Jump to content

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்

 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

 

கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள உட்டா  பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.ஆனால், வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது, அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே இருந்தது.அந்த தூணை அங்கே நிறுவியது யார், வேற்றுகிரகவாசிகளா என்பது போன்ற கேள்விகள் எழும்பி அவற்றிற்கு பதில் கிடைக்கும் முன்னரே, அதை அகற்றியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னொருபக்கம், அந்த தூண் 2015, 2016 வாக்கிலேயே அதே இடத்தில் இருந்ததாக கூகுள் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.இந்நிலையில், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள், ருமேனியா நாட்டில் அதே போல் ஒரு உலோக தூண் திடீரென தோன்றியுள்ளது. அதன் உயரம் 13 அடி.இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகள் தான் இவற்றை பூமியில் வீசினார்களா...?  அல்லது யாராவது வேண்டுமென்றே மக்களை பரபரப்பாக்குவதற்காக இப்படி செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

மேலும் இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடத்திலும் அமைந்துள்ளது.யாராவது அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு தூணை அமைக்கவேண்டுமானால், அவர்கள் அரசின் கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதால், அந்த தூண் குறித்த விஷயம் மர்மமாகவே உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/01142735/Mysterious-metal-monolith-similar-to-one-found-in.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும் விலைகூடின உலோகம் என்று ருமேனியக்காரனுக்கு சொல்லியிருப்பாங்கள் இராவோடை இரவாய் தங்கடை  நாட்டுக்கு கடத்தி கொண்டு போயிருப்பாங்கள் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர்

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர்

'மர்ம உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்!'

'மர்ம உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்!'

அப்போதுதான் நான்கு பேர் கொண்ட ஒரு குழு இந்த உலோகத் தூணை அந்த இடத்திலிருந்து மொத்தமாக எடுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் ராஸ் பெர்னார்ட்ஸ்.

அமெரிக்கா யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்திற்கு நடுவே 12 அடி உயரத்துக்கு திடீரென ஓர் உலோகத் தூண் தோன்றியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. எப்படி திடீரென தோன்றியதோ அதே போன்று திடீரென மறைந்தும் போனது இந்த உலோகத் தூண். இது எப்படிக் கண்டறியப்பட்டது, உலகளவில் எந்த அளவு கவனம் பெற்றது போன்றவற்றை விரிவாக தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.
திடீரென வந்தது, திடீரென மறைந்தது... நீங்காத 12 அடி உலோகத் தூண் மர்மம்!

 

உலோகத் தூணை நீக்கும் நாலு பேர்
 
உலோகத் தூணை நீக்கும் நாலு பேர் Ross Bernards

இது எப்படித் தோன்றி மறைந்திருக்கும் என மக்கள் பல்வேறு தியரிகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டுக் கொண்டிருக்க 'அந்த உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்' எனச் சாட்சி சொல்கிறார் அமெரிக்கா புகைப்பட கலைஞர் ராஸ் பெர்னார்டு. மற்றவர்களைப் போல இவரும் ஆர்வ மிகுதியால் உலோகத் தூணைப் படமெடுக்க விரும்பி கடந்த வெள்ளியன்று இரவு பாலைவனத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் நான்கு பேர் கொண்ட ஒரு குழு இந்த உலோகத் தூணை அந்த இடத்திலிருந்து மொத்தமாக எடுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் ராஸ் பெர்னார்டு.

அவர் பதிவில் "நானும் என் நண்பர்கள் மூன்று பெரும் வெள்ளியன்று இரவு ஆறு மணிநேர பயணத்துக்குப் பிறகு சுமார் 7 மணி அளவில் உலோகத் தூண் இருக்கும் இடத்தை சென்றடைந்தோம். செல்லும் போது ஒரு குழு திரும்பி வருவதைப் பார்த்தோம். நாங்கள் செல்லும்போது ஏற்கெனவே ஒரு குழு அங்கு இருந்தது. அந்த குழுவும் சீக்கிரம் கிளம்பிவிட்டது. அதன் பின் அந்த இடத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். அடுத்த நூறு நிமிடங்களுக்கு நிலவொளியில் உலோகத் தூணைப் புகைப்படங்கள் எடுத்தோம். நாங்கள் கிளம்ப ஆரம்பிக்கும்போதுதான் 4 பேர் கொண்ட ஒரு குழு அந்த இடத்திற்கு வந்தது. வந்தவர்கள் உடனடியாக உலோகத் தூணைக் கீழே சாய்க்கத்தொடங்கினர். சில நிமிடங்களில் மொத்தமாக அது கீழே சரிந்தது. பின்பு அதை உடைத்து அவர்களுடன் எடுத்து வந்திருந்த தள்ளுவண்டியில் போட்டு எடுத்துச்சென்றனர். 'எந்த ஒரு தடயமும் விட்டுவிட வேண்டாம்' என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டதைக் கவனித்தேன்.

அவர்கள் செய்வதுதான் சரி என்று தோன்றியதால் அவர்களை நாங்கள் தடுக்கவில்லை. அந்த பாலைவனத்தில் எப்படியும் 70 வாகனங்களைப் பார்த்திருப்போம். அனைத்து பக்கங்களிலிருந்தும் உலோகத் தூணைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் படையெடுத்து வந்துகொண்டிருந்தனர். மனித கால்தடம் படாமல் இருந்த அந்த இடம் நிரந்தரமாகப் பாழாக்கப்பட்டு வந்ததை நாங்கள் பார்த்தோம். இயற்கையை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் நல்லது." எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

இதனால் உலோகத் தூணைச் சுற்றியிருந்த மர்மம் ஓரளவு தெளிந்திருக்கிறது. ஆனால், அதை அங்கே இதே கும்பல்தான் வைத்ததா, அவர்கள் யார், வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. அமெரிக்க அரசு இது குறித்த விசாரணையை விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ருமேனியாவில் இதே போன்று திடீரென தோன்றிய உலோகத் தூண் அடுத்த நாளே மறைந்தும் போயிருக்கிறது.

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர் | Photographer Says He Saw 4 Men Take Down the mysterious Monolith in Utah (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2020 at 11:44, பெருமாள் said:

ஆரும் விலைகூடின உலோகம் என்று ருமேனியக்காரனுக்கு சொல்லியிருப்பாங்கள் இராவோடை இரவாய் தங்கடை  நாட்டுக்கு கடத்தி கொண்டு போயிருப்பாங்கள் .  

ருமேனியன் மாதிரி ஒரு கள்ளரை நான் இதுவரைக்கும் பாக்கேல்லை.அவங்களுக்கு எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் களவெடுக்காட்டில் பத்தியப்படாது.😁

Link to comment
Share on other sites

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

இப்ப தமிழரை விட சிங்களவர்கள்தான் வங்கி  அட்டையை வங்கியை சுத்துவதில் முன்னுக்கு நிக்கிறார்கள் இங்கிலாந்தில் . என்ன ஆங்கிலம் சரளமாக தெரிவதால் பல இடங்களில் இலகுவாக தப்புகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல மரத்தடியில் பிள்ளையார் சிலை திடீரென்று தோன்றுவதில்லையா? அது போலதான் இதுவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

இப்ப இங்கிலாந்தில் சிங்களவர்கள்தான் ரொமேனியர்களை விட மோசமான வேலைகளை செய்பவர்கள் சாம் சிக்கின் முதலாளி இடம் விசா இல்லாமல் வேலை செய்யும் சிங்களவர்கள் மாத்திரமே 80 பேருக்கு மேல் அனைவருக்கும் மணித்தியாலத்துக்கு இரண்டு பவுன் தான் சம்பளம் .

நெல்லையன் வந்தால் கதையா சொல்லுவார் .

சட்பரே பப்பில் மகிந்தவின் மகன் சின்ன மாமியே பாட்டுக்கு  ஆடும்போது நானும் அங்கிருந்தேன் அவரை கூட்டி வந்தது கள்ளமட்டை போடும் சிங்கள தாதா . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

இப்ப இங்கிலாந்தில் சிங்களவர்கள்தான் ரொமேனியர்களை விட மோசமான வேலைகளை செய்பவர்கள் சாம் சிக்கின் முதலாளி இடம் விசா இல்லாமல் வேலை செய்யும் சிங்களவர்கள் மாத்திரமே 80 பேருக்கு மேல் அனைவருக்கும் மணித்தியாலத்துக்கு இரண்டு பவுன் தான் சம்பளம் .

நெல்லையன் வந்தால் கதையா சொல்லுவார் .

சட்பரே பப்பில் மகிந்தவின் மகன் சின்ன மாமியே பாட்டுக்கு  ஆடும்போது நானும் அங்கிருந்தேன் அவரை கூட்டி வந்தது கள்ளமட்டை போடும் சிங்கள தாதா . 

இல்லவே இல்லை.....
எல்லாத்துக்கும் பின்னணியிலை தமிழன் தான் இருக்கிறானாம்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இல்லவே இல்லை.....
எல்லாத்துக்கும் பின்னணியிலை தமிழன் தான் இருக்கிறானாம்....😁

எனக்கு தெரியும் அதற்கு ஆதாரம் இல்லை சிங்கனை விட்டு பிடிப்பம் சும்மா தான் நினைத்த்துக்கு கதை வருகிறது .

அவர் அடிக்கடி போகும் இடம் மேல் உள்ளது வாலாட்டமாட்டா .

ர்ர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

எனக்கு தெரியும் அதற்கு ஆதாரம் இல்லை சிங்கனை விட்டு பிடிப்பம் சும்மா தான் நினைத்த்துக்கு கதை வருகிறது .

அவர் அடிக்கடி போகும் இடம் மேல் உள்ளது வாலாட்டமலா  போவினம்  .

ர்ர் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

 

உங்களுக்கு இப்ப விளங்காது காலையில் வாங்க இனிய அதிகாலை வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு இப்ப விளங்காது காலையில் வாங்க இனிய அதிகாலை வணக்கம் .

🤣 இனிய அதிகாலை வணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

 

CR நம்பரை தந்தால்  நல்லது பாஸ் இனிய காலை வணக்கம் உங்களுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

CR நம்பரை தந்தால்  நல்லது பாஸ் இனிய காலை வணக்கம் உங்களுக்கு .

பாதிக்கபட்டவர்களின் அனுமதி கேட்டுள்ளேன், கிடைத்தால் தனிமடலிடுகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A large 10-foot tall monolith has appeared on the street outside Grandpa Joe's candy shop in Pittsburgh

அப்படி இப்படி சொல்லி கடைசியில் தாத்தா மிட்டாய் கடைக்காரன் உலோகத்தூனை செய்து தங்கள் கடைக்கு முன்னாள்  விளம்பரமாக்கி போட்டார்கள் இதைப்பார்த்து எத்தனை பேர் கிளம்ப போறாங்களோ .https://www.dailymail.co.uk/news/article-9020913/Another-monolith-appears-outside-sweet-shop-Pittsburgh.html?ito=social-facebook&fbclid=IwAR1kwq0PqCD57sMuowoNfUF_K1qCA-me0uo4j8D7rZPU2n0ScIzSs0-vKek

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

 

இப்படி ஒரு விடயம் பிரான்சிலும்  நடந்தது

ஆனால்  வந்தது ஆபிரிக்கர்

தலை நம்மவரே  தான்?

ஆனால் தமிழர்களின்  வீடுகளில் தான் நம்மவரின்  கைவரிசை

ஆனால் ரோமெனியர்கள் சர்வதேச லெவல் என்பதும்  உண்மையே?

இங்கே கடைக்கு  அவர்கள் வந்தாலே எல்லோரும் அலட்இ

நானே நினைப்பதுண்டு

எவ்வாறு இந்த  நிலைக்கு  எம்மை கொண்டு  வந்தார்கள்  என்று???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

 

இப்படி ஒரு விடயம் பிரான்சிலும்  நடந்தது

ஆனால்  வந்தது ஆபிரிக்கர்

தலை நம்மவரே  தான்?

ஆனால் தமிழர்களின்  வீடுகளில் தான் நம்மவரின்  கைவரிசை

ஆனால் ரோமெனியர்கள் சர்வதேச லெவல் என்பதும்  உண்மையே?

இங்கே கடைக்கு  அவர்கள் வந்தாலே எல்லோரும் அலட்இ

நானே நினைப்பதுண்டு

எவ்வாறு இந்த  நிலைக்கு  எம்மை கொண்டு  வந்தார்கள்  என்று???

உண்மைதான் அண்ணை. ரொமேனியர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு இனத்தையே இப்படி பட்டியல் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

என்னை கேட்டால் அவர்கள் ஆரம்பத்தில் பியரை தூக்கி கொண்டு ஓடுவது, பாங் வாசலில் நின்று காசை பறிப்பது, போனை பிடுங்குவது, சிவப்பு விளக்கில் நின்று பிச்சை எடுப்பது, வாகன கண்ணாடியை கழுவி வம்படியாக காசு கேட்பது என்ற நிலையில்தான் 2003-2013 வரை இருந்தார்கள்.

அவர்களை மட்டை, வீடு புகுந்து நகையை மட்டும் கொள்ளை அடிப்பது ( லேப் டொப், ஐ போனை இப்போ எல்லாம் சீண்டுவதே இல்லை) என்று அடுத்த நிலைக்கு கொண்டு போய் அவர்களை பெரிய லெவலில் இறக்கி விட்டவர்கள் தெற்காசியர்களே. தனியே தமிழர்கள் மட்டும் இல்லை.

ஒரு கட்டத்தில் அவர்கள் தாமாகவே தொழிலை விருத்தி செய்ய தலைப்படுகிறார்கள் 🤣.

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களை கூட கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ் முதலாளிகள் பலர் உள்ள நாட்டில் வசிக்கும் எனக்கு, இன்னொரு இனத்தை பார்த்து கதைக்கும் தகுதி இல்லை என்பதே என் நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

 

ஒரு செக்லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறேன். குளியல், எழுத்து, நனோ தொழில் நுட்பம், கறிக்குழம்பு,..நீண்டு கொண்டே போகுது தமிழர் உலகுக்களித்த கொடைகள்!

Link to comment
Share on other sites

23 hours ago, குமாரசாமி said:

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

நீங்க சொந்த வீட்டில் உள்ள அசுத்தங்களை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் வீட்டு அசுத்தங்களை பற்றி கவலைப்படும் பொதுநலவாதி. நான் அப்படியல்ல சொந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் சாதாரண சுயநல மனிதன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்க சொந்த வீட்டில் உள்ள அசுத்தங்களை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் வீட்டு அசுத்தங்களை பற்றி கவலைப்படும் பொதுநலவாதி. நான் அப்படியல்ல சொந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் சாதாரண சுயநல மனிதன். 

இந்த உள்நோக்கிய பார்வை இருந்திருந்தால் நாம் ஒருவேளை யூதர்கள் போல வந்திருப்போம்! இவ்வளவு ஆன பின்னும் இதை எங்கள் சமூகத்தில் அறிமுகம் செய்வது கல்லில் நார் உரிப்பது போன்ற வேலை! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.