Jump to content

பொறுப்புக் கூற அரசு மறுத்தால் விளைவுகள் விபரீதமாகும் - பாராளுமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புக் கூற அரசு மறுத்தால் விளைவுகள் விபரீதமாகும் - பாராளுமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை.!

Screenshot-2020-11-25-23-02-27-045-com-a 

2009-ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து பதினொரு வருடங்களாக பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து தான்தோன்றித்தனமாக அரசாங்கம் பின்வாங்க முடியாதென பாராளுமன்றில் இன்று பேசிய சுமந்திரன் எச்சரித்தார்.

சர்வதேச ஒப்பந்தங்களும், உறுதிமொழிகளும் குறித்த காலத்தில் பதவியிலிருக்கும் அரசாங்கங்களுக்கு மாத்திரம் செல்லுப்படியானவையல்ல. அவை அரசொன்றிற்குச் சொந்தமானவை. ஆகவே, இலங்கை அரசென்ற வகையில் சர்வதேச சமூகத்திற்கு அளிக்கும் உறுதிமொழிகளை ஆட்சியிலிருக்கும் எந்தவொரு அரசாங்கமும் தட்டிக்கழிக்க முடியாது.

அவற்றை பூர்த்தி செய்யாவிடின் அரசாங்கம் பாரிய பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமென்று எம். ஏ. சுமந்திரன் சபையில் எச்சரிக்கை செய்தார்.

வரவு-செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சிற்கான ஒதுக்கீடு மீதான வாக்களிப்பு விவாதத்தில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே சுமந்திரன் இவ்வாறு எச்சரித்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இலங்கை மீது திணிக்கப்பட்டதாகக் கூறும் அரசாங்கத்திற்கு, அதிலிருந்து ஒரு தலைப்பட்சமாக ஒதுங்கிக் கொள்ளும் துணிச்சல் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பிய அவர் அவ்வாறு ஒதுங்கிக் கொள்ளத் துணிவில்லாத பட்சத்தில் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டிய யதார்த்தத்தைக் குறிப்பிட்டார்.

அதே போல், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் மஹிந்த ராஜாபக்ச அரசாங்கம் ஆயுதத் தீர்வு இறுதித் தீர்வாகாதென்பதை பல்வேறு சர்வதேச அரங்குகளில் ஏற்றுக் கொண்டிருந்தது. இந்திய அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நிரந்திர அரசியல் தீர்வொன்று வரையப்படுமென்று உறுதியளித்திருந்த போதிலும், அது இன்னமும் எட்டப்படவில்லை எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

http://aruvi.com/article/tam/2020/11/25/19654/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் காலத்துக்கு காலம் சிங்கள அரசை வெருட்டி காரியம் சாதிக்க முயற்சி செய்துதான் பார்க்கிறீங்கள். (அதை இப்போது கொஞ்சம் அதிகமாகவே செய்றீங்கள் என்பது வேறை கதை) நீங்கள் புருடா விடுறியள் என்றெல்லோ அவன் நினைக்கிறான். அவனும் விட்டபாடில்லை நீங்களும் விட்டபாடில்லை. இனியாவது கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் என்று நினைத்ததில்லையா?. அந்த சர்வதேசத்திடமே போய் உடனடியா செய்றமாதிரி ஏதாவது இதற்கு வழிமுறைகள் இருக்கா என்று கேட்டு பார்க்கலாம் தானே !! 

Link to comment
Share on other sites

7 hours ago, vanangaamudi said:

நீங்களும் காலத்துக்கு காலம் சிங்கள அரசை வெருட்டி காரியம் சாதிக்க முயற்சி செய்துதான் பார்க்கிறீங்கள். (அதை இப்போது கொஞ்சம் அதிகமாகவே செய்றீங்கள் என்பது வேறை கதை) நீங்கள் புருடா விடுறியள் என்றெல்லோ அவன் நினைக்கிறான். அவனும் விட்டபாடில்லை நீங்களும் விட்டபாடில்லை. இனியாவது கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் என்று நினைத்ததில்லையா?. அந்த சர்வதேசத்திடமே போய் உடனடியா செய்றமாதிரி ஏதாவது இதற்கு வழிமுறைகள் இருக்கா என்று கேட்டு பார்க்கலாம் தானே !! 

எல்லாம் உடனடியா வேணும் எண்டு கேட்டால் நடக்குமா? போராட்டமே 30 வருடம் நடந்தும் தோத்து போச்சுது. கதைச்சு செய்யிற விஷயத்துக்கு  ஒரு 100 வருஷமாவது பொறுமையா முயற்சிசெய்து பாக்கிறதுதானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

எல்லாம் உடனடியா வேணும் எண்டு கேட்டால் நடக்குமா? போராட்டமே 30 வருடம் நடந்தும் தோத்து போச்சுது. கதைச்சு செய்யிற விஷயத்துக்கு  ஒரு 100 வருஷமாவது பொறுமையா முயற்சிசெய்து பாக்கிறதுதானே? 

இவ்வளவு சிம்பிளா சொல்லிப்போட்டியல். 100 வருஷம் போதுமா...? வருஷத்திற்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்  எடுக்கிறது தான் எடுக்கிறியள் ஒரு ஆயிரம் வருஷம் எடுத்துக்கொள்ளுறது 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.