Jump to content

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்

 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு

 

கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள உட்டா  பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.ஆனால், வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது, அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே இருந்தது.அந்த தூணை அங்கே நிறுவியது யார், வேற்றுகிரகவாசிகளா என்பது போன்ற கேள்விகள் எழும்பி அவற்றிற்கு பதில் கிடைக்கும் முன்னரே, அதை அகற்றியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னொருபக்கம், அந்த தூண் 2015, 2016 வாக்கிலேயே அதே இடத்தில் இருந்ததாக கூகுள் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.இந்நிலையில், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள், ருமேனியா நாட்டில் அதே போல் ஒரு உலோக தூண் திடீரென தோன்றியுள்ளது. அதன் உயரம் 13 அடி.இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகள் தான் இவற்றை பூமியில் வீசினார்களா...?  அல்லது யாராவது வேண்டுமென்றே மக்களை பரபரப்பாக்குவதற்காக இப்படி செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

மேலும் இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடத்திலும் அமைந்துள்ளது.யாராவது அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு தூணை அமைக்கவேண்டுமானால், அவர்கள் அரசின் கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதால், அந்த தூண் குறித்த விஷயம் மர்மமாகவே உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/01142735/Mysterious-metal-monolith-similar-to-one-found-in.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும் விலைகூடின உலோகம் என்று ருமேனியக்காரனுக்கு சொல்லியிருப்பாங்கள் இராவோடை இரவாய் தங்கடை  நாட்டுக்கு கடத்தி கொண்டு போயிருப்பாங்கள் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர்

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர்

'மர்ம உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்!'

'மர்ம உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்!'

அப்போதுதான் நான்கு பேர் கொண்ட ஒரு குழு இந்த உலோகத் தூணை அந்த இடத்திலிருந்து மொத்தமாக எடுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் ராஸ் பெர்னார்ட்ஸ்.

அமெரிக்கா யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்திற்கு நடுவே 12 அடி உயரத்துக்கு திடீரென ஓர் உலோகத் தூண் தோன்றியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. எப்படி திடீரென தோன்றியதோ அதே போன்று திடீரென மறைந்தும் போனது இந்த உலோகத் தூண். இது எப்படிக் கண்டறியப்பட்டது, உலகளவில் எந்த அளவு கவனம் பெற்றது போன்றவற்றை விரிவாக தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.
திடீரென வந்தது, திடீரென மறைந்தது... நீங்காத 12 அடி உலோகத் தூண் மர்மம்!

 

உலோகத் தூணை நீக்கும் நாலு பேர்
 
உலோகத் தூணை நீக்கும் நாலு பேர் Ross Bernards

இது எப்படித் தோன்றி மறைந்திருக்கும் என மக்கள் பல்வேறு தியரிகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டுக் கொண்டிருக்க 'அந்த உலோகத் தூணை நீக்கியது மனிதர்கள்தான்' எனச் சாட்சி சொல்கிறார் அமெரிக்கா புகைப்பட கலைஞர் ராஸ் பெர்னார்டு. மற்றவர்களைப் போல இவரும் ஆர்வ மிகுதியால் உலோகத் தூணைப் படமெடுக்க விரும்பி கடந்த வெள்ளியன்று இரவு பாலைவனத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் நான்கு பேர் கொண்ட ஒரு குழு இந்த உலோகத் தூணை அந்த இடத்திலிருந்து மொத்தமாக எடுத்துச் சென்றதைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் ராஸ் பெர்னார்டு.

அவர் பதிவில் "நானும் என் நண்பர்கள் மூன்று பெரும் வெள்ளியன்று இரவு ஆறு மணிநேர பயணத்துக்குப் பிறகு சுமார் 7 மணி அளவில் உலோகத் தூண் இருக்கும் இடத்தை சென்றடைந்தோம். செல்லும் போது ஒரு குழு திரும்பி வருவதைப் பார்த்தோம். நாங்கள் செல்லும்போது ஏற்கெனவே ஒரு குழு அங்கு இருந்தது. அந்த குழுவும் சீக்கிரம் கிளம்பிவிட்டது. அதன் பின் அந்த இடத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். அடுத்த நூறு நிமிடங்களுக்கு நிலவொளியில் உலோகத் தூணைப் புகைப்படங்கள் எடுத்தோம். நாங்கள் கிளம்ப ஆரம்பிக்கும்போதுதான் 4 பேர் கொண்ட ஒரு குழு அந்த இடத்திற்கு வந்தது. வந்தவர்கள் உடனடியாக உலோகத் தூணைக் கீழே சாய்க்கத்தொடங்கினர். சில நிமிடங்களில் மொத்தமாக அது கீழே சரிந்தது. பின்பு அதை உடைத்து அவர்களுடன் எடுத்து வந்திருந்த தள்ளுவண்டியில் போட்டு எடுத்துச்சென்றனர். 'எந்த ஒரு தடயமும் விட்டுவிட வேண்டாம்' என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டதைக் கவனித்தேன்.

அவர்கள் செய்வதுதான் சரி என்று தோன்றியதால் அவர்களை நாங்கள் தடுக்கவில்லை. அந்த பாலைவனத்தில் எப்படியும் 70 வாகனங்களைப் பார்த்திருப்போம். அனைத்து பக்கங்களிலிருந்தும் உலோகத் தூணைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் படையெடுத்து வந்துகொண்டிருந்தனர். மனித கால்தடம் படாமல் இருந்த அந்த இடம் நிரந்தரமாகப் பாழாக்கப்பட்டு வந்ததை நாங்கள் பார்த்தோம். இயற்கையை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் நல்லது." எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

இதனால் உலோகத் தூணைச் சுற்றியிருந்த மர்மம் ஓரளவு தெளிந்திருக்கிறது. ஆனால், அதை அங்கே இதே கும்பல்தான் வைத்ததா, அவர்கள் யார், வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. அமெரிக்க அரசு இது குறித்த விசாரணையை விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ருமேனியாவில் இதே போன்று திடீரென தோன்றிய உலோகத் தூண் அடுத்த நாளே மறைந்தும் போயிருக்கிறது.

"ஏலியன்ஸ் எல்லாம் இல்லை, மனிதர்கள்தான்!" உலோகத் தூண் மர்மம் நீக்கும் புகைப்பட கலைஞர் | Photographer Says He Saw 4 Men Take Down the mysterious Monolith in Utah (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2020 at 11:44, பெருமாள் said:

ஆரும் விலைகூடின உலோகம் என்று ருமேனியக்காரனுக்கு சொல்லியிருப்பாங்கள் இராவோடை இரவாய் தங்கடை  நாட்டுக்கு கடத்தி கொண்டு போயிருப்பாங்கள் .  

ருமேனியன் மாதிரி ஒரு கள்ளரை நான் இதுவரைக்கும் பாக்கேல்லை.அவங்களுக்கு எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் களவெடுக்காட்டில் பத்தியப்படாது.😁

Link to comment
Share on other sites

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

இப்ப தமிழரை விட சிங்களவர்கள்தான் வங்கி  அட்டையை வங்கியை சுத்துவதில் முன்னுக்கு நிக்கிறார்கள் இங்கிலாந்தில் . என்ன ஆங்கிலம் சரளமாக தெரிவதால் பல இடங்களில் இலகுவாக தப்புகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல மரத்தடியில் பிள்ளையார் சிலை திடீரென்று தோன்றுவதில்லையா? அது போலதான் இதுவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

இப்ப இங்கிலாந்தில் சிங்களவர்கள்தான் ரொமேனியர்களை விட மோசமான வேலைகளை செய்பவர்கள் சாம் சிக்கின் முதலாளி இடம் விசா இல்லாமல் வேலை செய்யும் சிங்களவர்கள் மாத்திரமே 80 பேருக்கு மேல் அனைவருக்கும் மணித்தியாலத்துக்கு இரண்டு பவுன் தான் சம்பளம் .

நெல்லையன் வந்தால் கதையா சொல்லுவார் .

சட்பரே பப்பில் மகிந்தவின் மகன் சின்ன மாமியே பாட்டுக்கு  ஆடும்போது நானும் அங்கிருந்தேன் அவரை கூட்டி வந்தது கள்ளமட்டை போடும் சிங்கள தாதா . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இலங்கைக்கு இரண்டு மூன்று மணித்தியாலத்தில் காரில் செல்லாம் என்றால் தமிழரல்  எத்தனை கள்ளர் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அப்படி இல்லாததால் கள்ள மட்டை மற்றும் பணமோசடி செய்வதில் மட்டும்  தமிழரின் திருட்டு நின்றுவிட்டது. (அதே ஒரு மகா பெரிய திருட்டு என்பது வேறுவிடயம்)

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பெருமாள் said:

இப்ப இங்கிலாந்தில் சிங்களவர்கள்தான் ரொமேனியர்களை விட மோசமான வேலைகளை செய்பவர்கள் சாம் சிக்கின் முதலாளி இடம் விசா இல்லாமல் வேலை செய்யும் சிங்களவர்கள் மாத்திரமே 80 பேருக்கு மேல் அனைவருக்கும் மணித்தியாலத்துக்கு இரண்டு பவுன் தான் சம்பளம் .

நெல்லையன் வந்தால் கதையா சொல்லுவார் .

சட்பரே பப்பில் மகிந்தவின் மகன் சின்ன மாமியே பாட்டுக்கு  ஆடும்போது நானும் அங்கிருந்தேன் அவரை கூட்டி வந்தது கள்ளமட்டை போடும் சிங்கள தாதா . 

இல்லவே இல்லை.....
எல்லாத்துக்கும் பின்னணியிலை தமிழன் தான் இருக்கிறானாம்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இல்லவே இல்லை.....
எல்லாத்துக்கும் பின்னணியிலை தமிழன் தான் இருக்கிறானாம்....😁

எனக்கு தெரியும் அதற்கு ஆதாரம் இல்லை சிங்கனை விட்டு பிடிப்பம் சும்மா தான் நினைத்த்துக்கு கதை வருகிறது .

அவர் அடிக்கடி போகும் இடம் மேல் உள்ளது வாலாட்டமாட்டா .

ர்ர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

எனக்கு தெரியும் அதற்கு ஆதாரம் இல்லை சிங்கனை விட்டு பிடிப்பம் சும்மா தான் நினைத்த்துக்கு கதை வருகிறது .

அவர் அடிக்கடி போகும் இடம் மேல் உள்ளது வாலாட்டமலா  போவினம்  .

ர்ர் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

 

உங்களுக்கு இப்ப விளங்காது காலையில் வாங்க இனிய அதிகாலை வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு இப்ப விளங்காது காலையில் வாங்க இனிய அதிகாலை வணக்கம் .

🤣 இனிய அதிகாலை வணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பெருமாள்,

நீங்கள் என்னையும் ரைசிங் சன் பப்பையும் பற்றி ஏதோ பூடகமா எழுதியுள்ளீர்கள். ஆனால் இரெண்டு தரம் எழுதியதை நாலு தரம் வாசிச்சும் என் மரமண்டைக்கு ஏறவில்லை. மன்னிக்கவும். 

நான் சொன்ன கதைக்கு ஆதாரம் என்றால் இனி என்ன CR நம்பரையா தரமுடியும்.

 

CR நம்பரை தந்தால்  நல்லது பாஸ் இனிய காலை வணக்கம் உங்களுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

CR நம்பரை தந்தால்  நல்லது பாஸ் இனிய காலை வணக்கம் உங்களுக்கு .

பாதிக்கபட்டவர்களின் அனுமதி கேட்டுள்ளேன், கிடைத்தால் தனிமடலிடுகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A large 10-foot tall monolith has appeared on the street outside Grandpa Joe's candy shop in Pittsburgh

அப்படி இப்படி சொல்லி கடைசியில் தாத்தா மிட்டாய் கடைக்காரன் உலோகத்தூனை செய்து தங்கள் கடைக்கு முன்னாள்  விளம்பரமாக்கி போட்டார்கள் இதைப்பார்த்து எத்தனை பேர் கிளம்ப போறாங்களோ .https://www.dailymail.co.uk/news/article-9020913/Another-monolith-appears-outside-sweet-shop-Pittsburgh.html?ito=social-facebook&fbclid=IwAR1kwq0PqCD57sMuowoNfUF_K1qCA-me0uo4j8D7rZPU2n0ScIzSs0-vKek

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

 

இப்படி ஒரு விடயம் பிரான்சிலும்  நடந்தது

ஆனால்  வந்தது ஆபிரிக்கர்

தலை நம்மவரே  தான்?

ஆனால் தமிழர்களின்  வீடுகளில் தான் நம்மவரின்  கைவரிசை

ஆனால் ரோமெனியர்கள் சர்வதேச லெவல் என்பதும்  உண்மையே?

இங்கே கடைக்கு  அவர்கள் வந்தாலே எல்லோரும் அலட்இ

நானே நினைப்பதுண்டு

எவ்வாறு இந்த  நிலைக்கு  எம்மை கொண்டு  வந்தார்கள்  என்று???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

 

இப்படி ஒரு விடயம் பிரான்சிலும்  நடந்தது

ஆனால்  வந்தது ஆபிரிக்கர்

தலை நம்மவரே  தான்?

ஆனால் தமிழர்களின்  வீடுகளில் தான் நம்மவரின்  கைவரிசை

ஆனால் ரோமெனியர்கள் சர்வதேச லெவல் என்பதும்  உண்மையே?

இங்கே கடைக்கு  அவர்கள் வந்தாலே எல்லோரும் அலட்இ

நானே நினைப்பதுண்டு

எவ்வாறு இந்த  நிலைக்கு  எம்மை கொண்டு  வந்தார்கள்  என்று???

உண்மைதான் அண்ணை. ரொமேனியர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு இனத்தையே இப்படி பட்டியல் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

என்னை கேட்டால் அவர்கள் ஆரம்பத்தில் பியரை தூக்கி கொண்டு ஓடுவது, பாங் வாசலில் நின்று காசை பறிப்பது, போனை பிடுங்குவது, சிவப்பு விளக்கில் நின்று பிச்சை எடுப்பது, வாகன கண்ணாடியை கழுவி வம்படியாக காசு கேட்பது என்ற நிலையில்தான் 2003-2013 வரை இருந்தார்கள்.

அவர்களை மட்டை, வீடு புகுந்து நகையை மட்டும் கொள்ளை அடிப்பது ( லேப் டொப், ஐ போனை இப்போ எல்லாம் சீண்டுவதே இல்லை) என்று அடுத்த நிலைக்கு கொண்டு போய் அவர்களை பெரிய லெவலில் இறக்கி விட்டவர்கள் தெற்காசியர்களே. தனியே தமிழர்கள் மட்டும் இல்லை.

ஒரு கட்டத்தில் அவர்கள் தாமாகவே தொழிலை விருத்தி செய்ய தலைப்படுகிறார்கள் 🤣.

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களை கூட கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ் முதலாளிகள் பலர் உள்ள நாட்டில் வசிக்கும் எனக்கு, இன்னொரு இனத்தை பார்த்து கதைக்கும் தகுதி இல்லை என்பதே என் நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

துல்பென்,

உங்களுக்கு ரொமேனியரை பற்றி துண்டற விளங்கேல்ல. ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுறன் அப்பவாதும் விளங்குதா பாப்பம்.

அது லண்டனில் இருந்து சற்று வெளியான ஊர். பொதுவா தமிழர் இல்லாத பிரதேசம். வழமையாக அந்த குடும்பம் தமது நகைகள் முழுவதுமாக பாங்கில்தான் வைப்பார்கள். கடந்த கிழமை ஒரு கல்யாண வீட்டுக்கு போட எடுத்த நகைகள் இன்னும் லாக்கருக்கு போகவில்லை. ஆனால் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். சனி ஞாயிறு முடிய பாங் போவதாக திட்டம்.

ஞாயிறு - வீட்டில் அம்மமா கிழவி மட்டும் இருக்கும் போது ரெண்டு ரொமேனியர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கிழவியை கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.

கிழவியிடம் வந்து அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க, புத்திசாலிக் கிழவி தனக்கு ஆங்கிலம் தெரியாத மாரி தொடர்ந்து தமிழில் கதைதுள்ளது.

உடனே வந்த இரு ரொமேனியர்களும் தமது பொஸ்சுக்கு போனை போட்டு, போனை கிழவியின் கையில் கொடுத்தார்கள்.

போனில் பேசிய பொஸ், சுத்த தமிழில், “ஆச்சி, போன கிழமை நீ போட்டிருந்த சிவப்பு கல் தோடு, காப்பு, மருமகள் போட்டிருந்த வைர அட்டிகை”....இப்படி முழு லிஸ்டையும் வாசிச்சு, அத்தனை பொருட்களையும் ரொமேனிய குண்டர்களிடம் கையளிக்குமாறும் இல்லையென்றால் “அவங்கள் மோசமானவங்கள், கழுத்தை அறுத்து போடுவாங்கள்” என்றும் பணிவாக கேட்டுக்கொண்டார்.

கிழவியும் உயிருக்கு பயந்து சொன்னபடி நடக்கும்படியாயிற்று.

இப்போதாவது விளங்குகிறதா துல்பன், ரொமேனியர் எவ்வளவு மோசமானவர்கள் என்பது. 

 

ஒரு செக்லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறேன். குளியல், எழுத்து, நனோ தொழில் நுட்பம், கறிக்குழம்பு,..நீண்டு கொண்டே போகுது தமிழர் உலகுக்களித்த கொடைகள்!

Link to comment
Share on other sites

23 hours ago, குமாரசாமி said:

இதிலிருந்து தெரிகின்றது அண்ணலுக்கு.....
ருமேனியன்,அல்பேனியன்,கொசோவோ,துருக்கி,போலந்து,பல்கேரியா நாட்டு நடப்புகள் அறவே தெரியவில்லை என்று........

அது சரி தமிழர்களின் ஊத்தைகளை மட்டும் மணக்க அண்ணலுக்கு நேரம் போதவில்லை....இதில்?

நீங்க சொந்த வீட்டில் உள்ள அசுத்தங்களை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் வீட்டு அசுத்தங்களை பற்றி கவலைப்படும் பொதுநலவாதி. நான் அப்படியல்ல சொந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் சாதாரண சுயநல மனிதன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்க சொந்த வீட்டில் உள்ள அசுத்தங்களை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் வீட்டு அசுத்தங்களை பற்றி கவலைப்படும் பொதுநலவாதி. நான் அப்படியல்ல சொந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் சாதாரண சுயநல மனிதன். 

இந்த உள்நோக்கிய பார்வை இருந்திருந்தால் நாம் ஒருவேளை யூதர்கள் போல வந்திருப்போம்! இவ்வளவு ஆன பின்னும் இதை எங்கள் சமூகத்தில் அறிமுகம் செய்வது கல்லில் நார் உரிப்பது போன்ற வேலை! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.