Jump to content

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

சவக்குழியில் இருந்து மீள இருக்கும் எல்லாவாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் கற்பிதன். 

சில சமயங்களில், ஆசாபாச, தனிப்பட்ட பட்டறிவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு bigger picture ஐ பார்த்தே ஆகவேண்டும். இனத்தின் ஒட்டுமொத்த நலன் கருதி. 

இதைநான் இப்படித்தான் பார்கிறேன். 

சண்டைகாரன் காலில் விழலாம் - சண்டைகாரன் காலில் விழுந்தால் கழுத்தை வெட்டமாட்டான் எனில்.

சண்டைகாரன் நாம் என்ன செய்தாலும் எப்படியும் கழுத்தை வெட்டியே தீருவான் எனும் போது, அவன் காலில் விழுவதும், ஒரு கத்தியை எடுத்து நாமே எம் தலையை சீவுவதும் ஒன்றுதான்.

தீர்வு எப்படியும் சண்டைகாரந்தான் தரவேண்டும். ஆனால் தனியே நாம் மட்டும் போய் கேட்டால் தலையை சீவிவிடுவான்.

யாரையாவது துணைக்கு கூட்டிபோனால்தான் தலையாவது தப்பும்.

துணைக்கு வருகிறீர்களா? என கேட்டால் திரும்பியாவது பார்ப்பவன் சுயநலக்கார கயவன் மட்டுமே. 

அவன் அப்படி செய்ய ஆயிரம் காரணம் இருக்கு, நம் நல்வாழ்வு அவன் நோக்கம் அல்ல, அவனை நம்பவே முடியாது என்பதை எல்லாம் விளங்கி கொண்டு, நாம் அவனுடன் டீல் பண்ணிதான் ஆகவேண்டும்.

ஏனென்றால் வேறு யாரும் எம்முடன் முகம் கொடுத்து கதைக்க கூட தயாரில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, சிங்களக் குடியேற்றங்களை அமைத்து முழுமையாகவே சிங்கள பெளத்த நாடாக மாற்ற நீண்டகாலத் திட்டத்துடன் கச்சிதமாக வேலைசெய்யும் சிங்களவர்களை நம்புவது எவ்வளவு மடைமை என்று அறியாத அளவுக்கு இந்திய வெறுப்பு ஊறியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை எவரையும் நம்பவேண்டியதில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளை தங்களை நம்பியே பெற்றுக்கொள்ளவேண்டும். உலகில் பலம்பொருந்திய மேற்குநாடுகளும், இந்தியா, சீனா போன்றவையும் தமது நலன்களுக்காக ஆடும் பகடையாட்டத்தில் வெட்டப்படும் காய்களாக இருக்காது பார்த்துக்கொள்ளவேண்டும். 

வரலாறு இதுவரையில் காணாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் வாக்குத் தேவையற்றது என கோத்தபாய  வெளிப்படையாகப் பேசுகிற அளவிற்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் அரசியல் பலமில்லாதவர்களாக ஆகியுள்ளோம்.  இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் நலன்களை முன்வைத்தே எமது பிரச்சினையைக் கையாள்வார்கள் என்ற புரிதலோடு அரசியல் பலத்தைப் பெருக்க அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முனையவேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்களுக்கிருப்பது இந்தியா என்ற நாட்டினால் தமிழருக்கேற்பட்ட இழப்புக் குறித்த கோபமாக எனக்குத் தெரியவில்லை (அந்தக் கோபம் இங்கே நான் உட்பட பல யாழ் உறவுகளுக்கு இருக்கிறது). 

இது வேற பிரச்சினை, இனியும் என்வலப்பை எல்லை மீறித் தள்ளாமல் இருப்பது நல்லது கப்ரன்!🤐

இந்தியாவை நான் வெறுப்பதற்கு வேறு என்ன காரணம் எனக்கிருப்பதாக தாங்கள் எண்ணுகிறீர்கள்.. ? எனது கோபம் இந்தியா எமக்குச் செய்த துரோகத்தால் வந்தது. நிச்சயம் வேறு தனிப்பட்ட காரணங்களால் வந்தது அல்ல. ஏனென்றால் இந்தியா மீது நான் மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தேன். எல்லாம் போயிற்று.. 🤥

ஒவ்வொரு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களின் வாழும் சூழல், தேவை தொடர்பிலான பழக்க வழக்கங்கள் உள்ளன. அது அவர்களின் Survival என்கின்ற அடிப்படையில் வந்தது.  இந்த பழக்க வழக்கங்களோ தனி மனித தேவைகளோ எனது இந்தியா மீதான கோபத்திற்கும் அதனால் ஏற்படும் வெறுப்பிற்கும் காரணங்களல்ல என்பதை மிகத் தீர்மானமாக இங்கே குறிப்பிடுகிறேன். 👍

6 minutes ago, கிருபன் said:

தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, சிங்களக் குடியேற்றங்களை அமைத்து முழுமையாகவே சிங்கள பெளத்த நாடாக மாற்ற நீண்டகாலத் திட்டத்துடன் கச்சிதமாக வேலைசெய்யும் சிங்களவர்களை நம்புவது எவ்வளவு மடைமை என்று அறியாத அளவுக்கு இந்திய வெறுப்பு ஊறியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை எவரையும் நம்பவேண்டியதில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளை தங்களை நம்பியே பெற்றுக்கொள்ளவேண்டும். உலகில் பலம்பொருந்திய மேற்குநாடுகளும், இந்தியா, சீனா போன்றவையும் தமது நலன்களுக்காக ஆடும் பகடையாட்டத்தில் வெட்டப்படும் காய்களாக இருக்காது பார்த்துக்கொள்ளவேண்டும். 

வரலாறு இதுவரையில் காணாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் வாக்குத் தேவையற்றது என கோத்தபாய  வெளிப்படையாகப் பேசுகிற அளவிற்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் அரசியல் பலமில்லாதவர்களாக ஆகியுள்ளோம்.  இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் நலன்களை முன்வைத்தே எமது பிரச்சினையைக் கையாள்வார்கள் என்ற புரிதலோடு அரசியல் பலத்தைப் பெருக்க அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முனையவேண்டும்.

 

 

சிங்களவனை நம்புகிறேன் என்று எங்கேயும் நான் கூறவில்லை. ஆனால் இந்தியாவை நம்புவதற்கில்லை என்பதை அழுத்தமாகக் கூறவே முனைந்துள்ளேன். 

எதிரிக்கும் துரோகிக்கும் வேறுபாடு தெரியாதவனல்ல.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

நான் ஒருபோதும் என்னை இலங்கையன் என்று கருதிக்கொண்டதில்லை. ஒரு காலத்தில் சிறிலங்கன் பாஸ்போர்ட் வைத்திருந்த காரணத்தால் இலங்கையனாக இருக்கமுடியாது. அது உணர்வில் வரவேண்டும். பல்வேறு கேள்விக்கொத்துகளில் ethnicity கேட்கப்படும்போது தமிழர் என்றே குறிப்பிடுவதுண்டு.

அதேவேளை தமிழ்நாட்டுத் தமிழர் பலர் தம்மை இந்தியன் என்று பெருமையாக முதலில் நினைத்து அடுத்ததாக தமிழர் என்று உணர்வதும் தெரியும். அப்படியான இந்தியக் குடிமக்களாக உணர்பவர்களை காயப்படுத்தக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றேன். தேசிய உணர்வை, இனவுணர்வை வெறுப்புணர்ச்சியால் வளர்ப்பது ஆபத்தானது.

வன்னியன் ஐயா, நீங்கள் ஜெகத் கஸ்பாரின் காணொளியை இணைத்திருந்தீர்கள். அதில் தலைவர் பிரபாகரன் சிங்கள மக்களைப் பற்றி சொன்னதை கவனித்திருப்பீர்கள். சிங்கள மக்களில் எந்தவித கோபமும் இல்லை என்றுதான் சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

இராசா..

தமிழ்நாட்டினரை (நான்) தமிழராகத்தான் பார்க்கிறேன். குறிப்பாக, தென்னாட்டினரென்றால் அதிக மரியாதை உண்டு. 

நீங்கள்,  உங்களை இந்தியராகக் கருதுவீர்களானால் அதையிட்டு நான் கருத்துச் சொல்ல முடியாது. அதற்காக நான் தமிழ்நாட்டினரை வெறுக்கப்போவதில்லை. 

ஏனென்றால் நான் உங்களை எனது சக தமிழனாகவேதான் பார்க்கிறேன். 👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

 

நான் எழுதிய  கருத்து புரியாவிட்டாலும் வழமைபோல என்மீதான வெறுப்பை தீர்ககமட்டும் உங்களால் கூறப்பட்ட கருத்து இது. 


அன்புள்ள துல்பன்.  
நான் நல்ல சுகம்.நீங்களும் நல்ல சுகமாயிருக்க எல்லாம் வல்ல கோட்டை முனியப்பரை வேண்டுகின்றேன்.
உங்கள் மீது எனக்கு வெறுப்பா? எதை வைத்து சொல்கின்றீர்கள்? உடன் பதில் தரவும்.
உங்கள் பதிலை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன்.
அன்புடன்
குமாரசாமி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

என்னைப்பொறுத்தவரை.....
இலங்கை தமிழர்கள் இந்தியாவை இரண்டாவது தாய் நாடாகத்தான் பார்த்தார்கள்.என்று கிந்திகள் தமது சுயரூபத்தை காட்ட வெளிக்கிட்டார்களோ அன்றிலிருந்து  தமிழ்நாடு மட்டும் இலங்கை தமிழர்களுக்கு தனியாக தெரிந்தது( தமிழ் அரசியல் வியாபாரிகளை தவிர)

உங்களுக்கு எப்படி இலங்கை வானொலி பெரிதாக தெரிந்ததோ.... அதுபோல் வடபகுதி மக்களுக்கு திருச்சி, திருச்சிராப்பள்ளி வானொலியும் சென்னை வானொலியின் தேன்கிண்ணமும் பெரிதாக தெரிந்தது.

என்னால் தமிழ்நாட்டு மக்களை இந்தியராக பார்க்க முடியவில்லை. அதே போல் நான் சிறிலங்கன் அல்ல.தமிழீழத்தவன்.

இன்னும் நிறை எழுதலாம்.....
 

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

ஆனால் நீங்கள் யாரையும் நம்ப மாடீர்கள். அந்தளவுக்கு உங்களுக்கு பிரச்சினை இருக்குதுபோல. எப்படியோ வாடா கிழக்கு அபிவிருத்தியில் இந்திய இப்போது ஒரு முக்கிய பங்காளி. நீங்கள் சொல்லி நிறுத்தப்போவதில்லை. மக்கள் இனியும் கொட்டிலில் வாழ தயார் இல்லை. எல்லோரும் கொட்டிலில் வாழ்ந்தால் பரவாயில்லை, அல்லது கொட்டிலில் இருந்துகொண்டு ஆலோசனை கூறினால் பரவாயில்லை. தமிழனின் பண்பாடு கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது. எடுத்துக்கொண்டு நன்றி சொல்லாமலிருப்பது நன்றல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Robinson cruso said:

ஆனால்

1) நீங்கள் யாரையும் நம்ப மாடீர்கள்.

1.1) அந்தளவுக்கு உங்களுக்கு பிரச்சினை இருக்குதுபோல. எப்படியோ

2) வாடா கிழக்கு அபிவிருத்தியில் இந்திய இப்போது ஒரு முக்கிய பங்காளி. நீங்கள் சொல்லி நிறுத்தப்போவதில்லை. மக்கள் இனியும் கொட்டிலில் வாழ தயார் இல்லை. எல்லோரும் கொட்டிலில் வாழ்ந்தால் பரவாயில்லை, அல்லது கொட்டிலில் இருந்துகொண்டு ஆலோசனை கூறினால் பரவாயில்லை.

3) தமிழனின் பண்பாடு கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது. எடுத்துக்கொண்டு நன்றி சொல்லாமலிருப்பது நன்றல்ல.

1) நம்பக்கூடிய ஒருவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் 😜

1.1) காயம் பட்டவனுக்குத்தான் வலி. எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கும் எந்த அயோக்கியனுடனும் கூட்டுச் சேரலாம் என்பவனுக்கும் வலி தெரியாது. உங்களுக்கும் வலி இருக்குமென்று நம்புகிறேன். என் யூகம் சரிதானே... 😀

2) பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடுவது நல்ல விடயம்தானே வங்காலையான். இந்தியா மட்டுமென்ன சிறிலங்கா, சீனா செய்தாலும் நல்ல விடயமே. (இந்தியா மனமிரங்கி பிச்சையிடுவதுபோல போகிறது உங்கள் கதை 😂😂 செய்த துரோகத்திற்கு இந்தியா செய்துதானாக வேண்டும். அது எங்கள் உரிமை 😡)

3) வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று தமிழனுக்கே இடமில்லாது போனதுபோல...எத்தனை துரோகங்களைச் செய்தபோதும் பணிந்து, கூனிக்குறுகி, கூழைக்கும்பிடு போட்டு நன்றி சொல்ல நான் ஆயத்தம் அல்ல... 😡

நீங்கள் எப்படி... 😎

Link to comment
Share on other sites

5 minutes ago, Kapithan said:

1) நம்பக்கூடிய ஒருவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் 😜

1.1) காயம் பட்டவனுக்குத்தான் வலி. எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கும் எந்த அயோக்கியனுடனும் கூட்டுச் சேரலாம் என்பவனுக்கும் வலி தெரியாது. உங்களுக்கும் வலி இருக்குமென்று நம்புகிறேன். என் யூகம் சரிதானே... 😀

2) பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடுவது நல்ல விடயம்தானே வங்காலையான். இந்தியா மட்டுமென்ன சிறிலங்கா, சீனா செய்தாலும் நல்ல விடயமே. (இந்தியா மனமிரங்கி பிச்சையிடுவதுபோல போகிறது உங்கள் கதை 😂😂 செய்த துரோகத்திற்கு இந்தியா செய்துதானாக வேண்டும். அது எங்கள் உரிமை 😡)

3) வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று தமிழனுக்கே இடமில்லாது போனதுபோல...எத்தனை துரோகங்களைச் செய்தபோதும் பணிந்து, கூனிக்குறுகி, கூழைக்கும்பிடு போட்டு நன்றி சொல்ல நான் ஆயத்தம் அல்ல... 😡

நீங்கள் எப்படி... 😎

காப்பி, நீங்கள் கூனி குறுகி நன்றி சொல்ல வேண்டாம். மக்கள் நன்றி சொல்லத்தான் போகிறார்கள். மாட மாளிகையில் இருப்பவர்களுக்கு இது புரியாது. கொட்டிலில் , மலையில் நனைந்து கொண்டிருப்பவனுக்குத்தான் இது புரியும்.

இருந்தாலும் உங்கள் பிரச்சினை புரிகின்றது. அதட்கு தீர்வு கிடட எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

காப்பி, நீங்கள் கூனி குறுகி நன்றி சொல்ல வேண்டாம். மக்கள் நன்றி சொல்லத்தான் போகிறார்கள். மாட மாளிகையில் இருப்பவர்களுக்கு இது புரியாது. கொட்டிலில் , மலையில் நனைந்து கொண்டிருப்பவனுக்குத்தான் இது புரியும்.

இருந்தாலும் உங்கள் பிரச்சினை புரிகின்றது. அதட்கு தீர்வு கிடட எனது வாழ்த்துக்கள்.

மக்கள் நன்றி சொல்வது இருக்கட்டும்.. நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். இந்தியாவால் பயனேதும் பெற்றீர்களோ.. 😀

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

மக்கள் நன்றி சொல்வது இருக்கட்டும்.. நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். இந்தியாவால் பயனேதும் பெற்றீர்களோ.. 😀

எனக்கு இதுவரைக்கும் உங்களைப்போன்ற அந்த அனுபவம் ஏட்பட வில்லை. நான் வேலை செய்த இடத்திலிருந்து இந்தியர்களையே வெளியற்றி இருக்கிறேன். அது வேறு விடயம். கொட்டிலில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும்போது அதை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரத்தில் இந்த கட்டிட திறப்பு விழாவில் பாராட்டு பாத்திரம் அங்குள்ள படித்தவர்களால் வழங்கப்படத்தான் போகிறது. இது உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று விளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

எனக்கு இதுவரைக்கும் உங்களைப்போன்ற அந்த அனுபவம் ஏட்பட வில்லை. நான் வேலை செய்த இடத்திலிருந்து இந்தியர்களையே வெளியற்றி இருக்கிறேன். அது வேறு விடயம். கொட்டிலில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும்போது அதை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரத்தில் இந்த கட்டிட திறப்பு விழாவில் பாராட்டு பாத்திரம் அங்குள்ள படித்தவர்களால் வழங்கப்படத்தான் போகிறது. இது உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று விளங்குகிறது.

உதவி பெறுபவர்கள் நன்றி சொல்லட்டும். ஆனால் நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். அதச்சொல்லுங்கள் முதலில்.. 

ஏன் நீங்கள் முன்னர் கூறியபடி கொட்டிலிலா இருக்கிறீர்கள்.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

... அது உணர்வில் வரவேண்டும். பல்வேறு கேள்விக்கொத்துகளில் ethnicity கேட்கப்படும்போது தமிழர் என்றே குறிப்பிடுவதுண்டு...

மிக்க நன்றி..🙏 We are in same page.

5 hours ago, Kapithan said:

..நீங்கள்,  உங்களை இந்தியராகக் கருதுவீர்களானால் அதையிட்டு நான் கருத்துச் சொல்ல முடியாது...

எனுங்க இந்த கொலைவெறி..? :)

4 hours ago, குமாரசாமி said:

..என்னால் தமிழ்நாட்டு மக்களை இந்தியராக பார்க்க முடியவில்லை. அதே போல் நான் சிறிலங்கன் அல்ல.தமிழீழத்தவன்.

மிக்க நன்றி, கு.சா.😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

எனுங்க இந்த கொலைவெறி..? :)

நான் தவறாக ஏதும் சொல்லவில்லையே.. 🤔

தெளிவின்மை இருந்தால் மன்னிக்கவும். குருபன், குசா. வின் நிலைப்படுதான் எனதும்.  

Blood is thicker than water என்று சும்மாவா கூறினார்கள், இராசா.. 😀

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

ஐயா, மன்னா! எனக்கும் ஒரு சந்தேகம்..... நீங்கள் ஆயிரந்தடவை வந்தே மாதரம் பாடினாலும், அவர்கள் உங்களை அந்த பாரதத் தாயின் பிள்ளைகளாக (மக்களாக) ஏற்றுக்கொள்கிறார்களா? என்னினம் அழியுதே, தடுத்து நிறுத்து! என நீங்கள் போட்ட கூக்குரலைக் கேட்டதா அந்தத் தாய்மனம்? மாறாக வெந்தழலை அல்லவா கொட்டி பழி தீர்த்தது. நீங்களும் அழுதீர்கள், புலம்பினீர்கள், துவண்டீர்கள். முடிவில் என்ன எண்ணி, சொல்லி  உங்களைத் தேற்றினீர்கள்? எதற்காக உம்மவர்  தீக்குளித்தனர் எமக்காக? அறிய ஆவல்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

ஐயா, மன்னா! எனக்கும் ஒரு சந்தேகம்..... நீங்கள் ஆயிரந்தடவை வந்தே மாதரம் பாடினாலும், அவர்கள் உங்களை அந்த பாரதத் தாயின் பிள்ளைகளாக (மக்களாக) ஏற்றுக்கொள்கிறார்களா? என்னினம் அழியுதே, தடுத்து நிறுத்து! என நீங்கள் போட்ட கூக்குரலைக் கேட்டதா அந்தத் தாய்மனம்? மாறாக வெந்தழலை அல்லவா கொட்டி பழி தீர்த்தது. நீங்களும் அழுதீர்கள், புலம்பினீர்கள், துவண்டீர்கள். முடிவில் என்ன எண்ணி, சொல்லி  உங்களைத் தேற்றினீர்கள்? எதற்காக உம்மவர்  தீக்குளித்தனர் எமக்காக? அறிய ஆவல்!  

நான் உணர்வுக் கடலின் அடிமட்டத்தில் ஆரம்பிக்க நினைத்தால், நீங்கள் மேலிருந்து சருகுகளோடு நோக்குகிறீர்கள்..ஆழம் தெரியாது..!

Link to comment
Share on other sites

9 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

 

உங்கள் கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விடைகள் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களா இல்லை இந்தியர்களா என்றால் இரட்டை நிலைதான். அதேபோல் இலங்கைத் தமிழர்கள் இலங்கையர்களா இல்லை தமிழர்களா என்றால் அதுவும் இரட்டை நிலைப்பாடுதான். இரண்டு இடத்திலும் தமிழர்கள் என்ற வரையறுக்கப்பட்ட நிலைப்பாட்டுக்குள் ஏக மக்களும் வந்திருந்தால் தமிழ்நாடு தனிநாடாக இருந்திருக்கும் அதுபோல் ஈழமும் தனிநாடாக இருந்திருக்கும். ஒரு தரப்பு மக்களிடம் இருக்கும் இனம் சார்ந்த உணர்வை முன்வைத்து இவற்றை தீர்மானிக்கவும் முடியாது. ஏக மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வாதரா உறவுகள் இந்திய இலங்கை மத்திய அதிகார மையத்துடன் தொடர்புபடுகின்றது என்பதை பொறுத்துதான் இவற்றுக்கான பதில்கள் அமையும். ஒரு உதராணத்திற்கு ஈழப்போராட்ட தொடக்க காலத்தில் இருந்து முடியும் வரை வடகிழக்கில் இருந்த பள்ளிகள் ஆசிரியர்கள் என்னும் பலதரப்பட்ட அரச உத்தியோகத்வர்கள் இலங்கை அரச பொருளாதரத்தை அடிப்படையாகக் கொண்டு வழ்ந்தார்கள். மாணவர்கள் பலர் போராடி மடிந்தார்கள். போராட்டம் முடிந்த பின் அரசின் பொன்சன் பணத்தில் தொடர்ந்து வாழ்கின்றார்கள். அவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் போரடி மடிந்தவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் ஒரே பெறுமதியாக இருக்காது. 

சாதிய பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மத முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டம் இனம் என்ற ஒரு பொது தளத்திற்கு வந்த பிறகே இந்த கேள்விகளை கேட்க முடியும். அதனால் இப்படியான கேள்விகளும் அதற்கான வரையறுக்கப்பட்ட  விடைகளுக்குமான அவசியம் எந்தக் காலத்திலும் தேவைப்பாடாது. தமிழராக வாழ விரும்புகின்றவர்கள் தமிழராக வாழ்ந்திட்டு போகவேண்டியதுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சண்டமாருதன் said:

...சாதிய பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மத முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டம் இனம் என்ற ஒரு பொது தளத்திற்கு வந்த பிறகே இந்த கேள்விகளை கேட்க முடியும். அதனால் இப்படியான கேள்விகளும் அதற்கான வரையறுக்கப்பட்ட  விடைகளுக்குமான அவசியம் எந்தக் காலத்திலும் தேவைப்பாடாது. தமிழராக வாழ விரும்புகின்றவர்கள் தமிழராக வாழ்ந்திட்டு போகவேண்டியதுதான்.

என்னங்க சாமி, இப்படி பொசுக்குனு விரக்தியா சொல்லீட்டா எப்படி..? 😔

50களிலிருந்து அடிப்பட்டு வந்தவர்களுக்கு ஒரு விடியல் தோன்றி மறைந்ததுதானே..? மறுபடியும் ஏன் இன்னொரு உதயம் இருக்ககூடாது..?

காலம் சுழல, கிட்டாமலா போய்விடும்..?

Link to comment
Share on other sites

10 hours ago, Kapithan said:

உதவி பெறுபவர்கள் நன்றி சொல்லட்டும். ஆனால் நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். அதச்சொல்லுங்கள் முதலில்.. 

ஏன் நீங்கள் முன்னர் கூறியபடி கொட்டிலிலா இருக்கிறீர்கள்.. 😂😂

காப்பி, கொட்டிலில் இருப்பது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். நாங்கள் உங்களைப்போல  மாளிகையில்தான் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இல்லை. தமிழனை தமிழன் எண்டு சொல்பவனே அவமானப்படுத்துறான். நன்றி சொல்வது தமிழனின் கடமை. இதுவும் சில வேளைகளில் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Robinson cruso said:

காப்பி, கொட்டிலில் இருப்பது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். நாங்கள் உங்களைப்போல  மாளிகையில்தான் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இல்லை. தமிழனை தமிழன் எண்டு சொல்பவனே அவமானப்படுத்துறான். நன்றி சொல்வது தமிழனின் கடமை. இதுவும் சில வேளைகளில் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம்.

கொட்டிலில் இருப்பது அவமானம் அல்ல. ஆனால் கொட்டிலைப் பிரித்து எறிந்து, எரித்து, அழித்தவனின் காலடியில் வலிந்து போய் நெடுங்கிடையாக விழுந்து கிடப்பது அவமானம் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

கொட்டிலில் இருப்பது அவமானம் அல்ல. ஆனால் கொட்டிலைப் பிரித்து எறிந்து, எரித்து, அழித்தவனின் காலடியில் வலிந்து போய் நெடுங்கிடையாக விழுந்து கிடப்பது அவமானம் என்று நம்புகிறேன்.

இப்படி எல்லாரும் அவன் காலடியில் விழுகிறோம், இவன் காலடியில் விழுகிறோம் என்று எழுதுவார்கள். அதுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது. ஆனால் ஐந்து சதம் கொடுக்கா மாடடார்கள். வாய் வீச்சில் வல்லவர்களடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

இப்படி எல்லாரும் அவன் காலடியில் விழுகிறோம், இவன் காலடியில் விழுகிறோம் என்று எழுதுவார்கள். அதுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது. ஆனால் ஐந்து சதம் கொடுக்கா மாடடார்கள். வாய் வீச்சில் வல்லவர்களடி.

நான் இன்னமும் அரசியல்வாதியாகவில்லை வங்காலையான். பயப்படாதீர்கள். 😀

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

நான் இன்னமும் அரசியல்வாதியாகவில்லை வங்காலையான். பயப்படாதீர்கள். 😀

காப்பி, அரசியல்வாதி எடுக்கத்தான் போவான், கொடுக்கப்போக மாடடான்.நீங்கள் எப்படி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.