Jump to content

ஹிறா பௌண்டேஷனுக்கு கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய், காத்தான்குடியில் ஏன் பேரீத்தம் பழ மரங்கள் உட்பட கேள்விகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1606275377412.jpg

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும்

 ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புழ்ழாஹ் (23.11.2020) முன்னிலையாகி அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியம் வழங்கினார்.

 

சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனுக்கு தொடர்பான முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கையில், சிறீலங்கா ஹிறா பவுண்டேஷன் இலங்கை அரசாங்கத்தில் சமூக சேவை திணைக்களத்திலே உத்தியோகபூர்வமாக 1993 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு என்றும், இந்த அமைப்பு இந்த நேரம் வரையிலும் யாராலும் ரத்து செய்யப்படவில்லை எனவும், இந்த அமைப்பை பாராளுமன்றத்தில் கூட்டிணைத்து ஏனைய அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்வதற்கு முனைந்தது மேலும் பலப்படுத்துவதற்காகவே அன்றி சிறீலங்கா ஹிறா பௌண்டேஷன் பெயரில் எந்தப் பிரச்சினையும் கிடையாது.

 

இன்று வரைக்கும் சிறீலங்கா ஹிறா பௌண்டேஷன் இலங்கை அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

 

சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனுக்கு பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கூடாக கிடைத்த சுமார் 30 கோடி ரூபாய்களும் முழுமையாக செலவு செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கைகள் தேசிய இறைவரித் திணைக்களம்,வருமானவரித் திணைக்களம், CID, FCID ஆகியவற்றினால் விசாரணை செய்யப்பட்டு தெளிவு காணப்பட்டிருக்கிறது.

 

ஹிறா பவுண்டேஷன் மூலமாக இதுவரையில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஒரு அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி பொலநறுவை, சிகரம், ஒல்லிக்குளம், மண்முனை போன்ற பல்வேறுபட்ட கிராமங்களில் வீட்டுத் திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். மக்களுக்காக குடி நீரை வழங்கி இருக்கிறோம். இது போன்ற பல்வேறுபட்ட பணிகளை இந்த அமைப்பினுடாக மக்களுக்காக செய்து இருக்கிறோம் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவிலே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

 

அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில், காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் பாயிஸ் என்பவர் ஒரு ஆயுதக் குழுவிற்கு தலைமை தாங்கினார். அவருக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேரடியாக ஆதரவு வழங்கி,பாதுகாப்பு வழங்கி அரசியல் செல்வாக்கு செலுத்தியதால் தான் அவரை என்னால் கைது செய்ய முடியவில்லை என்று முன்னாள் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் எபிசன் குணதிலக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் மீது வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கின்ற போது பொலிஸ் பாயிஸ் என்பவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது, பொலிஸ் பாயிஸ் இன்று வரையிலும் எனது எதிரியாகவே இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்திலே எனக்கு எதிராக மிக கடுமையாக எழுதி வருகின்ற ஒருவர். எனவே தான் அவரை பாதுகாக்க எந்த சந்தர்ப்பங்களிலும் நான் முன் நிற்கவில்லை. அவர் அரசியலிலே எனக்கு எதிராக தொடர்ச்சியாக செயற்பட்ட ஒருவர். எனவே இது எனக்கு எதிராக வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேற்று ஜனாதிபதி ஆணக்குழுவிலே சாட்சியம் அளித்தார்.

 

காத்தான்குடியில் பேரீச்சை மரத்தை நாட்டி , கலையம்சங்களை வளர்த்து காத்தான்குடியை அரபு நாட்டு சாயலிலே அபிவிருத்தி செய்தது நீங்கள் அரபு நாட்டினுடைய ஒரு அங்கமாக காத்தான்குடியை வைத்திருப்பதற்காகவா? என ஆணைக்குழுவில் வினவிய போது அதிலே எந்த வித உண்மையும் கிடையாது, அவற்றை நான் செய்தது அரபு நாட்டு அங்கமாக இருப்பதற்கல்ல அரபு நாட்டில் இருந்து வருகின்ற உல்லாசப் பிரயாணிகளைக் கவருவதற்காகவும் மேலும் பாசிக்குடாவுக்கு வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கு எந்த வித பொழுது போக்குகளும் இல்லை அவர்களை காத்தான்குடிக்கு வரவழைத்து அவர்களுக்கு இஸ்லாமிய சூழலை ஏற்படுத்துவதனுடாக உல்லாசத்துறையை முன்னேற்றுவதற்காகவும், குறிப்பாக அரபு உல்லாசப்பிரயாணிகளை கவர்வதற்காவே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியம் அளித்தார்.

 

மேலும் பேரீச்சை மரம் நாட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது காத்தான்குடியிலே பேரீச்சை மரத்திற்கு பதிலாக fox tail என்ற மரம் தான் நாட்டுவதற்காக இருந்தேன். ஆனால் காத்தான்குடியின் உஷ்ணமான காலநிலைக்கு, காபட் வீதிக்கு மத்தியிலே நாட்டுவதால் மரங்கள் இறந்து விடும் என்பதனால் மிக உறுதியான மரமாக பேரீச்சை மரம் நாட்டுமாறு அறிவுரை சொல்லப்பட்டமையால் இலங்கைக்குள் இருந்த பேரீச்சை மரங்கள் கொண்டு வரப்பட்டு அவை காத்தான்குடியிலே நாட்டப்பட்டதே தவிர அரபு மயப்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை என மேலும் தெரிவித்தார்.

 

காத்தான்குடி அப்ரார் பிரதேசத்திலே தந்தையை இழந்து வறிய நிலையிலே பல பிள்ளைகளோடு வாழ்ந்து வருகின்ற பல வறிய குடும்பங்களுக்காக மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்ற மாதாந்த கொடை தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரித்த போது தந்தையை இழந்து இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளோடு எந்த வித வருமானமும் இல்லாமல் இருக்கின்ற விதவைப் பெண்களுக்கான அந்தக் குடும்பங்களுக்காகவே நாங்கள் மாதாந்தம் 7500 ரூபா வீதம் வழங்கி வருகின்றோம். எனவே இது சிறீலங்கா ஹிறா பௌண்டேஷனால் வழங்கப்படுகின்ற ஒரு உத்தியோகபூர்வமான கொடுப்பனவு. இது தொடர்பாக நாங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அவர்களது கணக்கிலே பணத்தினை வைப்பிலிடுகின்றோம் என்றும் இது தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார் ஜனாதிபதி ஆணைக்குழுவிலே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் நேற்று பதிலளித்தார்.

 

காத்தான்குடியில் இயங்குகின்ற இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் ஒரு தீவிரவாதத்தை போதிக்கின்ற ஒரு அமைப்பு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கேட்ட போது இல்லை அது தீவிரவாதத்தை போதிக்கின்ற நிறுவனம் அல்ல மாறாக மார்க்க அனுஷ்டானங்களையும், மார்க்கக் கல்வியையும் போதிக்கின்ற நிறுவனமே தவிர இது எந்த வகையிலும் தீவிரவாதத்தை போதிக்கின்ற நிறுவனம் அல்ல , தீவிரவாதத்தோடு தொடர்புபட்ட நிறுவனமும் அல்ல , அவற்றோடு ஈடுபடவும் இல்லை அதற்கான ஆதாரங்களும் இல்லை. ஆகவே இது மத அனுஷ்டானங்களை மாத்திரம் போதிக்கும் நிறுவனம் என்பதை மிக உறுதியாக தெரிவிப்பதாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

 

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களும் பொறியிலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் தேசிய தௌஹீத் ஜமாஅத் கட்டடத்தில் சஹ்றான் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இடம் பெற்ற ஒளிநாடாவை போட்டுக்காட்டி இது தொடர்பாக உங்களுக்கு ஆதரவாக சஹ்றான் பேசுகிறார் என்று விசாரணை இடம்பெற்ற போது இது தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னை தோற்கடிப்பதற்காக ஒரு ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். அதுவே இக்கூட்டமாகும். அதில் சிப்லி பாரூக் மற்றும் அப்துர் ரஹ்மான் அவர்கள் இரண்டு பேரும் இல்லை இவருக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டிலே இருந்து வந்து தேர்தலுக்காக செலவளிக்கின்றார் என்று கூறி இதை வைத்து இவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து இவரை தோற்கடிக்கலாம் என்று சொன்ன போது அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது , ஆதாரம் இல்லாமல் நாம் கூற முடியாது, ஆதாரம் இருந்தால் தான் கூற முடியும் , மேலும் தேர்தலுக்காக வெளிநாடுகளில் இருந்து அவருக்கு பணம் வந்தால் கூட அதை நாம் குறை கூற முடியாது என்று சொல்கிறார்களே தவிர எனக்கு ஆதரவாக பேசியது கிடையாது. என்னை தோற்கடிக்க கலந்துரையாடப்பட்ட கூட்டத்திலே பேசப்பட்ட விடயம் என்று மிகத் தெளிவாக சொன்னதோடு எனக்கும் சஹ்றானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னை தோற்கடிக்கவும் எனது அரசியலிலும் மிக கடுமையாக எதிர்த்தவர். எந்த சந்தர்ப்பத்திலும் சஹ்றானைப் பாதுகாக்க எந்த சந்தர்ப்பத்திலும் முயலவில்லை என்றும் அவர் இறுதி வரை எனக்கு எதிராகவே செயற்பட்டார் என்று மிக உறுதியாக நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் குறிப்பிட்டார்.

 

மேலும் நேற்றும் (24.11.2020) கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் சாட்சியம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

https://www.madawalaenews.com/2020/11/30_25.html

Link to comment
Share on other sites

கலாநிதி (?) ஹிஸ்புல்லாஹ்  தான் சொல்லிய எல்லாவற்றையும் ஆணைக்குழு நம்பிவிடடாதென்றும் தான் சுற்றவாளி என்றும் நினைக்கிறார்.

பாவம் மனுஷன் கட்டின பட்டி கேம்பஸும் இராணுவம் எடுத்துவிட்ட்து. நிச்சயமாக அரசாங்கம் அந்த கட்டிடத்தை பொறுப்பெடுக்கும்.

இவருக்கு கிடைத்தது 1 மில்லியம் ரூபாய் இல்லை, 1 மில்லியன் ரியால் (50 மில்லியன் ரூபாய்).

அவரது ஊர் வறண்ட பிரதேசம் எண்டபடியால்தான் பேரீச்சம் மரம் நடடவராம். ஆனால் கொரோனவால் இறந்த முஸ்லிம்களை புதைக்க வறண்ட பிரதேசமான மன்னருக்கு கொண்டுபோகவேனுமாம்.

நல்ல இருக்கு  பேச்சு. இருக்கு இருக்கு அப்பு இந்த கறுப்பு கோட்டு கருப்பாட்டுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

கலாநிதி (?) ஹிஸ்புல்லாஹ்  தான் சொல்லிய எல்லாவற்றையும் ஆணைக்குழு நம்பிவிடடாதென்றும் தான் சுற்றவாளி என்றும் நினைக்கிறார்.

பாவம் மனுஷன் கட்டின பட்டி கேம்பஸும் இராணுவம் எடுத்துவிட்ட்து. நிச்சயமாக அரசாங்கம் அந்த கட்டிடத்தை பொறுப்பெடுக்கும்.

இவருக்கு கிடைத்தது 1 மில்லியம் ரூபாய் இல்லை, 1 மில்லியன் ரியால் (50 மில்லியன் ரூபாய்).

அவரது ஊர் வறண்ட பிரதேசம் எண்டபடியால்தான் பேரீச்சம் மரம் நடடவராம். ஆனால் கொரோனவால் இறந்த முஸ்லிம்களை புதைக்க வறண்ட பிரதேசமான மன்னருக்கு கொண்டுபோகவேனுமாம்.

நல்ல இருக்கு  பேச்சு. இருக்கு இருக்கு அப்பு இந்த கறுப்பு கோட்டு கருப்பாட்டுக்கு.

வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடுமெண்டவரல்லே ...
அதுதான் இப்ப ஒடவைக்கினம் , போட்டு வறுக்கும் வறுவையில் பின்னாடி பேதிதான் ஓடும் 

Link to comment
Share on other sites

21 hours ago, அக்னியஷ்த்ரா said:

வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடுமெண்டவரல்லே ...
அதுதான் இப்ப ஒடவைக்கினம் , போட்டு வறுக்கும் வறுவையில் பின்னாடி பேதிதான் ஓடும் 

நேற்று கையாலாகாத ஜனாதிபதி சிறிசேன , இந்த உயர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முஸ்லீம் அரசியல் தலைமைகள்தான் கரணம் எண்டு ஆணைக்குழு முன்னர் ஒரு போடு போட்டு விடடார். இதுவும் தான் தப்பித்துக்கொள்ளத்தான் . இருந்தாலும் ரிசார்ட் , ஹிஸ்புல்லா போன்ற ஜிஹாத் பயங்கரவாத தலைவர்கள் இதட்கு பொறுப்பு கூறியே ஆக வேண்டும். டிசம்பர் வரைக்கும் பொறுத்திருப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.