Jump to content

கோயில்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்கள்

Maaveerar-Thuyilum-Illam-3.jpg

கோயில்கள்

மேசை மணிக்கூட்டின் அலாரம் பயங்கரமாக அலறியது. யோகன் திடுக்கிட்டு கண் விழித்தான். அவனுக்கு அதை அடித்து உதைக்க வேணும் போல் இருந்தது. ‘நான் முறுக்கி விட்டாலும் நீயேன் அடிப்பான்’ என்பது போல் அதனைப் பார்த்தான். மறுகணம் அவனுக்கு தன்னை நினைக்க சிரிப்புத்தான் வந்தது. நேரம் ஆறு மணியாகிவிட்டது. எழுந்து வெளியே வந்தான். வாசலில் அவனது தங்கை பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவளிட்டை இருந்து பேப்பரைப் பறிக்க வேணும், இது மூதேசி எடுத்தது எண்டால் இண்டு முழுக்க வைச்சு வாசிக்கும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனின் மனதில் திட்டம் உடனடியாகத் தயாரானது.

“வாணி இஞ்சை பேப்பரைக் கொண்டு வா, ஓ.எல் சோதனைக்கு இரண்டு கிழமை கிடக்கு. விடிய எழும்பி பேப்பர் பார்க்கிறா… ஒடு போய்ப்படி…’ அவள் முணுமுணுத்தபடி உள்ளே செல்வதை இரசித்தபடி பேப்பரை எடுத்தான். அன்று மாவீரன் வாரத்தின் கடைசிநாள். பல கவிதைகள், படங்கள் பிரசுரமாகியிருந்தன. உள்ளே இருந்த தாளை எடுத்தான். அது… அவனது நண்பன் ரவியின் படம். நெடிய வருடங்கள் ஓடிவிட்டன. யோகனின் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.

அது அந்தத் தவணையின் கடைசி நாள். அவர்களது விடுதிப் பாசையில் அதை ‘லாஸ்ற் டே’ என்று சொல்லுவார்கள். அந்த இரவு அவர்களைப் பொறுத்தவரை ஒரு சுதந்திரமான இரவு. விடுதியின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக அன்றைய தினம் பற்பசையால் மீசை வைத்தல், கட்டிலுக்குப் பொறி வைத்தல், மை ஒற்றுதல் போன்ற ‘திருகுதாளங்களில்’ ஈடுபட மாணவர்கள் திரைமறைவில் அனுமதிக்கப்படுவார்கள். பொதுவாக அன்றைய சம்பவங்கள் பற்றி எந்த மாணவனும் விடுதிச்சாலை பொறுப்பாசிரியரிடம் முறைப்பாடு செய்வதில்லை. அப்படியான ஒரு இரவில் தான் ரவியும் யோகனும் தம்மை விட ஒரு வகுப்புக் குறைந்த பத்தாம் ஆண்டு மாணவர்களுக்கு மீசை வைப்பதற்கு திட்டமிட்டார்கள். திட்டத்தின் சூத்திரதாரி ரவி. திட்டத்துக்கான காரணம் ஒரு கிறிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ‘கொழுவல்’. ‘மச்சான் யோகன், உவைக்குச் சரியான லெவலடா, இண்டைக்குப்பார் என்ன செய்யிறனெண்டு’ இது ரவி. ‘என்ன செய்யப் போறாய்.’ ‘இரவைக்கு எல்லாருக்கும் மீசை வைக்கப்போறன்இ அதுவும்… பற்பசையாலை… நரைச்ச மீசை எப்படி ஐடியா?’

‘ஐடியா நல்லம் தான், எங்கட வகுப்புப் பெடியள் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்தால் என்ன?’

‘யோகன் அது பேய் வேலையாய்ப் போயிடும் மச்சான், இரண்டு பேர் காணும். நீ வாறியோ?’ என்று ரவி கேட்டதும் யோகன் உடனடியாக ஒப்புக்கொண்டு விட்டான். திட்டம் செயல்படுத்தப்படவேண்டிய இரவும் வந்தது. அவர்களும் விழிப்பாகத் தான் இருந்தார்கள்.

‘என்னடா செய்யிறது… அவங்கள் முழிச்சுக் கொண்டிருக்கிறாங்கள்? ‘என்ரை’ கசியோவில அலாரம் வைச்சிட்டு அதை காதுக்கருகில் வைச்சுக்கொண்டு கிடக்கப்போறன், விடிய 2:00 மணிக்கு அலாரம் அடிக்கும். அப்ப உவங்கள் படுத்திடுவாங்கள்’

ரவியின் திட்டமிடல்படி இருவரும் படுத்து விட்டார்கள். சரியாய் காலை 2:00 மணிக்கு ரவி யோகனை எழுப்பி விட்டான். இருவரும் எழுந்து பார்த்தனர். பத்தாம் ஆண்டு மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். பாவம் எவ்வளவு நேரம் தான் அவர்கள் விழித்திருப்பது?

‘யோகன் இந்தா பற்பசை. போய் மெயின் சுவிச்சை நிப்பாட்டிப்போட்டு வா’

‘மெயின் சுவிச்’ நிப்பாட்டப்பட்டதும், ‘மீசை வைத்தல்’ ஆரம்பமானது. திடீரென… ‘டேய் மீசை வைக்கிறாங்களடா எழும்புங்கோடா லைற்றைப் போடுங்கோ’ அது பத்தாம் ஆண்டு சுரேசின் அலறல். தொடர்ந்து தடபுட சத்தங்கள், ‘மெயினை ஓப் பண்ணிப் போட்டாங்கள்’ என்ற குரல்கள். யோகன் திகைத்துப் போய் விட்டான். பிடிபட்டால் எல்லோரும் சேர்ந்து துவைச்செடுத்துப் போடுவாங்கள்.

போடிங் மாஸ்ரரிடமும் முறையிட முடியாது. யோகன் கால் போன போக்கில் ஓடத்தொடங்கினான். பின்னால் பலர் கலைத்தனர். ஓடிப்போய் குளியலறைக்குள் புகுந்ததும் சரமாரியாக கல்வீச்சுக்கள் நடந்தன. இறுதியில் சரணடைய வேண்டி வந்துவிட்டது. ‘அண்ணைப்பிள்ளை வசமாக மாட்டியிட்டார்’ இது வாகீசனின் ஏளனக்குரல். ‘ஐயாவுக்கு இண்டைக்கு சாணித்தண்ணி அபிஷேகம் செய்ய வேணும்’ இது காந்தன். காந்தன் தான் பத்தாம் ஆண்டு மாணவர்களின் முடிசூடா மன்னன். இவனால் எதுவும் பேச முடியவில்லை. அபிஷேகம் நடக்கத்தான் போகிறது என்ற நிலையில் அபிஷேகத் திரவியங்கள் எல்லாம் தயாராகிவிட்ட நிலையில்…

‘டேய், விடியப்புறத்திலை மனிசரை நித்திரை கொள்ள விடமாட்டியள் போல கிடக்கு. என்னடா சத்தம்?’ அதட்டியபடி பதினோராம் ஆண்டு மாணவர்கள் புடைசூழ ரவி வந்து கொண்டிருந்தான்.

‘இவர் எங்களுக்கு மீசை வைச்சவர்’ வாகீசனின் குரல் ஈனஸ்வரமாக ஒலித்தது.

பலத்த வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இறுதியிலி ரவி சொன்னான்,

“அவன் மீசை வைச்சால், நீங்களும் மீசை வையுங்கோ. அதைவிட வேறை ஏதாவது செய்தால் பிரச்சினை வரும்”

வேறு வழியின்றி யோகனுக்கு மீசை வைப்பதுடன் சடங்கு பூர்த்தியாகிவிட்டது. எல்லாம் முடிந்ததும் யோகன் ரவியிடம் மெதுவாகக் கேட்டான்,

‘நீ என்னெண்டடா தப்பினனீ?’ ‘அவங்கள் எழும்பினதும் நான் பக்கத்தில கிடந்த வெறும் கட்டில் ஒன்றில் நித்திரை போலக் கிடந்திட்டன்’

யோகன் அவனை அதிசயமாகப் பார்த்தான்.

Maaveerar-Thuyilum-Illam-1.jpg

‘ரவி இயக்கத்துக்கு போட்டானாம்’ இரண்டாம் தவணைக்காக பெட்டி படுக்கைகளுடன் விடுதிக்கு வந்தவனின், காதில் விழுந்த முதல் செய்தி இது தான்.

‘எந்த இயக்கம்?’ ‘ரைகேஸ்’ ‘சீ… எனக்குக் கூடச் சொல்லாமல் போட்டான்’ என்று யோகன் சொல்லிக் கொண்டான். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மாலை ரவி விடுதிக்கு வந்திருந்தான். சற்றுக் கறுத்து, மெலிந்து, முழங்கைகளில் உரசல் காயங்களுடன் அவனைப் பார்க்க யோகனுக்குப் புதுமையாக இருந்தது. கதையோடு கதையாகக் கேட்டான்,

‘என்ரா நீ எனக்குச் சொல்லாமல் போனனீ?’

‘உனக்குச் சொல்லுறதென்றால் கடிதம் போடவேணும். இதைப்பற்றி எழுதுகிற கடிதம் ஆமியிட்டை அகப்பட்டால், அதுவும் உங்கட ஊரிலை அவன் ரோந்து திரியுறவன். கடைசியா உனக்குத்தான் ஆபத்து…’ யோகனுக்குக் கண்கள் பனித்தன. எவ்வளவு ஈரநெஞ்சம் இவனுக்கு? இப்படியான ஈரநெஞ்சம் உள்ளவர்களால்தான் தங்களையிழந்து மற்றவர்களுக்காகப் போராட முடியும் என யோகன் நினைத்தக் கொண்டான்.

அது தமிழீழத்தின் வரலாற்றில் ஒரு இருள் சூழ்ந்த காலப்பகுதி. ஆம்… இந்திய தேசத்து எருமைகளின் பாதக்குளம்பில் அகப்பட்டு தமிழீழம் இரத்தச்சேறாகிக் கொண்டிருந்தது. அப்படியான ஒரு நாளில் ஒரு மாலைப்பொழுதில் புத்தகங்களுடன் போராடிக் கொண்டிருந்தவனின் காதில் யாரோ கூப்பிடுவது கேட்டது. எட்டிப்பார்த்தான். ரவி நின்றுகொண்டிருந்தான்.

‘உள்ளுக்க வா மச்சான்’ உள்ளே அழைத்தவன், ரவியைப் பார்த்துக் கேட்டான்,

‘என்னெண்டடா வந்தனீ? உது வழிய எல்லாம் அவங்கள் திரியிறாங்கள்’

‘நான் இருக்கிற ஏரியா ரவுண்டப்’ அது தான் வெளிக்கிட்டனான். இரவுக்கு படுக்கவும் இடமில்லை…’ ரவி சொன்னதும், யோகனுக்குத் துயரம் தொண்டையை அடைத்தது.

இந்த மண்ணின் மக்கள் நிம்மதியாக படுத்துறங்கி நிம்மதியாக மூச்சுவிட்டுத்திரிய வேண்டும் என்பதற்காக, சிலுவை சுமக்கும் இந்தப் புனுதனுக்குப் படுப்பதற்கும் இடமில்லை என்றால்…

‘ஏன் மச்சான் உப்பிடிக் கதைக்கிறாய், நீ இஞ்சைப்படுத்தால் என்ன?’ யோகன் கேட்டான்.

டேய், நான் இயக்கம். குப்பி வைச்சிருக்கிறன். ஆமி வந்தாலும் என்னைப் பிடிக்க முடியாது? ஆனால் நீ… நீ படிக்கிறனி… ஆனால் தப்பித் தவறி நான் தங்கினது தெரிஞ்சாலும் உனக்குத்தான் ஆபத்து.

நான் இப்ப இஞ்சை வந்தது தங்கிறதற்கில்லை… ஒரு கடிதம் தாறன். அதை நாளைக்கு உன்னிட்டை வாற சிறியிட்டைக் குடுத்து விடு… நான் போய் இந்த வைரவர் கோயில் பூக்கண்டுக்கை கிடக்கப் போறன்’ யோகனுக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. சாகும் போதுகூட இவர்களால் எப்படி மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது? யோகன் சிந்தித்தான். வைரவர் கோயிலடி, அங்கை எல்லாம் ஆமி இரவில திரியிறவன், இஞ்ச படு அப்பிடி ஒண்டும் நடக்காது, நடந்தால் நீ குடிக்கிற குப்பியில பாதியை எனக்கும் தா’

ரவி அவனை நன்றி உணர்வுடன் பார்த்தான். ‘எங்கள் தேசத்து மக்கள் உணர்வுடன் தான் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் போராட்டம் வெல்லத்தான் போகிறது’ ரவி நினைத்துக்கொண்டான்.

‘என்ன யோசிக்கிறாய், இந்தா சாப்பாட்டுப் பார்சல், சாப்பிட்டிட்டுப் படு.’

யோகன் தனக்காக எடுத்து வந்த பார்சலை நீட்டினான்.

‘நீ சாப்பிட்டனியோ?’

‘ஓம்’

‘பொய் சொல்லுறாய்’

‘இல்லையடா பின்னேரம் கொத்து ரொட்டி சாப்பிட்டனான். இது வழமையாய் வாற இடியப்பப் பார்சல்’

ஒரு பொய்யை சாமர்த்தியமாகக் கூறிவிட்ட மகிழ்ச்சியில் யோகன் இருக்க, ரவி சாப்பிடத் தொடங்கினான்.

‘சத்தியமாய் யோகன் காலமையும், மத்தியானமும் ஒண்டுமில்லை’ சாப்பிட்டு முடித்ததும் ரவி சொன்னான். யோகனுக்கு வேதனையாக இருந்தது. இப்படி எத்தனை இளசுகள் பட்டினி கிடக்கின்றனவோ?

எல்லாம் இந்தியர்களால் வந்த வினை. நினைத்துக் கொண்டவன் ரவியிடம் சொன்னான்

‘படு மச்சான்’…., ‘படுக்கிறன், கொஸ்ரல்லிலை போல மீசை வைச்சிடாதை’ ரவி சொன்னதும். இருவரும் சூழ்நிலையை மறந்து சிரித்தனர்.

இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போரும் ஆரம்பமாகிவிட்டது. ரவி இப்பொழுது இயக்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பாளராகி விட்டான். ஒருமுறை வீதியில் அவனைச் சந்தித்த போது யோகனால் மட்டெடுக்க முடியவில்லை. நிறத்தப் பூரித்து புத்தொலிவுடன் இருந்தான். ‘மச்சான் இனி எனக்குச் சாவில்லையடா’

கடைசியாக அவன் சொன்ன வார்த்தை அதுதான். சரியாக மூன்று மாதம் கழித்து அவன் பலாலியில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த செய்தியை பத்திரிகையில் பார்த்ததும் யோகன் துடித்துப் போனான். உடனடியாகப் புறப்பட்டு ரவியின் ஊருக்குச் சென்ற அவனால் ரவியின் சமாதியைத்தான் தரிசிக்க முடிந்தது. அந்தத் துயிலுமில்லத்தின் சுமர் ஒன்றில் எழுதியிருந்த வாசகம் அவனது கண்களில் பட்டது.

‘மாவீரர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்’

அவனது காதுகளில் ‘மச்சான் இனி எனக்குச் சாவில்லையடா’ என்ற வார்த்தைகள் ஒரு முறை எதிரொலித்தன.

‘அண்ணா, இந்தாங்கோ தேத்தண்ணி. ஏழுமணியாகுது. முகம் கழுவாமல் யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்’ வாணியின் வார்த்தைகள் அவனது சிந்தனையைக் கலைத்தன.

‘வாணிக்குஞ்சு, உந்த மல்லிகைப் பூவெல்லாத்தையும் பிடுங்கி தண்ணி தெளிச்சுவையம்மா’

‘ஏன் அண்ணா? இண்டைக்கு கோயிலுக்குப் போகப் போறியளோ?’ வாணி அதிசயமாகக் கேட்டாள்.

‘ஓம்’

‘எந்தக் கோயிலுக்கு?’

‘மாவீரர் துயிலுமில்லத்துக்கு’ யோகன் அமைதியாகப் பதிலளித்தான். அவனுக்குத் தெரியும் புனிதம் அங்கே குடிகொண்டிருக்கிறது என்று.

நன்றி: சூரியப்புதல்வர்கள் 1995.

 

https://thesakkatru.com/maaveerar-thuyilum-illam/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.