Jump to content

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2020 at 22:17, குமாரசாமி said:

இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎

இது மாவீரர் வாரம். அவர்களுக்கு தீபம் ஏற்றவேண்டாம், அவர்கள் ஆன்மா சாந்தியடைய அவர்கள் தியாகங்களை மதித்து ஓரிரு வார்த்தைகள் பகிரங்கமாக  பேசட்டும், அதன்பின் அபிவிருத்தியைபற்றிப் பேசுவோம். உதை காட்டி வாழ்நாளெல்லாம் மக்களை மேய்த்துக்கொண்டிருப்பார்கள். எங்கள் உரிமையை தந்தால்  எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய எங்களுக்கு தெரியும். ஒருவரும் அபிவிருத்தி பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. எங்கள் அபிவிருத்தியை கண்டு மனம் பொறுக்காமல், திட்டமிட்டு அழித்ததெல்லாம் இந்நாள்வரை  எங்களின் உடமையை,  உழைப்பை  அனுபவித்துக்கொண்டு அபிவிருத்தி பற்றிபேசுது.

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
On 26/11/2020 at 00:54, valavan said:

 

பிரதேசவாதத்தை கிளப்பி கிழக்கு மக்களை ஒன்றுபட்ட தாயக உணர்விலிருந்து  அந்நியபடுத்திவிடலாம் என்று கனவுகண்ட கருணாவே வாய்விட்டு புலம்பும் அளவிற்கு அவர்களை புறக்கணித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை தேர்வு செய்திருக்கிறது, ஆனால் அவர்கள அந்த மக்களுக்காக ஆற்றிய துயர் துடைப்புதான் என்ன?

மண்டையன்குழு என்ற பெயரில் பல படுகொலைகளையும் படுபாதக செயல்களையும் செய்து  தமிழர் தாயகத்தை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து , அசோகா ஹோட்டலில் பல போராளிகளையும் , ஆதரவாளர்களையும் அடித்தே கொன்று மலகுழியில் போட்டு மூடி மிலேச்சத்தனமான வாழ்வு வாழ்ந்த சுரேஷ் பிரேமசந்திரனை புலிகள் கூட காலத்தின் தேவை கருதி தமிழ்கூட்டமைப்புக்குள் உள்வாங்கி கிளிநொச்சியில் தலைவர் முன்னாடியே அமர செய்து பேசியதும்,

இன்று புலிகள்மீதும் தமிழர்மீதான அராஜகம்மீதும் உச்சம் தொட்ட அவரை   வடபகுதி மக்கள் மன்னித்து அவரை தமிழர் தாயக பிரதிநிதிகளில் ஒருவராய் ஏற்றுக்கொண்டதுமான நிலமை இருக்கும்போது,

சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் வறுமைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள்  பிள்ளையானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு இருக்க போகிறது?

 வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது.

இங்கே பிள்ளையானுக்கும் மண்டையனுக்கும் உள்ள வேறுபாடு அவர் வேறு இயக்கத்திலிருந்தார், ஆனால் பிள்ளையான் புலிகளுக்குள் இருந்தே போராட்டத்தை உடைத்தார்.

சுரேஷ்பிரேமசந்திரனை நாங்கள் நம்பி இருந்ததில்லை, ஆனால் பிள்ளையான்மீது ஒருகாலம் நம்பிக்கை வைத்திருந்தோம், அந்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகமே இன்றுவரை வலியாக புலம்பெயர் தமிழர் மனசில் தொடர்கிறது, அது எந்த காலமும் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகவே மனசில் இருக்கும்

அதே நேரம் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் புலிகளின் புலம்பெயர்  பிரதிநிதிகளாய் வலம்வந்த பலர் எந்த துரோகமுமே பண்ணவில்லையா என்ன?

இது துரோகத்துக்கான ஆதரவல்ல, ஆனால் எங்களாலும் அந்த மக்களுக்கு ஏதும் பண்ண முடியவில்லை, அவர்களாக ஏதும் முடிவெடுத்தால் அதையும் ஏற்றுகொள்ளும் நிலையில் இல்லையென்றால் கிழக்கு 100% இஸ்லாமியர்களின் தேசமாகவும், இஸ்லாமியர்களிடம் கையேந்தும் பிரதேசமாகவும்,கனக லட்சுமி கறுப்பு துணியை தலையில் கட்டிக்கொண்டு கலீமாவாகவும், முகுந்தன் மீசையை மழித்துவிட்டு தாடி மட்டும் வைத்துக்கொண்டு முஹமதுவாகவும் மாறபோவதைஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தயாராகவே இருக்கவேண்டும்.

 

அதற்காக பிள்ளையான் வந்து பெரிய விடிவை அந்த மக்களுக்கு தருவார் என்றில்லை அதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், ஆனால் வேறு வழி ,தலைமை ஏதும் அவர்களுக்கு இருக்கிறதா?

மண்டையன் குழுவும் ஒரு காலத்தில் அரசில் இருந்தவர்கள்தான். சுரேஷ் இந்த அரசின் மீன்பிடி அமைச்சராக இருந்த இந்திக்கு குணவர்தனவின் ஆலோசகராக செயட்படடவர். அந்த காலத்தில் இருந்த அரச அதிகாரிகளை தனது பதவியை வைத்து பயமுறுத்தி பிழையாக செயட்பட முயச்சித்ததாகவும் தகவல். ஆனால் மக்களுக்கு எந்த சேவையையும் செய்ததில்லை.

மக்கள் இனி வேறு வகையில் சிந்தித்து தங்கள் வாழவதாரத்தையும் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள தீர்மானித்துவிடடார்கள். எனவே அது பிள்ளையானாக, வியாழேந்திரனாக , கருணாவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினை இருந்தாலும் வாழ்வாதார பிரச்சினையும் முக்கியம்தான். எனவே உங்கள் கருத்தை வரவேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 04:13, தனிக்காட்டு ராஜா said:

ஆயிரக்கணக்கானவர் நேர்முகத்தேர்வுக்கு சென்று பங்கு பற்றி அழைப்புக்கு காத்திருக்கிறார்கள் நாளை இலங்கை ராணுவம் என இந்த தமிழ் ராணுவத்தினரையும் சேர்ந்து திட்டுவார்கள். 

ரணில் ஒருமுறை சொன்னது நினைவில் வருகிறது. இனிமேல் சிங்கள இராணுவம் புலிகளுடன் சண்டையிடாது. அமெரிக்க, இந்திய இராணுவமே போரிடும் என்று அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தபின் கூறினார். தன் விரலை எடுத்து தன் கண்ணையே குத்தும் தந்திரத்தில் சிங்களவனை வெல்ல யாராலும் முடியாது. எங்கள் தொழிலையும், நிலங்களையும் எங்களிடம் இருந்து பறித்து தன் திட்டத்தை நிறைவேற்றுவதோடு தன் கையையும் சுத்தமாக்கிக் கொள்வான். உங்களுக்கும் சந்தோஷம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ரணில் ஒருமுறை சொன்னது நினைவில் வருகிறது. இனிமேல் சிங்கள இராணுவம் புலிகளுடன் சண்டையிடாது. அமெரிக்க, இந்திய இராணுவமே போரிடும் என்று அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தபின் கூறினார். தன் விரலை எடுத்து தன் கண்ணையே குத்தும் தந்திரத்தில் சிங்களவனை வெல்ல யாராலும் முடியாது. எங்கள் தொழிலையும், நிலங்களையும் எங்களிடம் இருந்து பறித்து தன் திட்டத்தை நிறைவேற்றுவதோடு தன் கையையும் சுத்தமாக்கிக் கொள்வான். உங்களுக்கும் சந்தோஷம்தான்.

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பேசியதில் எதை நிறைவேற்றினான் இதுவரையில்? வரலாற்றைப் பிரட்டிப் பாருங்கள். அவன் நீதியாய் நடந்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் அழிவுகள் நிகழ்ந்திருக்காது எம்மினத்துக்கு. திட்டமிட்டு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து ஏமாற்றியது தான் வரலாறு. செல்வநாயகம், தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அவரிலேயே பாரத்தைப்போட்டுவிட்டு விலகிக்கொண்டார்.        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

இப்போதுதான் வெளியே வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

பதிவுகளிலிருந்து  புரியவில்லையா? உள்ளத்தின் நிறைவே வாய்பேசும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

குணம் குணத்தோடுதான் சேரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

 

இது பற்றி  எழுதுவதானால் பெரிய  புத்தகமாகிவிடும்

எனக்கொரு  கனவு  உண்டு

தூர நோக்கோடான பாதையது

அப்பாவித்தனம்  என உங்களுக்கு  படுமளவுக்கு  கூட  சில  பொறுப்புக்களிலிருந்தவன்  என்ற ரீதியில் இப்படியான பொறுப்பும் கனமும் வந்து  விட்டது

ஆனால் யாழில் நான்  நிற்கின்ற  நேர்கோட்டில் எவரும் நின்றதில்லை  என்கின்ற அளவுக்கு 

தலைவரை, மாவீரரை, புலிகளை, அதன் செயற்பாட்டாளர்களை தொட்டவரை தூக்கி எறிய பின்னின்றதில்லை.

இதுவும் கடந்து போகும் ரகு...

நாம் கண்டவை சந்தித்தவை குறுக்காலபோனவை  என்பதுடன்  ஒப்பிட்டால்

இதெல்லாம் வெறும்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோசேப்பிற்காக நீலிக்கண்ணீர் வடிக்கவில்லை, உண்மையாகவே கண்ணிர் வடிக்கிறோம். 

தமிழ்த்தேசியத்தை இறுதிவரை ஆதரித்து நின்றதற்காக பிரதேசவாதம் கக்கிய இனத்துரோகிகளால் கொல்லப்பட்டதற்காய் உண்மையாகவே கண்ணீர் வடிக்கிறோம்.

துரோகிகளுக்கும், பிரதேசவதப் பிசாசுகளுக்கும் வெள்ளையடிக்கப் பாடுபடும் அடிவருடிகளுக்கு அது நீலிக்கண்ணீராய்த் தெரிவது வியப்பில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

Link to comment
Share on other sites

20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்த நிறுத்த காலத்தில் அரசு பேசிய டீலை ஒத்துக் கொண்டிருந்தால் இந்த இழப்பு வந்திருக்காது ஆனால் நாம்தானே யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை நம்ம திமிர் அப்படி.  கேட்டால் வீரத்தமிழர்கள் என்று சொல்லி கொள்வது 😊😊😇

அப்பொழுது வந்த தீர்வுக்குரிய அளவுக்கு எந்த ஒரு தீர்வும் இனி கிடைக்கப்போவதில்லை. இப்போதிருக்கும் 13 மைனஸை காப்பாற்றினாலே பெரிய காரியம். கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும். இல்லாவிடடாள் இருப்பதையும் இழக்க நேரிடும்.

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

நான் நினைக்கிறேன் நிமலன் மயில்வாகனத்தை சொல்லுகிறாற்போல. இவர் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி இனரால் கொல்லப்படட ஊடகவியலார். இருந்தாலும் அக்கா வேறு யாரையும் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

தெரிஞ்சா சொல்லுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் பற்றி கவலை படுவர்களுக்கு நிமலன் செளந்தரநாயகம் பற்றி தெரியுமா?...யார், எதுக்கு கொலை செய்தார்கள் என்றாவது தெரியுமா ?....ஜோசப்பிற்காய் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் 

கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.

 

பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

 

4 hours ago, MEERA said:

கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.

 

பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

இவர் 2000 ஆண்டளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் ... கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, போட்டியிட்ட முதல் தேர்தலியே வென்றார் ...மிகுந்த ஆங்கில அறிவு கொண்டவர் ....ஆங்கில ஆசிரியராய் இருந்தவர்...உண்மையிலயே மக்களுக்காய் சேவையாற்ற கூடிய ஒருவர்.
வென்று முதல் ,முதலில் பாராளுமன்றம் போவதற்கு ஓர் ,இரு கிழமைகள் இருக்கும் முன் பேச்சு வார்த்தைக்கு புலிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் .. நாகேஸ் என்பவர் தான் இவரை கூப்பிட்டு கதைத்தவர் ...அவர் மோ.சைக்கிளில் தான் பேச்சு வார்த்தைக்கு சென்றார்...முடிந்து வரும் போது  இடையில் அவர் தனக்கு தெரிந்தவர்களோடு நின்று கதைத்திருக்கிறார்...அப்போது தனக்கு புலிகள் ஹெல்மெட்[நீலமோ,சுகப்போ நினைவில் இல்லை.] பரிசளித்தாய் சொல்லி காட்டியிருக்கிறார்...அவர் அதில் கதைத்து விட்டு கொஞ்ச தூரம் கூட போயிருக்க மாட்டார்....சுட்டுத் தள்ளப்பட்டார்....ஹெல்மேட்  புலிகள் கொடுத்தது இலகுவார் அவரை போட்டுத் தள்ள...சுட்ட புலி பெடியன்கள் யாரென்று கூட அந்த சந்தியில் நின்றவர்கள் பாத்து இருக்கிறார்கள் . 
 நாகேஷ் அவர் நேரடியாய் புலிகளது புலனாய்வு கடடமைப்போடு செயற்படுபவர்...விசுகு என்பவர் கட்டளையின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்படாராம் ...தமக்கு வேண்டிய ஒரு புலி உறுப்பினரை அவரது வாகனத்தில் கொழும்பிற்கு கூட்டி செல்லும் படி கேட்கப்பட்டு மறுக்க பட்ட்தாலே அவர் கொல்லப்பட்டார் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்ட்து ...இந்த கொலையில் புலிகளோடு சேர்த்து திட்டம் தீட்டியது  முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர் ...அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
கருணா  அத காலப் பகுதியில் வன்னியில் இருந்தார்...இதில் அவரது பங்கு இருந்ததா/ இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது [இவருடைய பங்கு இந்த கொலையில்  இல்லை என்று தான் சொல்கிறார்கள்.] ...அவர் சொல்லி தான் இவரை போட்டு தள்ளி இருந்தாலும் , அந்த நேரத்தில் கருணாவிற்கு யார் தலைவர்?

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் புலிகள் , மக்களுக்கு சேவை செய்யக் கூடிய எத்தகைய ஆளுமைகளை போட்டு தள்ளியதை மறந்து விடுகின்றனர் ... எனக்கு தேவை என்றால் ரத்தம் ,உனக்கு தேவை என்றால் தக்காளி என்ட நிலை தான் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக.

 

பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

மீரா , கொழும்பிற்கு குண்டு வைப்பதற்கு ஒருவரை கூட்டி செல்ல வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை ...அது புலனாய்வோடு சம்மந்தப்பட்ட விடயம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

இவர் 2000 ஆண்டளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் ... கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, போட்டியிட்ட முதல் தேர்தலியே வென்றார் ...மிகுந்த ஆங்கில அறிவு கொண்டவர் ....ஆங்கில ஆசிரியராய் இருந்தவர்...உண்மையிலயே மக்களுக்காய் சேவையாற்ற கூடிய ஒருவர்.
வென்று முதல் ,முதலில் பாராளுமன்றம் போவதற்கு ஓர் ,இரு கிழமைகள் இருக்கும் முன் பேச்சு வார்த்தைக்கு புலிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் .. நாகேஸ் என்பவர் தான் இவரை கூப்பிட்டு கதைத்தவர் ...அவர் மோ.சைக்கிளில் தான் பேச்சு வார்த்தைக்கு சென்றார்...முடிந்து வரும் போது  இடையில் அவர் தனக்கு தெரிந்தவர்களோடு நின்று கதைத்திருக்கிறார்...அப்போது தனக்கு புலிகள் ஹெல்மெட்[நீலமோ,சுகப்போ நினைவில் இல்லை.] பரிசளித்தாய் சொல்லி காட்டியிருக்கிறார்...அவர் அதில் கதைத்து விட்டு கொஞ்ச தூரம் கூட போயிருக்க மாட்டார்....சுட்டுத் தள்ளப்பட்டார்....ஹெல்மேட்  புலிகள் கொடுத்தது இலகுவார் அவரை போட்டுத் தள்ள...சுட்ட புலி பெடியன்கள் யாரென்று கூட அந்த சந்தியில் நின்றவர்கள் பாத்து இருக்கிறார்கள் . 
 நாகேஷ் அவர் நேரடியாய் புலிகளது புலனாய்வு கடடமைப்போடு செயற்படுபவர்...விசுகு என்பவர் கட்டளையின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்படாராம் ...தமக்கு வேண்டிய ஒரு புலி உறுப்பினரை அவரது வாகனத்தில் கொழும்பிற்கு கூட்டி செல்லும் படி கேட்கப்பட்டு மறுக்க பட்ட்தாலே அவர் கொல்லப்பட்டார் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்ட்து ...இந்த கொலையில் புலிகளோடு சேர்த்து திட்டம் தீட்டியது  முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர் ...அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
கருணா  அத காலப் பகுதியில் வன்னியில் இருந்தார்...இதில் அவரது பங்கு இருந்ததா/ இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது [இவருடைய பங்கு இந்த கொலையில்  இல்லை என்று தான் சொல்கிறார்கள்.] ...அவர் சொல்லி தான் இவரை போட்டு தள்ளி இருந்தாலும் , அந்த நேரத்தில் கருணாவிற்கு யார் தலைவர்?

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் புலிகள் , மக்களுக்கு சேவை செய்யக் கூடிய எத்தகைய ஆளுமைகளை போட்டு தள்ளியதை மறந்து விடுகின்றனர் ... எனக்கு தேவை என்றால் ரத்தம் ,உனக்கு தேவை என்றால் தக்காளி என்ட நிலை தான் 


 

நிமலன் உடன் இன்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்?

40 minutes ago, ரதி said:

மீரா , கொழும்பிற்கு குண்டு வைப்பதற்கு ஒருவரை கூட்டி செல்ல வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை ...அது புலனாய்வோடு சம்மந்தப்பட்ட விடயம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை 

கிழக்கினூடாக குறிப்பாக மட்டுவினூடாகவே பலர் தென்பகுதிக்கு சென்றனர்.. மட்டு அம்பாறை 100% கும்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது, அதனாலேயே பல முரண்பாடுகள் ஏற்பட்டது. அங்கு நின்று செயற்பட்டவர்களுக்கு தெரியும்

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

 

இவர் 2000 ஆண்டளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் ... கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, போட்டியிட்ட முதல் தேர்தலியே வென்றார் ...மிகுந்த ஆங்கில அறிவு கொண்டவர் ....ஆங்கில ஆசிரியராய் இருந்தவர்...உண்மையிலயே மக்களுக்காய் சேவையாற்ற கூடிய ஒருவர்.
வென்று முதல் ,முதலில் பாராளுமன்றம் போவதற்கு ஓர் ,இரு கிழமைகள் இருக்கும் முன் பேச்சு வார்த்தைக்கு புலிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் .. நாகேஸ் என்பவர் தான் இவரை கூப்பிட்டு கதைத்தவர் ...அவர் மோ.சைக்கிளில் தான் பேச்சு வார்த்தைக்கு சென்றார்...முடிந்து வரும் போது  இடையில் அவர் தனக்கு தெரிந்தவர்களோடு நின்று கதைத்திருக்கிறார்...அப்போது தனக்கு புலிகள் ஹெல்மெட்[நீலமோ,சுகப்போ நினைவில் இல்லை.] பரிசளித்தாய் சொல்லி காட்டியிருக்கிறார்...அவர் அதில் கதைத்து விட்டு கொஞ்ச தூரம் கூட போயிருக்க மாட்டார்....சுட்டுத் தள்ளப்பட்டார்....ஹெல்மேட்  புலிகள் கொடுத்தது இலகுவார் அவரை போட்டுத் தள்ள...சுட்ட புலி பெடியன்கள் யாரென்று கூட அந்த சந்தியில் நின்றவர்கள் பாத்து இருக்கிறார்கள் . 
 நாகேஷ் அவர் நேரடியாய் புலிகளது புலனாய்வு கடடமைப்போடு செயற்படுபவர்...விசுகு என்பவர் கட்டளையின் கீழ் அவர் சுட்டுக் கொல்லப்படாராம் ...தமக்கு வேண்டிய ஒரு புலி உறுப்பினரை அவரது வாகனத்தில் கொழும்பிற்கு கூட்டி செல்லும் படி கேட்கப்பட்டு மறுக்க பட்ட்தாலே அவர் கொல்லப்பட்டார் என்று அந்த நேரத்தில் கதை அடிபட்ட்து ...இந்த கொலையில் புலிகளோடு சேர்த்து திட்டம் தீட்டியது  முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர் ...அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.
கருணா  அத காலப் பகுதியில் வன்னியில் இருந்தார்...இதில் அவரது பங்கு இருந்ததா/ இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது [இவருடைய பங்கு இந்த கொலையில்  இல்லை என்று தான் சொல்கிறார்கள்.] ...அவர் சொல்லி தான் இவரை போட்டு தள்ளி இருந்தாலும் , அந்த நேரத்தில் கருணாவிற்கு யார் தலைவர்?

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் புலிகள் , மக்களுக்கு சேவை செய்யக் கூடிய எத்தகைய ஆளுமைகளை போட்டு தள்ளியதை மறந்து விடுகின்றனர் ... எனக்கு தேவை என்றால் ரத்தம் ,உனக்கு தேவை என்றால் தக்காளி என்ட நிலை தான் 


 

தகவலுக்கு நன்றி ரதி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

அங்கிருக்கும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஜோசப்பிற்காய் கண்ணீர் வடிக்கும் சிலர் 
 

அவர் 2004 ஆம்  ஆண்டில் நடந்த தேர்தலில் மட்டும்தான் தேசியப்பட்டியலில் சென்றார் அதற்கு முன்பெல்லாம் தெரிவுசெய்யப்பட்டே சென்றார்! வரலாற்றை உங்களுக்கேற்றவாறு மாற்றமுடியாது ரதி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 14:30, விசுகு said:

நீங்களுமா???

வரலாற்றுடன் பயணித்தவர்  என்று  நினைத்திருந்தேன்  இதுவரை????

வரலாறு சில சந்தர்ப்பங்களை தரும் விட்டால் பிடித்துக்கொள்ள முடியாது 

சில சமயம் வீரத்தை விட விவேகம் வெற்றியை தரும்

ஒன்றும் உதவாத மாவிலாறு பிடிப்பு இன்று நம்மை இந்த நிலையில் வைத்திருக்கு

On 27/11/2020 at 14:39, satan said:

பதிவுகளிலிருந்து  புரியவில்லையா? உள்ளத்தின் நிறைவே வாய்பேசும்.

அநேகமாக உங்கள் கதைகளை பார்க்கும் போது அடுத்த கட்ட ஈழப் போர் ஆரம்பித்து அடிக்க இருக்கிற ஆட்கள் போல இருக்கிறது என்று 😊😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 14:50, ரஞ்சித் said:

அண்ணை, 

2004ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இனத்துரோகி கருணா தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து சில நாட்களின் பின்பு பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்தவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருந்த அனைத்து கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் கொக்கட்டிச் சோலைக்கு அழைத்திருந்தான். அங்கே அவன் கூறிய ஒரே விடயம், "நீங்கள் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேச முடியும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் ஒவ்வொருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வேலை செய்யவேண்டும், எவராவது வன்னித்தலைக்கு ஆதரவாகப் பேசினால் கொல்லப்படுவீர்கள்" என்று வெளிப்படையாகக் கட்டளையிட்டிருந்தான். அங்கிருந்த உறுப்பினர்களில் அமரர் யோசேப் பரராஜசிங்கத்தைத் தவிர அனைவரும் கருணாவின் கட்டளைக்கு ஒத்துக்கொள்ள, பரராஜசிங்கம் மட்டும் தமிழ்த் தேசியத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இறுதியில் அவரை ஆலய வழிபாட்டில் வைத்து இனத்துரோகி கருணாவின் அடியாள் பிள்ளையான் அருகிலிருந்து சுட்டுக் கொன்றான்.

அன்று இனத்துரோகிகள் பேசிய அதே வார்த்தைகளும், கூக்குரல்களும் இப்போதும் ஒலிக்கின்றன. "கிழக்கு மாகாண அபிவிருத்தி, சலுகைகள், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பது". இவற்றை இன்று சொல்வது யாரென்று பார்த்தால் உங்களுக்கு அவர்கள் யாரென்பதும், அவர்களின் பின்புலம் எதுவென்பதும் விளங்கும். ஒரு இனத்துரோகியை, எமது விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, அதனை அழிக்கத் துணை போன கயவர்களை இத்தளத்தில் வெளிப்படையாகவே ஒருவரால் வாழ்த்த  முடிகிறதென்றால், இவர்கள் யாரென்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.

அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே அண்ணை? திருந்துங்கோ, சொல்லவருவதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லுங்கோ. ஒரு துரோகியை வெளிப்படையாக வாழ்த்தி, ஆதரித்துப் பேச சிலருக்கு தைரியம் இருக்கும்போது, எமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல நீங்கள் இன்னும் தயங்குவதேன்?

மிக்க மகிழ்ச்சி 

பரராஜசிங்கம் ஐயாவை சுடும்போது பக்கத்தில் இருந்து பார்த்தமாதிரியே பீலா விடுவதா ரகுநாதன் 😊

அடுத்தவனை துரோகியாக்கி பார்த்து பழகிவிட்டது நீங்கள் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் எனக்கென்ன எனது கருத்தைநேர்பட பேசுகிறேன். உங்களுக்கு நான் தேசிய வாதி,தேசதுரோகி என்று நிருபிக்க அவசியமும் இல்லை 😊🙃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.