவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேன் என்று சொன்னவர். 🙂

பிள்ளையாருக்கு  இருக்கிற கூத்து காணாதெண்டு கொரோனா கூத்து வேறை.....:cool:

20 minutes ago, உடையார் said:

கரை புரண்டோடப்போகின்றது பிள்ளையான் & CO வின் வங்கி கணக்குகளில்😎

எண்டாலும் கருணாவின்ரை லெவலுக்கு வரமாட்டார்...😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

அது ஒரு சரித்திரம் ;
இது ஒரு சகாப்தம் ;..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் என்பவர் இனிமேல் விடுதலை ஆகமாட்டார் என வாதம் செய்தவர்களுக்கு இந்த விடுதலை சமர்ப்பணம் 

நான் பல தடவை சில திரிகளில் சொல்லி வந்தேன் ஆனால் உடன் படவில்லை விடுதலையாக மாட்டார் , ஆக்கமாட்டார்கள் எனவும் சொன்னார்கள் நம்மவர்கள் சில உன்மையான விடயங்களை சொன்னால் ஏற்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் என்பவர் இனிமேல் விடுதலை ஆகமாட்டார் என வாதம் செய்தவர்களுக்கு இந்த விடுதலை சமர்ப்பணம் 

நான் பல தடவை சில திரிகளில் சொல்லி வந்தேன் ஆனால் உடன் படவில்லை விடுதலையாக மாட்டார் , ஆக்கமாட்டார்கள் எனவும் சொன்னார்கள் நம்மவர்கள் சில உன்மையான விடயங்களை சொன்னால் ஏற்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை 

இங்கே கேள்வி இவரது விடுதலை நியாயமானதா? சட்டத்துக்கு உடன்பாடானதா? என்பது தான்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

இங்கே கேள்வி இவரது விடுதலை நியாயமானதா? சட்டத்துக்கு உடன்பாடானதா? என்பது தான்???

இல்லை என்றால் என்ன செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

இங்கே கேள்வி இவரது விடுதலை நியாயமானதா? சட்டத்துக்கு உடன்பாடானதா? என்பது தான்???

அதை நீதிபதிகளிடமே கேட் க வேண்டும் நான் நீதிபதி அல்ல நமக்கு பிடித்தவர்கள் கெட்டது செய்தாலும் நல்லவர்களாக தெரிவார்கள் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் கெட்டவர்காகவே தெரியும். 

சுமத்திரன் ஐயாவும் வந்து வாதாடிப்பார்த்தார் சாட்சிகளை வரும் 8ம் திகதி முன்னிலைப்படுத்தி நிருபிக்க வேண்டும் இல்லையேல் கேஸ் தள்ளுபடி  

தீர்ப்பு வழங்கியிருப்பது நீதிபதிகள் சட்டம் படித்து குடித்தவர்களே தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் நான் , பிள்ளையான் , கர்ணா என்பவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் நானும் ஓர் ஒட்டுக்குழு என நினைத்தால் நினைப்பவர்களுக்கு  எதுவும் செய்ய முடியாது இருக்கின்ற (இங்கு) ஏதாவது நன்மை கிடைத்தாலும் ஏன் ஓர் கங்கூஸ் கிடைத்தாலும் சந்தோசமே ஏனென்றார் ஓர் பெண் கழிப்பறை இல்லாமல் காட்டுக்க போவதால் பூச்சி , யானை அடித்த சம்பவங்கள் , துரத்திய சம்பவங்களும் உண்டு . பலர் நினைக்கலாம் ஒரு கக்கூசிக்கா என இல்லாதவனுக்குதான் அதன் அருமை தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

45 minutes ago, நந்தன் said:

இல்லை என்றால் என்ன செய்யலாம்

இல்லையென்றால் இதில்  மெச்ச  எதுவுமில்லையே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் நல்லவர் வல்லவர் ஆகிட்டார். கொம்மான் நல்லவர் வல்லவர் ஆகிட்டார். அப்படியே கோத்தா மகிந்த நல்லவர்கள் வல்லவர்கள்.

இறந்தது.. இழந்தது எல்லாம்.. கொடியது கெட்டது.

எப்படி எல்லாம் தமிழன் மூளை பச்சோந்தித்தனமா சிந்திக்கும் என்பதற்கு இந்த தலைப்பு நல்ல உதாரணம்.

இதனால் தான் சொந்த வரலாறிழந்து.. வாழ்விழந்து.. நாடிழந்து உலகம் பூராவும் தமிழன் அடிமையாகவே வாழ்கிறான்.

ஒரு பக்கம்.. இறந்த போன மாவீரர்களுக்கு மக்களுக்கு அஞ்சலி செய்ய முன்கூட்டிய தடை. வாழும் கொலைகாரர்களுக்கு பிணை. சொறீலங்கா நீதித்துறை எவ்வளவு அரசியல்படுத்தப்பட்டு சாக்கடையாகக் கிடக்கு என்பதற்கு இதுவும் நல்ல உதாரணம்.

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதை நீதிபதிகளிடமே கேட் க வேண்டும் நான் நீதிபதி அல்ல நமக்கு பிடித்தவர்கள் கெட்டது செய்தாலும் நல்லவர்களாக தெரிவார்கள் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் கெட்டவர்காகவே தெரியும். 

சுமத்திரன் ஐயாவும் வந்து வாதாடிப்பார்த்தார் சாட்சிகளை வரும் 8ம் திகதி முன்னிலைப்படுத்தி நிருபிக்க வேண்டும் இல்லையேல் கேஸ் தள்ளுபடி  

தீர்ப்பு வழங்கியிருப்பது நீதிபதிகள் சட்டம் படித்து குடித்தவர்களே தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் நான் , பிள்ளையான் , கர்ணா என்பவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் நானும் ஓர் ஒட்டுக்குழு என நினைத்தால் நினைப்பவர்களுக்கு  எதுவும் செய்ய முடியாது இருக்கின்ற (இங்கு) ஏதாவது நன்மை கிடைத்தாலும் ஏன் ஓர் கங்கூஸ் கிடைத்தாலும் சந்தோசமே ஏனென்றார் ஓர் பெண் கழிப்பறை இல்லாமல் காட்டுக்க போவதால் பூச்சி , யானை அடித்த சம்பவங்கள் , துரத்திய சம்பவங்களும் உண்டு . பலர் நினைக்கலாம் ஒரு கக்கூசிக்கா என இல்லாதவனுக்குதான் அதன் அருமை தெரியும்

ஒரு பெண்ணின் கக்கூசுக்காக. பிள்ளையான் நல்லவர். பல பெண்களின் விதவைக் கோலத்துக்கு காரணமான அதே பிள்ளையானும் நல்லவரிலும் நல்லவர். உலகம் எப்படி எல்லாம் மாற்றி யோசிக்கும்....

நினைச்சால் தலை சுத்துது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமென்றால் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது ? சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்வி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியும் என்றால் எந்தவித சாட்சியும் இல்லாது வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்ட எமது தமிழ் இளைஞர்களை ஏன் பிணையில் விடுவிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இன்று அரசாங்கம் கூறுவது என்னவென்றால் அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை முன்வைக்கின்றனர். 

இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்கு பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தவர்களுக்கு பிணை வழங்க முடியாது என அரசாங்கதினர் எம்மிடம் கூறினார்கள். அப்படியென்றால் பிள்ளையான் எவ்வாறு பிணையில் விடுதலையாக முடியும். 

பயங்கரவாத தடை சட்டத்தில் எமது தமிழ் இளைஞர்கள் பொய் குற்றச்சாட்டில் வெறுமனே குற்ற ஒப்புதல் சாட்சியங்களை வைத்துகொண்டு தடுத்து வைத்திருப்பது நியாயமானதா. இது வெறுமனே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறும் செயற்பாடாகும். அரசாங்கத்தை ஆதரித்த காரணத்தினால் தான் பிள்ளையான் விடுதலையாகியுள்ளார் என்றார். 

பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமென்றால் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது ? சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்வி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன் - பிணையில் வெளிவந்த பிள்ளையான்

மக்களோடு மக்களாக நின்று என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139266/DSC00301.JPG

பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கடந்த ஐந்து வருடங்களாக சிறையிலிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் அவரது சாகாக்களும் இன்று செவ்வாய்கிழமை (24) பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு தனது விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 

என்னுடைய வழக்கு திட்டமிட்ட ஒரு பழிவாங்கல் அதை இன்றுதான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது. ஏற்கனவே நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் போல மக்களோடு மக்களாக நின்று என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி என்னை நம்பி நான் வெளியில்வர வேண்டுமென பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.

குறித்த வழக்கில் இன்று செவ்வாய்கிழமை ஆஜராகிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பற்றி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139267/DSC00275.JPG

உங்களுக்கு சுமந்திரன் யார் எனத் தெரியும் அவர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், நான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு கிடைத்த வாக்குகள் என்ன? எனக்கு கிடைத்த வாக்குகள் என்ன? அவருடைய வாதம் என்னவென்றால் பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஆகவே அவரை வெளியில் விடக்கூடாது என்பது.

அப்படியாயின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவிகளும் விடுதலை செய்யப்படாத ஒரு நிலையே உருவாகும். ஆகவே அவரது வாதத்தை வேடிக்கையான ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன் - பிணையில் வெளிவந்த பிள்ளையான்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் என்பவர் இனிமேல் விடுதலை ஆகமாட்டார் என வாதம் செய்தவர்களுக்கு இந்த விடுதலை சமர்ப்பணம் 

நான் பல தடவை சில திரிகளில் சொல்லி வந்தேன் ஆனால் உடன் படவில்லை விடுதலையாக மாட்டார் , ஆக்கமாட்டார்கள் எனவும் சொன்னார்கள் நம்மவர்கள் சில உன்மையான விடயங்களை சொன்னால் ஏற்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை 

அவர்களுக்கு வேண்டுமென்றால் எதுவும் நடக்கலாம், வேண்டாம் என்றாலும் கடத்தி எதுவும் நடக்காதது போலவும் செய்யலாம். எல்லாமே அவர்கள் கையில்.  பிள்ளையான் அவர்களுக்காக கூலி வேலை செய்தும், இவ்வளவு காலம் சிறையில் இருந்ததே ஒர வஞ்சகம். அடிமை உரிமைக்கு குடிமகனாக முடியாது என்பதற்கு இவர் இப்போதைய உதாரணம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு நிரபராதி விடுதலையானமாதிரி இடும் தலையங்கமும் குதூகலிப்பதும் தாங்க முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதை நீதிபதிகளிடமே கேட் க வேண்டும் நான் நீதிபதி அல்ல நமக்கு பிடித்தவர்கள் கெட்டது செய்தாலும் நல்லவர்களாக தெரிவார்கள் நமக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் கெட்டவர்காகவே தெரியும். 

சுமத்திரன் ஐயாவும் வந்து வாதாடிப்பார்த்தார் சாட்சிகளை வரும் 8ம் திகதி முன்னிலைப்படுத்தி நிருபிக்க வேண்டும் இல்லையேல் கேஸ் தள்ளுபடி  

தீர்ப்பு வழங்கியிருப்பது நீதிபதிகள் சட்டம் படித்து குடித்தவர்களே தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்

ஆகவே இதற்குள் எந்தவொரு அரசியல் பின்ணணிகளும் எவ்வித உந்துசக்திகளும் இல்லையென அறுதியிட்டு கூறுகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் என்பவர் இனிமேல் விடுதலை ஆகமாட்டார் என வாதம் செய்தவர்களுக்கு இந்த விடுதலை சமர்ப்பணம் 

நான் பல தடவை சில திரிகளில் சொல்லி வந்தேன் ஆனால் உடன் படவில்லை விடுதலையாக மாட்டார் , ஆக்கமாட்டார்கள் எனவும் சொன்னார்கள் நம்மவர்கள் சில உன்மையான விடயங்களை சொன்னால் ஏற்பதும் இல்லை ஏற்றுக்கொள்வதும் இல்லை 

அப்படி யாரும் உங்கள் கருத்தை மறுதலித்ததாக தெரியவில்லை இருந்தாலும் நாட்டின் காட்டுச் சட்டத்தை அறியாத விடலைகள் யாரும் கூறியிருக்கலாம் அதை விடுங்கள்.

 

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சுமத்திரன் ஐயாவும் வந்து வாதாடிப்பார்த்தார்

சுமந்திரன் வாதாடியது யாருக்காக?

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

 

இது தொடர்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு தலா 1லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/154911

இனி இவர்தான் பிள்ளையானுக்கு அடுத்த நிலையில் வர இருக்கிறவர். கொலையாளி பிரசாந்தன் வெளியே (இப்போது உள்ளே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையாளியை விடுதலை செய்ய வீதியில் குதித்த மக்கள் -  Jvpnews

சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகிய... 
யோசேப் பரராஜசிங்கம் அவர்களை, தேவாலயத்தில் வைத்து... 
நத்தார் ஆராதனையில்  கலந்து கொண்டிருக்கும் போது... 
கொலை செய்த, குற்றச் சாட்டில்தான்.. பிள்ளையான் சிறைக்கு சென்றவர்.

இப்போ... அவர் பிணையில் வந்திருப்பதைப் பார்க்க,
கொலையாளி... தப்பி விடுவார் என்றே தோன்றுகின்றது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

அபாரம் தோழர்.. 👌 கத்தி , கடப்பாரை வாயில் காவி வரும்படி செய்திருந்தால் இன்னும் அருமை..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20A திருத்தச்சட்டம் நடை முறையில்: ஆரம்பித்தது தனிமனித சர்வாதிகாரம்

இலங்கை முழுவதும் வரலாறு காணாத சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் நுளைந்துகொண்டிருக்கிறது. பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பிள்ளையானைப் போன்றே போதைப் பொருள் கடத்தலில் கைதான கருணாவின் சகபாடி இனியபாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக லஞ்சம் வழங்கிய லலித் வீரதுங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

20A ஆம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி உட்பட அரச அதிகாரிகளை நியமிக்கும் உரிமை இலங்கையின் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

spacer.png

உள்துறை அமைச்சு, தொழில் நுட்பத் துறை அமைச்சு, தொழில்துறை மற்றும் திறன் மேம்படுத்தல் அமைச்சு, வர்த்தக அமைச்சு போன்றன ஒரு தனிமனிதனின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

20A திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்த மறு நாளே அதன் நடைமுறைகளை அரசு ஆரம்பித்துவிட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு என்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசு அதிகாரம் இன ஒடுக்குமுறையைப் பயன்படுத்தியே சர்வாதிகார அரச கட்டமைப்பாக மாற்றம்பெற்றது. இலங்கையில் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான முழக்கத்தை முன்வைக்காத எந்த அரசும் அரசியல் இயக்கமும் குறைந்தபட்ச சனநாயகத்தைக்கூட மீளமைக்க முடியாது என்பது மட்டுமன்றி, ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியை மிக நீண்ட காலத்திற்கு அழிக்க முடியது.

 

http://inioru.com/20a-amendment-in-operation/

Link to comment
Share on other sites

கேள்வியும் எனதே.

13 hours ago, பிழம்பு said:

சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இன்று அரசாங்கம் கூறுவது என்னவென்றால் அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை முன்வைக்கின்றனர். 

இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்கு பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.

பதிலும் எனதே.

13 hours ago, பிழம்பு said:

அரசாங்கத்தை ஆதரித்த காரணத்தினால் தான் பிள்ளையான் விடுதலையாகியுள்ளார் என்றார். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.