Jump to content

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே…

I-Remember-that-Day-in-My-Heart.jpg

1981ம் ஆண்டு பங்குனி மாசக் கடைசியில் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிப் பணப்பறிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் எப்படியும் அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் அலைந்து கொண்டிருந்தார்கள்.

இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து தங்கத்துரை, குட்டிமணி, தேவன் என்கின்ற மூவர் இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் ( அப்போது நாங்களும் அவர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த காலம்). தமிழகத்திற்குச் செல்வதற்காக படகேறச் சென்ற சமயம், வல்லிபுரக் கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள கடற்கரைப் பகுதியில், கள்ளக் கடத்தல் இடம் பெறுவதாகக் கிடைத்த தகவலினைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு தரை வழியாக வந்த வாகனங்களில் வந்திறங்கிய கடற்படையினர் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது அவர்கள் யாரென சி.ஐ.டி. பொலிசாருக்குத் தெரியாது. பின் பருத்தித்துறைக் காவல் நிலையத்தில் குட்டிமணி அடையாளம் காணப்பட்டதினைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயங்கர சித்திரவதைகளைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து சில தகவல்களை சி.ஐ.டியினர் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டனர். ஆனையிறவு தடைமுகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களோடு தொடர்புடையவர்களை அடையாளம் காண்பிப்பதற்காக பலத்த பாதுகாவல்களோடு குடாநாட்டின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருக்குத் தெரிந்த மறைவிடங்கள் பல மாற்றப்பட்டன. தொடர்புடையவர்கள் பலர் தலை மறைவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள்; சித்திரவதைக்குள்ளானார்கள். தொடர்புடையவர்களின் குடும்பத்தவர்கள் பலரும் கூட கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது.

சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் பகல் வேளைகளில் மாத்திரமன்றி நள்ளிரவு வேளைகளிலும் கூட எம்மவர்களைத் தேடி வேட்டை நாய்களாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

எங்கள் தலைவரின் தீர்க்கதரிசனமான நடவடிக்கைகள் தான் அன்றிலிருந்து இன்றுவரை, எப்பொழுதுமே எமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றது. தலைவரிடம் இருக்கும், பின்னுக்கு நடக்கப்போகின்றவற்றை அப்படியே அச்சொட்டாக முன் கூட்டியே சொல்லிவிடும் ஆற்றல், திறமை, அதற்கேற்ற முறையில் உடனுக்குடன் மேற்கொள்கின்ற பாதுகாப்பு நடவடிக்கைகள், இவைகள்தாம் பல சந்தர்ப்பங்களில் எம்மில் பலரைக் காப்பாற்றியிருக்கின்றது.

தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரது கைது நடவடிக்கைகளும், சித்திரவதைகள், தேடுதல் சம்பவங்களும் இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் “அண்ணா நீங்கள் என்ன செய்வியளோ தெரியாது. உடனே வீட்டை மாற்றுங்கோ. அடுத்து உங்களிட்டைப் பாய்வான்கள்” என்று தலைவர் என்னை எச்சரித்தார்.

ஒரு சனிக்கிழமை நாங்கள் (நான், மனைவி, குழந்தைகள் நால்வர்) வீடு மாறுறம். அடுத்த செவ்வாய்க்கிழமை (29.04.1981) நள்ளிரவில் நாங்கள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு என்னைக் கைது செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வங்கிப் பணம்பறிப்பு நடவடிக்கையோடு சம்பந்தப்பட்ட தங்கத்துரை ஆகியோருக்கு நேரடியாக அடையாளம் தெரிந்தவர்கள் இங்கிருந்தால் அனைவருமே கைதுசெய்யப்பட்டு விடுவோம் என்பதனாலும், ஒரு சில உறுப்பினர்களோடு இயங்கி வந்த இயக்கம் வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கிலும் எம்மில் சிலர் தமிழகம் சென்று சில காலங்களுக்கு அங்கு தங்கியிருப்பது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படி நானும் தமிழகம் போய்ச் சேர்ந்தபோதுதான் சங்கரை அங்கு சந்தித்தேன்.

சென்னையின் புறநகர்ப்பகுதி ஒன்றில் நாங்கள் வீடொன்றை வாடகைக்கு பெற்று அங்கு தங்கியிருந்தோம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை சங்கர் மற்றும் சிலரோடு ஒன்றாக வாழ்கின்ற பேறு எனக்குக் கிட்டியது.

சங்கரைப் பற்றிச் சொல்வதென்றால்……நல்ல கம்பீரமான தோற்றம். சுறுசுறுப்பான நடவடிக்கைகள், தலைவர் மீது அளவு கடந்த விசுவாசம், அதிகம் பேசமாட்டான், இனிப்பு என்றால் கொள்ளை ஆசை.

அந்த நாட்களிலை எங்கட கைச்செலவுக்கு என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் பத்து ரூபா தரப்படும். அந்தக் காசிலைதான் நாங்கள் எங்கள் தனிப்பட்ட செலவுகளைச் செய்துகொள்வோம். சங்கருக்கு வழங்கப்படும் அந்தப் பத்து ரூபாயிலை அவன் தனக்கென தனியாக எதுவும் செலவு செய்யமாட்டான். பால் கோவா, மைசூர் பாகு உட்பட இனிப்புப் பண்டங்களை வாங்கி வருவான். எங்கள் எல்லோருக்கும் தருவான். நாங்கள் எல்லோரும் சந்தோசமாக சாப்பிடுவோம்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குக் கிட்ட மலையடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் சில பிரிவினர் தினமும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி எடுப்பார்கள். எங்களையும் அழைத்துக்கொண்டு சென்று அவற்றை ஆர்வத்தோடு அவதானிப்பான்.

நான் தமிழகம் போய்ச் சேர்ந்தது 1981 ஆனி 7ஆம் திகதி. ஆவணி மாதக் கடைசிவரை அவர்களுடனேயே தங்கியிருந்தேன் .

சிங்களப் பொலிசாரின் கெடுபிடிகளினால் தொடர்ந்தும் நாட்டிலே தங்கியிருக்க முடியாத சூழ்நிலையினால் எனது வீட்டுக்காரரையும் தம்பிமார் தமிழகத்திற்குக் கூட்டி வந்தனர். அதன் பிறகு எங்கள் குடும்பம் பாண்டிச்சேரியிலை தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனது மனைவி பிள்ளைகளோடு அங்கு தங்கியிருந்த வண்ணம் தேவைகளின் பொருட்டு எம்மவர்கள் தங்கியிருந்த இடங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து வருவேன்.
1982 கார்த்திகை 26ம் திகதி……..

அப்போது தலைவர் மதுரையில் இருந்தார். வைகாசி 82இல் சென்னை பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரனுடனான சூட்டுச் சம்பவத்தினைத் தொடர்ந்து சிலகாலம் சென்னை மத்திய சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர் அவர்கள் நிபந்தனையோடு கூடிய பிணையில் விடுதலை செய்யப்பட்டு மதுரையில் தமிழ்நாடு காவல்துறையினரின் கண்காணிப்பில் ‘லாட்ஜ்’ ஒன்றில் தங்கியிருந்தார்.

அன்று தலைவரின் பிறந்தநாள் என்பதற்காக தலைவரைச் சந்திப்பதன் பொருட்டு பாண்டிச்சேரியிலிருந்த எனது கடைசி மகள் தமிழினியையும்( அப்பொழுது அவள் இரண்டு வயதுக் குழந்தை) அழைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றிருந்தேன்.

தலைவர் தங்கியிருந்த அந்த அறைக்குள் நான் சென்றபோது அங்கு ஒரே நிசப்தமாயிருந்தது. வழக்கமாக தலைவர் இருக்குமிடம் எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும். ஆனால் அன்று அமைதி குடிகொண்டிருந்தது. பல நிமிடங்கள் வரை யாரும் எதுவுமே பேசவில்லை.

அமைதித் திரையை விலக்கிக் கொண்டு “அண்ணா, சங்கர் சூடுபட்டு கொண்டுவந்திருக்கினம். அங்கை கரையிலையும் பிரச்சனையாம். கொண்டுவரப் பிந்திட்டினம். பிழைக்க வைக்கிறது கஷ்டம் போல இருக்கு. நீங்கள் தமிழைக் கொண்டுபோய் வீட்டை விட்டுவிட்டு உடனே திரும்பி வாருங்கோ……”என்றார்.

“ஏதும் நடக்கக்கூடாதது நடந்ததெண்டால் நீங்கள்தான் பொறுப்பேற்று எல்லாம் செய்து முடிக்கவேணும். நீங்கள்தான் ‘றிஸ்க்’ எடுக்கவேணும். நீங்கள் குடும்பமா இருக்கிறபடியா பிரச்சனையள் வராது……” என அவர் தொடர்ந்தார்.

நான் உடனேயே அவ்விடத்தை விட்டு அகன்றேன். மதுரையிலிருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக பாண்டிச்சேரிக்குப் போய் தமிழினியை விட்டுவிட்டு மீண்டும் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தபோது மறுநாள் பொழுதுபட்டுவிட்டது.

அங்கு எல்லோருமே சோகமயமாக வீற்றிருந்தார்கள். அவர்கள் உட்காந்திருந்த அந்தக் கோலம் எனக்கு நிலைமையைத் தெளிவுபடுத்தியது.

எதற்குமே கலங்காத எமது தலைவரின் கண்களும் சிவந்து போயிருந்தன.

எமது இயக்கத்தைப் பொறுத்த வரையில் சாவுகள் எமக்கு இப்போது பழக்கப்பட்டுவிட்டன. கொத்துக் கொத்தாக எமது வீரர்களை, வீராங்கனைகளை நாம் இழந்துவிடுகின்ற சந்தற்பங்களிற்கூட, எமது நெஞ்சங்களில் சோகவெள்ளம் ததும்பி வழிந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்களாக “இவர்கள் மனம் என்ன கருங்கல்லா……?” என மற்றவர்கள் சிந்திக்கின்ற அளவுக்கு நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றோம்.

ஆனால், அன்றைய அந்த நிகழ்வை, சங்கரின் இழப்பை அப்பொழுது எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

திருநெல்வேலிப் பகுதியில் காயப்பட்ட அவனுக்கு இங்கேயே வைத்தியவசதி கிடைத்திருந்தால் சங்கரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

இயக்கங்களோடு தொடர்புடையவன் என ஒருவன்மீது ஒரு சிறு சந்தேகம் வந்தாலும் உற்றார், உறவினர், உயிர் நண்பர்கள் கூட எம்மை விட்டு ஓடி ஒழிந்த காலமது! பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு உட்பட்ட ஒருவனுக்கு வைத்தியம் செய்ய யார் அப்பொழுது இங்கு முன்வந்திருப்பார்கள்……?

தமிழகத்திலும் அப்பொழுது அதேநிலைதான். இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கள்ளக்கடத்தல்காரர்கள் எனவும், கள்ளத்தோணிகள் எனவும் கைது செய்து சிறையில் போட்டுவிடுவார்கள். அப்படி இருக்கும்போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு இளைஞன், அதுவும் துப்பாக்கிச் சூட்டினால் காயப்பட்டவன் என்றால் யார்தான் உதவி செய்ய முன்வந்திருப்பார்கள்…….?

அங்கும் நாங்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத காலம் அது. 1983ஆம் ஆண்டு ஆடிக்கலவரத்திற்குப் பின்தான் அங்கு நாங்களும் ‘அகதிகள்’ என்ற பெயரிலோ, ‘புலிகள்’ என்ற பெயரிலோ நடமாட முடிந்தது.

காயப்பட்ட சங்கரை தமிழகத்திற்கு கொண்டு வந்தவருக்கு தமிழ்நாடு புதுசு. அவர் கோடிக்கரையில் சங்கரை தங்கவைத்துவிட்டு மதுரைக்கு வந்து தகவல் சொல்லி, மதுரையில் இருந்து எம்மவர்கள் வாகனம் கொண்டு சென்று சங்கரை எடுத்துவந்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரகசியமாக அனுமதிக்க முடிந்தது.

வைத்தியவசதிகள் நேரகாலத்திற்குக் கிடைக்காத காரணத்தினால் சங்கரை எம்மால் காப்பாற்ற முடியாது போய்விட்டது. சங்கரினது உயிரைத்தான் எம்மால் காப்பாற்ற முடியவில்லை. அவனது உடலைத் தன்னும் பூரண மரியாதைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்வதற்குக் கூட இயலாதநிலை.

சங்கரை, தமிழ்நாட்டின் திருநெல்வேலிப்பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதிவசதி இல்லையெனவும் கூறி, மரணச்சான்றிதழ் ஒன்றினைப் பெற்று, நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒருவரது அனாதைப் பிணம் போல, அந்தத் தனியார் மருத்துவமனையிலிருந்து பொது வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்று மதுரையிலுள்ள ஒரு சுடுகாட்டில், பொன்னம்மான், பேபி(இளங்குமரன்), கிட்டு, அப்பையா அண்ணர், கட்சித் தொண்டர்கள் சிலரோடு நெடுமாறன் ஆகியோரோடு நானும் ஒருவனாகச் சென்று தகனம் செய்தோம்.

அப்பையா அண்ணர் அவர்களே சங்கரது உடலுக்குத் தீ மூட்டினார்கள். சங்கரின் அஸ்தி சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மறுவருடம்தான் சங்கரது மரணச்செய்தியும் அவனது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு அஸ்தியும் கையளிக்கப்பட்டது.

சாதாரணமாக உலகில் யாராக இருந்தாலும் சரி, எங்கள் உடலில் எங்கேயோ ஒரு இடத்தில் காயம் பட்டுவிட்டது என்றால் கூட நாங்கள் “ஐயோ அம்மா”என்றுதான் குழறுவோம். ஆனால் சங்கரது உடலைவிட்டு உயிர் பிரிகின்ற அந்த இறுதி நேரத்திலும் கூட, அவனால் எதையுமே புரிந்துகொள்ளமுடியாத அந்த மயக்க நிலையிலும் கூட “தம்பி தம்பி” என்ற வார்த்தைகள்தான் அவனது வாயிலிருந்து வெளிவந்தன(தலைவரை நாம் அப்போது தம்பி என்றுதான் அழைப்போம்).

எமது வீரர்கள் இரத்தம் சிந்தும் போது எமது இதயம் வருந்துகின்றது. எனினும் நாங்கள் உறுதி தளரமாட்டோம். ஏனெனில் இரத்தம் சிந்தாமல் நாம் சுதந்திரம் பெறமுடியாது.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

ஒவ்வொரு போராளியும் எங்கள் தலைவர்மீது எந்த அளவுக்குப் பற்றையும் பாசத்தையும் வைத்திருக்கின்றார்கள்; நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

ஒவ்வொரு போராளிமீதும் தலைவர் எந்த அளவிற்கு அன்போடும்,ஆதரவோடும் இருக்கின்றார்; அவர்களது வீரத்தைப் போற்றுகின்றார்; அவர்களது தற்கொடைகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் தருகின்றார் என்பதற்கு ‘மாவீரர் நாள்’ ஒரு சான்றாகும்.

எமது இயக்கத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சங்கர் (சத்தியநாதன்) மரணித்த அந்த நாளை, கார்த்திகை 27ம் நாளை மாவீரர்களை நினைவு கொள்கின்ற நாளாக, ‘மாவீரர் நாளாகப்’ பிரகடனம் செய்து 1989இல் இருந்து ஆண்டுதோறும் விழா எடுத்துவருகின்றோம்.

நினைவுப்பகிர்வு: ஆ.தேவர் அண்ணா.
நன்றி – எரிமலை இதழ் (கார்த்திகை, 1993).

 

https://thesakkatru.com/i-remember-that-day-in-my-heart/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.